search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரஸ் காய்ச்சல்"

    • போழக்குடி கிராமத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் வந்தது.
    • வீடு மற்றும் தெருவில் சென்று நோய் தடுப்பு மருந்து மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் ஒன்றியம் கோவில்ராமபுரம் ஊராட்சியில் போழக்குடி கிராமத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் வந்தது.

    இதைத் தொடர்ந்து சிறுமிக்கு உண்ணி காய்ச்சல் வைரஸ் பரவியது என்று மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து கோணுழாம்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி அருள் ஆகியோர்கள் குழந்தையின் நலன் கருதியும் வீடு மற்றும் தெருவில் சென்று நோய் தடுப்பு மருந்து மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

    மேலும் சுகாதார பணியாளர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு செய்து தடுப்பூசி மற்றும் சத்து மாத்திரைகளை வினியோகித்து வருகின்றனர்.

    இது குறித்து மருத்துவ அதிகாரி அபினேஷ் கூறியதாவது:-

    கிராமத்தில் வயல்வெளி பகுதிகள் செடி, கொடிகள் மண்டி கிடப்பதால் அதில் உள்ள சிறிய பூச்சிகள் மூலம் உண்ணி காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது.

    எனவே மருத்துவ பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர்க்கு முன்பே அறிந்ததால் உரிய சிகிச்சை அளித்து வருகிறோம்.

    மேலும் கிராமங்களிலும், பரவாமல் தடுப்பு பணிகளை சுகதார பணியாளர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். உண்ணி காய்ச்சலுக்கு மக்கள் பீதி அடைய தேவை இல்லை என தெரிவித்தார்.

    • மகாராஷ்டிராவில் எச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கு 119 பேர் பாதிப்பு அடைந்தனர்.
    • மேலும், 73 வயது முதியவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

    மும்பை:

    தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி கொரோனோ பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.

    மார்ச் 8-ம் தேதி வரை கொரோனா பாதிப்பு குறைவாக இருந்ததாகவும், தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் எச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 119 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், 73 வயது முதியவர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

    • சிகிச்சை அளிக்க 30 படுக்கையுடன் கூடிய தனி வார்டு திறக்கப்பட்டு உள்ளது.
    • இந்த வார்டில் தற்போது காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோவை,

    நாடு முழுவதும் இன்புளூயன்சா வைரசான எச்3 என்2 என்ற வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கடந்த ஜனவரி 2-ந் தேதி முதல் மார்ச் 5-ந் தேதி வரை 9 வாரங்களில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு 451 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இத னையடுத்து மாநிலங்களில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இதனை தொடர்ந்து தமிழகத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் 142 இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் 10 பேர் பங்கேற்றனர்.

    மேலும் சுகாதாரத்துறை மருத்துவ ஊழியர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள், 8 வயதுக்குட்பட்ட குழந்தை கள் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசியை செ லுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தற்போது கோவை மாவட்டத்தில் இன்பு ளூயன்சா மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி எச்ச ரிக்கை செய்யப்பட்டு உள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வரும் புற நோ யாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை யடுத்து காய்ச்சல் பாதிப்புடன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வருப வர்களுக்கு சிகிச்சை அளிக்க 30 படுக்கைகளுடன் தனி வார்டு தயார் படுத்தப்பட்டு உள்ளது. இந்த வார்டில் தற்போது காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணி க்கை அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களை உள்நோயாளிகளான அனுமதித்து சிகிச்சை அளிக்க 30 படுக்கையுடன் கூடிய தனி வார்டு திறக்கப்பட்டு உள்ளது.

    இந்த வார்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் 24 மணி நேரமும் கண்காணி க்கப்படுவார்கள். மருந்து கள் மற்றும் மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் தடுப்பூசிகளும் உள்ளன. சுகாதா ரத்துறையின் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் பேரில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.

    கோவை மாநகர் பகுதி மட்டும் அல்லாமல் ஊரக பகுதிகளிலும் இன்பு ளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அவர்கள் கிராம புறங்களில் காய்ச்சல் தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    காய்ச்சல் பரவாமல் தடுக்க முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின் பற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து தினசரி 100 முகாம்களை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை மற்றும் மருந்து, மாத்தி ரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள வர்கள் மற்றும் மூச்சு விட சிரமப்படும் நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

    மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் பரவுவது தொடர்பான விழிப்பு ணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். தினசரி மாவட்டம் முழுவதும் 100 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 3 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் டா க்டர்களின் பரிந்துரையின்றி தன்னிச்சையாக மாத்திரைகளை வாங்கி சாப்பிட கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உரிய சிகிச்சை பெற்று 3 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அவர்கள் முக கவசம் அணிய வேண்டும்.

