search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 238978"

    • காட்டுப்பகுதியை ட்ரோன் கேமரா மூலம் முதலில் சுற்றி வளைத்தனர்.
    • காவல் துறையினர் சுமார் 8 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வகையிலும் பிரத்யேகமாக அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் மாநகரின் முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளை தேர்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த கேமரா மூலம் கண்காணிக்கப்படும் பொழுது சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் இந்த கேமராவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் கண்டு அந்த குற்றவாளி எங்கு இருக்கிறார் என்பதை துல்லியமாக பதிவு செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கும் அதி நவீன தொழில்நுட்பம் உள்ளது.

    திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட மாஸ்கோ நகர், பவானி நகர், பாளையக்காடு, எம். எஸ். நகர், உள்ளிட்ட பகுதியில் கஞ்சா , போதை ஊசி மற்றும் போதை மாத்திரை புழக்கத்தில் இருப்பதால் மாநகர போலீசார் கடந்த சில மாதங்களாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இருப்பினும் திருப்பூர் மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் இன்னும் இந்த தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருவதை ரகசிய தகவல் மூலம் அறிந்த காவல் துறையினர் திருப்பூர் வடக்கு உதவி ஆணையர் அனில்குமார், வடக்கு காவல் நிலையம் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார் மற்றும் ராஜசேகர் மற்றும் போலீசார் குழுவாக சென்று ஊத்துக்குளி சாலை பவானி நகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியை ட்ரோன் கேமரா மூலம் முதலில் சுற்றி வளைத்தனர்.

    குறிப்பாக இந்த டிரோன் மற்ற டிரோன்களை போல் இல்லாமல் டார்ச் லைட் இருந்ததும் அதை கண்ட இளைஞர்கள் தலைதெறிக்க ஓடினர். ஒருசிலர் வந்த இருசக்கர வாகனத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் காட்டுக்குள் தப்பி சென்றனர். ஆனாலும் காவல் துறையினர் விரட்டி சென்று சுமார் 8 பேரையும் இரண்டு இருசக்கர வாகனங்களை பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடு மற்றும்கன்றுக்குட்டிகளை கடித்து கொன்று போட்டு விடுகிறது.
    • சிறுத்தையை பிடிக்க மலை அடிவார பகுதியில் 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே ஊதியூர் மலை 13 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த மலையில் மான், நரி, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதிக்குள் பதுங்கியுள்ள சிறுத்தை ஒன்று, மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடு, மாடு மற்றும்கன்றுக்குட்டிகளை கடித்து கொன்று போட்டு விடுகிறது.

    இதனால் ஊதியூர் மலை பகுதிக்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இதனால் சிறுத்தையை பிடிக்க மலை அடிவார பகுதியில் 3 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த கூண்டுக்குள் ஆடுகள் கட்டி வைத்துள்ளனர். மேலும் தானியங்கி கேமராக்கள் பொருத்தி இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சிறுத்தை உருவம் பதிவு ஆகவில்லை. இதனால் கூண்டுகள் வைக்கப்பட்ட இடத்திற்கு சிறுத்தை வரவில்லை என தெரிகிறது.

    வனப்பகுதிக்குள் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கண்காணிக்க டிரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த முயற்சியிலும் சிறுத்தை தென்படவில்லை. இருப்பினும் பல்வேறு குழுக்களாக பிரிந்து பாதுகாப்புடன் வனப்பகுதி மற்றும் மலையடிவாரம் என அனைத்து இடங்களிலும் சிறுத்தையை தேடி வருகின்றனர்.

    இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது " மலைப்பகுதியில் சிறுத்தை எங்கு பதுங்கி உள்ளது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கேமராவிலும் பதிவாகவில்லை. டிரோன் கேமராவிலும் சிக்கவில்லை. கூண்டுக்குள்ளும் மாட்டவில்லை. ஒருவேளை சிறுத்தை இடம் பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்று விட்டதா? என்ற சந்தேகமும் உள்ளது. இருப்பினும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறோம். எனவே பொதுமக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்" என்றார்.

