search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜடேஜா"

    • இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணியை சேர்ந்த இயன் போத்தம் உள்ளார்.
    • இந்தியாவின் கபில் தேவ் 4-வது இடத்தில் உள்ளார்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. முதலில் சிறப்பாக ஆடிய அந்த அணி 91 ரன்கள் எடுத்த போது 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அரை சதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்திய கவாஜாவை ஜடேஜா வெளியேற்றினார்.

    இதன் மூலம் குறைந்த போட்டிகளில் பந்து வீச்சில் 250 விக்கெட்டும் பேட்டிங்கில் 2500 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.

    இந்தியாவின் கபில் தேவ் 65 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்தார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்து அணியை சேர்ந்த இயன் போத்தம் உள்ளார். இவர் 55 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3-வது இடத்தில் இம்ரான் கான் (64 போட்டிகள்) உள்ளார்.

    • ஜடேஜாவுக்கு காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை.
    • டி20 கிரிக்கெட்டில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சரிவர வாய்ப்புகளை பெறவில்லை.

    மும்பை:

    நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 - 0 என கைப்பற்றி அசத்தியது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இதற்கான அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.

    இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா, காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பையில் கூட ஆடவில்லை. அவர் இந்த வங்கதேச அணியுடனான தொடரில் தான் கம்பேக் கொடுப்பதாக அறிவிக்கப்படிருந்தது. முதன்மை ஸ்பின்னராக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை. அவர் பூரண குணமடைய அடுத்த வருடம் ஆகிவிடும் என்பதால் மாற்று வீரருக்கான தேடல் நடந்து வருகிறது. அதன்படி சூர்யகுமார் யாதவை மாற்று வீரராக உள்ளே கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

    டி20 கிரிக்கெட்டில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சரிவர வாய்ப்புகளை பெறவில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமே ஆகவில்லை. இதனால் அவரை இந்த 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடரில் பயன்படுத்தி பார்க்க முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே அணியில் அஸ்வின், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் உள்ளதால் மாற்று ஸ்பின்னரை சேர்க்கவில்லை.

    • ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றினால் சென்னை அணிக்கு 16 கோடி மிச்சமாகும்.
    • ஜடேஜா வேறொரு அணிக்கு மாறினால் அந்த அணி எவ்வளவு பலமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

    சென்னை:

    இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளநிலையில் அடுத்ததாக 2023-ஆம் ஆண்டிற்கான 16-வது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதத்தில் துவங்கி நடைபெற உள்ளது.

    இதற்காக டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெற இருப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் மற்றும் வெளியேற்றும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதி வெளியிட்டது. அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டர் ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.

    நீண்ட நாட்களாக சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பாரா அல்லது வேறு அணியில் ஆடுவாரா உள்ளிட்ட பல கேள்விகள் சென்னை அணியை சூழ்ந்திருந்தது. அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிஎஸ்கே அணியில் ஜடேஜா தக்கவைக்கப்பட்டார்.

    இந்நிலையில் சமீப காலமாகவே கிரிக்கெட் குறித்த கருத்துக்களை தனது யூடியூப் சேனல் மூலமாக பேசி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜாவின் இடம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    ரவீந்திர ஜடேஜா இந்த ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக விளையாட மாட்டார் என்றெல்லாம் பல பேச்சுகள் இருந்தன. ஆனால் இந்த முறையும் ஜடேஜா சென்னை அணிக்காக தான் விளையாடுகிறார். ஜடேஜாவை டிரேடிங் மூலம் மாற்ற நினைத்தார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது.

    ஆனால் அதெல்லாம் எதுவுமே உண்மை கிடையாது. ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றினால் சென்னை அணிக்கு 16 கோடி மிச்சமாகும். ஆனால் அவரது இடத்திற்கு வேறொரு இந்திய வீரரை நிரப்புவது என்பது முடியாத காரியம். ஜடேஜா போன்று எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட கூடிய ஒரு வீரருக்கு பதிலாக மாற்று இந்திய வீரரை எப்படி தேர்வு செய்ய முடியும்.

    அதேபோன்று ஜடேஜா வேறொரு அணிக்கு மாறினால் அந்த அணி எவ்வளவு பலமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். இதனால்தான் சென்னை அணி நிர்வாகமும் அவரின் மதிப்பை உணர்ந்து தக்க வைத்துள்ளது" என்றார்.

    • உலக கோப்பை அணியில் நான் இல்லை என்பது மிக சிறிய வதந்தியாகும்.
    • மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதில் தான் தற்போது எனது கவனம் இருக்கிறது.

    துபாய்:

    இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் சிறப்பாக ஆடி 35 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஆங்காங்கை இன்று எதிர் கொள்கிறது. இந்த போட்டிக்காக ஜடேஜா நேற்று நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவரிடம் காயம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை அணியை இழக்க கூடும் என்று செய்திகள் பரவி வருவது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து ஜடேஜா கூறியதாவது:-

    உலக கோப்பை அணியில் நான் இல்லை என்பது மிக சிறிய வதந்தியாகும். ஒரு முறை எனது மரணம் குறித்த வதந்தி பரவியது. இதை பற்றி எல்லாம் நான் அதிகம் யோசிக்கவில்லை. மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதில் தான் தற்போது எனது கவனம் இருக்கிறது.

