search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜடேஜா"

    • ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா.
    • இன்ஸ்டாகிராமில் 7.8 லட்சம் பேர் ஜடேஜாவை பின் தொடர்கிறார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டு வருகிறார். இவர் சமூக வலைதள பக்கங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் 7.8 லட்சம் பேர் இவரை பின் தொடர்கிறார்கள். இதை தனது ஸ்டோரியில் வைத்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த ஸ்டோரியில் ஒரே அணியா செயல்பட்டால் கனவை நிறைவேற்றலாம். 7.8 மில்லியன் எங்க ஜெர்சி நம்பரை போலவே என குறிப்பிட்டுள்ளார். 

    கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் ஜடேஜா. வெற்றியை தேடி தந்த ஜடேஜாவை தூக்கி டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த ஐபிஎல் கோப்பையை எம்எஸ் டோனிக்கு அர்பணிப்பதாக ஜடேஜா போட்டி முடிந்தவுடன் பேட்டியளித்தார்.

    இருவரும் இந்திய அணியில் இருந்து சிஎஸ்கே வரை மிகவும் நட்பாக இருந்து வருவதும் அனைவரும் அறிந்ததே. ஐபிஎல் தொடரில் இருவரும் சில சில சேட்டைகளில் ஈடுப்பட்டு வந்தது சமூக வலைதளங்களில் அப்போது வைரலானது.

    மேலும் இந்த தொடருக்கு முன்னர் இருவருக்கும் இடையே மோதல் இருந்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • முதல் டெஸ்ட் போட்டியில் முதுகுப்பிடிப்பு காரணமாக ரவீந்திர ஜடேஜா இடம் பெறவில்லை.
    • ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக தான் ஜடேஜா இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது கடந்த 26 ஆம் தேதி செஞ்சூரியனில் நடந்தது. இதில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது.

    இதில், டீன் எல்கர் அதிகபட்சமாக 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸ் செய்தது. ஆனால், இதில், தென் ஆப்பிரிக்கா பவுலர்களின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக விராட் கோலி மட்டுமே 76 ரன்கள் எடுக்க, இந்திய அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

    இதுவரையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒருமுறை கூட கைப்பற்றவில்லை. ஆனால், இந்த முறை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலேயும் இந்திய அணி கோட்டைவிட்டது. 2-வது போட்டியில் எப்படியும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் முதுகுப்பிடிப்பு காரணமாக இடம் பெறாத ரவீந்திர ஜடேஜா, 2-வது போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக தான் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. ஜடேஜா தற்போது கேப்டவுனில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    • ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது.
    • அந்த பட்டியலில் 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது. அதில் தலைசிறந்த சுழற்பந்து ஆல்ரவுண்டர்கள் பட்டியல் இருந்தது. அதில் ஷகிப் அல் ஹசன், டிராவிஸ் ஹெட், சமித் பாட்டீல், ரிச்சி பெனாட், டேனியல் வெட்டோரி மற்றும் சர் கேரி சோபர்ஸ் போன்ற சில பெயர்கள் பட்டியலில் இருந்தது.

    இந்த பட்டியலில் அஸ்வின், அக்சர் படேல், 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    • நாங்கள் ஒரு சிறந்த தொடரை விளையாடினோம்.
    • நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம்.