    • பிளஸ்-2 தேர்வை ஆர்வத்துடன் எழுதிய மாணவ-மாணவிகளை பறக்கும் படையினர் கண்காணித்தனர்.
    • காலை 10 மணிக்கு தமிழ் மொழி பாட தேர்வு தொடங்கியது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு தொடங்கி யது. இந்த தேர்வை 8.75 லட்சம் மாணவ-மாணவி கள் எழுதினர்.

    மதுரை மாவட்டத்தில் 18, 734 பேர் மாணவர்களும், 18,723 மாணவிகளும் என மொத்தம் 37,457 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

    119 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதி னர். காலை 10 மணிக்கு தமிழ் மொழி பாட தேர்வு தொடங்கியது.

    தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்தி ருந்தனர். அவர்கள் புத்தகங்களுடன் கடைசி நேர தயாரிப்பில் மும்முர மாக ஈடுபட்டு இருப்பதை காண முடிந்தது. மாணவ-மாணவிகளுக்கு ஆசிரி யர்களும் தேர்வு குறித்து அறிவுரைகளை வழங்கினர்.

    தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்க ப்பட்டிருந்தது. எனவே மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்குட்படுத்த ப்பட்ட பின்னர் 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஹால்டிக்கெட் சரி பார்க்கப்பட்டது.

    தேர்வு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய-ஆசிரியைகள் ஈடுபடுத்தப்பட்டனர். தலைமை ஆசிரியர்கள், உயர் கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டது. அவர்கள் தேர்வு மையங்க ளுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    முன்னதாக தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அதிகாரி நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

    இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,920 மாணவர்கள், 8,147 மாணவிகள் என மொத்தம் 16,067 பேர் இன்று தேர்வு எழுதினர். 65 மையங்களில் தேர்வு நடந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 7,625 மாணவர்கள், 8,808 மாணவிகள என மொத்தம் 16 ஆயிரத்து 433 மாணவ மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

    விருதுநகர் மாவட்டத்தில் 10,985 மாணவர்கள், 12,383 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 368 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

    ஒவ்வொரு ஆண்டும் விருதுநகர் மாவட்டம், மாநில அளவில் பிளஸ்-2 தேர்வு சதவீதத்தில் முதலிடம் பெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதனை தக்க வைக்க மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயார்படுத்தினர்.

    3 மாவட்டங்களிலும் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தி னர்.

    தமிழ் மொழி பாட ேதர்வுடன் இன்று தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    • நாகர்கோவில் 11 ஆயிரத்து 88 பேரும், மார்த்தாண்டம் 11 ஆயிரத்து 830 பேரும் தேர்வினை எழுதினர்.
    • தீயணைப்பு துறையினரும் தேர்வு மையங்களில் தயார் நிலையில் இருந்தனர்

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கியது.

    குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 22 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் எழுதினர். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 88 பேரும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 830 பேரும் தேர்வினை எழுதினர்.

    இதற்காக 82 தேர்வு மையங்களும், கல்வி மாவட்டத்திற்கு தலா ஒரு தனித் தேர்வு மையமும் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வுக்காக மாணவ-மாணவிகள் இன்று காலை தங்களுக்கான தேர்வு மையத்திற்கு வந்தனர். அவர்களை ஆசிரிய-ஆசிரியைகள் வரவேற்று தேர்வு குறித்து விளக்கினர்.

    பிரார்த்தனை

    தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்காக பள்ளி களில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ-மாணவிகள் தங்கள் நண்பர்களுடன் தேர்வு பற்றி விவாதித்தனர். தேர்வு மையத்திற்குள் செல்லும் வரை சிலர் புத்தகங்களை எடுத்து பாடங்கள் படித்து நினைவூட்டிக் கொண்டனர்.

