search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனாட்சி-சொக்கநாதர்"

    • மீனாட்சி-சொக்கநாதர்கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி - சொக்கநாதர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு உற்சவ மூர்த்திகளான நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அபிஷேகம்

    பால், தயிர் சந்தனம், சீயக்காய், திராட்சை, தேன், நெய், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனித நீரால் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தங்க வைர ஆபரணங்கள் சாத்தப்பட்டு சிறப்பு ஆராதனை நடை பெற்றது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் சங்கர் பட்டர் செய்தார். அப்போது மாணிக்க வாசகரின் திரு வெண்பாவை பாடல்களை பக்தர்கள் பாடினர்.

    ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி யை காண திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் அனைவ ருக்கும் திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப் பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி அங்கயற்கன்னி விழாவிற்கான ஏற்பாடு களை செய்திருந்தார்.

    • மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
    • 4 ரத வீதியில் வலம் வந்து ஈசானிய மூலையில் அமைந்துள்ள மகர்நோன்பு பொட்டலில் எழுந்தருளினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.முறையூர் மீனாட்சி- சொக்கநாதர் கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. கடந்த 9 நாட்களாக அம்மன் பல்வேறு அலங்காரங்களில் கொலு மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

    நிறைவு நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு அன்னை மீனாட்சி குதிரை வாகனத்தில் எழுந்தருளி 4 ரத வீதியில் வலம் வந்து ஈசானிய மூலையில் அமைந்துள்ள மகர்நோன்பு பொட்டலில் எழுந்தருளினார்.

    அங்கு அமைக்கப்ப ட்டிருந்த மகிஷாசூரன் குடிலை நோக்கி 4 திசையிலும் சிவாச்சாரியார் அம்புகளை எய்தார். இதனை காண மகர்நோன்பு பொட்டலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம், கிராமத்தார்கள் செய்திருந்தனர்.

    • மீனாட்சி-சொக்கநாதர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கோவில் ஆகம விதிமுறைகள் படி 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவில் பாண்டிய மன்னரான மாற வர்ம சுந்தரபாண்டியன் என்ற மன்னரால் கி.பி. 1216 கட்டப்பட்ட மிக பழமை வாய்ந்த கோவில் ஆகும்.

    இந்த கோவில் ஆனது குரு சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாகும். கோவில் ஆகம விதிமுறைகள் படி 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வருடந்தோறும் ஆனி மாதம் திருக்கல்யாணம் மற்றும் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக 2 வருடமாக திருவிழா நடைபெறவில்லை

    இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. கோவில் வளாகத்தில் கொடிகம்பத்தில் சிவாச் சாரியார்கள் கொடியேற்றி தொடங்கி வைத்தனர். இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி -அம்பாள் காட்சி அளித்தனர்.

    விழாவில் வருகிற 10-ந் தேதி அன்று மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணமும், 11-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    ×