search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறையில் அடைப்பு"

    • ராசிபுரம் அருகே உள்ள பி.மேட்டூர் மேற்கு வலசு தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 65). விவசாயி.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டை பிடித்து கொண்டு சென்றதாக கூறினர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பி.மேட்டூர் மேற்கு வலசு தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று அத்தனூர் கிராமம் பெரிய ஊத்து ஓடை பகுதியில் அவர் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் 1 கெடா ஆட்டை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணி, அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டை பிடித்து கொண்டு சென்றதாக கூறினர். இது பற்றி மணி வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பள்ளிக்கூடத் தெரு பகுதியைச் சேர்ந்த மத்த ராயன் மகன் சின்னதுரை (39). அதே பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் மகன் ராஜ்குமார் (36) புதூர் மலையான்பட்டி கிராமம் புதூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் கோவிந்தன் (40) ஆகிய 3 பேரும் ஆட்டை திருடி சென்றது தெரிய வந்தது. திருடிய ஆட்டை பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவரிடம் விற்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் ராசிபுரம் குற்ற வியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்பு ராசிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • இன்ஸ்பெக்டர் செல்வ ககுமார் தலைமையிலான போலீசார் மாரங்கியூர் கிராமத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
    • இதையடுத்து இந்திராணி சிவசங்கர் வீட்டிற்கு சென்றதாக போலீசாருக்கு தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள மாரங்கியூர் சேர்ந்த இந்திராணி (வயது 72). கடந்த 19-ந் தேதி 100 நாள் வேலைக்கு சென்ற இந்திராணி, இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் இந்திராணி–யின் மகன் பன்னீர்செல்வ–த்திற்கு போன் செய்து தகவல் கொடுத்தனர். இதையடுத்து பன்னீர் செல்வம் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வ க்குமார் தலைமையிலான போலீசார் மாரங்கியூர் கிராமத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளி சிவசங்கர் (26) என்பவர் இந்திராணியிடம் ரூ.30 ஆயிரம் கடனாக கடந்த ஆண்டு வாங்கியுள்ளார். 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த இந்திராணியிடம் வந்த சிவசங்கர், எனது வீட்டிற்கு வந்து கடன் தொகையை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து இந்திராணி சிவசங்கர் வீட்டிற்கு சென்றதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிவசங்கர் வீட்டிற்கு போலீசார் சென்ற போது, அங்கு அவர் இல்லை. அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, புதியதாக கட்டி வரும் வீட்டில் இந்திராணி கொன்று புதைக்கப்பட்டிருந்தார். தலையில் பலத்த காயங்களுடன், காது அறுக்கப்பட்ட நிலையில் இருந்த இந்திராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் தனிப்படை அமைத்து மனைவி மற்றும் குழந்தையுடன் தலைமறை வாகியுள்ள சிவசங்கரை தேடிவந்தனர். மேலும், சிவசங்கரின் தாயார் குப்புவிடம் (வயது 45) போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வாக்குமூலத்தில் அவர் கூறியதாவது:- எனது மகன் வாங்கிய கடனை திரும்ப தருமாறு இந்திராணி எங்களை கேட்டுக் கொண்டே இருந்தார். எனது மகன் சிவசங்கர் திருமணமாகி ஒரு கைக்குழந்தையுடன் வெளியூரில் தச்சு வேலை செய்து வந்தான். இதனை அவனிடம் தெரிவித்தேன். சில தினங்களுக்கு குடும்பத்துடன் சிவசங்கர் கிராமத்திற்கு வந்தான். எனக்கே கடன் அதிகமாக உள்ளது. பணம் அதிகமாக தேவைப்படுகிறது என்று என்னிடம் கூறினான். சம்பவத்தன்று நானும் 100 நாள் ேவலைக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு வந்த எனது மகன் இந்திராணியிடம் பணத்தை திருப்பி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து அவரை கொன்று நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே புதைத்து விட்டான். 3 பவுன் நகையை விற்று விட்டு இங்கிருந்த கடனை அடைத்து விட்டு, மீதமுள்ள நகையை எடுத்துக் கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூருக்கு சென்று விட்டான். இரு தினங்களில் திரும்ப வருவதாகவும், அப்போது பிணத்தை எடுத்து வேறு இடத்தில் புதைத்து விடலாம் என்று என்னிடம் போனில் கூறிவிட்டு சென்றான். உடனடியாக நான் வீட்டிற்கு சென்று புதைக்கப்பட்டிருந்த இடத்தில் மண்ணை தள்ளி மூடினேன். இவ்வாறு அவர் கூறினார்.