    இந்த காய்ச்சல் முதல் 3 நாட்கள் அதிகமாக இருக்கும் என்பதால் வீட்டில் உள்ளவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே தனிமைப்படுத்தி கொள்வதன் மூலம் காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும். பொதுமக்கள் வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வைரஸ் காய்ச்சல், கொரோனா போன்றவை நீடிப்பதால் அதனாலும் பரீட்சை எழுத வரவில்லை என்ற காரணங்களை முன் வைக்கின்றனர்.
    • இடைநின்ற மாணவர்களையும் பிளஸ்-2 படிப்பது போல் தொடர்ந்து கணக்கு காட்டி அரசின் தேர்வுத் துறைக்கு ‘லிஸ்ட்’ அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்வுகளை 25 லட்சம் முதல் 27 லட்சம் மாணவர்கள் வரை எழுதுகின்றனர்.

    ஒவ்வொரு தேர்விலும் வழக்கமாக 3 முதல் 4 சதவீத மாணவர்கள் தேர்வு எழுத வராமல் 'ஆப்சென்ட்' ஆவது வழக்கம்.

    ஆனால் நேற்று முன் தினம் தொடங்கிய பிளஸ்-2 தமிழ் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுத வரவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளி படிப்பின் இறுதி கட்டமான பிளஸ்-2 பொது தேர்வை அதுவும், தாய் மொழியான தமிழ் பாடத்தையே 50,674 மாணவர்கள் எழுதாமல் புறக்கணித்தது கல்வித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது தேர்வு பயம், மற்றும் உடல்நிலை சரியின்மை ஆகியவற்றை முக்கியமான காரணமாக கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி வைரஸ் காய்ச்சல், கொரோனா போன்றவை நீடிப்பதால் அதனாலும் பரீட்சை எழுத வரவில்லை என்ற காரணங்களை முன் வைக்கின்றனர்.

    கடந்த ஆண்டு 32 ஆயிரம் மாணவர்கள் முதல் நாளில் தேர்வு எழுத வராத நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 18 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வராதது பற்றி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

    இதன் அடிப்படையில் அரசுப் பள்ளியில் எவ்வளவு பேர் பரீட்சை எழுதவில்லை, தனியார் பள்ளிகளில் எவ்வளவு பேர் எழுதவில்லை என்ற பட்டியலை எடுத்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையில் விசாரித்தபோது கிடைத்த தகவல் வருமாறு:

    பிளஸ்-1 பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு 83 ஆயிரத்து 819 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் பிளஸ் 1 துணைத் தேர்வு எழுதி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று தற்போது பிளஸ்-2 படித்து வந்தனர்.

    மீதம் உள்ள மாணவர்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையில் பிளஸ்-2 வகுப்பில் எப்படி தேர்ச்சி பெற முடியும் என்று பயந்து படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டனர். ஆனால் இவர்கள் பள்ளிக் கூடங்களில் தொடர்ந்து படிப்பது போல் கணக்கு காட்டி மாணவர்களின் எண்ணிக்கையை குறையாமல் காண்பித்துள்ளனர்.

    இந்த மாணவர்களை இடைநிற்றலாக கணக்கு காட்டினால், பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாட்டில் பல்வேறு கேள்விகள் எழும்.

    இதை மறைக்கவே இடைநின்ற மாணவர்களையும் பிளஸ்-2 படிப்பது போல் தொடர்ந்து கணக்கு காட்டி அரசின் தேர்வுத் துறைக்கு 'லிஸ்ட்' அனுப்பி உள்ளனர்.

    அதன்படி அனைத்து மாணவர்களுக்கும் 'ஹால் டிக்கெட்' பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் வகுப்புக்கே வரவில்லை என்பதை மறைத்து ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதாகவும் ஆனால் தேர்வுக்கு வரவில்லை என்று கூறி 'ஆப்சென்ட்' பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் காரணம் தெரியவந்துள்ளது.

    மேலும் சில மாணவர்கள் தேர்வு பயம் காரணமாக தேர்வு எழுத வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

    குறிப்பாக நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.

