search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 242250"

    • சர்க்கரை அளவை மோசமாக உயர்த்தக்கூடிய பழங்களும் உள்ளன.
    • ஒவ்வொரு பழமும் ரத்தச் சர்க்கரை அளவை மாற்றும் திறன் கொண்டது.

    நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருப்பது நல்லது. பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அது சில நேரம் எதிர்மறையாகி விடுகிறது.

    நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்த வரை, ஒவ்வொரு பழமும் ரத்தச் சர்க்கரை அளவை மாற்றும் திறன் கொண்டது. முன்னெச்சரிக்கையாக சில பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், ரத்தச் சர்க்கரை அளவை மோசமாக உயர்த்தக்கூடிய பழங்களும் உள்ளன.

    ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றில் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவாக இருப்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இந்தப் பழங்களைச் சாப்பிடலாம்.

    சர்க்கரை நோயாளிகள் கிளைசமிக் இன்டக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) மற்றும் கிளைசமிக் லோடு (கிளைசமிக் சுமை) குறைவாக உள்ள பழங்களை தாராளமாக உண்ணலாம். எடுத்துக்காட்டாக ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, கொய்யா, நாவல் பழம், கிவி பழம், செர்ரிபழம், பீச்பழம், பெர்ரிபழம்,அத்திப்பழம் வெண்ணை பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை உண்ணலாம்.

    சர்க்கரை நோய்க்கும் குதிகால் வலிக்கும் தொடர்பு உண்டு. நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் ஆகியோருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத பொழுது குதிகால் வலி ஏற்படலாம்.

    இதற்கு முக்கிய காரணம் 'பிளாண்டர் பேசியைடிஸ்'. குதிகால் எலும்பில் பிளாண்டர் பேசியா இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு குதிகால் வலி உண்டாகலாம். மேலும் சர்க்கரை நோயாளிகள் குதிகால் உயரமான காலணிகள் மற்றும் கூம்பு வடிவ ஷூக்களை அணியக்கூடாது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • நீரிழிவு நோயை சில மூலிகைகளால் கட்டுப்படுத்த முடியும்.
    • மூலிகைகள் பற்றிய விவரம் பின்வருமாறு....

    துளசி

    துளசிக்கு மருத்துவ குணம் அதிகம் என்பது அறிந்ததே. சிறந்த ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகவும், இன்சுலின் உணர்திறனை அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கக்கூடியதாகவும் விளங்குகிறது. .இதை வெறும் வயிற்றில் சாறாகவும் அல்லது இலைகளாகவும் (3 - 4) எடுத்துக் கொள்ளலாம்.

    கற்றாழை

    உடலில் உள்ள நச்சுக்களை கற்றாழை நீக்குகிறது. ஒவ்வொரு முறை உணவு உண்பதற்குமுன், அதன் கஞ்சி போன்ற சத்தான பகுதியை உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.

    நெல்லிக்காய்

    உடல்நலனை காக்கும் சிறப்புமிக்க மூலிகை நெல்லி ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின்-சி உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.

    அஸ்வகந்தா

    சர்க்கரை அளவை குறைப்பதில் அஸ்வகந்தா சிறந்து விளங்குவதோடு உடல் ஊட்டத்திற்கு சிறந்ததாக விளங்குகிறது.

    வேங்கை

    வேங்கை மரத்தின் பட்டையை பொடியாக்கி மருந்தாக உபயோகப்படுத்தலாம். ரத்தத்தில் சர்க்கரைைய குறைக்கும் இயல்பு வேங்கையில் உள்ளது.

    வில்வம்

    உலர்ந்த வில்வ இலையை கொண்டு செய்த பொடி இயல்பாகவே ரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

    ஆவாரை

    நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மற்ற மூலிகைப் போல ஆவாரையும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். பொதுவாக இது தோல் பிரச்சினைக்கும் மருந்தாகிறது.. ஆவாரை வேரை பொடித்து உண்பதன் மூலம் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தலாம்.

    வேம்பு

    வேம்பு நோய் எதிர்ப்புத் திறன் மாற்றியாகவும் அழற்சி நீக்கியாகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், மலேரியாவை எதிர்க்கவும், பாக்டீரியா, நச்சுயிர் எதிர்ப்பு பொருளாகவும் விளங்குகிறது.