    மூதாட்டியின் கொலைக்கு மகனுக்கு உடந்தையாகவும், கொ லைைய மறைத்ததாகவும் குப்புவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ள சிவசங்கரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • 5 லிட்டர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்
    • அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சத்தியமங்கலம் சாலையில் உள்ள நேருநகர் என்ற பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், 10 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான முத்துநகர் பகுதியை சேர்ந்த தனசேகர் (33) என்பவர் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு நேற்று மாலை வந்தார்.

    அப்போது என் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு செல்போன், மோட்டார் சைக்கிளை பறித்து விட்டனர் என்று கூறி போலீஸ்தான் என் சாவுக்கு காரணம் என்று கூறியபடி தான் கொண்டு வந்திருந்த 5 லிட்டர் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் தனசேகர் மீது கொலை மிரட்டல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

    கைதான தனசேகர் மீது புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் திருப்பூர் மாவட்டம் சேவூர் போலீஸ் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

    • வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
    • மாதையன், முருகனை 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி அருகே உள்ள புலிகரை பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன் (வயது 55). இவருடைய மனைவி கந்தம்மாள்.

    இவர்களுக்கு பிரேம்கு மார் (30), ரஞ்சித்குமார் (28) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    இந்நிலையில் கடந்த 12-ந் தேதி புலிகரை அருகே உள்ள தோட்டத்தில் கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது தொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்பத்தை சரியாக கவனிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் கிருஷ்ணனின் 2 மகன்களே அவரை உறவினர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தி ருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து கிருஷ்ணனின் மகன்களான பிரேம்குமார், ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் தொட ர்புடைய கிருஷ்ணனின் உறவினர்களான மாதையன் (42), முருகன் (40) ஆகிய 2 பேர் தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் தருமபுரி அருகே பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரும் போலீசாரிடம் சிக்கினர். இந்த கொலை சம்பவம் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி மாதையன், முருகனை 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கஞ்சா விற்பனை செய்த பணத்தை வைத்து தந்தையை ஜாமீனில் எடுக்கலாம் என பிரகாஷ் முடிவு செய்தார்.
    • இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதி மொசல்மடுவு பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்வ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது மொசல் மடுவு அருகே பள்ளத்தின் வழியாக ஒரு வாலிபர் சாக்கு பையுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். சந்தே கம் அடைந்த போலீசார் அவரை நிறுத்தி அவர் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 4½ கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசா ரணை நடத்தினர். இதில் அவர் மொசல் மடுவு பகுதியை சேர்ந்த ஆண்டி சாமியின் மகன் பிரகாஷ் (வயது 27) என தெரிய வந்தது.

    மேலும் பிரகாசின் தந்தை ஆண்டிசாமி சம்பவத்தன்று மொசல்மடுவு பகுதியில் தனது வீட்டின் பன்புறம் உள்ள புறம்போக்கு நில த்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டதும், கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக 60 லிட்டர் சாராய ஊறல்கள் வைத்திருந்ததையும் போலீ சார் கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து போலீசார் ஏற்கனவே ஆண்டிசாமியை கைது செய்து கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறையில் உள்ள ஆண்டி சாமியை ஜாமீனில் எடுப்ப தற்கு பணம் இல்லாததால் ஆண்டிசாமி மறைத்து வைத்து இருந்த கஞ்சாவை எடுத்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தந்தையை ஜாமீனில் எடுக்கலாம் என பிரகாஷ் முடிவு செய்தார்.