    கடந்த ஆண்டு பிளஸ்-1 வகுப்பில் தோல்வி அடைந்த பல மாணவர்கள் பிளஸ்-2 வகுப்பில் பள்ளிகளில் பங்கேற்கவில்லை. பள்ளிக்கே சரியாக வராத இவர்கள் பரீட்சைக்கும் வரவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை என்கிறார்கள் அதிகாரிகள்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரணமாக பள்ளிகள் முழுமையாக இயங்காத சூழலில் 'ஆல் பாஸ்' நடைமுறை கொண்டு வரப்பட்டது.

    கொரோனா சரியான நிலையில் கடந்த ஆண்டு முழு பாடத்திட்டங்களோடு தேர்வு நடத்தப்படவில்லை. பாதி படத்திட்டத்தோடுதான் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பொதுத் தேர்வை சந்தித்தனர். ஆனால் இப்போது அப்படியில்லை. முழு பாடத் திட்டத்தோடு தேர்வு நடைபெறுவதால் பல மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

    ஒட்டு மொத்தத்தில் கொரோனா தாக்கம் மாணவர்கள் மத்தியில் இன்னும் நீடிக்கிறது. அவர்களை மனதளவில் தயார் செய்திருக்க வேண்டும். பள்ளிக்கு சரிவர வராத மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளித்திருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் குறை கூறி வருகின்றனர்.

    இதுபற்றி தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவு குறைந்தபட்சம் இவ்வளவு என்று இருக்க வேண்டும். பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு டி.சி. கொடுக்க வேண்டும்.

    ஆனால் எதுவும் செய்வதில்லை. அரசு பள்ளியில் பள்ளிக்கே வராத மாணவர்களையும் படிப்பதாக கணக்கு காட்டுகிறார்கள். இது தவறு. அரசு பள்ளியின் பாலிசியை மாற்ற வேண்டும், என்றனர்.

    இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேட்டதற்கு மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணங்கள் என்ன என்பது பற்றி விசாரித்து வருவதாகவும் ஓரிரு நாளில் விளக்கமாக தெரிய படுத்தப்படும் என்றும் கூறினார்.

    • திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டு பகுதிகள் உள்ளன.
    • புகை அடிக்கும் கருவிகள், 33 தற்போது பயன்பாட்டில் உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டு பகுதிகள் உள்ளன. வீடுகளில் தேங்கிக் கிடக்கும் குப்பை, சாக்கடை கழிவு நீர் கால்வாய் மற்றும் கழிவுகள் தேங்கியுள்ள பகுதிகள், செடிகள் நிறைந்த புதர் பகுதி உள்ளிட்ட திறந்த வெளிப் பகுதிகளில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.

    இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக, மாநகராட்சி சுகாதார பிரிவினர் கொசு மருந்து புகை அடித்தல் மற்றும் கொசு புழுஒழிப்பு மருந்து தெளித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிக்கு மண்டலவாரியாக, புகை அடிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட தலா ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. புகை அடிக்கும் கருவிகள், 33 தற்போது பயன்பாட்டில் உள்ளன.சுகாதார பிரிவினர் கூறுகையில், 'வழக்கம் போல் சுழற்சி முறையில் பகுதிவாரியாக புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் கண்டறியப்படும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சுகாதார ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்றனர்.

    • மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    திருப்பூர்:    

    காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், திருப்பூர் மாவட்டத்தில், வரும், 10ந்தேதி, மெகா மருத்துவ முகாம் நடத்த, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    'இன்ப்ளூயன்சா' எனப்படும் பரவக்கூடிய காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் ஒரு பிரிவான, 'எச்3 என் 2' வகை வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் துவங்கியுள்ளது.

    பிற 'இன்ப்ளூயன்சா' போல் அல்லாமல், இந்த வைரஸ் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடன், அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கி றது. மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் அந்தந்த பகுதி அளவிலேயே சிகிச்சை அளித்து, மற்றவர்க ளுக்கு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வரும், 10ம் தேதி அதிகமான இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தி எந்த பகுதியில் அதிகமான பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    பொது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

    காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் பாதிப்புடன் எந்த பகுதியில் இருந்து அதிகமானோர் அனுமதியாகின்றனர் என்ற விபரத்தை மருத்துவமனைகளில் இருந்து பெற்று, அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால், ஒருவருக்கு பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, கவனமாக இருக்க அறிவுரை வழங்கப்படும்.

    காய்ச்சல் அறிகுறி உள்ளவர், இந்த முகாமில் பங்கேற்க ஏதுவாக முன்கூட்டியே வைரஸ் காய்ச்சல் குறித்தும், முகாம் நடத்துவது குறித்தும் அனைத்து பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்றார்.