    2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும் அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை தோற்கடித்தது. இதன் மூலம் 6-வது முறையாக உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம் என தோல்வியடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். அது மட்டுமின்றி இந்திய வீரர்களின் ஓய்வு அறைக்கு நேரில் சென்று அனைவரையும் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பு குறித்து ஜடேஜா எக்ஸ் தளத்தில் மோடியின் வருகை ஊக்கமளிப்பதாக இருந்தது என தெரிவித்திருந்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஒரு சிறந்த தொடரை விளையாடினோம். ஆனால் நேற்று குறுகிய காலத்தில் அது முடிந்தது. நாங்கள் அனைவரும் மனம் உடைந்துள்ளோம். ஆனால் எங்கள் மக்களின் ஆதரவு எங்களை தொடர்ந்து முன்னேற துண்டுகிறது. பிரதமர் மோடி எங்கள் ஓய்வு அறைக்கு வருகை தந்தது சிறப்பானது மற்றும் ஊக்கமளிப்பதாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறந்த பீல்டருக்கான விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.
    • அந்த விருதை கேஎல் ராகுல் ஜடேஜாவுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் வங்களாதேசம் அணி பேட்டிங் செய்த போது பும்ரா வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ரஹீம் எதிர்கொண்டார். அவர் கொடுத்த அற்புதமான கேட்ச்சை ரவீந்திர ஜடேஜா தாவி பிடித்து அவுட்டாகினார். அப்போது இந்திய அணியில் ஒவ்வொரு போட்டியின் நடுவில் கொடுக்கப்படும் சிறந்த ஃபீல்டருக்கான விருதை எனக்கு கொடுங்கள் என்று ரவீந்திர ஜடேஜா சைகை செய்த போது ஃபீல்டிங் பயிற்சிசாளர் கைதட்டி பாராட்டினார்.

    மறுபுறம் ஏற்கனவே விக்கெட் கீப்பர் ராகுலும் அபாரமான கேட்ச் பிடித்ததால் இந்த போட்டியின் முடிவில் யாருக்கு அந்த விருது கொடுப்பது என்ற குழப்பம் பயிற்சியாளருக்கு ஏற்படும் அளவுக்கு இந்தியாவின் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது.

    இந்நிலையில் சிறந்த பீல்டருக்கான விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஓய்வு அறையில் உள்ள டிவியில் அந்த விருது யாருக்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய போட்டியில் சிறந்த பீல்டர் விருது மைதானத்தில் உள்ள டிவியில் திரையிடப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாரத வீரர்கள் மற்றும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் டிராவிட் மற்றும் ரோகித் ரியாக்ஷன் வேற லெவலில் இருந்தது. அனைத்து வீரர்களும் பீல்டிங் பயிற்சியாளரை கட்டியணைத்து மகிழ்ந்தனர்.


    அந்த விருதை கேஎல் ராகுல் ஜடேஜாவுக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.
    • இந்த போட்டி சென்னையில் 8-ந் தேதி நடைபெறுகிறது.

    கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி அகமதாபாத் மைதானம் தயார் நிலையில் உள்ளது. நாளைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் (பிற்பகல் 2 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னையில் 8-ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரும் சிஎஸ்கே அணி வீரருமான ஜடேஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது வீட்டிற்கு வந்ததாக ஸ்டோரி வைத்துள்ளார். இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • நடப்பாண்டில் மே மாதம் வரை ஆல்-ரவுண்டர் ஜடேஜா தன்னை அதிகமுறை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தி கொண்டுள்ளார்.
    • அவருக்கு அடுத்தப்படியாக தமிழக வீரர் டி.நடராஜன் 2 முறை பரிசோதனை மாதிரிகள் வழங்கியுள்ளார்.

    புதுடெல்லி:

    கிரிக்கெட் வீரர்களுக்கும் ஊக்க மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மே மாதம் வரை ஆல்-ரவுண்டர் ஜடேஜா தன்னை அதிகமுறை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்தி கொண்டுள்ளார். அவர் ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் 3 தடவை பரிசோதனைக்கான மாதிரிகள் வழங்கியதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை தெரிவித்துள்ளது. அவருக்கு அடுத்தப்படியாக தமிழக வீரர் டி.நடராஜன் 2 முறை பரிசோதனை மாதிரிகள் வழங்கியுள்ளார்.

    இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் இந்திய கிரிக் கெட் வீரர், வீராங்கனைகள் 55 பேர் தங்களை ஊக்க மருந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர். அவர்களிடம் இருந்து மொத்தமாக 58 மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது.
    • பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன.