    அதன்படி அவரது தந்தை மறைத்து வைத்து இருந்த கஞ்சாவை எடுத்து கொண்டு விற்பனை செய்ய சென்ற போது போலீசாரிடம் சிக்கி கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 4½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை கோபிசெட்டி பாளையம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறை யில் அடைத்தனர்.

    • குமாரசாமிப்பட்டி தி.மு.க பகுதி செயலாளராகவும், 14-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.
    • சாந்தமூர்த்தி அஸ்தம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் வின்சென்ட் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சாந்தமூர்த்தி. இவர் குமாரசாமிப்பட்டி தி.மு.க பகுதி செயலாளராகவும், 14-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாந்தமூர்த்தி வீட்டின் கதவை தட்டிய மர்மநபர்கள், மதுபோதையில் தகாத வார்த்தையில் திட்டி, கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

    இதை பார்த்த கவுன்சிலர் சாந்தமூர்த்தி, உடனே சேலம் மாநகர போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள், 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்து பைக்கில் தப்பியது. இதுகுறித்து சாந்தமூர்த்தி அஸ்தம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை பார்த்து ஆய்வு செய்ததில், குமாரசாமிப்பட்டியை சேர்ந்த மணி (வயது 35), வினோத்(24), சூர்யா(24) மற்றும் அவர்களது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து கவுன்சிலரை மிரட்டியது தெரிந்தது.

    இதையடுத்து மணி, சூர்யா, வினோத் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். 

    • முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மிலிட்டரி சரவணனை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
    • இதற்காக போலீசார் விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஈஸ்வரன். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பனையம் பள்ளி- பவானிசாகர் ரோடு மல்லியம்பட்டி வனப்பகுதி அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்றனர். பின்னர் அவரை சத்தியமங்கலம் அடுத்த அரே பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் ஒரு நாள் முழுவதும் அடைத்து வைத்து அவரிடம் இருந்து ரூ.1½ கோடி அபகரித்து கொண்டு விடுவித்தனர்.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக மோகன், கர்ணன், பிரைட் பால், கண்ணன், சீனிவாசன், தர்மலிங்கம் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    முக்கிய குற்றவாளியான அரியப்பம் பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மிலிட்டரி சரவணன் (47) என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரனின் உதவியாளராக இருந்தார்.

    இந்த நிலையில் மிலிட்டரி சரவணன் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என பயந்து கடந்த அக்டோபர் மாதம் தனது வீடு அருகே விஷம் குடித்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

    அதன் பிறகு அவர் மீண்டும் தலைமறைவானார். இதையடுத்து முன்னாள் எம்எல்.ஏ. கடத்தல் வழக்கில் சென்னை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு முன் ஜாமீன் வழங்க மறுத்து ஈரோடு மாவட்ட கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தது.

    இதை தொடர்ந்து சரவணன் கடந்த 17-ந் தேதி ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து சரண் அடைய உத்தர விட்டார்.

    இதையடுத்து மிலிட்டரி சரவணன் ஈரோடு கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை யடுத்து அவர் சத்தி யமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ. கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மிலிட்டரி சரவணனை போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக போலீசார் விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    • இந்த வழக்கில் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்பட 14 பேர் மீது வழக்கு.
    • வழக்கில் சிக்கி அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் 182 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதற்கான பதிவேட்டில் திருத்தம் செய்து வடபுதுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட சில தனியாருக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டது.

    இதுகுறித்து 2021-ம் ஆண்டு பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டாட்சியர்கள் ஆனந்தி, ஜெயப்பிரிதா, வட்டாட்சியர்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை வட்டாட்சியர்கள் மோகன்ராம், உள்ளிட்ட 14 பேர் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு தேனி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரத்தில் வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை தேனி சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை தேனி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கிருஷ்ணகுமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து தேக்கம்பட்டி சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

    • கதிர்வேலை திருவாச்சி கிராம நிர்வாக அலுவலர் பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார்.
    • இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோயில் ரோடு, திருவேங்கடபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி சாந்தா (வயது 54). கணவனை இழந்த இவர் தனது மகள் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் இரவு பெருந்துறை வார சந்தை பகுதியில் உள்ள ஒரு கடையின் முன் படுத்துக்கொள்வார். கடந்த வாரம் சாந்தா வாரச்சந்தை பகுதியில் உள்ள கடையின் அருகில் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். கொலையாளியை பிடிப்பதற்காக பெருந்துறை போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்து றையை அடுத்துள்ள திருவாச்சி கிராம நிர்வாக அலுவலரிடம் ஒரு வாலிபர் வார சந்தை பகுதியில் ஒரு பெண்ணை கொலை செய்ததாக சரணடைந்தார்.