    ஏற்கனவே தேர்வு மையங்களில், மாணவ-மாணவிகளின் ஹால் டிக்கெட் எண்கள் இருக்கை களில் எழுதப்பட்டு இருந்தது. அதனை பார்த்து மாணவ-மாணவிகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். தொடர்ந்து வினாத்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடந்தன.

    குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 160 பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது. மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் நிலையான பறக்கும் படையினர் 56 பேரும், பறக்கும் படையினர் 24 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கும் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.பறக்கும் படையினர் இன்று தேர்வு மையங்களுக்கு அதிரடியாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்து அல்லது அசம்பாவிதம் நேர்ந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையினரும் தேர்வு மையங்களில் தயார் நிலையில் இருந்தனர். தேர்வு மையங்களில் முதலுதவி ஏற்பாடுகள், விடைத்தாள் பாதுகாக்கப்படும் பகுதி யில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உள் ளிட்ட ஏற்பாடுகளும் செய் யப்பட்டு உள்ளன.

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. மேலும் நாளை (14-ந் தேதி) பிளஸ்-1 தேர்வும் தொடங்குகிறது.

    • சென்னம்பட்டி வனச்சரக எல்லை பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.
    • மேலும் அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி வனச்சரக எல்லைப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் அந்தியூர் அருகேயுள்ள கோவிலூர், புதுக்காடு பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை அப்பகுதி விவசாயத் தோட்டத்தில் புகுந்தது.

    தொடர்ந்து அந்த சிறுத்தை அங்கிருந்த நாயைக் கடித்து இழுத்துச் சென்றது.

    இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்து க்கு வந்த வனத்துறையினர் அந்த பகுதியில் இருந்த காலடித் தடயங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது வனத்துறையினர் அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.

    இதைத் தொடர்ந்து வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களிலும், விவசாயத் தோட்டத்து வீடுகளிலும் உள்ள மக்களுக்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், எச்சரிக்கையுடன் இருக்கு மாறும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

    மேலும் 5 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டன. இருந்த போதிலும் வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி யில் உள்ளதாக கூறப்படு கிறது.

    இந்நிலையில் பல நாய்க ளை சிறுத்தை கவ்விச் சென்றது குறித்தும் வனத்துறைக்கு பொது மக்கள் தகவல் தெரி வித்தனர். இதனால் வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் பீதியில் காணப்பட்டு வந்த னர்.

    எனவே இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை யெனில் வனத்துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொது மக்கள் முடிவு செய்தனர்.

    இந்நிலையில் புதுக்காடு பகுதியில் சிறுத்தையை பிடிக்க வத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். தொடர்ந்து வனத்துறை யினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணித்து வருகிறார்கள்.

    சிறுத்தை நடமாட்டம் காணப்பட்ட பின்னர் 25 நாட்களுக்குப் பிறகு மிக தாமதமாக கூண்டு வைக்க ப்பட்டது அந்த பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வரு கின்றன. தாளவாடி வன ச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு ,காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மல்குத்தி புரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை ஆடு மற்றும் காவல் நாய்களை வேட்டை யாடி வந்தது. பின்னர் அங்குள்ள கரும்பு தோட்ட த்தில் பதுங்கி கொள்வது வாடிக்கையாக கொண்டி ருந்தது.

    இதையடுத்து சிறு த்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து தாளவாடி வனச்சரகர் சதீஸ் தலைமையில் சிறுத்தை நட மாட்டம் உள்ள பகுதியில் கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அப்பகு தியை சேர்ந்த செல்வராஜ் (48) என்ற விவசாயி பாக்கு தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. பின்னர் பாக்கு தோட்டத்தில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தினர்.

    மேலும் அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். கூண்டு உள்ளே காவல் நாயை கட்டி வைத்தனர்.