    தரோபா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில தினங்களுக்கு முன்பு, 'இந்திய அணியில் வீரர்களுக்கு நிறைய பணம் கொட்டும் போது, கூடவே ஈகோவும், கர்வமும் வந்து விடுகிறது. அவர்கள், கிரிக்கெட்டில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் உங்கள் அருகில் இருக்கிறார்கள். அவரிடம் ஆலோசனை கேட்பதில் உங்களுக்கு என்ன தயக்கம். அவர் 50 ஆண்டுகள் கிரிக்கெட்டிலேயே வாழ்ந்தவர். அவரிடம் பேசினால் புதுப்புது யோசனை கிடைக்கும்' என்று சரமாரியாக சாடி இருந்தார். ஆனால் எந்த வீரர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை.

    கபில்தேவின் விமர்சனம் குறித்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பதில் அளித்துள்ளார்.

    அவர் அளித்த பேட்டியில், 'கபில்தேவ் எப்போது இப்படி சொன்னார் என்பது தெரியவில்லை. இது போன்ற விஷயங்களை சமூக வலைதளத்தில் தேடிப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு. முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் தற்போதைய இந்திய அணியில் திமிர் போக்குடன் நடந்து கொள்ளும் வீரர்கள் யாரும் இல்லை.

    அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது கிரிக்கெட்டை அனுபவித்து ரசித்து விளையாடுகிறார்கள். இதற்காக கடினமாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. அணிக்கு தங்களது 100 சதவீத பங்களிப்பை வழங்குகிறார்கள். பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல வீரர்களை கொண்ட சிறந்தஅணி. நாங்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அது தான் எங்களது முக்கிய இலக்கே தவிர தனிப்பட்ட விஷயங்களுக்கு இங்கு இடமில்லை' என்றார்.

    மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஜடேஜா, 'வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சில வீரர்களை களம் இறக்கி பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது' என்றார்.

    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    • இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பிரிட்ஜ்டவுன்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 115 ரன் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த ஆட்டத்தில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வேதேச ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் பந்துவீச்சாளராக இருந்த கபில் தேவை பின்னுக்கு தள்ளி தற்போது ஜடேஜா 44 விக்கெட்டை கைப்பற்றி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 43 விக்கெட்டுகளுடன் கபில் தேவ் 2-வது இடத்திலும் 41 விக்கெட்டுகளுடன் அணில் கும்ப்ளே 3-வது இடத்திலும் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

    • எனக்கு மிகவும் பிடித்தவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என பாண்ட்யா பதிவிட்டுள்ளார்.
    • நாம் உருவாக்கியுள்ள பிணைப்பை யாராலும் உடைக்க முடியாது என ரெய்னா தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் டோனியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு மிகவும் பிடித்தவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். 

    இவரை தொடர்ந்து சென்னை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 2009-ம் ஆண்டு முதல் இன்றுவரை மற்றும் என்றென்றும் இவரிடம் எனது பயணம். மஹி பாய் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். விரைவில் மஞ்சள் நிறத்தில் சந்திப்போம். 

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    மேலும் சென்னை அணியின் முன்னாள் வீரரும், டோனியின் நெருங்கிய நண்பருமான சுரேஷ் ரெய்னா டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெரிய அண்ணா டோனி. பிட்ச்சை பகிர்வது தொடங்கி, கனவுகளை பகிர்வது வரை நாம் உருவாக்கியுள்ள பிணைப்பை யாராலும் உடைக்க முடியாது. உங்கள் பல, மற்றும் ஒரு நண்பராகவும், தலைவனாகவும் நீங்கள் கொடுத்த பலம் தான் என்னுடைய கலங்கரை விளக்கமாக இருந்துள்ளது. 

    மகிழ்ச்சி, வெற்றி, நல்ல உடல்நலம் கொண்டதாக இந்த ஆண்டும் உங்களுக்கு அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன். தொடர்ந்து வழிநடத்துக்கள், உங்களது மேஜிக்கை பரப்பிக்கொண்டே இருங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அழுத்தமான பெரிய போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ், பேட் கமின்ஸ் தங்களது திறமையால் முடிவை தலைகீழாக மாற்ற கூடியவர்கள் ஆவர்.
    • இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்படும் விராட் கோலியை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

    டி20 போட்டிகள் ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்படும் கிரிக்கெட்டாக உருவெடுத்துள்ளது. அதன் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு குறைந்து வருவதாக நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் அழிவின் விளிம்பில் சென்ற அதற்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் பிரத்தியேக உலகக்கோப்பை ஐசிசி அறிமுகப்படுத்தியதால் தற்போது டெஸ்ட் போட்டிகள் டி20 கிரிக்கெட் போல த்ரில்லாக நடைபெறுகிறது.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய கேம் சேஞ்சர்ஸ் பென் ஸ்டோக்ஸ், ஜடாஜா, ரிஷப் பண்ட், ஸ்மித், நாதன் லயன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். 