    கிராம நிர்வாக அலுவலர் அவரை விசாரித்த போது அவர் திருவாச்சி ஊராட்சி, பூவம்பாளையம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் (வயது 47) என்பதும், கடந்த வாரம் பெருந்துறை வாரச்சந்தை பகுதியில் கொலை செய்யப்பட்ட சாந்தாவுக்கும் இவருக்கும் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது.

    தொடர்ந்து விசாரி க்ைகயில் சம்பவத்தன்று இரவு சாந்தாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது வாய் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் அருகில் இருந்த தனது நண்பர்களான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், தாண்டிக்குடியை சேர்ந்த கோபி என்கிற பாலமுருகன் (33), மற்றும் பெருந்துறை பவானி ரோடு, கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (33) ஆகியோர் உதவியுடன் சாந்தாவின் முகத்தில் மற்றும் தலையில் கட்டை யால் பலமாக தாக்கிய தாகவும், ரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் இறந்த சாந்தாவை கீழே இழுத்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி சென்று விட்டோம்.

    இந்த நிலையில் எங்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருவதை தெரிந்து தற்பொழுது நான் உங்களிடம் சரண் அடைந்ததாக கூறினார்.

    இதனைத் தொடர்ந்து கதிர்வேலை திருவாச்சி கிராம நிர்வாக அலுவலர் பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார். பெருந்துறை போலீசார் கதிர்வேலுவிடம் மேற்கொண்டு விசாரணை செய்ததில் அவருடன் கொலை செய்ய உதவியாக இருந்த கோபி என்கிற பால முருகன், ஆறுமுகம் ஆகியோரை பெருந்துறை காஞ்சிகோவில் ரோடு, கருமாண்டிசெல்லி பாளையம் பகுதியில் உள்ள சித்தம்பட்டி குளம் அருகே சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • தனக்கு குழந்தைகள் இருப்பதால் கள்ளக்காதலை தொடர முடியாது.
    • தனது குழந்தைகளான பிரபாஷ், ஆதிரா ஆகிய 2 பேருக்கும் எலிபேஸ்டை கொடுத்துள்ளார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டி கிராமத்தை சோந்தவர் மாதேஷ் (வயது27). கூலி தொழிலாளி. இவருக்கும் ஞானமலர் (21) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு பிரகாஷ் என்ற இரண்டரை வயது மகனும், ஆதிரா என்கிற 9 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

    இந்நிலையில் ஞானமலருக்கும், அதே ஊரைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ்(28) என்வருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு சென்றதும், தனது கள்ளக்காதலன் தங்கராஜ் உடன் ஞானமலர் உல்லாச மாக இருந்து வந்தார்.

    இது குறித்து மாதேசிற்கு தெரியவந்தது. தனது மனைவியின் நடத்தை குறித்து அறிந்த மாதேஷ், கடந்த 3-ம் தேதி மனைவி ஞானமலரை கண்டித்தார். மேலும், இனி கள்ளக்காதலை தொடரகூடாது என்று தனது மனைவியை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஞானமலர் இது குறித்து தனது கள்ளக்காதலன் தங்கராஜிடம் நடந்தது குறித்து தெரிவித்தார்.

    தனக்கு குழந்தைகள் இருப்பதால் கள்ளக்காதலை தொடர முடியாது. எனவே, அவர்களை கொன்றுவிடலாம் என ஞானமலர் கூறியுள்ளார். இதையடுத்து தங்கராஜ் போட்டு கொடுத்த திட்டத்தின்படி, ஞானமலர், தனது குழந்தைகளான பிரபாஷ், ஆதிரா ஆகிய 2 பேருக்கும் எலிபேஸ்டை கொடுத்துள்ளார்.