    நாயை பிடிக்கவரும் சிறுத்தை கூண்டில் சிக்கு வதற்கு வாய்ப்பு உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்

    • நள்ளிரவு 2 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பட்டர் பிளை மேம்பாலம் அருகே லாரிகள் வந்த போது, ஒரு லாரி பழுதாகி நின்று விட்டது. அவர்களில் ஒருவர் திடீரென காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர்.
    • சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் ஆய்வு செய்தனர். அதில் அங்குள்ள கேமரா பதிவில் சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

    அன்னதானப்பட்டி:

    திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு சேலம் வழியாக காற்றாலை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் இறக்கைகளை ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்த லாரிகளை கர்நாடகா மாநிலம், ஹசன் மாவட்டம், சென்னார்யாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மோகன் (35) என்பவர் காரில் கண்காணித்த படி பின்னால் சென்றார். நள்ளிரவு 2 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பட்டர் பிளை மேம்பாலம் அருகே லாரிகள் வந்த போது, ஒரு லாரி பழுதாகி நின்று விட்டது.

    இதையடுத்து 2 லாரிக–ளையும் சாலையோரமாக நிறுத்தி பழுதை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் கார் டிரைவர் மோகனிடம் குடிக்க தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் லாரியில் தண்ணீர் இருக்கி–றது, எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.

    அந்த சமயத்தில், அவர்களில் ஒருவர் திடீரென காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் ஆய்வு செய்தனர். அதில் அங்குள்ள கேமரா பதிவில் சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
    • வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தின் அண்டை மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து தொடர்ந்து 4 ஏ.டி.எம்.களில் மர்மநபர்கள் ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பெயரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் தடுப்புகள் வைத்து கண்காணித்தல், பஸ் நிலையங்களின் அருகே விடுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாரேனும் தங்கி உள்ளனரா? என ரோந்து பணியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீவிர கண்காணிப்பு இந்த நிலையில் காஞ்சிபுரம் நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில், பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மேற்பார்வையில், போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஏ.டி.எம்.மையங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்குகிறதா? ஏ.டி.எம். எந்திரம் பாதுகாப்பான முறையில் உள்ளதா? காவலாளிகள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    மேலும், அங்கு பணியில் உள்ள காவலாளிகளிடம் ஏ.டி.எம்.மையத்திற்கு பணம் எடுக்க வருபவர்களில் சந்தேகத்திற்கிடமாக யாராவது வந்தாலோ, அடிக்கடி ஒரே நபர் நோட்டம் விட்டபடி அப்பகுதியில் சுற்றித்திரிந்தாலோ உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். இதேபோல் அந்தந்த போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கண்காணிப்பு பணி தீவிரம்
    • பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

