search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்கால சிலைகள்"

    • சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சுமதி என்பவர் வீட்டில் இருந்து சிலைகள் பறிமுதல்.
    • நாகாத்தம்மன் உலோக சிலை, உலோக உடைவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் 2 பழங்கால சிலைகள், உலோக வாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில், பெண் சுமதி, பிரகாஷ், தங்கராஜ் மற்றும் ராஜேஷ் கண்ணன் என 4 பேர் கைது செய்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சுமதி என்பவர் வீட்டில் இருந்து சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, நாகாத்தம்மன் உலோக சிலை, உலோக உடைவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சுமதியிடம் விசாரித்ததில், கோயிலில் இருந்து திருடப்பட்டதாகவும், சரியான நேரத்தில் விற்க காத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

    சுமதியும், அவரது கணவர் பிரகாஷூம் சிலை குறித்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காததால் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சிலைகள் எந்த கோயிலில் இருந்து எடுக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஆதிகால தமிழர்கள் வாழ்ந்த இடம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகும்.
    • தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் பழங்கால சிலைகள், மணல்மேடு, சங்ககால பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளன. இவை ஆதிகால தமிழர்கள் வாழ்ந்த இடம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகும்.

    இந்த இடத்தை வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வடக்குப்பட்டு கிராமத்தில் சங்க காலத்தை சேர்ந்த பானை ஓடு துண்டுகள், பழங்கால கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட செங்கல்கள், கற்கருவிகள் உள்ளிட்ட தடயங்கள் காணப்படுகின்றன. மேலும் அங்குள்ள வயல்வெளி வரப்பில் பழமையான சிவபெருமான் மணல் சிற்ப சிலை ஒன்றும் உள்ளது.

    இது காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் சிலை போல் உள்ளது. இது 7 அல்லது 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    மேலும் 10-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் லட்சுமி சிலை, அம்மன் சிலையும் கண்டுபிடிக்கப்பட்டது. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய இரும்பு காலத்தை சேர்ந்த மணல்மேடு ஒன்றும் உள்ளது. எனவே இவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×