    • கடுமையான இருமல், சளி, காய்ச்சல் நோய்த்தொற்றுகளால் பிப்ரவரியில் மருந்துகளின் விற்பனை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்தது.
    • காய்ச்சல் மருந்துகளான பாராசிட்டமால், அசித்ரோமைசின் மற்றும் இருமல் சிரப்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    இன்புளூயென்சா வைரஸ் மூலம் பரவிய காய்ச்சல் 6 நாட்கள் வரை இருக்கும். உரிய சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தி விடலாம். புளூ காய்ச்சல் நுரையீரலை பாதிக்கக்கூடியது. 2 முதல் 6 நாட்கள் வரை காய்ச்சல் நீடிக்கும். சளி, உடல் வலி, தலைவலி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு நிமோனியா எனப்படும் உடலில் நீர் இழப்பு மற்றும் நீர் பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டால் காய்ச்சல் வந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    புளூ காய்ச்சலுடன் எச்1 என்1 என்னும் ஒருவகை இன்புளூயென்சா வைரஸ் கிருமி தொற்று தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்தியா முழுவதும் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு காரணமாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இருமல் மருந்துகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விற்பனையில் ஒரு வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதன் விற்பனை கடந்த மாதம் உயர்ந்த நிலையில், எழுச்சி தொடர்கிறது.

    "கடுமையான இருமல், சளி, காய்ச்சல் நோய்த்தொற்றுகளால் பிப்ரவரியில் மருந்துகளின் விற்பனை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்தது.

    "காய்ச்சல் மருந்துகளான பாராசிட்டமால், அசித்ரோமைசின் மற்றும் இருமல் சிரப்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது."

    பிப்ரவரி மாதத்தில் நோய் தொற்று எதிர்ப்பு மருந்து விற்பனை 12.5 சதவீதம் அதிகரித்து ரூ.22,883 கோடியாக இருந்தது.

    சுவாச மருந்துகள் கடந்த மாதம் 8.1 சதவீதம் அதிகரித்து ரூ.14,880 கோடியாக இருந்தது.

    நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய மருந்துகள் விற்பனை 26.1 சதவீதம் அதிகரித்து ரூ.2,766 கோடியாக உள்ளது. நுரையீரலில் வீக்கத்தைத் தடுக்கப் பயன்படும் சிப்லாவின் புட்கார்ட் 23.3 சதவீதம் அதிகரித்து ரூ.2,385 கோடியாகவும், வலி நிவாரணியான வலி நிவாரணி மருந்துகள் 10.7 சதவீதம் அதிகரித்து ரூ.12,898 கோடியாகவும் இருந்தது.

    இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வைரஸ் காய்ச்சல் அல்லது இன்புளுயென்சா ஏ அதிகரித்து வருகிறது.

    இன்புளுயென்சா ஏ இன் எச் 3 என் 2 பரவல் காரணமாக மருந்துகளின் விற்பனை அதிகரித்துள்ளது. காய்ச்சல், உடல்வலி, தலைவலி, சளி, தொண்டை வலி மற்றும் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சிலருக்கு உலர் ஹேக்கிங் இருமல் உள்ளது, மற்றவர்கள் தொற்றிலிருந்து மீண்ட நாட்கள் மற்றும் வாரங்களுக்குப் பிறகு தொடர்ந்து இருமல் உள்ளது. நோய் பாதிப்பை மக்கள் புறக்கணிக்கக்கூடாது, ஏனெனில் அவர்களுக்கு நெபுலைசர்கள், இன்ஹேலர்கள், மூச்சுக்குழாய்கள் மற்றும் சில நேரங்களில் குறுகிய ஸ்டீராய்டு படிப்புகள் போன்ற குறிப்பிட்ட சிகிச்சைகள் தேவைப்படலாம்.

    குறிப்பாக வயதான நோயாளிகள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு தொற்று மார்பில் இறங்கி நிமோனியாவை ஏற்படுத்துகிறது.

    குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும், புற்றுநோய், நீரிழிவு நோய் அல்லது ஸ்டெராய்டுகளை உட்கொள்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

    இதயம் அல்லது நுரையீரல் பிரச்சனைகள் உள்ள நோயாளிகள் மற்றும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை இந்த நோய் தாக்கத்தில் மிகவும் பாதிக்கப்பட கூடியவர்கள்.