    திருச்சி,

    தமிழ்நாடு பறவையியல் கழகத்தினர் வெளிநாட்டுப்பறவைகள் தமிழகத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தை அடுத்துள்ள தலைவாசலில் உள்ள மணிவிழுந்தான் ஏரிக்கு இரண்டு புதிய வெளிநாட்டுப் பறவைகள் வந்திருப்பது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்சென் ஃபவுண்டேஷன் மற்றும் மணித்துளி சுற்றுச்சூழல் மேம்பாட்டு இயக்கத்தின் உதவியோடு சேலம் பறவையியல் கழகத்தைச் சேர்ந்த ஏஞ்சலின் மனோ, காசி விஸ்வநாதன், ராகுல் சிங் மற்றும் கணேஷ்வர் ஆகியோர் பறவைகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது வெளிநாட்டு கரையோரப் பறவைகளான சதுப்பு மண்கொத்தி மற்றும் கொசு உள்ளான் பறவையைக் கண்டுபிடித்துள்ளனர்.இது குறித்து சேலம் பறவையியல் கழக இயக்குநர் கணேஷ்வர் கூறியதாவது: கொசு உள்ளான் பறவை மண்கொத்தியை விட சிறியதாக இருக்கும். வடதுருவப் பகுதிகளில் உள்ள சைபீரிய சமவெளிகளில் இனப்பெருக்கம் செய்யும். சதுப்பு மண்கொத்தி கிழக்கு ஐரோப்பா முதல் வடகிழக்கு சீனா வரையிலான பகுதிகளில் உள்ள ஊசியிலைக்காடுகளை ஒட்டியுள்ள சதுப்பு நிலங்களில் வசிக்கும். அங்கே குளிர் காலம் துவங்கும் போது அந்தப் பறவைகள் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளை நோக்கி வலசை வருகின்றன. மீண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பிச்செல்லும். அப்படி செல்லும் வழியில் வெகு சில இடங்களில் மட்டும் தரையிறங்கி சில நாட்கள் புழுக்கள், பூச்சிகளை சாப்பிட்டு, உடலில் கொழுப்புச்சத்தை அதிகரித்துக் கொண்டு மீண்டும் பறக்கத் துவங்கும். இது போன்ற இடங்களுக்கு ஆங்கிலத்தில் "ஸ்டாப் ஓவர் சைட்" என்று கூறுவார்கள். அப்படியான ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்த இடம் தான் மணிவிழுந்தான் ஏரி. இதற்குக் காரணங்களுள் ஒன்று மணிவிழுந்தான் ஏரியில் தண்ணீர் குறையும் போது வெளிப்படும் தாழ்வான சேற்றுப் பகுதிகளாகும். ஒரு ஏரியின் சூழலுக்கு கரையோரப் பகுதிகள் அவசியமானது. இது போன்ற இடங்களை விரும்பி வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் வரும். இந்த இரண்டு பறவைகளின் வருகையும் மணிவிழுந்தான் ஏரியின் சூழலியலின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

    ---

    • நாயை, சிறுத்தை விரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வளை தலங்களில் பரவி வருகிறது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கால் தடயங்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் விளா முண்டி வனப்பகுதியில் யானைகள், சிறுத்தை, மான் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த பகுதியில் இருந்து யானை கள் உள்பட பல வன விலங்குகள் அடிக்கடி வெளியேறி அருகே உள்ள பவானிசாகர் நீர் தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்கிறது.

    மேலும் வனப்பகுதியை யொட்டி உள்ள கிராம பகுதிகளில் யானை மற்றும் சிறுத்தைகள் புகுந்து வரு கிறது.

    இதே போல் விளாமுண்டி வனப்பகுதி அருகே கல் குவாரி மற்றும் குடியிருப்பு பகுதி அமைந்து உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள்.

    அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் கண் காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் விளா முண்டி பகுதியில் இரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதை கேட்டு பொதுமக்கள் வன விலங்கு ஏதாவது வந்து உள்ளதா? என அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அங்கு வேலை செய்பவர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் கல்குவாரி அடுத்த கிராம பகுதியில் ஒரு சிறுத்தை நுழைந்து அங்கு காவலுக்கு இருந்த நாயை துரத்தியது. இதையடுத்து அந்த நாய் சிறுத்தையிடம் சிக்காமல் தப்பி சென்று உயிர் தப்பியது பதிவாகி இருந்தது.

    மேலும் நாயை, சிறுத்தை விரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வளை தலங்களில் பரவி வருகிறது.

    இது குறித்து அவர்கள் விளாமுண்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கால் தடயங்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் பவானிசாகர் வனசரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறை குழுவினர் கண்காணிப்பு காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து சிறுத்தை வனப்பகுதிக்கு சென்று விட்டதா? அல்லது அந்த பகுதியில் பதுங்கி உள்ளதா? என கண்காணித்து வருகிறார்கள்.

    இது குறித்து வனத்துறை யினர் கூறும் போது, விளா முண்டி வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளி யேறி ஊருக்குள் வருவது கண்காணிப்பு கேமிரா காட்சியில் பதிவாகி உள்ளது.

