search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறையில் அடைப்பு"

    • சரவணன் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினையும், பணத்தையும் பறித்துக் கொண்டார்.
    • சரவணன் அன்னதானபட்டி போலீசில் புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பொம்மனை செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 47). ெதாழிலாளி. இவர் நேற்று நெத்திமேடு அருகே உள்ள தனியார் பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அன்னதானப்பட்டி திருச்சி கிளை ரோடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குருவி பாபு (48), கத்தி முனையில் சரவணன் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினையும், பணத்தையும் பறித்துக் கொண்டார்.இதுகுறித்து சரவணன் அன்னதானபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குருவி பாபுவை கைது செய்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பவானிசாகர் ரோட்டில் உள்ள எஸ்.ஆர்டி.நகர் அருகேமொ பட்டில் வந்த 2 பேர் நடுரோட்டில் டயர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
    • இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    புஞ்சை புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பவானிசாகர் ரோடு சந்திப்பில் கடந்த 22-ந் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பவானிசாகர் ரோட்டில் உள்ள எஸ்.ஆர்டி.நகர் அருகேமொ பட்டில் வந்த 2 பேர் நடுரோட்டில் டயர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அதிகாலை எஸ்.ஆர்.டி. நகர் 2-வது வீதியில் நிறுத்தப்பட்டு இருந்த பா.ஜ.க. பிரமுகர் சிவசேகருக்கு சொந்தமான கார் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது.

    இதுகுறித்த புகாரின் பேரில் புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மேற்பார்வையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலமுருகன், ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையில் 2 வழக்குகளிலும் குற்றவாளிகளை கண்டு பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து புஞ்சை புளியம்ப ட்டியைச் சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த கமருதீன் என்பவர் கோவை மாவட்டம் பேரூர் பச்சாபாளையத்தில் தங்கியிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை புஞ்சைபுளியம்பட்டி அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர் பா.ஜ.க. பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசியதாகவும், ரோட்டில் டயர் எரித்ததாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த அப்துல் வகாப், நியமத்துல்லா , முகமது உசைன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து கைதான 4 பேரும் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறை யில் அடைக்க உத்தர விட்டார். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கோபி செட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • அதிகாலை எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஒருவர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார்.
    • போலீசார் பாலுசாமியை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடை த்தனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கே.மேட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 88). இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும், ராதா என்ற மக ளும் உள்ளனர். மகன் சென்னையிலும், மகள் கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் தனி தனியாக வசித்து வருகிறார்கள்.

    சரஸ்வதியின் கணவர் ராமசாமி இறந்து விட்டார். இதனால் சரஸ்வதி கே.மேட்டுபாளையம் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மூதாட்டி சரஸ்வதி வழக்கம் போல் நேற்று அதிகாலை எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஒருவர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார்.

    இதையடுத்து சரஸ்வதி யின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அவரது மகள் ராதாவுக்கு தகவல் கொடுத்த னர்.

    அவர் சம்பவ இடத்து க்கு வந்து அவரை மீட்டு கோபி செட்டிபாளையத்தில் ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பெருந் துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.

    விசாரணையில் சரஸ்வதி யின் பக்கத்து வீட்டில் உள்ள தொழிலாளி பாலுசாமி (48) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற் கொண்டனர். அப்போது அவர் சரஸ்வதியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    என் வீட்டின் அருகே சரஸ்வதியின் தோட்டம் உள்ளது. அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூஜை செய்து பஜனை பாடல்கள் பாடுவார். இது எனக்கு தொந்தரவாக இருந்தது. மேலும் நான் வேலைக்கு செல்லாமல் இருப்பதற்கும், எனக்கு திருமணமாகாமல் இருப்பதற்கும் அவர் செய்வினை செய்து விட்டார்.

    இதனால் நான் தூங்காமல் நிம்மதியை இழந்தேன். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய திட்மிட்டேன். அதன்படி நேற்று காலை தண்ணீர் தெளிப்பதற்கு வெளியே வந்த சரஸ்வதியை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இதையடுத்து போலீசார் பாலுசாமிைய கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோபிசெட்டி பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விஜய் அழகிரி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தர விட்டார். அதன் பேரில் போலீசார் பாலுசாமியை கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடை த்தனர்.