    மக்கள் நெரிசலான இடங்களைத் தவிர்க்க வேண்டும், கை மற்றும் சுவாச சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும், வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசிகளை எடுக்க வேண்டும்.

    உட்புற காற்றின் தரத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், வெளியில் செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும் மற்றும் ஆலோசனையின்றி வீட்டு வைத்தியத்தைத் தவிர்க்க வேண்டும்.

    புளூ காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பொதுவாக கை, கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    நன்கு சூடாக காய்ச்சி ஆற வைத்த தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறி சூப், அசைவ சூப் சாப்பிடலாம். வெளியிடங்களுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

    காய்ச்சல் இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க ஒரு லிட்டர் தண்ணீரில் நான்கு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் உப்பு கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
    • மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    திருப்பூர்:

    காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், திருப்பூர் மாவட்டத்தில் வரும் 10-ல் மெகா மருத்துவ முகாம் நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    'இன்ப்ளூயன்சா' எனப்படும் பரவக்கூடிய காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் ஒரு பிரிவான 'எச்3 என் 2' வகை வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் துவங்கியுள்ளது.

    பிற 'இன்ப்ளூயன்சா' போல் அல்லாமல், இந்த வைரஸ் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் அந்தந்த பகுதி அளவிலேயே சிகிச்சை அளித்து, மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி அதிகமான இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தி எந்த பகுதியில் அதிகமான பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    பொது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

    காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் பாதிப்புடன் எந்த பகுதியில் இருந்து அதிகமானோர் அனுமதியாகின்றனர் என்ற விபரத்தை மருத்துவமனைகளில் இருந்து பெற்று அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால், ஒருவருக்கு பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி கவனமாக இருக்க அறிவுரை வழங்கப்படும்.

    காய்ச்சல் அறிகுறி உள்ளவர், இந்த முகாமில் பங்கேற்க ஏதுவாக முன்கூட்டியே வைரஸ் காய்ச்சல் குறித்தும், முகாம் நடத்துவது குறித்தும் அனைத்து பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்றார்.

    • தமிழ்நாட்டில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர் புறங்களில் இது வரை 120 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர் புறங்களில் இது வரை 120 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதார துறை சார்பில் காய்ச்சலை கட்டுப்படுத்த ஒவ்வொரு வட்டாரங்களிலும் 20 களப்பணியாளர்களும் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வட்டாரத்தில் கூடுதலாக 20 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 210, கும்பகோணம் மாகராட்சியில் 60 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று காய்ச்சல் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கொசு ஒழிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் காய்ச்சல் கண்டறியக்கூடிய பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு மருத்துவ குழுக்கள் மூலம் பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று தஞ்சை மானம்புசாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் காய்ச்சல் அறிகுறிகள் இருக்கக்கூடியவர்கள் உடனடியாக இந்த மருத்துவமனையை அணுக வேண்டும். உரிய மருந்துகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். ஒரு பகுதியில் இருந்து அதிக அளவு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் வருவதால் உடனடியாக அந்த பகுதி குழு அனுப்பவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது .

    யாருக்கேனும் காய்ச்சல் இருந்தாலோ அந்த பகுதியில் அதிக அளவு காய்ச்சல் பரவுவதாக அறிந்தால் தாமாக முன்வந்து மருந்தகங்களில் சென்று மருந்து வாங்கி உட்கொள்ள வேண்டாம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான மருந்துகள் இலவசமாக கிடைக்கிறது. அதற்கான பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருவதால் மருத்துவர்கள் ஆலோசனைபடியே மருந்து உட்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • காய்ச்சல் பாதிப்பு 7 நாட்கள் வரை நீடிக்கிறது.
    • 50 வயதுக்கு மேற்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வகை வைரசால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கடுமையான உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

    இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் சளி மாதிரிகள் நாடு முழுவதும் உள்ள ஐ.சி.எம்.ஆரின் 30 ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    இந்த பரிசோதனையில் தற்போது வேகமாக பரவி வருவது 'இன்புளூயன்சா ஏஎச்3என்2' வகை வைரஸ் என தெரியவந்துள்ளது.

    கடந்த டிசம்பர் 15-ந் தேதி முதல் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த வகை வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் 'இன்புளூயன்சா ஏஎச்3என்2' வைரசால் பாதிக்கப்படுவோருக்கு இருமல், தொண்டை வலி, உடல் வலி, மூக்கில் சளி ஒழுகுதல், வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. காய்ச்சல் பாதிப்பு 7 நாட்கள் வரை நீடிக்கிறது.

