search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைகள்"

    • தஞ்சையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.
    • மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

    இதற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை தாங்குகிறார்.

    இதில் தஞ்சை தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ்கார்னர், அருளானந்தநகர், பர்மா காலனி, நிர்மலாநகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காந்திஜிசாலை, மருத்துவக் கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகுமான்நகர், ரெட்டிப்பா ளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேலவெளி ஊராட்சி, தமிழ்ப்பல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ்நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது.
    • குறைத்தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பாக, மாதம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்களை நேரிடையாக சந்தித்து புகார் மனுக்களை பெற்று மக்களின் குறைதீர்க்கப்படுகிறது.

    அதன்படி ஜூலை மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 13-ந் தேதி மாலை 3 மணிக்கு பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 20-ந் தேதி மாலை 3 மணிக்கு திருச்செங்கோடு செயற் பொறியாளர் அலுவலகத்திலும், 27-ந் தேதி மாலை 3 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. இதில் அந்தந்த கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிர்வர்த்தி பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×