    • சிறுமியின் வீட்டிற்கு இளங்கோவன் வந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் இளங்கோவனை கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி யின் 16 வயது மகள் 8-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் டி.ஜி.புதூர் பகுதியை சேர்ந்த இளங்கோ வன் (22). கூலி தொழிலாளி. இவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் பழகி வந்ததை சிறுமியின் தாயார் கண்டித்தார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சிறுமியின் தாயார் வேலைக்கு சென்று விட்டார். அப்போது சிறுமி யின் வீட்டிற்கு இளங் கோவன் வந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 15-ந்தேதி இளங்கோவன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இளங்கோவன் டி.ஜி. புதூர் பகுதியில் வாடகை வீட்டில் அந்த சிறுமியுடன் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் நேற்று அந்த சிறுமி மயக்கம் அடைந்தார். இதனால் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்த தகவல் சிறுமியின் தாயிக்கு கிடைத்தது. இதையடுத்து சிறுமியின் தாய் ஆஸ்பத்தி ரிக்கு சென்று பார்த்த போது சிறுமி கர்ப்பமாக இருநதது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் பங்களாப் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இளங்கோவன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் இளங்கோவனை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடை த்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார்.
    • இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி, கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சக்திவேல், இவரது மனைவி விஜயலட்சுமி (50).

    கடந்த 18-ந்தேதி அன்று சக்திவேல் தனது தோட்டத்து வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மதியம் சுமார் 2 மணியளவில் விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    மதியம் டிவி பார்த்துக் கொண்டிருந்த விஜயலட்சுமி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

    இச்சம்பவம் குறித்து விஜயலட்சுமி ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஆப்பக்கூடல் போலீசார், அத்தாணி சாலையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்தனர். அப்போது நீல நிற சட்டை அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார் என்பதை கண்டறிந்தனர்.

    தொடர்ந்து போலீசார் அத்தாணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். அப்போது அவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    இதில் அவர் கோபிசெட்டிபாளையம், கள்ளிப்பட்டி அருகேயுள்ள வளையபாளையம், கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்தி (29) என்பது தெரியவந்தது. இவர்தான் கருப்பகவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமியிடம் தங்க சங்கிலியை கொள்ளை அடித்து விட்டு தப்பியோடி–யது தெரிந்தது.

    தொடர்ந்து கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பொறியியல் பட்டதாரியான கார்த்திக் திருமணமானவர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது.

    அப்போது ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் கம்பெனிக்கு செல்லாமல் கடந்த 3 மாதமாக சுற்றி திரிந்தது தெரிந்தது.

    அப்போது கடன் கொடுத்தவர்கள் கடனைக் கேட்டு நெருக்கடி செய்யவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முடிவு செய்து தனியாக இருந்த பெண்ணி–டம் தங்க செயினை கொள்ளை அடித்து சென்று தெரிய வந்தது.

    மேலும் அந்த செயினை கோபியில் உள்ள தனியார் அடகு கடையில் அடமானம் வைத்து பணத்தை பெற்ற–தும் போலீசார் விசாரணை–யில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி–னர். பின்னர் அவர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    • போலீசார் காளிங்கராயன்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு நின்று கொண்டு இருந்த ராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
    • அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    சித்தோடு:

    அந்தியூர் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய ஒரு சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாய் அந்த சிறுமியிடம் விசாரி த்தார். அப்போது அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழி லாளியான ராஜா (36). என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினார்.

    இது குறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ன ம்மாள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். மேலும் அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கட்டிட கூலி தொழிலாளி ராஜா பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீ சார் காளிங்க ராயன்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு நின்று கொண்டு இருந்த ராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    போலீஸ் நிலையத்தில் அவரிடம் நடத்திய விசார ணையில் அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்பு கொண்டார். மேலும் அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறை யில் அடைத்தனர்.

    • ஆட்கள் நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த 5 பேரும் பிரகாசை தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ஒரு பையை வழிப்பறி செய்துவிட்டு 5 பேரும் தப்பி சென்றார்கள்.
    • இந்த கும்பல் இதே போன்று வேறு யாரிடமும் கைவரிசை காட்டியுள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    ஈரோடு, ஆக. 21-

    ஈரோடு பெரியார்நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 42). இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் விடுமுறையின்போது ஈரோட்டுக்கு வந்து செல்வது வழக்கம். சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை விடப்பட்டதால் கடந்த 12-ந் தேதி இரவு பிரகாஷ் சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி ஈரோட்டுக்கு வந்தார்.

    அவர் நள்ளிரவில் ஈரோட்டுக்கு வந்ததால், அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அவர் பெரியார்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் 5 பேர் நின்றிருந்தனர்.

    ஆட்கள் நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த 5 பேரும் பிரகாசை தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ஒரு பையை வழிப்பறி செய்துவிட்டு 5 பேரும் தப்பி சென்றார்கள்.

