search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்ரீத் பண்டிகை"

    • திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை தந்தனர்.
    • ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை என விவசாயிகள் கூறினர்.

    திருச்சி:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் இஸ்லாமியர்கள் உறவினர்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆடுகள் குர்பானி கொடுத்து தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பண்டிகைக்கு அவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை இன்று களை கட்டியது. இங்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை தந்தனர்.

    அதேபோன்று திருச்சி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பக்ரீத் பண்டிகையை ஒட்டி வழக்கத்துக்கு மாறாக வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிக அளவில் காணப்பட்டது.

    100-க்கும் மேற்பட்ட டெம்போக்களில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சந்தை நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று காலை 9 மணி வரை நடந்தது. இதில் ரூ. 2½ கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வழக்கமாக இந்த சந்தையில் நாளொன்றுக்கு ரூ.1 கோடி முதல் 1½ கோடி வரை வியாபாரம் நடைபெறும். நாளை மறுநாள் பக்ரீத் பண்டிகை நடைபெறுவதால் இன்று ரூ.1 கோடி அளவுக்கு கூடுதல் விற்பனை நடந்துள்ளது.

    ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை என விவசாயிகள் கூறினர். பொதுவாக ஒரு ஆடு ரூபாய் 8 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகும்.

    இன்று நடைபெற்ற சந்தையில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ 22 ஆயிரம் வரை அதிகபட்சமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதில் செம்மறி ஆடுகளுக்கு அதிக கிராக்கி இருந்தது. இன்று நடைபெற்ற சந்தையில் 5 ஆயிரத்து 500 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

    • கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

    கிருஷ்ணகிரி:

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.7 கோடியே 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை ஆனது.

    நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை 17ம் தேதி முஸ்லீம் மக்களால் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் இன்று வழக்கத்தை காட்டிலும் அதிகமாக கொண்டு வரப்பட்டன.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன. அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கியது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கோலார் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர், மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மற்றும் தமிழகத்தில் வேலூர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

    வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு, 12 ஆயிரம் ரூபாய் விலை போகும். ஆனால், பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து, 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு 15 ஆயிரம் முதல், 17 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.

    குறைந்த பட்சம் ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒரு ஆடு 67 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. இன்று கிடா ஆடுகள் அதிகம் விற்பனை ஆனது. 45 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை ஆனதால், இன்று ஒரே நாளில் 7.50 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
    • கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 30 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.23 ஆயிரத்துக்கே விற்பனை ஆனது.

    பொள்ளாச்சி:

    பக்ரீத் பண்டிகை வருகிற 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி வருகிறார்கள்.

    இந்தநிலையில் புகழ்பெற்ற பொள்ளாச்சி சந்தை நேற்று கூடியது. இதில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்ததுடன், கூடுதல் விலையும் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே ஒரு பகுதியில் வாரந்தோறும் ஆடு விற்பனை நடைபெறுகிறது. இங்கு பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கோட்டூர், உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கிடாக்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கிறார்கள.

    இந்த மாதத்தில் கடந்த சில வாரமாக சந்தைக்கு ஆடுகள் வரத்து ஓரளவே இருந்தாலும் நேற்று நடந்த சந்தையின் போது அதிகாலை முதலே வியாபாரிகள் அதிகளவு ஆடுகளை கொண்டு வந்தனர்.

    நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் பல மாதத்துக்கு பிறகு மீண்டும் சந்தை களை கட்டியது.

    பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆடுகளை வாங்க வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி கேரள வியாபாரிகளும் அதிகளவு வந்திருந்தனர். இதனால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்புடன் இருந்ததுடன் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனையானது. அதிலும் எடை அதிகம் உள்ள கிடாவுக்கு கிராக்கி ஏற்பட்டது.

    கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 30 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.23 ஆயிரத்துக்கே விற்பனை ஆனது. ஆனால் நேற்று 28 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்ட செம்மறி மற்றும் வெள்ளாடு ரூ.26 ஆயிரம் வரையிலும், சுமார் 40 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான கிடா கொண்ட பெரிய அளவிலான கிடா ரூ.37 ஆயிரம வரையிலும் என எப்போதும் இல்லாத வகையில் கூடுதல் விலை போனது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.1.25 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பக்ரீத் பண்டிகைக்காக சென்னைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்துள்ளது.
    • வருகிற 16-ந்தேதி ஆடு மற்றும் இறைச்சி வியாபாரம் அதிகரிக்கும்

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது.

    பக்ரீத் பண்டிகைக்காக சென்னைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலையில் இருந்தே ஆடுகள் வரத் தொடங்கி உள்ள நிலையில் இந்த ஆண்டு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ஆடுகள் வரையில் வர இருப்பதாக ஆட்டிறைச்சி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தில் பொதுச் செயலாளர் ராயபுரம் அலி கூறும்போது, பக்ரீத் பண்டிகைக்கு ஆந்திராவில் இருந்தே 90 சதவீத ஆடுகள் வருகை தந்துள்ளன.

    தமிழகத்தின் சில மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் வந்துள்ளன. சென்னையில் புளியந்தோப்பு, ரெட்டேரி, வியாசர்பாடி ஆகிய 4 இடங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரையில் தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும்.

    இந்த ஆண்டு உற்பத்தி குறைவால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ஆடுகளின் விலை அதிகரித்துள்ளது. ரூ.50 கோடி வரையில் ஆடுகள் விற்பனையாக வாய்ப்பு உள்ளது என்றார்.

    பக்ரீத் பண்டிகையை யொட்டி வருகிற 16-ந்தேதி ஆடு மற்றும் இறைச்சி வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தஞ்சை இர்வீன்பாலம் அருகே உள்ள ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.

    தஞ்சாவூர்:

    இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி இன்று உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    தஞ்சை கீழவாசல் அறிஞர் அண்ணா மண்டப வளாகத்தில் இன்று காலை பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொ ருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    இதேபோல் தஞ்சை இர்வீன்பாலம் அருகே உள்ள ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

    பின்னர் அவர்கள் அனைவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

    இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றன.

    பின்னர் இஸ்லாமியர்கள் பலர், தங்கள் வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுத்து அவற்றை 3 சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்து விட்டு 3-வது பங்கை தங்கள் தேவை களுக்கு பயன்படுத்தினர்.

    மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கும் உணவு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடினர்.

    கும்பகோணம்:

    தியாகத்திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் மற்றும் சிறப்பு திடலில்  அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம், மேலக்காவேரி, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், கருப்பூர், செறுகடம்பூர், சிக்கல் நாயக்கன்பேட்டை, திருலோகி,கதிராமங்கலம், சோழபுரம், திருமங்கலக்குடி, ஆடுதுறை, அவனியாபுரம் என  பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

    இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடினர்.

    இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும்  அதிகாலை முதலே  திடலில் குவிந்தனர்.

    சரியாக 7.00 மணியளவில் பெருநாள் தொழுகையை நடத்திய இமாம்கள் ஆற்றிய உரையில் இறை நம்பிக்கை மனிதனை நல்லவனாக ஆக்குவதற்கு உதவியாக இருக்கின்றது.

    இறை தூதர்கள் உலகில் இறைவனுடைய இறை பணிகளை நடைமுறை படுத்துவதற்காகவே இறைவன் அனுப்பினான் இதில் முக்கிய பங்கு ஆற்றியவர்களில் இப்ராஹிம் நபி அவர் தன் மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக அறுத்து பலியிட முயன்ற போது இறைவனுக்கு மனிதர்களை நரபலி கொடுப்பது கூடாது என்பதற்காக அதற்கு பரிகாரமாக இஸ்லாமியர்கள் கால்நடை போன்ற  பிராணிகளை அறுத்து  இறைவனுக்காக குர்பானி என பலியிடுகின்றார்கள் என்றார்.

    ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

    • திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் நடுத்தெரு திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஒரே இடத்தில் தொழுகை செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நாச்சிகுளம் நடுத்தெரு திடலில் நாச்சிகுளம் கிளை செயலாளர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

    ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஒரே இடத்தில் தொழுகை செய்தனர்.

    அதே தொடர்ந்து

    நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளி இமாம் முகமது தெளபிக் ஹஜ் பெருநாள் குறித்து உரை நிகழ்த்தினார்.

    அதன் பின் ஒருவொரை ஒருவர் கட்டி அனைத்து வாழ்த்துகளை பரிமாரிக் கொண்டனர்.

    இதில் மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன் மாவட்ட துனை தலைவர் அஸாருதீன் கிளை பொருளாளர் கமருதீன் கிளை துனை தலைவர் செய்யது அபுபக்கர் கிளை துனை செயலாளர் மைதீன் கல்பான் அமீரக பொறுப்பாளர் மூசா மீரான் சாதிக் பாட்சா என 500க்கும் மேற்பட்டோர் இச்சிறப்பு தொழுகையில் கலந்துக் கொண்டனர்.

    • இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
    • நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    நாகூர் தர்காவில் நடைபெற்ற தொழுகைக்கு பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

    இதேபோல நாகை மாவட்டத்தில் நாகூர், நாகை, திட்டச்சேரி, வடகரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 66 பள்ளி வாசல்களிலும் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    • தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகை செய்பவர்களுக்காக தொப்பி, அத்தர், கண் சுருமா ஆகியவை விற்கப்பட்டன, வடமாநில் தொழிலாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    கோவை,

    இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டி கையை கொண்டாடி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப் படுகிறது. பக்ரீத் பண்டிகையை யொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் பரிமாறி உற்சாகம் அடைந்த னர்.

    தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள்.

    மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். சென்னையிலும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது. காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடு பட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதல் சிறுவர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மைதானங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடைகளுடன் திரளாக வந்திருந்து சிறப்பு தொழுகை நடத்தினார்கள். அதன்பிறகு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி, பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் தக்னி ஜமாத் பள்ளிவாசலில் தமிழகம் மட்டுமின்றி வடமாநில தொழிலாளர்களும் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகை செய்பவர்களுக்காக தொப்பி, அத்தர், கண் சுருமா ஆகியவை விற்கப்பட்டன. இதனை வடமாநில் தொழி லாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் மப்டி உடையில் ரோந்து சென்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிநவீன கருவிகள் மூலம் பள்ளிவாசல் வளாகம், வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளில் அதிரடியாக சோதனை மேற்கொ ண்டனர்.

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை பிராட்வேயில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இன்று காலை யில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாகிருல்லா எம்.எல்.ஏ. மற்றும் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்ற னர். தொழுகை முடிந்த பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இன்று காலையில் பக்ரீத் பண்டிகையை யொட்டி சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதில்

    1000- க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதேபோல் சென்னை பெரம்பூர், ஓட்டேரி, ராயபு ரம், புரசைவாக்கம், அண்ணா நகர், ஐஸ் அவுஸ், வண்ணாரப் பேட்டை, தண்டையார் பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட சென்னை முழுவதும் உள்ள மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்ற னர். 

    • கடலூர் முதுநகரில் ஜீம்அ மஸ்ஜித் திடலில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழிலில் ஈடுபட்டனர்.
    • ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்து ஏழைகளுக்கு குர்பானி வழங்கினார்கள்.