    நாவல்பழம்

    நாவல்பழத்தின் விதைகளின் பொடியானது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. நாவல் இரும்புச்சத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குவதோடு இதயம் மற்றும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் அருமருந்தாக விளங்குகி்றது.

    நித்யகல்யாணி

    நித்யகல்யாணி மூலிகையானது, மறதி நோய்க்கு சிறந்த மருந்தாகும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை தணிக்கிறது. நீரிழிவு நோய்க்கும் மருந்தாகிறது. .

    மஞ்சள்

    புற்றுநோயை எதிர்க்கும் மூலிகையாக மஞ்சள் உள்ளது. நீரிழிவு ேநாய்க்கு எதிராகவும் செயல்படக்கூடியது.

    • இன்றைய காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது நீரிழிவு உள்ளது.
    • எளிய யோகாசனங்களை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

    வேலூர் சத்துவாச்சாரியில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை உள்ளது. இங்கு சித்த மருத்துவராக டாக்டர் பிரியங்கா பணிபுரிகிறார். அவர் சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது? அதற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்து கூறியதாவது:-

    சர்க்கரை நோய் என்பது ஒரு வளர்ச்சிதை மாற்றக் கோளாறே அன்றி தனி நோய் அல்ல. சித்த மருத்துவத்தில் இதனை மதுமேகம் அல்லது நீரிழிவு என்று கூறுவர். பொதுவாக உணவு உட்கொண்ட பிறகு அதில் உள்ள சர்க்கரை சத்து கிளைகோலைசிஸ் (சர்க்கரை சிதைவு) என்னும் முறைப்படி குளுக்கோஸ் ஆக உடைகிறது. கணையம், வெளிப்பட்டுள்ள குளுக்கோஸ் அளவை பொறுத்து தானாகவே இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதுவே ரத்தத்தில் உள்ள குளுக்கோசை எலும்பு, தசை முதலியவை உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது.

    நீரிழிவுக்கான காரணம்

    கணையத்திலிருந்து இன்சுலின் தேவைக்கும் குறைவாக சுரப்பது அல்லது முற்றிலும் உற்பத்தியாகாமல் இருப்பது அல்லது உடலில் உள்ள உயிரணு அதனை ஏற்காமல் மறுத்தல் என்ற காரணங்களால் நீரிழிவு நோய் உருவாகிறது.

    இன்றைய காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது நீரிழிவு உள்ளது. நோய்க்கான மருந்தும், மருந்தின் பக்க விளைவுகளை தவிர்க்க ஒரு மருந்து என மருந்துகளின் பட்டியல் நீள்கிறது. சரியான உணவு, மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவத்தில் இன்சுலின் சுரப்பை வைத்து இதனை டைப்-1 மற்றும் டைப்-2 என இருவகைப்படுத்துகின்றனர். குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோயை இளம் நீரிழிவு என வகுத்துள்ளனர். இன்சுலின் முற்றிலும் சுரக்கப்படாத நிலையிலேயே நவீன மருத்துவத்தின் ஆலோசனை தேவைப்படுகிறது.

    இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், இரவில் அதிக நாவறட்சி, அதிகப்பசி, நன்றாக உண்டாலும் உடல் நாளுக்கு நாள் மெலிவடைந்து கொண்டே வருதல். தோல் வறண்டு சுருங்கி காணப்படல், எப்போதும் களைப்பாக இருத்தல், எளிதில் ஆறாத புண், கால் மரத்து போதல், உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் ஆகியவை நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

    கட்டுப்படுத்தும் முறைகள்

    நாம் உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். எளிய யோகாசனங்களை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். கணையத்திற்கு ஆற்றலைத் தரும் யோகாசனங்களை தகுந்த வழிகாட்டுதலின்படி செய்யலாம். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இருதயம் மற்றும் ரத்தநாளங்கள் பாதிப்படையும். மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், உடல் எடையும் கூடுகிறது.

    காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை அருந்தி வருவதால் உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் வெளியேற்றப்படும்.