    எனவே இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் கல்குவாரி யில் வேலை செய்பவர்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    • தஞ்சை பெரிய கோவில் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கண்காணிப்பு தீவிரம்.
    • போலீசார் மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் எளிமையான முறையில் நடந்த குடியரசு தின விழா இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பஸ், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில், கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோவில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில், பூண்டி மாதா தேவாலயம், மசூதிகள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சை, கும்பகோணம் பட்டுக்கோட்டை, பாபநாசம் ரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்து பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

    ரயிலில் ஏறியும் இருப்பு பாதை மற்றும் பாதுகாப்பு படை ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். தண்டவாளங்களில் நவீன கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

    மேலும் விடுதிகள், ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் காவல் துறைக்கு தெரிவிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுகிறது. மேலும் போலீசார் மப்டியில் நின்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தவிர கடல் வழியாக சமூகவிரோதிகள் ஊடுருவாமல் தடுக்க, சேதுபாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கடற்கரை பகுதிகளிலும் கடலோர போலீஸார் படகுகளில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இறைச்சி கோழிகளுடன் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
    • பறவை காய்ச்சல் எதிரொலி

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பறவை காய்ச்சல் பல்வேறு பகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    முதலில் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது திருவனந்தபுரம் மாவட்டத்திலும் இது பரவி உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

    வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள், கோழிகள், வாத்துகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதற்கி டையில் பண்ணை களில் கோழிகள் பாதி க்கப்பட்ட தால், அங்குள்ள கோழிகள், வாத்துகளை அழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பறவை காய்ச்சல், பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது இல்லை என்றாலும், உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவ வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள குமரி மாவட்டம் படர்ந்தாலுமூடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கேரள வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பறவைகள், கறிக்கோழிகள் ஏற்றி வரும் பெரும்பாலான வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றன. சில வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

    தற்போது பறவை காய்ச்சல், கேரளாவில் தீவிரமடைந்துள்ளதால், அங்கிருந்து கறிக்கோழிகள், கோழிக் குஞ்சுகள், தீவனம், முட்டை போன்றவை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. படந்தாலுமூடு சோதனை சாவடி யில் 3 குழுக்களும், காக்க விளையில் ஒரு குழுவும் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

    • ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க சேலம் மாநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
    • 1000- க்கும் மேற்பட்ட போலீசார், கிறிஸ்தவ தேவாலயங்கள், பழைய பஸ் நிலையம், 4 ரோடு, புதிய பஸ்நிலையம், 5 ரோடு, ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அன்னதானப்பட்டி:

    கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க சேலம் மாநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் லாவண்யா, மாடசாமி தலைமையில், 1000- க்கும் மேற்பட்ட போலீசார், கிறிஸ்தவ தேவாலயங்கள், பழைய பஸ் நிலையம், 4 ரோடு, புதிய பஸ்நிலையம், 5 ரோடு, ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், "கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி, ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் இருந்து, 3 பிரிவாக பிரிந்து, இன்ஸ்பெக்டர் தலைமையில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீசாருடன் ஆயுதப்படை போலீசார், போலீஸ் நண்பர்கள் குழுவினர் சேர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில், நள்ளிரவு நேரங்களில், 18 வயதுள்ள சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்வதை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு செய்ய உள்ளனர். ஓட்டுநர் உரிமம் இல்லாமல், சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டினால், அந்த வாகனங்களின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். 18 வயது முடிவடையாத தங்கள் மகன்களுக்கு எக்காரணம் கொண்டும், மோட்டார் சைக்கிள் ஓட்ட பெற்றோர் அனுமதிக்கக் கூடாது.

    அதேபோல், செல்போன்கள் மூலம் சைபர் கிரைம் மோசடிகள் தற்போது அதிகரித்து வருவதால், தங்களது குழந்தைகளை பெற்றோர் கண்காணித்து, அவர்களின் செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும். உடற்பயிற்சி, விளையாட்டுகள், புத்தகங்கள் படிப்பது உள்ளிட்ட பயனுள்ள செயல்களில் குழந்தைகள் ஈடுபட பெற்றோர் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ". இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×