search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 238978"

    • வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் எம்.பி. தலைமையில் நடந்தது.
    • 2023-24-ம் நிதி யாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. குழுவின் தலைவரும், விருதுநகர் எம்.பி.யுமான மாணிக்கம்தாகூர் தலைமை தாங்கினார்.

    குழுவின் செயலரும், கலெக்டருமான ஜெயசீலன், தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த குழுவின் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2023-24-ம் நிதி யாண்டிற்கான முதலாம் காலாண்டிற்கான கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம், உஜ்வாலா திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட பொது விநியோகத்திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணி களை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அரசு அலுவலர்களிடம் எம்.பி. அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சின்னக்கானல் முதல் முண்டந்துறை வரை 38 நாட்கள் பரபரப்பை ஏற்படுத்தியது
    • குமரி வனத்துறையினர் ½ மணி நேரத்திற்கு ஒருமுறை ஆய்வு

    நாகர்கோவில் :

    கேரளாவில் அரிக்கொம்பன்... தமிழகத்தில் அரிசிக்கொம்பன்.. இது தான் கடந்த சில நாட்களாக இரு மாநில மக்கள் அச்சத்துடன் உச்சரித்த பெயர்கள். ஆரம்பத்தில் ரேஷன் கடைகளை குறிவைத்து தாக்கி அரிசியை சாப்பிட்ட யானை முதலில் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் நாளடைவில் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட பெரும் பேசு பொருளாக மாறியது அரிக்கொம்பன் யானை.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் சுற்றித் திரிந்த இந்த யானை, மக்களுக்கு தொல்லை கொடுத்ததால் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி கேரள வனத்துறையி னரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பெரியார் புலிகள் காப்பக பகுதியில் யானை விடப்பட்டது.

    ஆனால் அரிசி ருசி கண்ட அரிக்கொம்பன் யானை அடர்ந்த வனப்பகுதி வழியாக தமிழகத்தின் வண்ணாத்திப்பாறை வழியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் மலைப்பகு திக்கு வந்தது. கடந்த மாதம் 26-ந்தேதி நள்ளிரவில் குமுளி பகுதியில் யானை மக்கள் நிறைந்த பகுதிக்கு வர பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கம்பம் நகருக்கு ள்ளும் அரிசிக்கொம்பன் யானை வலம் வர பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து ஒரு வார கால போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிசிக்கொம்பன் யானையை பிடித்தனர். பின்னர் கும்கி யானைகள் உதவியுடன், வனத்துறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனமான பிரத்யேக லாரியில் அரிசிக்கொம்பன் ஏற்றப்பட்டது. அந்த யானையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் விட முடிவு செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் பயணம் தொடங்கியது.

    உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று (ஜூன் 5-ந்தேதி) மணிமுத்தாறு வன சோதனை சாவடியை கடந்து மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு வழியாக மேல்கோதையாறு பகுதிக்கு லாரி சென்றது. அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானையை வனத்துறையினர் இறக்கி விட்டனர்.

    யானை இறக்கிவிடப்பட்ட வனப்பகுதி கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி என கூறப்படுகிறது. இதன் காரணமாக குமரி மாவட்ட மலையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏனென்றால், குமரி வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக்கொம்பன் யானை, அங்கிருந்து கீழ் இறங்கி வந்தால், பேச்சிப்பாறை உள்ளிட்ட குமரி மாவட்ட வனப்பகுதிக்குள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் காணியின மக்கள் உள்ளிட்ட பலர் வசிக்கின்றனர்.

    எனவே அரிசிக்கொம்பன் யானை இங்கு வந்தால், இவர்களுக்கு ஆபத்து என தகவல் பரவ அவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் குமரி மாவட்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறுகையில், யானையின் நடமாட்டம் பற்றி கண்காணிக்க அதன் கழுத்தில் ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதனை வைத்து ½ மணி நேரத்திற்கு ஒருமுறை யானை எங்குள்ளது?அது எந்த பகுதியை நோக்கி செல்கிறது? என்பதை அறியமுடியும். இருப்பினும் அதுபற்றி தெரிந்து கொள்ளும் ஆப், குமரி மாவட்ட வனத்துறையிடம் இல்லை. அதனை அரசிடம் கேட்டுள்ளோம்.

    அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டுள்ள அரிசிக்கொம்பன், வனப் பகுதியில் தான் சுற்றி வரும். அப்படியே அது இடம் பெயர்ந்தாலும் முத்துக்குழிவயல், நெய்யாற்றின்கரை வழியாக கேரளா செல்லவே வாய்ப்புள்ளது. இருப்பினும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

    அரிசிக்கொம்பன் யானை சின்னக்கானல் முதல் மேல்கோதையாறு வரை 38 நாட்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் பயணம் செய்துள்ளது. இதன் காரணமாக யானையின் உடல் நலத்தில் சிறிது மாற்றம் ஏற்படலாம். ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது என யானையை கண்காணித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ள னர். யானை முதலில் வசித்த சின்னக்கானல் மிகவும் குளிரான சூழல் நிறைந்தது. அதன்பிறகு விடப்பட்ட பெரியார் புலிகள் காப்பக பகுதியிலும் இதே சூழ்நிலைதான். ஆனால் கம்பம், தேனி பகுதியில் பகலில் வெப்பமாகவும், இரவில் குளிர்ச்சியாகவும் இருந்தது. தற்போது யானை விடப்பட்ட முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியிலும் அதே சூழல் தான் உள்ளது. இருப்பினும் இன்னும் சில நாட்களுக்கு அரிசி க்கொ ம்பன் யானையின் உடல்நலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    அரிசிக்கொம்பன் யானை விடப்பட்ட காடுகள், நிறைந்த செங்குத்தான மலைத்தொடர்களுக்கு எதிர்புறம் உள்ளது. அங்கு அடிமரம் இல்லை. இதனால் யானையை கவனிப்பது எளிதாக இருக்கும். மழை நிழலான பகுதி என்பதால் பகலில் வறட்சியான காலநிலைக்கு ஏற்ப யானைகள் பழகுவது முக்கியம் என்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    • யானைக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர்.
    • உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதினால் அதனை 2 நாட்கள் காணிப்பதற்காக வனத்துறையினர் அங்கு முகாமிட்டு அதன் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.

    நெல்லை:

    தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் சண்முகநதி அணைப்பகுதியில் சின்ன ஓவலாபுரம் பகுதியில் பிடிப்பட்ட அரிசி கொம்பன் யானை சாலை மார்க்கமாக நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு நேற்று மாலை 6 மணி அளவில் கொண்டு வரப்பட்டது.

    மணிமுத்தாறு வன சோதனை சாவடியில் இருந்து மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு வழியாக மேல கோதையாறு அணையில் உள்ள அடர்ந்த வனப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வயல் என்ற வனப்பகுதிக்கு அரிசி கொம்பன் யானை கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு யானைக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு ஏற்ற சாத்திய கூறுகள் இல்லாததால் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று அதிகாலை வனப்பகுதியில் விடப்பட்டது.

    மேலும் அதன் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதினால் அதனை 2 நாட்கள் காணிப்பதற்காக வனத்துறையினர் அங்கு முகாமிட்டு அதன் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே முத்துக்குழி வயல் பகுதியில் யானை வழித்தடம் இருப்பதினாலும், அந்த வழித்தடம் அதன் பூர்வீக இடமான கேரளா வனப்பகுதிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அதன் வழியாக அரிசி கொம்பன் கேரள மாநிலத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர்.
    • யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் சுற்றித் திரிந்து 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.

    அங்கிருந்து வெளியேறிய அரிசி கொம்பன் மேகமலை வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது. கடந்த 27-ந் தேதி கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியம்மன் கோவில் பகுதிக்கு வந்தது.

    நாராயணத்தேவன் பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தி அங்கிருந்த வேலிகளை சேதப்படுத்தியதில் அதன் துதிக்கையில் காயம் ஏற்பட்டது.

    மேலும் தற்போது வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு விரும்பிய உணவு கிடைக்கச் செய்யும் வகையில் வனத்துறையினர் அது சுற்றித் திரியும் இடங்களில் பலாப்பழம், அரிசி, கரும்பு ஆகியவற்றை வைத்து வருகின்றனர்.

    தற்போது அது முகாமிட்டுள்ள இடம் வாழை, தென்னை, கொய்யா, கரும்பு, திராட்சை தோட்டங்கள் சூழ்ந்த பகுதியாகும். இந்த வாசனை யானைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அரிசி கொம்பன் கடந்த 4 நாட்களாக அங்கேயே உள்ளது.

    யானையை பிடிக்க ஊட்டி தெப்பக்காட்டில் இருந்து பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்டோர் கம்பம் வந்துள்ளனர். அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சிறிது நேரம் உணவு சாப்பிட்டு விட்டு அது மின்னல் வேகத்தில் மறைந்து விடுகிறது.

