என் மலர்
நீங்கள் தேடியது "லாரிகள்"
- மத்தியப் பிரதேசத்தில் இருந்து சுமார் 1.5 லட்சம் லாரிகள் ராணுவத்திற்கு வழங்கப்படும்.
- எல்லைப் பகுதிகளில் நமது ராணுவம் காட்டிய துணிச்சலால் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து சுமார் 1.5 லட்சம் லாரிகள் ராணுவத்திற்கு வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏ.ஐ.டி.எம்.சி. மாநிலத் தலைவர் சி.எல். முகதி கூறியதாவது:-
மத்தியப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 7.5 லட்சம் லாரிகளை இந்திய ராணுவத்திற்கு வழங்குவதாக பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து முழு நாடும் பெருமைப்பட வேண்டும். இதுபோன்ற பதற்றமான காலங்களில் ராணுவத்திற்கு இலவசமாக வழங்க பதிவுசெய்யப்பட்ட லாரிகளை நாங்கள் தயார் செய்துள்ளோம். எல்லைப் பகுதிகளில் நமது ராணுவம் காட்டிய துணிச்சலால் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வல்லூர் கூட்டு சாலையை பயன்படுத்தி வருகின்றன.
- போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகள் நிறுத்தக்கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த வல்லூர் கூட்டு சாலையில் இருந்து வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், கடல்நீரை குடிநீராக்கும் திட்ட நிலையம், ஐ.ஓ.சி.எல். நிறுவனம், நிலக்கரி முனையகம் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்களுக்கு செல்வதற்காக தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வல்லூர் கூட்டு சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதனால் இந்த சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்தும், பல போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்து விபத்தினை தடுக்க செங்குன்றம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலன் தலைமையில் போக்குவரத்து போலீசார் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன், தற்காலிக தடுப்பு சுவர்களை மீஞ்சூர் வல்லூர் சாலையில் பயன்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் சாலையின் ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகள் நிறுத்தக்கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். மேலும் கூட்டு சாலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுவதாகவும், இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதாகவும் உயர் கோபுர மின்விளக்கை சரி செய்ய வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டம்,
- களியக்காவிளை போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் வாகன சோதனை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான லாரிகளில் அதிக பாரத்துடன் கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.
இந்த லாரிகள் இரவு, பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 3 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் அதனை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள வடக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 40).
இவர் கிரேன்கள், லாரிகள் மற்றும் டிரில்லர்கள் வைத்து தொழில் செய்து வருகிறார்.இதற்காக குமாரபுரம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் அலுவலகம் அமைத்து உள்ளார்.
அந்த இடத்திலேயே தனது லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவது வழக்கம். நேற்று அங்கு கிரேன், லாரிகள் மற்றும் 2 டிரில்லர்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு யாரோ மர்மநபர்கள் அங்கு புகுந்துள்ளனர். அவர்கள் 2 டிரில்லர் மற்றும் லாரியின் பெட்டி பூட்டுகளை உடைத்து அதில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
இன்று காலை அலுவலகம் வந்தவர்கள், கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தட்சிணாமூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக அலுவலகம் வந்தார்.
லாரி மற்றும் டிரில்லர்களில் இருந்த 5 பேட்டரிகள், உபகரணங்கள் மற்றும் ஜாக்கிகள் திருட்டு போயிருப்பதாக ஆரல்வாய்மொழி போலீசில் அவர் புகார் கொடுத்தார். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் என்றும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர். துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
காட்டுமன்னார் கோவி லில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளன. சுற்றுவட்டார கிரா மத்திலிருந்து ஏராளமான மாணவர்கள் தினமும் இங்கு வந்து செல்வர், இது தவிர வட்டாட்சியர் அலு வலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பொது மக்கள் வந்து செல்வர். இதனால் காட்டுமன்னார் கோவில் நகரப்பகுதி அதி காலை முதல் இரவுவரை பரபரப்பாக காணப்படும்இங்குள்ள முக்கிய வீதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் உள்ளன.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் காட்டுமன்னார் கோவில் கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீரநல்லூர், மாமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து கிராவல் செம்மண் எடுக்கப்படுகிறது. இந்த கிராவல் செம்மண் டாரஸ் எனப்படும் பெரிய டிப்பர் லாரிகளில் இரவு பகலாக கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக நிடத்திற்கு ஒரு லாரி சாலையை கடந்து செல்கிறது.க்ஷஇதனால் ஏற்கனவே இருந்ததை விட போக்கு வரத்து நெரிசல் அதிகமாகி விட்டது. இது தொடர்பாக நாளேடுகளில் செய்தி வரும் போது போலீ சார் ஒப்பந்ததாரரை அழைத்து பேசுகின்றனர். ஒரிரு தினங்கள் பள்ளி, கல்லூரி நேரங்களில் லாரிகள் இயக்கப்படாது. பின்னர் தொடர்ந்து இரவு பகலாக லாரிகள் இயக்கப்படும்.
எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், காட்டுமன்னார்கோவில் சாலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி நேரங்களில் கிராவல் மண் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்ய வேண்டுமென காட்டுமன்னார்கோவில் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அனுமதியின்றி அதிக பாரத்துடன் மணல் ஏற்றி வந்த 11 லாரிகளை பிடித்தனர்
- எம். சாண்ட் பாரம் ஏற்றி வந்த 5 லாரிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் எடுக்கப்படுவதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள்.
மேலும் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேசமணி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமை யிலான போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி அதிக பாரத்துடன் மணல் ஏற்றி வந்த 11 லாரிகளை பிடித்தனர். பிடிபட்ட டிரைவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த லாரிகளை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அபரா தம் விதித்தனர். இதே போல் மாவட்டம் முழுவ தும் நேற்று இரவு போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமை யில் போலீசார் இன்று அதிகாலை புலியூர்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருநெல்வேலியில் இருந்து எம். சாண்ட் பாரம் ஏற்றி வந்த 5 லாரிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
லாரியின் மீது சந்தேகம் அடைந்து எடை மேடை யில் கொண்டு ஆய்வு செய்த போது அதிக பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது.பின்னர் அந்த 5 லாரிகளை பறிமுதல் செய்து ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- மதுரையில் ரேசன் பொருட்கள் ஏற்றி வந்த லாரிகள் சகதியில் சிக்கி தவித்தன.
- ரேசன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
பின்பு அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல் ரேசன் பொருட்கள் இந்த குடோனுக்கு கொண்டு வரப்படுகின்றன.
மதுரையில் தொடர்ந்து 10நாட்களுக்கு மேலாக மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் ேசதமடைந்து கிடக்கிறது. சுந்தரராஜபுரம் குடோன் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக மாறி சகதிக்காடாக இருக்கிறது.
இதனால் குடோனில் இருந்து ரேசன் பொருட்களை எடுத்துச் சென்ற லாரிகள் சகதியில் சிக்கின. அதிலிருந்து லாரிகளை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த குடோனில் இருந்து தினமும் 20லாரிகளில் 300-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லப்படுகிறது.
சகதியில் லாரிகள் சிக்கி தவித்ததால் ரேசன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சகதியில் சிக்கிய லாரிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- திருப்பூர் மாவட்டம் காங்கேய த்துக்கு மற்றொரு லாரி சென்று கொண்டு இருந்தது.
- 2 லாரிகளும் எதிர்பாராத விதமாக மோதி க்கொண்டன.
சென்னிமலை,
மதுரையில் இருந்து ஒரு லாரி பழைய இரும்பு பொருட்களை ஏற்றி கொண்டு சென்னிமலை அருகே ஈங்கூரில் உள்ள ஒரு தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு லாரி சென்று கொண்டிருந்தது.
இந்த லாரியை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே சோழசிராமணியை சேர்ந்த பழனிசாமி (வயது 39) என்பவர் ஓட்டி வந்தார். சென்னிமலை அருகே காங்கேயம் ரோட்டில் பசுவபட்டி பிரிவு என்ற இடத்தில் லாரி சென்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக திருப்பூர் மாவட்டம் காங்கேய த்துக்கு மற்றொரு லாரி சென்று கொண்டு இருந்தது. சென்னிமலை அருகே வந்த போது அந்த 2 லாரிகளும் எதிர்பாராத விதமாக மோதி க்கொண்டன.
இந்த விபத்தில் 2 லாரிகளின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கி யது. இதில் இடிபாடுகளுக்கு இடையே லாரி டிரைவர் பழனிசாமியின் கால் சிக்கி கொண்டது. இதனால் காலை வெளியே எடுக்க முடியாமல் அவர் வலியால் அலறி துடித்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து 20 நிமிடம் போராடி பழனிசாமியை மீட்டனர். காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் பழனிசாமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். விபத்து ஏற்பட்டதும் மற்றொரு லாரியின் டிரைவர் அங்கிரு ந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
- லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் எழும்பூரில் இன்று நடந்தது.
- அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை:
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் எழும்பூரில் இன்று நடந்தது.
ஆன்லைனில் வழக்கு போடுவதை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான சுங்கச் சாவடிகளை நீக்க வேண்டும், 21 இடங்களில் உள்ள பார்டர் சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும், மணல், சவுடு ஆகியவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சி.தனராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பி.ராமசாமி, பொருளாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
தலைவர் பி.கோபால் நாயுடு, அமைந்தகரை லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.யுவராஜ், நிர்வாகிகள் அரவிந்த் அப்பாஜி, சுந்தரராஜன், வேலு, செந்தில்குமார், சுப்பு, வி.ஆறுமுகம், என்.முருகேசன், வி.பி. செல்வ ராஜா, கே.சின்னுசாமி, டி.சுப்பிரமணி, நாராயணன், ஜெயக்குமார், எம்.மாது, ராஜேஷ், சாத்தையா, நிஜாத் ரகுமான் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
நிர்வாகிகள் துரைலிங்கம், கமலக்கண்ணன், ஜானகி ராமன், மயிலை செல்வம், டி.சேகர், ஏ.மணி, ரெட்டி, ரமேஷ்குமார், குணசேகரன், தரணிபதி, செல்வகுமார், எம்.சங்கர், பாஸ்கர், ஏகாம் பரம், முருகன், பிரான்சிஸ் சேவியர், பாரதிராஜா, அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான லாரி உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சேர்மன் சண்முகப்பா, மாநில லாரி உரிமையா ளர்கள் சங்க தலைவர் தனராஜ் ஆகியோர் நிருபர்க ளிடம் கூறுகையில், "லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் லாரிகள் ஓடாது, பிற மாநில லாரிகளும் வராது" என்றனர்.
- அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
- லாரிகளில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது
களியக்காவிளை,ஜூன்.20-
குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகள் கனிம வளங்களை வாக னங்களில் அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறை களை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று காலை தனிப்பிரிவு போலீசார் களியக்காவிளை பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த 9 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது லாரிகளில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனங்களை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தரை வழியாக மின்கம்பி கேபிள் கொண்டுசெல்லும் பணி தொடங்கி நடை பெறுகிறது.
- லாரிகளை மாற்று பாதையில் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
வைத்தீஸ்வரன்கோயில் துணை மின்நிலையத்தி லிருந்து ஆச்சாள்புரம் துணை மின்நிலையத்திற்கு புதைவ டைமின்கம்பி கொண்டு செல்வதற்காக வைத்தீஸ்வ ரன் கோயிலிருந்து சீர்காழி நகர் பகுதி வழியாக ஆச்சாள்புரம் துணை மின்நிலை யத்திற்கு பூமிக்கு அடியில் தரை வழியாக மின்கம்பி கேபிள் கொண்டுசெல்லும் பணி தொடங்கி நடை பெறுகிறது.
இந்த பணிக்காக சாலை யோரம் ஜெசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடை பெறுகிறது.
இந்த பணியில் தோண்டப்படும் மண் சாலை யோரம் கொட்டி வைத்து நடைபெறுவதால் சாலை குறுகி பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதோடு புறவழிச்சாலை பணிக்காக அதே வழிதடத்தில் லாரிகளில் மண் ஏற்றி செல்லும் லாரிகளும் சென்று வருவதால் பள்ளி நேரங்களில் வாகனஓட்டிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ஆகையால் போக்குவரத்து காவல் துறை யினர் மின் புதைகம்பி பணிகள் நிறைவ டையும் வரை கனரக வாகனங்கள், லாரிகளை மாற்று பாதையில் இயக்கிட பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- லாரிகளுக்கு தானியங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், இரும்பு பொருட்கள், சிமெண்ட் என பலவகையில் லோடுகள் கிடைக்கிறது.
- தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மேலும் அங்கு விவசாய பணியும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. தமிழகத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர் உட்பட லட்சக்கணக்கானோர் உள்ளனர். இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் 1 லட்சம் லாரிகளுக்கு மேல் அடங்கும்.
இந்த லாரிகளுக்கு தானியங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், இரும்பு பொருட்கள், சிமெண்ட் என பலவகையில் லோடுகள் கிடைக்கிறது. சரக்குகள் கையாளுவது மூலம் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் லாரி உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
சமீப காலமாக டீசல், சுங்க கட்டணம், லாரிகளுக்கான பொருட்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம் உட்பட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வட மாநிலங்களில் பெரும்பாலான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மேலும் அங்கு விவசாய பணியும் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த லாரிகளுக்கு சரிவர லோடு கிடைக்காமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
லாரி தொழில் பாதித்தால் அதைச் சார்ந்த தொழில் அனைத்தும் பாதிக்கும். மகாராஷ்டிராவில் இருந்து பெரிய வெங்காயம், பூண்டு, கொண்ட கடலையும், மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து துவரை, உழுந்து, பச்சை பயிறு, குஜராத்திலிருந்து மசாலா பொருட்களும் தமிழகத்திற்கு லாரிகள் மூலம் வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குஜராத்தில் புயல் தாக்கியது. இதன் காரணமாக அங்கு சாகுபடி செய்த பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. பல மாவட்டங்களில் சாலைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வர வேண்டிய லோடுகளின் எண்ணிக்கை 30 முதல் 40 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சவ்வரிசி, மஞ்சள், கல் மாவு, அரிசி, வெல்லம், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை வட மாநிலங்களுக்கு செல்லவில்லை.
இதனால் காரணமாக தமிழக முழுவதும் லோடு கிடைக்காமல் 30 சதவீதத்துக்கும் மேலாக சுமார் 2 லட்சம் லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் டிரைவர், கிளீனர், சுமை தூக்குவோர் உள்ளிட்டவர்கள் போதிய வருமானம் இல்லாமல் உள்ளனர். அதே போல் லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.