    சேர்க்க வேண்டிய உணவுகள்

    துவர்ப்பு மற்றும் கசப்பு தன்மை அதிகம் உள்ள காய்கனிகளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். வாழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், கொத்தவரங்காய், முருங்கை பிஞ்சு, இளநீர் முதலியவற்றை சேர்க்க வேண்டும். நாவல் பழத்தில் உள்ள ஜம்போலின் க்ளுக்கோசைட் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பயன்படுகிறது. நெல்லிக்காயில் உள்ள தாவர ரசாயனங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

    கருப்பு கவுனி, கருங்குருவை, காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசிகளை சமைத்து உண்ணலாம். கோதுமை, சம்பா கோதுமை, கேழ்வரகு இவைகளால் செய்யப்பட்ட உணவுகளை உண்ணலாம். சர்க்கரை நோயாளிகள் முற்றிலும் இனிப்புத் தன்மை கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது தவறான கருத்தே. பனைவெல்லம், தேன் முதலியவற்றை மருத்துவரின் அறிவுரையின்படி தக்க அளவு அன்றாடம் உண்ணலாம்.

    தவிர்க்க வேண்டியவை

    மைதா, உயர் கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ள காரணங்களால் ரத்த சர்க்கரை அளவு மிகவும் அதிகமாகிறது. மைதாவில் உள்ள பிளீச்சிங் ஏஜென்ட் நச்சுத்தன்மை உள்ளது. கிட்டத்தட்ட 97 சதவீதம் நார்ச்சத்து கோதுமைகளில் இருந்து இழக்கப்பட்ட நிலையில் மைதா தயாரிக்கப்படுகிறது.

    பதப்படுத்தப்பட்ட சர்க்கரை சேர்ந்த உணவுகளையும், முதிர்ந்த பழங்களையும், அதிக மாவு சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    கால்கள், பாதங்களை பராமரிக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோய் கண்டறிதல் பரிசோதனையை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, உயர் ரத்த அழுத்த பரிசோதனை முதலியவற்றை செய்து கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் வரக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளதால் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    எளிய மூலிகை மருத்துவம்

    வெந்தயம், பாகற்காய், நெல்லிக்காய், ஆவாரம் பூ, சீந்தில், சர்க்கரை கொல்லி வில்வம், மஞ்சள், பூண்டு, வேப்பிலை சாறு, துளசி, சோயாபீன்ஸ், வெங்காயம், பசலைக்கீரை, வெள்ளரி, இலந்தைபழம், முளைத்தானியங்கள் முதலியவை நல்ல பலன் அளிக்கும்.

    நடைப்பயிற்சி, யோகா பயிற்சி மேற்கொள்ளுதல் மூலமும், சித்த மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது மூலமும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நம்மை அதிகளவில் எச்சரிக்கும் நோய்களில் ஒன்று சார்க்கரை நோய்.
    • தற்போது பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    நம்மை அதிகளவில் எச்சரிக்கும் நோய்களில் ஒன்றாக சார்க்கரை நோய் இருக்கிறது. வயது வித்தியாசங்கள் இன்றி பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    நீரிழிவு நோயாளிகள் பொதுவாக இனிப்பு சேர்ந்த உணவுகளை அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். தேனில் கார்போஹைட்ரேட் சத்து, பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் வடிவில் உள்ளது. ஒரு டீஸ்பூன் (சுமார் 7 கிராம்) தேனில் 21 கலோரி ஆற்றல் உள்ளது.

    நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி இவை அனைத்திலும் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படியே தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி இவைகளை பயன்படுத்த வேண்டும்.

    ஆனால் வெள்ளைச்சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரை, தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவை ஆரோக்கியமானது, சிறந்தது.

    தேனில் ஆண்ட்டி மைக்ரோபியல் மற்றும் ஆண்ட்டி பாக்டீரியல் துகள்கள் இருக்கின்றன. வெள்ளைச் சர்க்கரையை விட இது ஆபத்து குறைவு தான். இதிலும் கட்டுப்பாடு அவசியம். இதற்கு அடுத்த இடத்தில் கருப்பட்டி இருக்கிறது. தேன் நல்லது தானே என்று சொல்லி அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    • ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்க்கவும்.
    • காலணி அணியாமல் கடினமான தரைப்பகுதியில் நடப்பதை தவிர்க்கவும்.

    நீண்டகால நீரிழிவு நோயினால் கால்களிலும், பாதங்களிலும் உள்ள நரம்புகள் மற்றும் அதன் ரத்த ஓட்டத்தில் பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. இதனால் பாதங்கள் மதமதப்பாகவும், கால் தசைகள் வலியாகவும், சோர்வாகவும் காணப்படும்.