    இவ்வாறு ஜடேஜா கூறியுள்ளார்.

    • ஜடேஜா ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    • ஒருநாள் தொடருக்குப் பிறகு ஜூலை 29-ம் தேதி தொடங்கும் டி20 தொடரில் ஜடேஜா விளையாடலாம்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. துணைக் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

    இன்று முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில் ஜடேஜா காயம் காரணமாக விலகி உள்ளார். இடது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஜடேஜா முதல் ஒருநாள் போட்டி மட்டுமின்றி ஒருநாள் தொடரில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஜடேஜா மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரது காயம் எவ்வளவு தீவிரமானது என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.

    ஒருநாள் தொடருக்குப் பிறகு ஜூலை 29-ம் தேதி தொடங்கும் டி20 தொடரில் ஜடேஜா விளையாடலாம். இருப்பினும் மருத்துவக் குழு ஜடேஜா குறித்த அறிக்கையை அளிக்கும் போது மட்டுமே அது குறித்து கூற முடியும்.

    • ஒவ்வொரு வருடமும் டோனியின் பிறந்தநாளுக்கு ஜடேஜா மறக்காமல் வாழ்த்து தெரிவிப்பார்.
    • சிஎஸ்கே அணியுடனான நெருக்கம் குறைந்து வருவதால் 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடுவது சந்தேகம் தான் எனத் தெரியவந்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் டோனி தலைமையிலான சென்னை அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 5-வது சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து 9-வது இடத்தில் நீடித்து வந்தது.

    15-வது சீசன் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ஜடேஜா முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொடுத்தார். அதுமட்டுமல்ல பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலுமே படுமோசமாக சொதப்பி பார்ம் அவுட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகியவுடன் அவர் தொடரில் இருந்தே வெளியேறியது ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியது. கேப்டன் பொறுப்பை மாற்றியதில் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டு அவர் வெளியேறியதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் அதனை உறுதி செய்யும்படியான விஷயங்களை ஜடேஜா செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டு ஐபிஎல் பதிவுகளை திடீரென முற்றிலுமாக நீக்கியுள்ளார். சிஎஸ்கே குறித்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது ஒருபுறம் இருக்க டோனிக்கும் - ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையேயான உறவிலும் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். ஒவ்வொரு வருடமும் டோனியின் பிறந்தநாளுக்கு ஜடேஜா மறக்காமல் வாழ்த்து தெரிவிப்பார். ஆனால் இந்தாண்டு மற்ற அனைத்து வீரர்களும் வாழ்த்து தெரிவித்த போதும், ஜடேஜா எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.

    சிஎஸ்கே அணியுடனான நெருக்கம் குறைந்து வருவதால் 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடுவது சந்தேகம் தான் எனத் தெரியவந்துள்ளது.

    • ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்து இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்தது.
    • 298 ரன்கள் எடுத்து அசாருதீன்-வெங்சர்க்கார் ஜோடி முதல் இடத்தில் உள்ளது.

    எட்ஜ்பஸ்டன்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்திய அணி 98 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்தது.

    சுப்மன் கில் (17 ரன்), புஜாரா (13), ஸ்ரேயாஸ் அய்யர் (15) ஆகியோர் ஆண்டர்சன் பந்திலும் , விஹாரி (20), விராட் கோலி (11) ஆகியோர் மேத்யூ பாட்ஸ் பந்திலும் வெளியேறினார்கள். 6-வது விக்கெட்டான ரிஷப்பண்ட்-ரவீந்திர ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

    குறிப்பாக ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 89 பந்தில் சதம் அடித்து 5-வது செஞ்சூரியை பதிவு செய்தார். ரிஷப் பண்ட் 111 பந்தில் 146 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 19 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். அவரும், ஜடேஜாவும் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்தது மிகவும் முக்கியமானதாகும்.

    அடுத்து வந்த ஷர்துல் தாகூர் ஒரு ரன்னில் பென்ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் இருந்த ஜடேஜா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

    ஜடேஜா 83 ரன்னிலும் (10 பவுண்டரி) முகமது ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

    ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்து இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்தது. 1997-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுன் மைதானத்தில் அசாருதீன்-தெண்டுல்கர் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் எடுத்தனர். இதனை ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி சமன் செய்தது.

    298 ரன்கள் எடுத்து அசாருதீன்-வெங்சர்க்கார் ஜோடி முதல் இடத்தில் உள்ளது. 272 ரன்கள் எடுத்து அசாருதீன் - கபில் தேவ் ஜோடி 2-வது இடத்திலும் டோனி-டிராவிட் ஜோடி 224 ரன்கள் எடுத்து 3-வது இடத்திலும் உள்ளது.

    ×