search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல்"

    • ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.
    • பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் கமல்ஹாசன் உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெறுமா என்பது மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளோடு தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.

    இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாக கருதப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை இதுவரை தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு யாரும் அழைக்கவில்லை.

    இது தொடர்பாக தி.மு.க. முன்னணி தலைவர்கள் கூறும்போது, 'கமல்ஹாசன் கூட்டணியில் இருக்கிறாரா என்பது எங்களுக்கு தெரியாது. அது பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்து இருந்தனர். இதன் மூலம் கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளாரா? என்கிற கேள்வி வலுப்பெற்றது.

    இந்த நிலையில் அமெரிக்கா சென்றிருந்த கமல்ஹாசன் தனது 19 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அவரிடம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அமெரிக்காவில் இருந்து செய்தியோடு நான் வரவில்லை.


    இனி தான் செய்தியை உருவாக்க வேண்டும். இரண்டு நாட்களில் உங்களை சந்திக்கிறேன். அப்போது அனைத்து விஷயங்களுக்கும் பதில் அளிக்கிறேன். நல்ல செய்தியை தருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இதன் மூலம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படாமலேயே உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி 7-ம் ஆண்டு தொடக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது இதுவரையில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. கூட்டணியில் இருந்து அழைப்பு வராதது பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கமல்ஹாசன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்துவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். எனவே வரும் நாட்களில் அது போன்ற சந்திப்பு நடந்து தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இடம் பெறுவது உறுதி செய்யப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


    இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.வினர் கூறும் போது கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கு இடங்களை பகிர்ந்து கொடுப்பதிலேயே பெரிய சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக சேர உள்ள கமல்ஹாசன் கட்சிக்கு எப்படி இடங்களைபகிர்ந்து கொடுப்பது என்பது பெரிய பிரச்சினையாகவே உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியை பொறுத்த வரையில் காங்கிரஸ் கட்சியுடன் அதிக நெருக்கமாக அந்த கட்சி உள்ளது அந்த கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.

    எனவே காங்கிரசுக்கு நாங்கள் ஒதுக்கும் இடத்தில் கமல்ஹாசன் ஒன்றோ அல்லது இரண்டு இடங்களையோ கேட்டு பெற்று போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார். ஒருவேளை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் கிடைக்காத பட்சத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி பாராளுமன்ற தேர்தல் களத்தில் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் கமல்ஹாசன் உள்ளார். இந்த கேள்விகள் அனைத்துக்கும் நாளை நடைபெறும் கூட்டத்துக்கு பிறகு கமல்ஹாசன் விடை அளிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார்.
    • ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் எங்கு போட்டியிடுவார்கள் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.

    ஆனால் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. என்றாலும் உத்தரபிரதேசத்துக்கு செல்ல விரும்பாத அவர் வயநாடு தொகுதியில் போட்டியிடவே ஆர்வம் காட்டி உள்ளார்.

    சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார். ஆனால் இந்த தடவை அந்த தொகுதியில் போட்டியிட அவர் விரும்பவில்லை.

    அதற்கு பதில் அவர் பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக முடிவு செய்துள்ளார். ராஜஸ்தான் அல்லது இமாச்சல பிரதேசத்தில் இருந்து அவர் மேல்சபை எம்.பி.யாக தேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்த தொகுதி காங்கிரஸ் தலைவர்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.

    முன்னதாக பிரியங்கா தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. ராஜீவ்காந்தி உயிரிழந்த அந்த தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

    அவரை தமிழகத்துக்கு கொண்டுவர காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் ராகுல் காந்தி ஏற்கனவே கேரளாவில் போட்டியிடுவதால் பிரியங்காவும் தென் இந்தியாவுக்கு வர சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

    ராகுல், பிரியங்கா தென் இந்திய மாநிலங்களில் கவனம் செலுத்தும்பட்சத்தில் வட மாநிலங்களில் காங்கிரசுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரியங்கா ரேபரேலி தொகுதியில் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

    • சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது.
    • இந்தியா கூட்டணியிலும் ராஷ்டீரிய லோக்தள் கட்சி இடம் பெற்று இருந்தது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் ஜெயந்த் சவுத்ரி தலைமையில் ராஷ்டீரிய லோக்தள் (ஆர்எல்டி) கட்சி இயங்கி வருகிறது.

    மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரனான ஜெயந்த் சவுத்ரிக்கு உத்தரபிரதேசத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் ஜாட்யின மக்களின் ஆதரவு உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து ராஷ்டீரிய லோக்தள் கட்சி செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணியிலும் ராஷ்டீரிய லோக்தள் கட்சி இடம் பெற்று இருந்தது.


    சமீபத்தில் சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு ஜெயந்த் சவுத்ரி நன்றி தெரிவித்தார். இதையடுத்து அவரது ராஷ்டீரிய லோக்தள் கட்சி அணிமாறும் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜெயந்த் சவுத்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் பா.ஜ.க. தலைமையிலான அணியில் சேர முடிவு செய்துள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் உள்ள 80 எம்.பி. தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஜெயந்த் சவுத்ரிக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. எனவே அந்த தொகுதிகளில் சிலவற்றை அவரது கட்சிக்கு பா.ஜ.க. ஒதுக்கும் என்று தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஷர்மிளா அமைச்சர் ரோஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
    • தந்தையின் பெயரை கெடுக்க ஷர்மிளா செயல்பட்டு வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ஷர்மிளா நகரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அப்போது ஷர்மிளா அமைச்சர் ரோஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும் ரோஜாவை ஊழல் ராணி என விமர்சித்தார்.

    இதையடுத்து மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸ் தெலுங்கு தேசம் ஜனசேனா கட்சிகள் ஒரே கிளையில் சாய்ந்து கொண்டு இருக்கின்றன.


    ஷர்மிளா கூறிய தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுவேன்.

    ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி மறைவிற்கு பிறகு முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அவரது பெயரை மக்களின் மனதில் நிலை நிறுத்த பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். தந்தையின் பெயரை கெடுக்க ஷர்மிளா செயல்பட்டு வருகிறார்.

    ஒய்.எஸ்.ஆர். மறைவிற்கு பிறகு ஜெகன்மோகன் ரெட்டியை 16 மாதங்கள் ஜெயிலில் அடைத்த காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கத்தினராக ஷர்மிளா உள்ளார் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஞ்சாப்பில் பா.ஜனதாவிடம் தனித்து போட்டியிடுகிறது.
    • 3 கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று கருதப்படுவார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 26 எதிர்க்கட்சிளை கொண்ட இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்த கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

    மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். அதை தொடர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கிய ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் அதில் இருந்து விலகி பா.ஜனதா அணிக்கு தாவினார்.


    இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளிலும், சண்டிகரில் உள்ள பாராளுமன்ற தொகுதி என 14 இடங்களிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என்றும் அடுத்த 10-15 நாட்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

    இதேபோல பாஜக - சிரோமணி அகாலிதளம் இடையே இன்று  நடைபெறும் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் பஞ்சாப்பில் பா.ஜனதாவும் தனித்து போட்டியிடும் வாய்ப்புள்ளது.

    இதனால் பஞ்சாப்பில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்று கருதப்படுவார்கள்.

    • சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க இன்னும் ஒரு நா‌ள் உள்ள நிலையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது.

    அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய தினம் உரை நிகழ்த்த உள்ளார். அவரது உரையின் தமிழாக்கத்தை சட்டசபை சபாநாயகர் அப்பாவு வாசிக்க உள்ளார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து சட்டசபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் திங்கட்கிழமை மதியம் நடைபெற உள்ளது.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீதான விவாதம் 3 நாட்கள் வரை நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனாலும், நாட்களை இறுதி செய்யும் பணியை அலுவல் ஆய்வு குழு மேற்கொள்ளும்.

    அதனைத் தொடர்ந்து, 19-ந்தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்வார்.


    மேலும் 20-ந்தேதி 2024-2025-ம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கையினையும், 21-ந்தேதி 2023-2024-ம் ஆண்டிற்கான முன் பணச் செலவின மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில் சட்டப் பேரவை மண்டபம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, ஒலிப் பெருக்கிகள் உள்ளிட்டவை முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் நுழைவாயிலில் உள்ளே செல்லும் வழி வெளியே வரும் வழி அறிந்துக்கொள்ள ஏதுவாக அறிவிப்பு பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தலைமைச் செயலகம் முழுவதுமாக சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, சட்டமன்ற உறுப்பினர்கள் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெறும் போது அரசு தயாரித்து வழங்கும் உரையை கவர்னர் முழுமையாக வாசிப்பாரா? அல்லது கடந்த ஆண்டை போல் சில வாசகங்களை தவிர்த்து விட்டு வாசிப்பாரா? என்பது அப்போது தான் தெரிய வரும்.