    கடலூர்:

    இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நெல்லிக்குப்பம் பகுதியில் கொண்டாடப்பட்டது. நெல்லிக்குப்பத்தில் இன்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ஊர்வலமாக நகரின் முக்கிய சாலை வழியாக கொத்பா பள்ளிவாசலுக்குச் சென்றனர். அங்கு சிறப்பு தொழுகை நடந்தது. பிறகு ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக ஏழைகளுக்கு இறைச்சி, மளிகைப் பொருட்கள் போன்றவற்றை குர்பானியாக வழங்கினர். இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், செம்மண்டலம், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலும் கடலூர் முதுநகரில் ஜீம்அ மஸ்ஜித் திடலில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழிலில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்து ஏழைகளுக்கு குர்பானி வழங்கினார்கள்.

    பண்ருட்டிகாந்தி ரோட்டில்உள்ளபழமை வாய்ந்த முகமது ஷா அவுலியா தர்கா வில்இருந்துஊர்வலமாக வந்துபண்ருட்டி -கடலூர் சாலையில் உள்ள ஈத்காமைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட பின்னர், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்குரமேஷ் எம்.பி. , வேல்முருகன் எம்.எல்.ஏ. ,சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் ராஜேந்திரன்,அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்,முன்னாள்எம்.எல்.ஏ.க்கள் சொரத்தூர்ராஜேந்திரன்,சத்யாபன்னீர்செல்வம்,சிவக்கொழுந்து,முன்னாள் நகர் மன்ற  தலைவர்கள் பஞ்சவர்ணம், பன்னீர்செல்வம், சென்னை  ஜேப்பியார்ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர்வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதி பள்ளிவாசல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • 2 ஆயிரம் பேர் பங்கேற்பு
    • தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டி தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டா டப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படு கிறது.

    இப்பண்டிகையை ஒட்டி முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்க ளும், பெண்களும் அணிவ குத்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று சுன்னத்துல் ஜமாத், தல்ஹீத் பிரிவினர் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாக இஸ்லாமியர்கள் குடும்பத்தினரோடு இன்று காலையில் ரமலான் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையி லான 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி மீராசா ஆண்டவர் பள்ளியில் இன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அப்பகுதியைச் சார்ந்த ஆயி ரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

    தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டி தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.

    • ரூ.1 கோடி வரை ஏலம் போன செம்மறி ஆட்டுக்கு தற்போது சிறப்பு கவனிப்பு வழங்கப்படுகிறது.
    • தினமும் மாதுளை, பப்பாளி, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் செம்மறி ஆட்டுக்கு கொடுக்கப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூசிங். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் செம்மறி ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஆட்டின் வயிற்று பகுதியில் உருது வாசகம் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவர், அந்த கிராமத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களுடன் கலந்து ஆலோசித்தார். அப்போது செம்மறி ஆட்டின் உடலில் 786 என்ற எண்கள் காணப்பட்டது தெரிய வந்தது. இந்த 786 என்ற எண்கள் இஸ்லாமிய மதத்தில் புனிதம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

    இதனால் அந்த செம்மறி ஆட்டை விற்பதற்கு ராஜூசிங் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    செம்மறி ஆட்டின் உடலில் என்ன வாசகம் இடம்பெற்றிருந்தது என எனக்கு தெரியாது.

    இதுபற்றி இஸ்லாமிய சமூக உறுப்பினர்கள் சிலருடன் ஆலோசித்த போதுதான், அது 786 என்ற எண் என கூறினர். பக்ரீத்தையொட்டி இந்த செம்மறி ஆட்டை அதிக விலை கொடுத்து வாங்க சிலர் முன்வந்தனர். ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கூட கொடுத்தும் வாங்குவதற்கு முன்வந்தனர். ஆனால் அதனை விற்க நான் தயாராக இல்லை. ஏனென்றால் அந்த ஆடு என்னிடம் மிகவும் அன்பாக உள்ளது என்றார்.

    ரூ.1 கோடி வரை ஏலம் போன அந்த செம்மறி ஆட்டுக்கு தற்போது சிறப்பு கவனிப்பு வழங்கப்படுகிறது. தினமும் மாதுளை, பப்பாளி, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் கொடுக்கப்படுகிறது.

    ×