    இதில் 2 குழந்தைகளும் வாந்தி எடுத்து, மயக்கம் போட்டு விழுந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதையடுத்து தானும் குடித்துவிட்டதாக ஞானமலர் கூறியுள்ளார். இதையடுத்து 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ஆதிரா கடந்த 5-ம் தேதி காலை இறந்தார்.

    இது குறித்து குழந்தையின் தந்தை மாதேஷ், ராயக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரன் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் ஞானமலர், அவரது கள்ளக்காதலன் தங்கராஜ் உடன் இணைந்து குழந்தைகள் 2 பேருக்கும் விஷம் கொடுத்ததும், அதில் குழந்தை ஆதிரா இறந்ததும், மற்றொரு மகன் பிரபாஷ் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. மேலும், தானும் விஷம் குடித்ததாக ஞானமலர் நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை கொன்ற தாய் ஞானமலர், தாயின் கள்ளக்காதலன் தங்கராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான ஞானமலரை சேலம் பெண்கள் சிறையிலும், தங்கராஜை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

    • அரச்சலூர் அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர்.
    • அப்போது அங்கு கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது.

    கொடுமுடி:

    மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய ப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தனி ப்படை அமைத்து சோதனை செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    தொடர்ந்து அரச்சலூர் அடுத்த ராசாம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீ சார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது,

    இதையடுத்து வீட்டின் உரிமையாளர் ராசாம் பாளையம் ராட்டை சுற்றி பாளையத்தை சேர்ந்த பாலா (வயது 29) மற்றும் அவரது நண்பர் ஈரோடு வி. வி. சி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார் (22) ஆகியோரை பிடித்து போலீ சார் விசாரணை நடத்தினர்.

    இதில் கஞ்சா மூட்டையை மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து அவற்றை சிறு பொட்டலங்களாக பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களி டம் இருந்து ரூ.2.10 லட்சம் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் பாலா, அஜித் குமார், ஈரோடு அக்ரகார வீதியைச் சேர்ந்த பக்கீர் மைதீன் ஜமீர் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த னர். மேலும் தலைமறை வான கணேசன் என்பவரை போலீசார் தேடி வருகின்ற னர்.

    • சொக்க நாச்சி அம்மன் கோவிலில் கதவின் பூட்டு உடைக்க ப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டது.
    • இதை பற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு வந்து பார்த்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள அம்மாபேட்ைட அடுத்த சித்தார் கேசரிமங்கலம் கொம்புத்தோட்டம் பகுதியில் உள்ள சொக்க நாச்சி அம்மன் கோவிலில் கதவின் பூட்டு உடைக்க ப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டது.

    இதை பற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் கோவிலுக்கு வந்து பார்த்தனர். அப்போது அருகே உள்ள ரைஸ்மில் பகுதியில் 2 பேர் சாக்கு மூட்டையில் பொரு ட்களை கட்டி கொண்டு இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து மக்கள் அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை சோத னை செய்தனர். அதில் சாமி கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் தங்கத் தாலி, குத்து விளக்கு 4, செம்பு குடம் 1, சொம்பு 1 உள்பட பல்வேறு பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணை யில் இந்த பொருட்கள் சொக்கநாச்சி அம்மன் கோவிலில் திருடப்பட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பவானி போலீசாரிடம் பொது மக்கள் ஒப்படை த்தனர். போலீசாரின் விசார ணையில் அவர்கள் அம்மா பேட்டை அருகே உள்ள குறிச்சி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த ரவி விஜய் (42) மற்றும் குறிச்சி சமத்துவபுரம் பகுதி யை சேர்ந்த வேல்முருகன் (45) என்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அவர்க ளிடம் இருந்து கோவிலில் திருடப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டது.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரை யும் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பவானி கோர்ட்டில் ஆஜர் படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

    ×