    கவர்னர் உரைக்கு பிறகு தொடர்ந்து நடைபெறும் சட்டசபையில் ஆளும் கட்சி-எதிர்கட்சி இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என தெரிகிறது. கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் விவரங்கள், அவர்களது கேள்விகள் போன்றவற்றைக்காண வைக்கப்பட்டுள்ள அகண்ட திரையின் அகலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காகிதம் இல்லாத சட்ட சபையின் அங்கமாக சட்டசபை மண்டபத்தில் ஒரு சில இடங்களில் அகண்ட திரைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    கேள்வி நேரத்தின்போது வினா எழுப்பும் உறுப்பினரின் பெயர், தொகுதி விவரங்கள், எழுப்பப்பட்ட வினா, அதற்கு பதிலளிக்கும் அமைச்சரின் பெயர், துறை விவரங்கள் அந்தத் திரையில் இடம் பெற்று வருகின்றன.

    இதற்காக வைக்கப்பட்டு உள்ள திரையின் அகலம் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக சட்டசபை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 50 அங்குலம் அளவில் இருந்த திரைகளின் அகலம் இப்போது கூடுதலாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் திரையில் காட்டப்படும் விவரங்களை எங்கிருந்தும் எளிதாக பார்க்க முடியும். இதே போன்று சட்டசபையின் மண்டபத்தின் தரைத் தளத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு சுழலும் வகையிலான நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன. அவையும் இந்த கூட்டத் தொடரில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

    சட்டசபை கூட்டத் தொடரில் சில முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை கூட்டத் தொடரை தொடங்கி வைக்கும் வகையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உரையைத் தவிர்த்து, சில பத்திகளை விடுத்தும், சில வரிகளை அவரே சேர்த்தும் வாசித்தார். இதற்கு தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    கவர்னர் படித்த உரை அவைக் குறிப்பில் இடம் பெறாது எனவும் அரசின் சார்பில் தயாரித்து சட்ட சபைக்கு அளிக்கப்பட்ட உரையே இடம் பெறும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எந்த கூட்டணியில் சேருவது என்கிற குழப்பமான நிலையில் தே.மு.தி.க. உள்ளது.
    • பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு அந்த கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிறகு கட்சியை வழிநடத்தி வரும் பிரேமலதா பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

    தே.மு.தி.க.வை பொறுத்த வரையில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது மிகப் பெரிய வெற்றியை அந்த கட்சி பெற்றிருந்தது.


    அதன்பிறகு நடைபெற்ற சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தலிலும் தே.மு.தி.க. தோல்வியையே தழுவியது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் இதுவரை வெற்றி பெறவே இல்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதனை மாற்றிக் காட்ட வேண்டும் என்பதே பிரேமலதாவின் எண்ணமாக உள்ளது.

    இதனால் வெற்றி பெறும் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் நிர்வாகிகளின் நோக்கமாக உள்ளது. தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்ப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தீவிர பேச்சு வார்த்தையை நடத்தி 4 தொகுதிகளை தருவதற்கு சம்மதித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அ.தி.மு.க.வும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

    இதனால் எந்த கூட்டணியில் சேருவது என்கிற குழப்பமான நிலையில் தே.மு.தி.க. உள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் கருத்துகளை கேட்பதற்கு முடிவு செய்த பிரேமலதா இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் கூட்டத்தை கூட்டி இருந்தார்.

    இந்த கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதில் பங்கேற்க வந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.


    அதன்பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவர் தலைமையில் நடைப்பெற்றது. மாநில நிர்வாகிகள் அவை தலைவர் டாக்டர் இளங்கோவன் துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் வி.சி.ஆனந்தன், அனகை முருகேசன், பால சுப்பிரமணியன், சூரியா, பாலா, வேல்முருகன், பழனி, ஆவடி மாநகர, மாவட்ட செயலாளர் சங்கர் உள்பட 82 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து பேசினார்கள்.

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியை விரும்புவதாக மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் மரணம் அடைந்துள்ள நிலையில் தனித்து போட்டியிடலாம் என்றும் சிலர் பேசியுள்ளனர். கட்சியினரின் கருத்துக்களை கேட்டுக் கொண்டு தீவிரமாக ஆலோசனை நடத்தி கட்சி நலன் கருதி முடிவெடுப்போம் என்று பிரேமலதா அவர்களிடம் தெரிவித்தார்.


    பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்று அவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

    பா.ஜனதா கூட்டணியில் கள்ளக்குறிச்சி, சேலம் உள்பட 4 பாராளுமன்ற தொகுதிகளை தருவதாகவும் மேல்சபை எம்.பி. பதவி ஒன்று தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க.வும் தே.மு.தி.கவை எப்படியாவது தங்கள் பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் சிலர் தே.மு.தி.க. தலைமையிடம் தொடர்ந்து ரகசியமாக பேசி வருகிறார்கள்.

    பா.ஜனதா கூட்டணியில் நீங்கள் கேட்கும் தொகுதிகளைவிட கூடுதல் தொகுதிகள் தருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் மேல் சபை எம்.பி. பதவியை தருவது பற்றியும் பேசிக் கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இப்படி தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க., பா.ஜ.க. இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில் இன்று நடை பெறும் கூட்டத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி முடிவு எடுக்கப்படுவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • திமு.க கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளை கேட்டு பெற்று விட வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க முடிவு செய்துள்ளது.

    இதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி ஏற்கனவே அடித்தளமும் அமைத்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரசாரமும் மேற் கொண்டார்.


    இதன்மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது உறுதியானது.

    இந்த நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு இதுவரை யாரும் அழைக்காமலேயே உள்ளனர்.

    இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த தி.மு.க. முன்னணி தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெற்றுள்ளதா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

    இது கமல் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி மக்கள் நீதி மய்யம் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது பற்றி வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறியிருந்தார். இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அதே நேரத்தில் வெளிநாட்டில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அடுத்த வாரமே சென்னை திரும்புகிறார். வருகிற 12 அல்லது 13-ந்தேதி அவர் சென்னை திரும்ப உள்ளார்.


    அதன் பிறகு தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என கமல் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் அந்த கட்சி நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர்.

    இது தொடர்பாக கமல்ஹாசன் பேச்சு நடத்தி உரிய முடிவை எடுப்பார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தென்சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியில் குறிவைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பம்பரமாக சுழன்று வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலகத்தை திறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து தொகுதிகளிலும் அந்த கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானதும் தேர்தல் பணிகளை மேலும் வேகப்படுத்தவும் கமல்ஹாசன் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

    • காங்கிரசை அட்டாக் பண்ணுவது போல் பேசிக் கொண்டிருக்கிறார்.
    • மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    சென்னை:

    சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- பாராளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தி இருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அது தொடர்பான நிகழ்வுகளை நீங்கள் பார்த்தீர்களா?


    பதில்:-பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். ஏனென்றால் பி.ஜே.பி.தான் எதிர்க்கட்சி மாதிரியும், காங்கிரஸ் ஆளும் கட்சி மாதிரியும், அவர் தொடர்ந்து பேசுகிறார். ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அவர் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டு ஆளுங்கட்சி போல் இருக்கக் கூடிய காங்கிரசை அட்டாக் பண்ணுவது போல் பேசிக் கொண்டிருக்கிறார். இது தான் புரியாத புதிராக இருக்கிறது.

    கேள்வி:- பிரதமர் மோடி பேசும்போது எம்.பி. தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று சொல்லி இருக்கிறாரே?

    பதில்:- மொத்தம் 400 தானா? 543 இடம் இருக்குது. அதையும் கைப்பற்றுவோம் என்று சொன்னால் ஆச்சரியம் இல்லை.


    கேள்வி:- நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளாரே? எப்படி பார்க்கிறீர்கள்? புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறாரே?

    பதில்:- மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தே.மு.தி.க.வும் விருப்ப பட்டியல் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • பிரேமலதாவுடன் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே அந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அவரது ஆதரவாளர்களும், டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சியும் இடம் பெற்று இருக்கின்றன.

    என்றாலும் பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகிய இரண்டும் இடம் பெறுமா? என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் ஓசையின்றி நடத்தி வருகிறார்கள். ஏ.சி.சண்முகம் போட்டியிடும் தொகுதியை உறுதி செய்து விட்டனர். அதுபோல ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தென் தமிழகத்தில் கொடுக்க வேண்டிய தொகுதிகளையும் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. சார்பில் 22 தொகுதிகள் கொண்ட ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல தே.மு.தி.க.வும் விருப்ப பட்டியல் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் மூலம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.


