search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Let’s save before coming"

    • முகாமில் ஸ்கேனிங் இ.ஜி.சி., கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை, புற்றுநோய் கண்டறிதல், சுகர் மற்றும்உயர் ரத்தழுத்தம், கண் சிகிச்சை, சித்தா, ஹோமியாபதி, யுனானி உள்ளிட்டவைகள் மூலம் நோய்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்தனர்.
    • இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்அன்பர சன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, சேர்மன் காமாட்சி மூர்த்திஆகியோர் முன்னிலை வகித்த னர். சுகாதார மேற்பார்வை யாளர் பாஸ்கர் வரவே ற்றார். ராஜ்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் ஸ்கேனிங் இ.ஜி.சி., கர்ப்பிணி பெண்களு க்கான பரிசோதனை, புற்றுநோய் கண்டறிதல், சுகர் மற்றும்உயர் ரத்தழுத்தம், கண் சிகிச்சை, சித்தா, ஹோமியாபதி, யுனானி உள்ளிட்டவைகள் மூலம் நோய்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவர் பிரபா, மருத்துவர்கள் கிளின்டன், செந்தில், சுகாதார ஆய்வாளர் மலர்கொடி, தி.மு.க ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் ரஜினி நன்றி கூறினார்.

    • மயிலம் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கர்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது.

    விழுப்புரம்: 

    மயிலம் அருேக ஆலகிராம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா சுரேஷ் தலைமை தாங்கினார்.மயிலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆலகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி வரவேற்றார் முகாமில்சிவக்குமார் எம்.எல்.ஏ. மயிலம் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்து சிறப்புறையாற்றினார்கள்.இதில் ஸ்கேன், எக்ஸ்ரே,இரத்தப் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, சித்த மருத்துவம், கர்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. பின்னர் நிலவேம்பு கசாயம், ஊட்டச்சத்து கண்காட்சி, ஊட்டச்சத்து உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சேதுநதன், ஒன்றிய செயலாளர் மணிமாறன், மாவட்ட கவுன்சிலர்கள் விஜயன், மகேஸ்வரி குமரேசன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், தி.மு.க. நிர்வாகி சுரேஷ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பூங்கொடி சுகாதார மே ற்பார்வை யாளர் துறை சாமி, ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் நிலவேம்பு கசாயம், ஊட்டசத்து உணவு வழங்கப்பட்டது, முடிவில் பள்ளி ஆசிரியர் வீரமணி நன்றி கூறினார்.

    • தலைஞாயிறு வட்டார மருத்துவர் தியாகராஜன் மற்றும் மருத்துவ குழுவினர் 650 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
    • கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கள்ளிமேடு ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது .முகாமிற்கு தலைஞாயிறு ஒன்றிய குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    மாநில விவசாய ஆலோ சனை குழு உறுப்பினர் தலைஞாயிறு ஒன்றிய தி.மு.க செயலாளர் மகாகுமார் முன்னிலை வகித்தார். தலைஞாயிறு வட்டார மருத்துவர் தியாகராஜன் மற்றும் மருத்துவ குழுவினர் 650 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    முகாமில் கள்ளிமேடு ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், தாமரைப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா பாலசுந்தரம், நீர்முளை ஒன்றியகுழு உறுப்பினர் செல்வி சேவியர், மாவட்ட பிரதிநிதி மச்சயழகன், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    ×