    இதற்கான சித்த மருந்துகள்:

    1) ஆவாரைப் பூ குடிநீர் பொடி 1-2 கிராம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, இரவு குடிக்க வேண்டும். இது ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும்.

    2) சீந்தில் சர்க்கரை 500 மி.கி. அளவு காலை, இரவு எடுக்க வேண்டும்.

    3) மதுமேக சூரணம் 1 கிராம் அல்லது மதுமேக சூரண மாத்திரை 1-2 காலை, இரவு இருவேளை எடுக்க வேண்டும்.

    4) கால் மதமதப்பு, தசை வலி நீங்க: அமுக்கரா சூரணம் 1 கிராம், பவள பற்பம் 200 மி.கி., அயக்காந்த செந்தூரம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவற்றை காலை, மதியம், இரவு மூன்று வேளை வெந்நீரில் எடுக்க வேண்டும். வாத கேசரி தைலம் அல்லது விடமுட்டி தைலத்தை கால்களிலும் பாதங்களிலும் நன்றாக தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது மிகச் சிறந்தது.

    5) ரத்த அழுத்தம் குறைய உணவில் உப்பு, ஊறுகாய் இவைகளை அளவோடு எடுக்க வேண்டும். வெண்தாமரை இதழ் சூரணம், அல்லது அசைச் சூரணம் 1 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை வெந்நீரில் சாப்பிட ரத்த அழுத்தம் குறையும்.

    ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்க்கவும். காலணி அணியாமல் கடினமான தரைப்பகுதியில் நடப்பதை தவிர்க்கவும். குறிப்பாக, காலையில் கண் விழிக்கும்போது பாதங்களில் வலியை உணர்பவர்கள் வீட்டுக்குள்ளேயும் செருப்பு அணிந்து நடப்பதே பாதுகாப்பானது.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    • குழப்பமான மனநிலையில் இருக்கும்.
    • குழந்தையின் பேச்சு குழறும்.

    நீரிழிவு நோய் உள்ள குழந்தைக்கு ரத்தச்சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும்..

    குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும். குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும். மயக்கம் வரும். சில வேளைகளில் வலிப்பும் வரலாம்.

    பொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது. ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும், என டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    எனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால், உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையை தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தை பள்ளியிலும் சொல்லி வைப்பது நல்லது, எனவும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    • நகங்களை ஒழுங்காக வெட்டவேண்டும்.
    • வெளியே போகும் போது காலணி போட்டுத்தான் செல்ல வேண்டும்.

    நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தேவையை விட அதிகமாக இருப்பது ஆகும். மிகவும் தாகமாக உணர்வது, வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல், மிகவும் சோர்வாக உணர்வது, உடல் எடை குறைதல், கால்கள் மரத்துப்போதல், வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுதல், கண் பார்வை மங்குதல், புண்கள் ஏற்பட்டால் எளிதில் குணமடையாத நிலை, தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாத நிலை போன்றவை நீரிழிவு நோயில் காணப்படும் பொதுவான அறிகுறிகள். இது நபருக்கு நபர் வேறுபடும்.

    சித்த மருத்துவத்தில் நீரிழிவு, இனிப்பு நீர், மதுமேகம் என்றழைக்கப்படுகிறது, நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் ஏழு உடல் தாதுக்களையும் பாதித்து உடலை உருக்கி விடும். ஆங்கில மருத்துவமுறையில் டைப் 1, டைப் 2 என்று நீரிழிவு நோய்கள் இரண்டுவிதமாக அழைக்கப்படுகின்றன. இது தவிர கர்ப்ப காலத்தில் வரும் ஜெஸ்டேசனல் நீரிழிவு, சிறு குழந்தைகளுக்கு வரும் ஜுவைனல் நீரிழிவு நோய்களும் உண்டு.

    சித்த மருத்துவ தீர்வுகள்:

    1) மதுமேக சூரணம் 1 முதல் 2 கிராம் அல்லது மதுமேக மாத்திரை 1 முதல் 2 மாத்திரை வீதம், காலை, இரவு சாப்பிட வேண்டும்.

    2) திரிபலா சூரணம் அல்லது திரிபலா மாத்திரை காலை, இரவு எடுக்கலாம்.