    மேலும் கூறியதாவது:- அழுத்தமான பெரிய போட்டிகளில் தங்களது திறமையால் முடிவை தலைகீழாக மாற்ற கூடியவர்கள் பென் ஸ்டோக்ஸ், பேட் கமின்ஸ் ஆகியோர் ஆவர். மேலும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெளிநாட்டு மண்ணின் சதங்களை அடித்து காபா போன்ற வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிசப் பண்ட் ஆகிய இந்திய வீரர்களை பெயரிட்டுள்ளார்.

    அதே போல சுழலுக்கு சாதகமற்ற ஆஸ்திரேலிய மைதானங்களில் அசத்தலாக செயல்பட்டு சுமார் 500 விக்கெட்களை எடுத்து 100 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய வீரராக சமீபத்தில் சாதனை படைத்த நேதன் லையனையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 9000-க்கு மேற்பட்ட ரன்களை அடித்து ஜாம்பவானாக அசத்தி வரும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை மேட்ச் வின்னர்களாக தேர்வு செய்துள்ளார்.

    இருப்பினும் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து மேட்ச் வின்னராக போற்றப்படும் விராட் கோலியை தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் நான் டோனி, ஜடேஜாவுடன் பேசினேன்.
    • ஜடேஜா எப்போதும் டோனி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த 16-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்று மும்பையின் சாதனையை சமன் செய்தது.

    சி.எஸ்.கே. கோப்பையை வெல்ல ஜடேஜா முக்கிய பங்கு வகித்தார். அவர் கடைசி 2 பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்தார்.

    15-வது ஐ.பி.எல். சீச னில் ஜடேஜா கேப்டனாக இருக்க டோனி தானாகவே வழிவிட்டார். நடுவில் டோனி கேப்டனாக பொறுப்பேற்றார். இதுதொடர்பாக ஜடேஜாவுக்கும், சி.எஸ்.கே. நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினை இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்த சீசனில் டோனிக்கும், ஜடேஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் டோனிக்காக ஜடேஜா ஆட்டம் இழக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோஷமிட்டதால் அவர் வருத்தம் அடைந்தார். டுவிட்டர் பக்கத்தில் இதை அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்து உள்ளார். டோனி மீது ஜடேஜா எப்போதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜடேஜாவை பொறுத்தவரை அவர் மிக சிறப்பாக பந்துவீசினார். பேட்டிங்கில் முன்னனி பேட்ஸ்மேன்கள் விளையாடி முடிக்கும்போது அவருக்கு குறைந்த பந்துகள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருந்தது.

    ஜடேஜாவுக்கு அடுத்து டோனி வருவார் என்று அவருக்கு தெரியும். ரசிகர்கள் டோனி மீது கொண்ட அன்பின் காரணமாக அவர் ஆட்டம் இழக்க வேண்டும் என்று பதாகை வைத்து இருக்கலாம். இது ஜடேஜாவை புண்படுத்தி இருக்கலாம். இதுகுறித்து அவர் டுவிட் செய்து இருந்தாலும் கூட எங்களிடம் எதையும் புகாராக தெரிவிக்கவில்லை.

    டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் நான் டோனி, ஜடேஜாவுடன் பேசினேன். வழக்கமான விஷயங்கள் தான் பேசினோம். தனிப்பட்ட முறையில் அங்கு எதுவும் பேசவில்லை.

    ஜடேஜா எப்போதும் டோனி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். ஐ.பி.எல். கோப்பை வெற்றியை டோனிக்கு அர்ப்பணிப்பதாக கூறியதில் இருந்தே நாம் இதை புரிந்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×