    விஜயகாந்த் மரணம் அடைந்தபோது அடுத்தடுத்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டியது பிரேமலதாவை நெகிழ்ச்சி அடையவைத்தது. மேலும் பத்ம விருது கொடுத்து விஜயகாந்தை கவுரவித்ததின் மூலம் மிகப்பெரிய அந்தஸ்தை பா.ஜ.க. தந்திருப்பதாக பிரேமலதா கருதினார்.

    இந்த நிலையில் பிரேமலதாவுடன் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைத்துக் கொள்ள பிரேமலதா ஒப்புக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

    தே.மு.தி.க. சார்பில் பா.ஜ.க.விடம் பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் தே.மு.தி.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் இடம் பெற்று உள்ளன. இது தொடர்பாக பிரேமலதாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது:-


    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்ற பட்டியலை பாரதிய ஜனதாவிடமும், அ.தி.மு.க.விடமும் கொடுக்கப்பட்டது. எந் தெந்த தொகுதிகளில் போட்டியிட தே.மு.தி.க. விரும்புகிறது என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது போல 4 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாராளுமன்ற மேல்-சபைக்கு ஒரு எம்.பி. இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா தரப்பில் இருந்து சாதகமான பதில் வந்து உள்ளது.


    இதையடுத்து தே.மு.தி.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (புதன் கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.

    கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் பிரேமலதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து முடிவுகளை வெளியிடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தே.மு.தி.க. தரப்பில் கள்ளக்குறிச்சி, மதுரை உள்பட 4 தொகுதிகள் கேட்கப்படுகிறது. இதில் பிரேமலதாவின் இளைய சகோதரர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சியில் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது.

    மதுரை தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் தே.மு.தி.க. வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தே.மு.தி.க. அளித்துள்ள வேண்டுகோள்கள் அனைத்தையும் பா.ஜ.க. நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளது.

    இதன் காரணமாக தே.மு.தி.க. நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    • அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் சின்னங்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் சொத்து.
    • ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் முடக்கியிருக்க முடியும்.

    சென்னை:

    அ.தி.மு.க. கட்சி சின்னம், கொடி அனைத்தும் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து உரிமையை மீட்போம் என்று கூறி வருகிறார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணியில் தான் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னமும் தங்களுக்கு கிடைக்கும் என்று கூறி உள்ளார். அதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி தராசு ஷியாமிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-


    அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் சின்னங்கள் என்பது தேர்தல் ஆணையத்தின் சொத்து. தற்காலிகமாக அதை பயன்படுத்தும் உரிமையை மட்டும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குகிறது. அதற்கும் சில விதிமுறைகளை வைத்துள்ளது.

    அ.தி.மு.க.வில் பிரச்சினைகள் எழுந்து எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் கோர்ட்டில் வழக்காடியதில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு இரட்டை இலை கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இருப்பது ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் மூல வழக்கை அடிப்படையாக வைத்து தெரிவித்து இருப்பார். ஆனால் அந்த வழக்கும் அவருக்கு சாதகமாக இருக்க வாய்ப்பில்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி இருக்கிறார். அந்த அப்போதைய சூழ்நிலை வேறு.


    அப்போதும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்த போது தேர்தல் ஆணையம் இரு தரப்பிடமும் கேட்டுத் தான் முடிவு செய்ய முடியும் என்று கூறியது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் முடக்கியிருக்க முடியும். ஆனால் அதை செய்யவில்லை. அதைதொடர்ந்து தற்காலிகமாக பயன்படுத்தும் உரிமை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கப்பட்டது.

    ஆனால் இப்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக வழங்கப்பட்டிருக்கிறது.

    இனி மூல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைத்து இடைக்கால தடை வாங்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதலாம். அப்படியானாலும் இருதரப்புக்கும் சாதகமாகவே இருக்கும். எனவே ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார்.
    • நடிகர் விஜய் பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.

    நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே, நடிகர் விஜய்யின் 68வது படமான GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இன்று நடிகர் விஜய் புதுச்சேரி ஏஎஃப்டி பஞ்சாலைக்கு வந்தார். விஜய் வந்ததை அறிந்து அங்கு ரசிகர்கள் குவிந்தனர்.

    நடிகர் விஜய் பெரிய வேன் மீது ஏறி, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். பிறகு ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்.

    ×