    3) சீந்தில் சர்க்கரை 500 மி.கி. காலை, இரவு எடுக்க வேண்டும்.

    4) ஆவாரை குடிநீர் பொடி 1 முதல் 2 கிராம் அளவில் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, இரவு குடிக்க வேண்டும்.

    5) சர்க்கரைக் கொல்லி பொடி காலை, இரவு 500 மி.கி. முதல் ஒரு கிராம் வெந்நீரில் சாப்பிடலாம்.

    சிலர் தேன் காய் அல்லது மகாகனி என்றழைக்கப்படுகிற ஸ்வெட்டீனியா தாவரத்தின் விதையை பொடித்து சாப்பிடலாமா என்று கேட்கிறார்கள், ரத்த சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தையும் இது குறைக்கும். சித்தமருத்துவரின் ஆலோசனையின்பேரில் இதை சாப்பிடலாம். ஆனால் கல்லீரல் நோய் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

    கால் எரிச்சல் நீங்க

    நீரிழிவு நோயில் வருகிற கால் மத மதப்பு, கால் எரிச்சல், கால் பலவீனம் இவைகளுக்கு காரணம் கால், மற்றும் பாதங்களில் மேலோட்டமாக உள்ள ரத்த குழாய்களில் ஏற்படும் சீரற்ற ரத்த சுழற்சி ஆகும். இதற்கு சித்த மருத்துவத்தில்,

    1) திரிபலா சூரணம் பொடி 1 கிராம் எடுத்து அதனுடன் முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., ஆறுமுகச் செந்தூரம் அல்லது அயக்காந்த செந்தூரம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. சேர்த்து காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    கால்கள், பாதங்களில் வாத கேசரி தைலம் அல்லது சிவப்பு குக்கில் தைலம் அல்லது விடமுட்டி தைலத்தை தேய்த்து வரவேண்டும். உள்ளங்கால், கால் தசைகளை நன்றாக பிடித்து விடவேண்டும். நீரிழிவு நோயாளிகள் கால் மற்றும் பாதங்கள், விரல்களின் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நகங்களை ஒழுங்காக வெட்டவேண்டும். வெளியே போகும் போது காலணி போட்டுத்தான் செல்ல வேண்டும்.

    சித்த மருத்துவ   நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் உணவுமுறை உள்ளது.
    • நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் உடலை உருக்கி விடும்.

    நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தேவையை விட அதிகமாக இருப்பது ஆகும். மிகவும் தாகமாக உணர்வது, வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல், மிகவும் சோர்வாக உணர்வது, உடல் எடை குறைதல், கால்கள் மரத்துப்போதல், வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுதல், கண் பார்வை மங்குதல், புண்கள் ஏற்பட்டால் எளிதில் குணமடையாத நிலை, தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாத நிலை போன்றவை நீரிழிவு நோயில் காணப்படும் பொதுவான அறிகுறிகள். இது நபருக்கு நபர் வேறுபடும்.

    சித்த மருத்துவத்தில் நீரிழிவு, இனிப்பு நீர், மதுமேகம் என்றழைக்கப்படுகிறது, நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் ஏழு உடல் தாதுக்களையும் பாதித்து உடலை உருக்கி விடும். ஆங்கில மருத்துவமுறையில் டைப் 1, டைப் 2 என்று நீரிழிவு நோய்கள் இரண்டுவிதமாக அழைக்கப்படுகின்றன. இது தவிர கர்ப்ப காலத்தில் வரும் ஜெஸ்டேசனல் நீரிழிவு, சிறு குழந்தைகளுக்கு வரும் ஜுவைனல் நீரிழிவு நோய்களும் உண்டு.

    நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், வந்தால் அதை குணப்படுத்தவும் உதவும் உணவு வகைள் பற்றி காண்போம்:

    1) நார்ச்சத்து அதிகமுள்ள வாழைப்பூ, வாழைத்தண்டு, அவரை, பீன்ஸ், நூல்கோல், நெல்லிக்காய், வெந்தயம், வெண்டைக்காய், பாகற்காய், கோவைக்காய், புடலங்காய், சுரைக்காய், கீரைகளை சேர்க்க வேண்டும். மாவுச்சத்து, இனிப்பு சேர்ந்த உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும்.

    2) நெல்லிக்காய், கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து அதன் சாறு 30 மிலி வீதம் தினமும் குடிக்கலாம். இது உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரும்.

