search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல்"

    • நாயுடுவுக்காக தனது கட்சிப் பணியாளர்கள் உட்பட அனைத்தையும் தியாகம் செய்து வருகிறார்.
    • "ஆந்திராவில், எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் தனித்து போட்டியிட முடியாது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:-

    நடிகர் பவன் கல்யாண் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மனைவியை மாற்றி வருகிறார். அவர் ஒரு கல்யாண ஸ்டார். அவரை போன்ற அரசியல்வாதியை எந்தப் பெண் குழந்தைகளின் பெற்றோராவது நம்ப முடியுமா? பவன் கல்யாண் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது முதல் மந்திரியாக அமர்ந்தால் சிறுமிகளின் எதிர்காலம் என்னவாகும்?

    "மிஸ்டர். பவன் கல்யாணுக்கு வாக்களிப்பது புத்திசாலித்தனமான முடிவு அல்ல பக்கத்து வீட்டுக்காரரான சந்திரபாபு நாயுடு ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியாக வருவதற்காக அரசியல் கட்சியை நிறுவிய ஒரே அரசியல்வாதி பவன் கல்யாண் மட்டுமே.


    நாயுடுவுக்காக தனது கட்சிப் பணியாளர்கள் உட்பட அனைத்தையும் தியாகம் செய்து வருகிறார். ஒரு பேக்கேஜ்'க்காக மட்டுமே அவர் தியாகம் செய்து வருகிறார்.

    "ஆந்திராவில், எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் தனித்து போட்டியிட முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நடிகர் பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முதல் மந்திரி விமர்சித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
    • இவர் திரைப்படங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்து பேசி வந்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் கடந்த 1990 முதலே அரசியலுக்கு வரவேண்டுமென சொல்லப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார்போல் திரைப்படங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்து பேசி வந்தார்.


    இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. கடந்த 2017-ல் 'ஆன்மிக அரசியல்' செய்வேன் என பேசியிருந்தார். பின்னர் 2021-ம் ஆண்டு அரசியலில் ஈடுபடும் திட்டம் இல்லை என சொல்லி ரஜினி மக்கள் மன்ற அமைப்பை கலைத்தார்.


    இந்நிலையில், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தனது கணவர் அரசியலுக்கு வராதது ஏன் என்பது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "அவர் அரசியலுக்கு வராதது வருத்தம்தான். ஏனெனில், அவரை நான் ஒரு தலைவராக பார்த்தேன். அவர் சிறந்த தலைவர். அதனால் அது வருத்தமே. இருந்தாலும் அதற்கான காரணமும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இருந்தது. அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும்" என கூறினார்.


    • குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, அங்கே பூகம்பம் ஏற்பட்டது.
    • புயல், வெள்ளம் ஏற்பட்டு கிராமங்கள் அடித்து செல்லப்பட்டது. இதைப்பற்றி கவனர் தமிழிசை பேசவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் வேட்பாளராக இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்மொழியப்பட்டார். அவர் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும், பிரதமர் வேட்பாளரை பின்னர் தேர்வு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

    எனவே யார் பிரதமர் என்ற சர்ச்சை இந்தியா கூட்டணியில் இல்லை.

    குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, அங்கே பூகம்பம் ஏற்பட்டது. பல ஆயிரம் மக்கள் இறந்தனர்.


    இது இயற்கை பேரிடர். இதை சீர் செய்ய மோடிக்கு 2 ஆண்டாகியது. புயல், வெள்ளம் ஏற்பட்டு கிராமங்கள் அடித்து செல்லப்பட்டது. இதைப்பற்றி கவனர் தமிழிசை பேசவில்லை.

    ஆனால் தென் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 96 செ.மீ மழை பெய்தது. இது இயற்கை பேரிடர். இதை சமாளிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

    தமிழக அரசு செய்யும் நல்லவற்றை கவர்னர் தமிழிசை பாராட்டுவதில்லை. கூட்டணி ஆட்சி நடந்தாலும், புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை முடக்கும் வேலையை பார்க்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றத்துக்கான அறிகுறியா என்பது தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
    • ஒவ்வொரு கட்சியும் தங்கள் எதிர் கருத்துகளை சொல்வார்கள்.