    சண்முகா நதி அணையை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொழிலதிபரின் வாழைத் தோட்டத்தில் புகுந்து 50க்கும் மேற்பட்ட செவ்வாழைத்தார்களை சாப்பிட்டது. பின்னர் சின்ன ஓவுலாபுரம் மலைப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்றது. இன்று காலை வரை அதே இடத்தில் இருப்பதால் யானையின் நகர்வினை கம்பம் வனச்சரக அலுவலகத்தில் உள்ள ரேடியோ காலர் ரிசவர் மூலம் உறுதி செய்து வருகின்றனர். கம்பம் வனச்சரக அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம், மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. யானை ஒரே இடத்தில் இருப்பதால் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களையும் வேலைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    தேனி மாவட்டம் அரசரடி, சோலைத்தேவன்பட்டி, முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் காட்டு யானையைப்பற்றி நன்கு அறிந்தவர்கள். இவர்கள் யானையின் போக்கு மற்றும் நடமாட்டத்தை அறிந்து அதனை விரட்டும் தன்மை கொண்டவர்கள். மேலும் ஓரிரு நாட்களில் யானையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வல்லமை படைத்தவர்கள். அது போன்ற பழங்குடி இன மக்கள் மற்றும் முதுமலைப்பகுதியில் இருந்து வரழைக்கப்பட்ட மக்களை யானை முகாமிட்டுள்ள பகுதிக்கு வரவழைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதிக்குள் விரட்டவும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இயற்கை காரணிகள் பாதகமாக இருப்பதால் மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • சாப்டூர் வனப்பகுதியில் மதுவிலக்கு போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 100 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
    • அந்தப் பகுதியில் டிரம்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சாப்டூர் வனப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்று தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாப்டூர் கும்பமலை வனப் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் திருமங்கலம் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இளவரசன் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்தப் பகுதியில் டிரம்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அவற்றை சோதனை இட்டபோது டிரம்களில் சாராய ஊறல் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து

    அந்த டிரம்களில் இருந்த சுமார் 100 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அந்தப் பகுதியில் சாராய ஊறல்களை பதுக்கி வைத்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் கள்ளச்சாராய புழக்கத்தை தடுப்பதற்காக அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கள்ளச்சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
    • போலீசார் முகாமிட்டு கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் 171 மலை கிராமங்களும் 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட மலைவாழ் மக்களும் வசித்து வருகிறார்கள். இப்பகுதி சேலம் தர்மபுரி திருவண்ணா மலை கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களை இணை க்கும் ஒரு அடர்ந்த வனப்பகு தியாக உள்ளது. மலையில் உள்ள நீர்ஓடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்ட ங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் பரபரப்பாக்கியது.

    இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது அதன் எதிரொ லியாக கல்வராய ன்மலையில் சென்னை வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையிலான மதுவிலக்கு போலீசார் முகாமிட்டு கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்வராயன் மலையில் இருந்து கள்ளச்சாராயம் காய்ச்சி மலை அடிவாரம் பகுதி வழியாக கள்ளச்ச ராயம் கடத்தி வருவது தடுக்கும் விதமாக கல்வராயன்மலையில் உள்ள 4 புறங்களிலும் குறிப்பாக மூலக்காடு லக்கிநாயக்கன்பட்டி மாயம்பாடி துருர் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சோதனை சாவடிகளை சென்னை வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆய்வு செய்து கள்ளச்சா ராயத்தை கடத்தி வருவதை தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    • 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் சிக்கலான பிரசவங்களை எதிர்நோக்கியிருப்பவர்களாக கருதப்படுகின்றனர்.
    • 'ஹை ரிஸ்க் மதர் டிராகிங்' எனும் மொபைல்போன் செயலியில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    தமிழகத்தில் கர்ப்பிணிகள், சிசு இறப்பை பூஜ்யமாக்க சுகாதாரத் துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிக்கலான பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்களை பிரத்யேக மொபைல்போன் செயலி வாயிலாக கண்காணிக்கும் நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :- கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய பாதிப்புக்கு உள்ளானவர்கள், 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் சிக்கலான பிரசவங்களை எதிர்நோக்கியிருப்பவர்களாக கருதப்படுகின்றனர்.தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளின் தகவல்களை பகிரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கர்ப்பிணிகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'ஹை ரிஸ்க் மதர் டிராகிங்' எனும் மொபைல்போன் செயலியில், கர்ப்பிணிகளின் முழு விவரங்களையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் விவரங்களை அந்தந்த பகுதி கிராம சுகாதார செவிலியர்கள் பார்க்கலாம். பிரச்னைக்குரிய கர்ப்பிணிகளை அடையாளம் கண்டு எளிதில் கண்காணிக்க முடியும்.

    ஒவ்வொரு மாதமும் அவர்களின் உடல் நிலை குறித்து அறிந்து உரிய ஆலோசனைகள், சிகிச்சையை பரிந்துரைக்க முடியும். இதனால் கர்ப்பகாலங்களில் ஏற்படும் இறப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
    • நாராயணசாமி, முத்துக்கருப்பன் ஆகிய 2 பேரையும் மதுபாட்டில்களால் தாக்கினர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாறு அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ரம்ஜான் பண்டிகையை யொட்டி மது விற்பனை அமோகமாக நடந்து வந்தது.