    3) வெந்தயம், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் எடுத்து வறுத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும், தினமும் இரவு 1 டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும், ரத்த சர்க்கரையின் அளவு, தேவையில்லாத கொழுப்பைக்குறைக்கும்.

    இதுதவிர தினமும் சைக்கிள், நடைப்பயிற்சி, நீச்சல், இறகுப்பந்து என ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தம், மனக்கவலை இல்லாமல் வாழப்பழக வேண்டும்.

    • மஞ்சள் காமாலை பிரச்சனைக்கு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது
    • குடற்புழு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும்.

    'அதலைக்காய்' என்ற பெயரை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சித்த மருத்துவர்களுக்கும், ஒரு சில விவசாயிகளுக்குமே பரிச்சயமான ஒரு சொல் 'அதலைக்காய்'. இது பாகற்காயின் குடும்பத்தைச் சேர்ந்தது. அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் தன்மை உடையது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. இந்தக் காயில், துத்தநாகம், வைட்டமின்சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது.

    நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

    மஞ்சள்காமாலை பிரச்சனை உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும் அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

    குடற்புழு பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள சத்துக்கள் நமது வயிற்று பிரச்சனையை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது வயிற்றில் காணப்படும் கிருமிகளை அளிப்பதோடு, குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

    இந்த காயை வாங்கிச் சென்று சமைக்க ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற காய்கறிகளைப்போல இதை நீண்ட நாட்கள் வைத்துச் சமைக்க முடியாது. நீண்ட நாட்கள் வைத்திருந்தால் தானாக முளைக்க ஆரம்பித்துவிடும். இதனால் காயின் தன்மையும், சுவையும் மாறிவிடும். காய்கறி வகைகளில் அதலைக்காய் சற்று வித்தியாசமானது. அதலைக்காய் கசப்பு தன்மை கொண்டதாக இருந்தாலும் உண்பதுக்கு ஏற்ற சுவை இருக்கும். 

    கார்த்திகை மற்றும் மார்கழி மாதப் பருவத்தில் மட்டும் விளையும் காய் என்பதால், இதை வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துகிறார்கள்.

    பாகற்காயைப் எப்படி பொரியல் மற்றும் குழம்பு வைத்து சாப்பிடுகிறோமோ, அப்படி இந்தக் காயை சாப்பிட வேண்டும்.

    • சர்க்கரை நோயில் ஒன்று இன்சுலின் பற்றாகுறை.
    • மற்றொன்று இன்சுலின் செயல்படா தன்மை.

    கோவை புதுசித்தாப்புதூரில் ஜீ.ஆர்.என். டயாபடிக் சென்டரின் டாக்டர்.S.கோகுலரமணன் கூறியதாவது:-

    கோவை ஜீ.ஆர்.என். டயாபடிக் சென்டர் இன்று வலைத்தளங்களில் (online) மிகவும் அதிகமாக காணப்படும் விளம்பரம். Diabetic is reversible? சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோய் இல்லாதவர்களாக மாற முடியுமா? இது சாத்தியமா?

    அனைத்து சர்க்கரை நோயாளிகளும் இது சாத்தியம் அல்ல. 5 முதல் 10 சதவீதம் நோயாளிகளுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். மேலும் 10 சதவீதம் நோயின் தன்மையை குறைக்க முடியும். மருந்துகளுக்கான தேவையை குறைக்க முடியும்.

    சர்க்கரை நோயில் ஒன்று இன்சுலின் பற்றாகுறை. மற்றொன்று இன்சுலின் செயல்படா தன்மை. இதில் 2-வது இன்சுலின் செயல்படாத தன்மை இருப்பவர்களுக்கு உடல்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, நேரம் தவறாமை உணவு உட்கொள்ளுதல் மூலம் சர்க்கரை நோய் பாதிப்பை மிகவும் குறைக்க முடியும். கண்மூடித்தனமாக தாங்கள் எடுத்து கொள்ளும் மருந்து, இன்சுலினை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் நிறுத்தக் கூடாது.

    அன்மைக்காலத்தில் நிறைய சர்க்கரை நோயாளிகள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை நிறுத்திவிட்டு, பிற மருத்துவமுறைகளை செய்து சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவில் சேர்க்க வேண்டிய கட்டாயமாகிறது. சர்க்கரை மருந்து, மாத்திரைகளை வேற எந்த மருந்துகளுடனும் எடுத்து கொள்ளலாம்.