    50 வயதுக்கு மேற்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வகை வைரசால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசுவும் இந்த வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    மற்ற 'இன்புளுயன்சா' காய்ச்சல் போல் அல்லாமல் இந்த வைரசின் பாதிப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.

    வழக்கமாக பருவகாலம் மாறும்போது இதுபோன்ற காய்ச்சல் ஏற்படும். இந்த காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்கு இருக்கும். 2 முதல் 3 வாரங்களுக்கு இருமல் இருக்கும். இந்த வைரஸ் பாதிப்பு சற்று தீவிரமாக உள்ளது.

    இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுவது, முக கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.

    மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது. வெளி இடங்களுக்கு சென்று வந்த பின்பு கைகளை கழுவாமல் கண் மற்றும் மூக்கை தொடக்கூடாது. நாம் சந்திக்கும் நபர்களிடம் பரஸ்பரம் கை கொடுத்தல் கூடாது.

    இந்தவகை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில் 10 சதவீதத்தினருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. 7 சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் வகையில் பாதிக்கப்படுகின்றனர். சளி, காய்ச்சல், உடல்வலி இருந்தால் உடனடியாக டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். டாக்டரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் திரவ உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சலால் தினந்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்படுவதால் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.

    அதே வேளையில் இந்த காய்ச்சல், பாதிக்கப்பட்டவர்களை பாடாய் படுத்தி விடுவதால் பொதுமக்கள் மத்தியில் இந்த வைரஸ் காய்ச்சல் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • பீதி அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதேநேரம் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.

    பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு தொண்டை வலி , உடற்சோர்ர்வுடன் கூடிய வைரஸ் காய்ச்சல், வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் பனிக்காலத்தில் இது போன்ற வைரஸ் காயச்சல்கள் பரவுவது இயல்பான ஒன்று. ஆனால் நடப்பாண்டு பார்த்தோம் என்றால் கோடைக்காலம் என்பது தொடங்கி விட்டது.

    குறிப்பாக கடந்த சில வாரங்களாகவே மாறுபட்ட சீதோஷண நிலையின் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த காய்ச்சல் அதீத காய்ச்சல் ஆகவும் பல்வேறு உடல் சார்ந்த பாதிப்புகளையும் கொண்டிருக்கிறது.

    இன்புளுயன்ஸா எனப்படும் ப்ளு காய்ச்சல் வேகமாக பரவுவது கண்பிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆர்.எஸ்.வி. எனப்படும் சுவாச பாதையை தாக்கும்வைரஸ் பரவுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக கோடைக்காலங்களில் குறையத் தொடங்கும் இது போன்ற காய்ச்சல் பாதிப்புகள், மார்ச் மாதம் பிறந்தும் தொடர்கிறது. புற நோயகளிகள் சிகிச்சை பிரிவிற்கு வருவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மாறுப்பட்ட சிதோஷண நிலை, கொசுக்குழுக்களுடைய வாழ்நாள் அதிகரிப்பு காரணமாக இந்த பாதிப்பு அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் அரசு சார்பாக தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    காய்ச்சல் தொண்டை வலி அதிகரிக்க வழக்கமான வைரஸ் பாதிப்புகளில் ஏதேனும் உருமாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதேநேரம் நடப்பாண்டில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்புகள் மிக குறைவாக காணப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறினர். பொதுமக்கள் இந்த வைரஸ் பாதிப்பு குறித்து பீதி அடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    • காய்ச்சல், தொண்டை வலி அதிகரிக்க வழக்கமான வைரஸ் பாதிப்புகளில் ஏதேனும் உருமாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
    • காய்ச்சல் இருந்தால் சொந்தமாக மருந்து எடுத்து கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்.

    * காய்ச்சல், தொண்டை வலி அதிகரிக்க வழக்கமான வைரஸ் பாதிப்புகளில் ஏதேனும் உருமாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

    * காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீத பேருக்கு influenza வைரஸ் பாதிப்பு உள்ளது. இது உயிர்க்கொல்லி வைரஸ் அல்ல, மக்கள் அச்சப்பட வேண்டாம்.

    * காய்ச்சல் இருந்தால் சொந்தமாக மருந்து எடுத்து கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    * கோடையில் குறைய தொடங்கும் காய்ச்சல் பாதிப்புகள், நடப்பாண்டில் மார்ச் மாதம் பிறந்தும் தொடர்கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×