    இந்த கடையில் பூமிநாதன், முத்துக்கருப்பன், நாராயண சாமி, பெருமாள்ராஜ் ஆகி யோர் விற்பனையாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். மேற்பா ர்வையாளர்களாக செந்தில், மாரியப்பன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையை மூடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டில் பதுங்கி இருந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடைக்குள் புகுந்தனர். அதனை தடுக்க முயன்ற பூமி நாதனை அரிவாளால் வெட்டினர்.

    மேலும் விற்பனையா ளர்கள் நாராயணசாமி, முத்துக்கருப்பன் ஆகிய 2 பேரையும் மதுபாட்டில்க ளால் தாக்கினர்.

    இதைத்தொடர்ந்து டாஸ்மாக் ஊழியரிடம் இருந்த ரூ.6 லட்சத்து 47 ஆயிரம் ரொக்கம், 4 செல்போன்கள், அரை பவுன் மோதிரம் ஆகிய வற்றை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த கடை ஊழியர்கள் திருச்சுழி அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுபற்றிய புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி னர்.

    மேலும் கடை செயல்படும் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை பார்வையிட்டு கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சீனிவாசப்பெருமாள் உத்தரவின்பேரில் டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டிய நபர்களை போலீ சார் தீவிரமாக தேடி வரு கின்றனர்.

    • சாதி மோதல்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறினார்.
    • தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டது.

    மதுரை

    மதுரை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பட்டியல் இனத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை விடுவிக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக நீண்ட போராட்டம் நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான சூழல் வரும் என்று நம்புகிறோம்.

    மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு கூடி எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து விட்டது. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து விட்டது.

    எனவே தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி தான் பழனிசாமி தான்

    தமிழக அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. இது தொழிலாளர்களுக்கு எதிரான செயல்.

    தமிழகத்தில் ஜாதி மோதல் இருக்கிறது. சமீபத்தில் பரமக்குடியில் நடந்த கல்லூரி விழாவில் தாழ்த்தப்பட்ட மாணவன் மீது பிற மாணவர்கள்-ஆசிரியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    மேலும், கடலாடியில் பள்ளி ஆசிரியரை அதிகாரிகள் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.

    இந்தச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுபோன்ற சம்பவங்களை முதல்-அமைச்சர் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70-க்கு மேல் பதிவாகியுள்ளது.
    • கடந்த வாரத்தில் ஒரு தொழிற்சாலையில் புதிய கொரோனா தொகுப்பு கண்டறியப்பட்டது

    கோவை,

    கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து தொழிற்சாலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநகராட்சிப் பகுதிகளில் நோய்த் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70-க்கு மேல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதில், மாநகராட்சியில் மட்டும் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அண்மையில் தனியார் தொழிற்சாலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தொழிற்சாலைகளில் கண்காணிப்பு சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோவையில் கடந்த வாரத்தில் ஒரு தொழிற்சாலையில் புதிய கொரோனா தொகுப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அனைத்து தொழிற்சாலைகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தொடர்ந்து தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்பின் வேறு எந்த கொரோனா தொகுப்பும் ஏற்படவில்லை. மாவட்டம் முழுவதும் பரவலாக தொற்று பாதிப்பு காணப்படுகிறது. குறிப்பாக மாநகராட்சியில் அதிக அளவில் காணப்படுகிறது. நோய்த் தொற்று பாதிப்பை தவிர்க்க பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கேரளாவில் தினமும் 2,000க்கும் அதிக மானோருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது.
    • பரிசோத னைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    உடுமலை :

    கேரளாவில் தினமும் 2,000க்கும் அதிக மானோருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தப்ப ட்டு ள்ளன.தமிழக எல்லை ப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்ப டுத்தப்ப ட்டு ள்ளது. அறிகுறிகளுடன் வருவோருக்கு பரிசோத னைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இரு மாநில சுகாதார துறையினரும், வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி கொரோனா நோயாளி களின் தகவ ல்களை பரிமாறி வருகின்ற னர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை தமிழக -கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு ள்ளது.

    இதுகுறித்து மாவட்ட சுகாதார துறை அதிகாரி கள் கூறுகையில், கேரளா வில் இருந்து அறிகுறி களுடன் வருவோர் குறித்த தகவல்கள் பெற ப்பட்டு, அவர்கள் தனிமை ப்படு த்தப்படுகி ன்றனர்.பரிசோ தனைகளும் மேற்கொ ள்ளப்படுகின்றன என்றார். 

    • விமான நிலையத்தில் மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் வெளிநாடுகளில் இருந்த கோவைக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் விமானத்தில் வந்த கணபதியை சேர்ந்த 41 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினர். தொடர்ந்து அவரை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    அவரது சளி மாதிரி எடுக்கப்பட்டு புதிய வகை கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்காக மரபணு சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்த கோவைக்கு வந்த கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் தொற்று அதிமுள்ள பகுதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 157 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற 11 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

    ×