search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள் விற்பனை"

    • கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுகிழமை தோறும் கூடுவது வழக்கம்.
    • வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக் கிடாய்கள் வரத்து அதிகமாக இருந்தது.

    மத்தூர்,

    பக்ரீத் பண்டிகையொட்டி போச்சம்பள்ளி வாரசந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஜோராக நடைபெற்றது. அந்த ஆடுகளை வாங்குவதற்காக போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் வியாபாரிகள் குவிந்ததால் வாரசந்தை களை கட்டியது.

    வாரசந்தை

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுகிழமை தோறும் கூடுவது வழக்கம். இச்சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை அனைத்தும் விற்கப்படுவதால், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொது மக்கள் வாரச்சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையன பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் வருகிற 29-ந் தேதி அன்று பக்ரீத் பண்டிகையையொட்டி திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர். இதன் காரணமாக ரூ. 1 கோடி வரை ஆடுகள் வியாபாரம் நடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிராமங்களில் பண்டிகைகளை எதிர்பார்த்து விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும்போது சராசரி விலையை விட சற்று கூடுதல் விலை விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டனர்.

    வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக் கிடாய்கள் வரத்து அதிகமாக இருந்தது. பொட்டு, மயிலை, நாடு, செம்மறி என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிடாய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 15 கிலோ எடை கொண்ட ஆடுகள், ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகின. சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அதிக விலைக்கு விற்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • 3 நாட்களில் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

    கோவை,

    நாடு முழுவதும் வருகிற 29-ந் தேதி இஸ்லாமிய மக்களின் தியாக திருநா ளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகை தினத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, மாடு ஆகியவற்றை குர்பானி கொடுத்து ஏழை- எளிய மக்கள் மற்றும் உறவி ர்களுக்கு வழங்குவது வழக்கம்.

    இதற்காக கோவையில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய உக்கடம், கோட்டைமேடு, புல்லுக்காடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்து உள்ளனர்.

    மேலும் பக்ரீத் பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதால் ஆடுகளின் விலை ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

    இது குறித்து வியாபாரி கள் கூறியதாவது:-

    கோவை மாநகர பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்ப னைக்கு வந்துள்ளது. ஒரு ஆட்டின் விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. குறைந்த பட்சம் இந்த 3 நாட்களில் ரூ. 5 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

    கோவை உக்கடம் போத்தனூர் கரும்புக்கடை கோட்டைமேடு பொன் விழா நகர் போன்ற பகுதிகளில் ஆடு வியா பாரம் சூடு பிடித்து ள்ளது. தமிழகத்தில் செம்பட்டி, மதுரை, திண்டுக்கல், பல்லடம் போன்ற சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து ஆடு வியாபாரிகள் விற்ப னைக்காக கொண்டு வந்துள்ளனர். ஆட்டுக்குத் தேவையான புல் கேரளா பாலக்காடு மாவட்டத்தில் இருந்து கொண்டுவர ப்பட்டன. இந்த புல்லின் விலை ஒரு கட்டு ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • சாதாரண வாரங்களிலேயே ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.
    • சென்ற ஆண்டு விற்பனையான தொகையில் இருந்து ரூ.3 ஆயிரம் வரை ஆடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது.

    இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். மதுரை, தேனி, ராமநாதபுரம் , சிவகங்கை, நெல்லை, தென்காசி, விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

    இங்கு சாதாரண வாரங்களிலேயே ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகும்.

    அந்த வகையில் வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை வியாபாரம் இன்று களை கட்டியது. இன்று அதிகாலை முதல் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது

    வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு, கொடி ஆடு என பலதரப்பட்ட வகைகள் கொண்ட 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்தனர்.

    7 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8 ஆயிரத்திற்கு விலை போனது. மேலும் எடைக்கு ஏற்ப ரூ.33 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை இருந்தது. ஜோடி ஆடு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை விலை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பக்ரீத் பண்டிகையில் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதால் அதிக அளவில் செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டுகளை விட ஆடுகளின் விலை இந்த ஆண்டு அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர். இது சென்ற ஆண்டு விற்பனையான தொகையில் இருந்து ரூ.3 ஆயிரம் வரை ஆடுகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. ரூ.6 கோடிக்கு ஆடுகளின் விற்பனை இருந்ததாக வியாபாரிகள் கூறினர்.

    • கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
    • இன்று ஒரே நாளில் ரூ.6 முதல் 8 கோடி வரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை 29-ந்தேதி முஸ்லிம் மக்களால் கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆடுகள் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக கொண்டு வரப்பட்டன.

    கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.

    இன்று அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கியது.

    கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கோலார் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர் மற்றும் தமிழகத்தில் வேலூர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

    வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு, 12 ஆயிரம் ரூபாய் விலை போகும். ஆனால், பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து, 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு, 15 ஆயிரம் முதல், 17 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.

    குறைந்த பட்சம் ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சமாக ஒரு ஆடு 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை ஆனது.

    இன்று ஒரே நாளில் ரூ.6 முதல் 8 கோடி வரை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
    • பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.

    பொள்ளாச்சி:

    தமிழகத்திலேயே மிகப்பெரிய கால்நடை சந்தையாக பொள்ளாச்சி மாட்டுச்சந்தை உள்ளது.

    இந்த சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். இங்கு பொள்ளாச்சி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து ஆடு மற்றும் மாடுகளை வாங்கி செல்வார்கள்.

    நேற்றும் வழக்கம் போல சந்தை கூடியது. வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

    திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.

    ஆடுகளை வாங்குவதற்கும் வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

    எடைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனையானது. ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை போனது.

    இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.

    ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால் வர்த்தகம் ரூ.1 கோடியை தாண்டியது என்றார்.

    • ஒரு ஆடு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையில் தரத்திற்கேற்ப விற்பனையானது.
    • இந்த ஆண்டு ஏராளமான பெண்களும் ஆடுகளை வாங்குவதற்கு பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தைக்கு அதிகம் வந்திருந்தனர்.

    தென்காசி:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இதையொட்டி இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம். இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் ஆட்டுச்சந்தைகளுக்கு ஆடுகள் அதிகளவில் கொண்டு வரப்பட்டு கோடிக்கணக்கில் வருவாயும் கிடைத்து வருகிறது.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் அரசு ஆட்டுச் சந்தையில் இன்று காலை முதலே பொதுமக்களும், குவியத் தொடங்கினர்.

    பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், கடையம், கல்லூரணி, ராமச்சந்திர பட்டணம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    ஒரு ஆடு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையில் தரத்திற்கேற்ப விற்பனையானது. ஆடுகளை வாங்குவதற்காக கடையநல்லூர், மேலப்பாளையம், தென்காசி, கடையம், ரவண சமுத்திரம், பொட்டல்புதூர், வீராணம், புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

    எப்பொழுதும் ஆடுகளை வாங்குவதற்கு ஆண்களே அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த ஆண்டு ஏராளமான பெண்களும் ஆடுகளை வாங்குவதற்கு பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தைக்கு அதிகம் வந்திருந்தனர்.

    இன்று ஒரு நாள் மட்டும் பாவூர்சத்திரம் அரசு ஆட்டுச் சந்தையில் ஒரு கோடி வரையில் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பக்ரீத் பண்டிகையொட்டி அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது.
    • 5000 முதல் 15 ஆயிரம் வரை உள்ள ஆடுகள் விற்பனைக்கு வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் திரு.வி.க நகர் அருகே உள்ள வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம். வருகின்ற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகையொட்டி அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. இதில் 4 மணி நேரத்தில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை வரவுள்ள நிலையில் ஆடுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் வியாபாரிகள் சந்தைகளில் ஆடுகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில் சின்னசேலம் வார சந்தையில் காலை 5 மணி முதல் வியாபாரிகள் ஆடுகளை விற்க தொடங்கினர். சுமார் 5000 முதல் 15 ஆயிரம் வரை உள்ள ஆடுகள் விற்பனைக்கு வந்தது.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • 25 கிலோ எடை கொண்ட செம்மறியாடு ஒன்று ரூ.17 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
    • 25 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று கூடுகிறது. இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், நீலகிரி மற்றும் புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் இன்று கூடிய ஆட்டு சந்தையில் வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 400-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் 25 கிலோ எடை கொண்ட செம்மறியாடு ஒன்று ரூ.17 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    மேலும் 25 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடுகள் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனையானது. மொத்தம் இன்று கூடிய ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி செம்மறியாடுகள் ரூ.70 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையிலும் ஆயிரக்கணக்கான ஆடுகள் ஆண்டுதோறும் வெட்டப்படுவது வழக்கம்.
    • தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக வருகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் இறைச்சிக்காக ஆடுகள் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டி இருக்கிறது.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையிலும் ஆயிரக்கணக்கான ஆடுகள் ஆண்டுதோறும் வெட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு 50 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்காக வரவழைக்கப்படுகிறது.

    தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க பொதுச் செயலாளரான ராயபுரம் அலி கூறும்போது, "இந்த ஆண்டு ரம்ஜானுக்காக வருகிற 23-ந்தேதி மாலையில் இருந்தே ஆடுகள் விற்பனைக்காக வர இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக வருகின்றன. ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரையில் ஆடுகள் தரத்துக்கு ஏற்ப விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சில ஆடுகள் மட்டுமே ரூ.40 ஆயிரம் வரையில் விலை போகும் என்று எதிர்பார்க்கிறோம். எப்போதுமே பக்ரீத் பண்டிகையை ஒட்டி கொம்பு வளர்ந்த ஆடுகளையே விரும்புவார்கள்.

    அந்த வகையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஆடுகளே கொம்புகளுடன் காணப்படும். இதன் காரணமாகவே தென் மாநிலங்களை சேர்ந்த ஆடுகளுக்கு பக்ரீத் பண்டிகையையொட்டி கிராக்கி இருக்கும் அந்த வகையில் இந்த ஆண்டும் கொம்பு வைத்த ஆடுகளே வர வழைக்கப்படுகின்றன.

    ஒடிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள ஆடுகளுக்கு கொம்பு இருக்காது. இதனை பக்ரீத் பண்டிகையை யொட்டி வெட்டுவதற்கு விரும்ப மாட்டார்கள். சென்னையில் ரெட்டேரி சந்தை, புளியந்தோப்பு, ஆட்டு தொட்டி, தாம்பரம் சந்தை, வில்லிவாக்கம் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஆடுகள் விற்பனை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த வார சந்தைக்கு காட்டுசெல்லூர், வட குரும்பூர், கிளியூர், மடப்பட்டு ,சேந்தநாடு, ஆசனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வழக்கமாக இந்த சந்தையில் சுமார் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடை பெறும்.

    இந்த நிலையில் அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்

    8 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையான நிலையில் சுமார் 3 மணி நேரத்தில் ஆடுகள் 3 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் மேச்சேரி வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • செம்மறி ஆட்டு குட்டிகள் ரூ. 1500-க்கு விற்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரியில் வார சந்தை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இங்கு வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

    விவசாயிகள் மேச்சேரி வெள்ளாடு, செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் செம்மறி ஆடுகள் விலை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ செம்மறி ஆடு ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது.

    செம்மறி ஆட்டு குட்டிகள் ரூ. 1500-க்கு விற்கப்பட்டது. வெள்ளாடு ரூ.15 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இந்த சந்தையில் ரூ.20 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் 10 கிலோ செம்மறி ஆடு ரூ.5,500 முதல் ரூ.6,500 வரை விற்பனையானது. ஆனால் இந்த வாரம் கிடுகிடுவென விலை உயர்ந்தது.

    ரம்ஜானை முன்னிட்டு பிரியாணி ருசிக்கு செம்மறி ஆடுகளே அதிகம் விற்பனையாகும். தேவை அதிகரித்த நிலையில், செம்மறி ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது.
    • நாட்டு கோழி மற்றும் சேவல்களும் அதிகளவில் விற்பனையானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகள், கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8500 முதல் ரூ.10000 வரை விற்பனையானது.

    இதேபோல் நாட்டு கோழி மற்றும் சேவல்களும் அதிகளவில் விற்பனையானது. வழக்கமான வியாபாரத்தை விட சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தங்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைத்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×