    அந்த பையில் லேப்டாப், செல்போன், ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பிரகாஷ் வைத்து இருந்தார்.

    இதுகுறித்து பிரகாஷ் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், ஏட்டுகள் தனசேகர், கோபி, போலீஸ்காரர்கள் அருண்குமார், வேலுமணி, திருமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டன.அவர்கள் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணையை தீவிர படுத்தினார்.

    போலீசார் விசாரணையில், பிரகாஷிடம் இருந்து பையை திருடி சென்றது ஈரோடு நேதாஜிரோடு ஆலமரத்து தெருவை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மனோ (வயது 21), ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஆகாஸ் (20), ஈரோடு தீரன்சின்னமலை வீதியை சேர்ந்த பழனிசாமியின் மகன் பிரகாஷ் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த கும்பல் இதே போன்று வேறு யாரிடமும் கைவரிசை காட்டியுள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 2 சிறுவர்கள் கோவையில் உள்ள சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • பங்களாபுதூர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வெளியே வந்த நாகராஜை கைது செய்தனர்.
    • பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    பங்களாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (41). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் இந்த வழியாக நடந்து வந்தார். 5 வயது சிறுமியை வழிமறித்து வீட்டிற்குள் தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

    இதையடுத்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நாகராஜ் மீது பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தனர்.

    இந்நிலையில் இது பற்றி தெரிய வந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நாகராஜை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதையடுத்து பங்களாபுதூர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வெளியே வந்த நாகராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பெண் உட்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்
    • மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில் கலெக்டர் உத்தரவு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் இளவரசன் (வயது 43). இவர் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதேபோல் 2015-ம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் வன்கெடுமை செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் இளவரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ெபரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் கலெக்டர் ரமண சரஸ்வதி இளவரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தவிட்டார்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி மனைவி வசந்தா (51). இவர் கடந்த 5 ஆண்டுகளாக அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில், இவரது மேல் அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ெபரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் கலெக்டர் ரமண சரஸ்வதி வசந்தாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தவிட்டார்.

    • பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் சிவக்குமார் அடிக்கடி அந்தப்பெண் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்
    • சிவக்குமார் வீட்டில் இருந்த பெண்ணின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 33) இவர் மாந்திரீகம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் சிவக்குமார் அடிக்கடி அந்தப்பெண் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று அங்கு சென்ற சிவக்குமார் வீட்டில் இருந்த பெண்ணின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பிளஸ் 2 மாணவியான அந்த பெண் தனது தாயாரிடம் இது பற்றி தெரிவித்தார். ஆனால் அவர் இதனை கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து வெளிநாட்டில் இருக்கும் தனது தந்தைக்கு மாணவி செல்போன் மூலம் பேசி சம்பவம் பற்றி தெரிவித்தார். தொடர்ந்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவியின் தாயாரும், சிவக்குமாரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் சிவக்குமார் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவின் தாயார் தக்கலை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • மருமகன் மாமனார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மாமனார் மருமகனை கல்லால் தாக்கினார்.
    • இது குறித்து மருமகன் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி காந்திநகர் புதுகாலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை (39).பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி அருணா. இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அண்ணாதுரை மனைவி வீட்டுக்கு வந்தார். தனது இளைய மகன் லிங்கேஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மாமனார் மணியன் (55) மனைவியை வைத்து குடும்பம் நடத்த தெரியவில்லை. எதற்கு என் பேரனுடன் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அண்ணாதுரையை மணியன் கல்லால் தாக்கியுள்ளார். இது குறித்து அண்ணாதுரை புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணியனை கைது செய்தனர். பின்னர் சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
    • இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் இண்டேன் கேஸ் ஏஜென்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இரவு வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நள்ளிரவில் நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    பின் தரைத்தளத்தில் உள்ள கேஸ் ஏஜென்சியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனையடுத்து மறுநாள் காலை பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் 3 வாலிபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    மேலும் அஸ்சூரன்ஸ் அலுவலகத்தில் பல ஆயிரமும், கேஸ் ஏஜென்சியில் பல ஆயிரமும் கொள்ளை அடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விட்டனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவங்களை வைத்து வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த சென்னி மலை வட்டாரத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதன் அடிப்படையில் சென்னிமலை அருகில் உள்ள எம்.பி.என். நகரில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.

    விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த அனோவார்ஹுசைன் (21), சைக்குள் இஸ்லாம் (29), மன்சூர் அலி (23) ஆகிய 3 வாலிபர்கள் கியாஸ் ஏஜென்சி மற்றும் அஸ்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து மொத்தம் ரூ.45 ஆயிரம் கொள்ளையடித்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    ×