    மேலும் சந்தேகங்களுக்கு 90876 44003, 0422-2522138 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜீ.ஆர்.என். டயாபடிக் சென்டர் டாக்டர் S.கோகுலரமணன் பேட்டி

    • நீரிழிவு நோய் என்பதைவிட இதை குறைபாடு என்று அழைக்கின்றனர்.
    • இந்த நோய் எப்படி வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

    நீரிழிவு நோய் தற்போது நாளுக்கு நாள் வயது வித்தியாசம் இல்லாமல் அதிகப்படியான மக்களை பாதித்து வருகிறது. நம்முடைய அவசர வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை இருப்பதை குறிக்கிறது. எனவேதான் இதை சர்க்கரை வியாதி என்றும் பாமர மக்கள் அழைக்கின்றனர்.

    நீரிழிவு என்பது கூட இந்த நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் என்பதன் அடிப்படையில் வந்த பெயர்தான். இந்த நோய் எப்படி வருகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

    நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்கு சக்தியாக மாறுவதற்கு இன்சுலின் மிக முக்கியம் இந்த இன்சுலின் திரவத்தை நம் உடல் உறுப்பாகிய கணையம் சுரக்கின்றது.

    குறிப்பாக கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இந்த இன்சுலினை சுரப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. ஒருவர் உடலில் அவருக்கு உண்ணும் உணவு மற்றும் தினப்படி உடல் இயக்கத்திற்கு ஏற்ப இன்சுலின் சுரப்பு சரியாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. மாறாக இன்சுலின் போதுமான அளவுக்கு சுரக்கவில்லை என்றாலோ அல்லது இன்சுலின் போதுமான தரத்தில் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு கூடுகிறது.

    இதை சரியாக கண்டுபிடித்து சிகிச்சை ஆரம்ப கட்டத்திலேயே துவங்க வேண்டும். இல்லையென்றால் பல வகையான உடல் பிரச்சினைகளுக்கு இது காரணம் ஆகிவிடும். ஆரம்பக் கட்ட நீரிழிவு நோய் உள்ளவர்கள் தேவையான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கும்போது எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சற்று தீவிர நீரிழிவு நோய்க்கு ஆளானவருக்கு இன்சுலின் ஊசிகள் தேவைப்படலாம் இதன் அளவு அவரவர்களின் நோய் தீவிரத்தை பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருவகையில் நீரிழிவு நோய் என்பதைவிட இதை குறைபாடு என்று அழைக்கின்றனர். காரணம் ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்து விட்டால் அவர் தன் உடல் நிலையை சரியான மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொண்டு தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவ்வப்போது நோயின் தீவிரம் ஏற்ற இறக்கம் பற்றிய பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை தொடரும்போது அவர்களுக்கு வேறு எந்த வகையான மோசமான நோய்களும் வராமல் முன்கூட்டியே தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் அம்மா அப்பா குடும்ப நபர்கள் யாரேனும் நீரிழிவு இருந்தால் நமக்கும் கட்டாயம் வரும் என்று மனதளவில் நாமாகவே அந்த நோயை எதிர்பார்ப்பதை தவிருங்கள்.

    • உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சாப்பிடக்கூடாது.
    • நட்ஸ் வகைகளுள் பிஸ்தா சிறந்தது.

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்வதற்கு ஏற்ற நட்ஸ் வகைகளுள் பிஸ்தா சிறந்தது. அவற்றுள் ஆரோக்கியமான கொழுப்பும், புரதமும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    முக்கியமாக பிஸ்தாவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. பசி உணர்வை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் சோர்வின்றி உணர வைக்கும். அதனால் பிஸ்தா, நீரிழிவு நோய்க்கு ஏற்ற நட்ஸ் வகையாக கருதப்படுகிறது.

    அதே வேளையில் அதனை சரியான அளவில் உட்கொண்டால்தான் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். அதன் கிளை செமிக் குறியீடு 15-க்குள் இருக்க வேண்டும். 50 கிராம் வரை தினமும் பிஸ்தா உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சாப்பிடக்கூடாது. நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் பிஸ்தா சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

    ×