    வெள்ள நிவாரண பணிகளுக்கு செலவிட்ட ரூ.4 ஆயிரம் கோடி தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் வெள்ளை அறிக்கை வெளியிடலாம் என்று கூறி இருப்பது தான் பலரது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

    கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றத்துக்கான அறிகுறியா என்பது தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    தி.மு.க.-வி.சி.க. கூட்டணி எவ்வளவு வலுவாக இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த தி.மு.க.வின் அமைப்பு செயலாளார் ஆர்.எஸ். பாரதி, "வெள்ளை அறிக்கை அவசியம் என்றால் வெளியிடுவதில் தவறில்லை என திருமாவளவன் கூறியிருக்கிறார். ஒவ்வொரு கட்சியும் தங்கள் எதிர் கருத்துகளை சொல்வார்கள். எல்லோரும் ஒரே கட்சி இல்லையே. அவர்களுக்கென தனி கொள்கை இருக்கிறது. மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலை வி.சி.க.வுடன் இணைந்தே சந்தித்து உள்ளோம். எங்களின் கூட்டணி வலுவாக இருக்கிறது என்றார்.

    • அரசியலையும், ஊழலையும் பற்றி நாம் தான் அ.தி.மு.க.வை விட அதிகமாக பேசி வருகிறோம்.
    • மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.

    நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனக்கு நெருக்கமானவர்களிடம் யதார்த்தமான சில உண்மைகளையும் எடுத்து சொல்லி இருக்கிறார்.

    அதாவது தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் குடும்ப அரசியலையும், ஊழலையும் பற்றி நாம் தான் அதிகமாக பேசினோம். ஆனால் அதன் பலனை பலமான கட்டமைப்பு வைத்துள்ள காங்கிரஸ் அறுவடை செய்துவிட்டது. அதேபோல் தி.மு.க.வின் குடும்ப அரசியலையும், ஊழலையும் பற்றி நாம் தான் அ.தி.மு.க.வை விட அதிகமாக பேசி வருகிறோம். இங்கும் தி.மு.க.-வுக்கு கட்டமைப்பு பலமாக உள்ளது. எனவே அ.தி.மு.க. அறுவடை செய்துவிட கூடாது. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.

    • ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது.
    • எதிர்கால அரசியல் பயணம் பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றி இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே மாறி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களை தக்க வைக்கும் வகையில் அவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என பொறுப்புகளை வழங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பிறகும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தி வந்தனர்.

    ஆனால் இதற்கும் எடப்பாடி பழனிசாமி சட்ட நடவடிக்கைகள் மூலமாக முட்டுக்கட்டை போட்டார். இதனால் கடந்த சில நாட்களாகவே ஓ.பன்னீர்செல்வம் கட்சி கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தாமலேயே உள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. இது தொடர்பாக தெளிவான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

    பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார்.

    எழும்பூர் அசோகா ஓட்டலில் அன்று காலை 10 மணிக்கு தலைமைக்கழகம் மற்றும் மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதத்தில், "முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலோடு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தாமல் தலைமைக்கழகம் என்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னமோ, அ.தி.மு.க. கலரோ இல்லாமல் கூட்டத்துக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால அரசியல் பயணம் பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவையில் ஜனவரி மாதம் 6-ந்தேதி மண்டல மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநாட்டை குறிப்பிட்ட தேதியில் நடத்தலாமா? இல்லை ஜனவரி 11-ந்தேதி வெளியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு நடத்தலாமா? என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    இந்த மாத இறுதியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவு மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாகவும் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள் உள்பட 300 பேர் பங்கேற்க உள்ளனர்.

    இதன் பின்னர் வருகிற 20-ந்தேதி கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார். கீழ்ப்பாக்கம் தேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்தில் இந்த விழா நடக்கிறது.

    இதன்பிறகு ஓ.பி.எஸ். சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேசத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசவில்லை.
    • மோடியைப் பற்றி பேசினால் கூட அனுமதிக்கிறார்கள் அதானி பற்றி பேசினால் அனுமதிப்பதில்லை.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி வாக்கு சாவடி முகவர் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-

    காஷ்மீர் மாநிலத்தை 370-வது அரசியல் திருத்த நீக்கத்தை பற்றியும், அம்மாநிலத்தை மூன்றாகப் பிரித்தது பற்றியும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது மோடி ராஜினாமா செய்ய வேண்டிய செயல். ஆனால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அரியலூரில் ரெயில் கவிழ்ந்ததற்கு ரெயில்வே அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் இவ்வளவு பெரிய தாக்கத்தை தொடுத்தும் பாரதிய ஜனதா வாய் திறக்கவில்லை காரணம் அவர்கள் சர்வதிகாரிகள். எல்லா அமைப்புகளையும் அழித்து வருகிறார்கள். மம்தா பானர்ஜி கட்சியின் ஒரு எம்பியை நீக்கம் செய்திருக்கிறார்கள் காரணம் அதானி பற்றியும் அதானி கம்பெனியை பற்றியும் கேள்வி எழுப்பியது காரணம். அவர் ஒன்றும் தேச துரோக குற்றம் செய்யவில்லை. தேசத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசவில்லை. அதானியை பற்றி பேசினாலே பாராளுமன்றத்தில் இருந்து வெளியே அனுப்பி விடுவோம் என்ற நிலைக்கு மோடி சென்று இருக்கிறார். மோடியைப் பற்றி பேசினால் கூட அனுமதிக்கிறார்கள் அதானி பற்றி பேசினால் அனுமதிப்பதில்லை.


    மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை நாங்கள் பின்னடைவாக கருதவில்லை. பாரதிய ஜனதா கட்சியை விட காங்கிரஸ் அதிக வாக்குகள் வாங்கியுள்ளது. 40% அதிக அளவு வாங்கி இருக்கிறோம் வாக்கு எண்ணிக்கையிலும் எண்ணிக்கை அதிகம்.

    மக்கள் மனதில் ராகுல் காந்தி இருக்கிறார் காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. 2002ல் இதே போன்ற நிகழ்வு அந்த மூன்று மாநிலங்களிலும் நிகழ்ந்தது. அப்போது சத்தீஸ்கர். ராஜஸ்தான். மத்திய பிரதேசம். நடந்த தேர்தலில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களிலும் தோல்வி அடைந்தது. 2004 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை விட மூன்று மாநிலங்களில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றோம். பாராளுமன்றத்தை கைப்பற்றினோம்.

    தமிழகத்தை பொறுத்தவரை மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு சரியாக கையாண்டு உள்ளது. 17 மணி நேரம் புயல் சென்னை நகரத்திற்கு மேலே சுழன்று வந்திருக்கிறது. மேக வெடிப்பு போல வெடித்து மழை நீர் பொழிந்து இருக்கிறது எந்த ஒரு நிர்வாகத்தாலும் அவ்வளவு பெரிய தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியாது ஆனாலும் அரசாங்கம் நன்றாக செயல்பட்டு இருக்கிறது. அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை அவர்கள் தங்களால் இயன்ற காரியத்தை செய்திருக்கிறார்கள். விமர்சிப்பவர்கள் யார் என்று சொன்னால் அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பவர்கள் தான் இயற்கை பேரிடரை எந்த ஒரு நிர்வாகமும் உடனடியாக சரி செய்ய முடியாது இது மனித குற்றம் அல்ல இயற்கை செய்திருக்கின்ற பெரிய செயல்.

    எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மழை தண்ணீரை வெளியேற்றி இருக்கிறார்கள். 6000 ரூபாய் நிதி உதவி வழங்க இருப்பது பாராட்டுக்குரியது. மனிதாபிமான நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் செய்திருக்கிறார். அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பாராட்டுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வேளச்சேரி பகுதியில் மழை நீர் தேக்கம் அதிக அளவில் உள்ளது.
    • பகுதி மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழு பார்த்து வருகிறார்கள்.

    பேசும் வார்த்தை சரியாக இருந்தால் கூட இடம், பொருள் பார்த்து பேச வேண்டும். இல்லாவிட்டால் சரியாகவே பேசி இருந்தாலும் சிக்கலில் மாட்டிவிட நேரிடும். அப்படி தான் வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானாவும் சிக்கி இருக்கிறார். வேளச்சேரி பகுதியில் மழை நீர் தேக்கம் அதிக அளவில் உள்ளது.

    இந்த பகுதி மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழு பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில்தனது தொகுதி மக்களுக்காக மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த அசன் மவுலானா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சென்னையின் மொத்த தண்ணீரும் வேளச்சேரி பகுதி வழியாக தான் கடலுக்கு செல்ல வேண்டும். அதிக அளவில் தண்ணீர் வந்தது. ஆனால் கடல் உள்வாங்க வில்லை. இதனால் தான் இவ்வளவு தண்ணீர் தேங்கியது என்பதோடு அங்கு நடந்த ஒரு விபத்தை பற்றி குறிப்பிடும் போது இவ்வளவு பெரிய பேரிடர்கள் வரும்போது இப்படி பட்ட விபத்துக்களும் ஏற்படுவது சகஜம் தான் என்று சாதாரணமாக சொல்லி உள்ளார்.

    இது தான் இப்போது அவரை சிக்கலுக்குள் கொண்டு விட்டுள்ளது. சொந்த கட்சிக்காரர்களும், ஆத்திரப்பட்டது மட்டுமல்ல தி.மு.க.வினரே கோபம் அடைந்து உள்ளனர். இப்படியா பேசுவது? அவருக்கென்ன அடுத்த தேர்தலில் வேறு தொகுதிக்கு சென்று விடுவார். நமக்குத் தானே சிக்கல் என்று தி.மு.க. தரப்பும் கொந்தளிக்கிறது.

    • ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு அலுவலகம்.
    • அரசியல் களத்தில் வாய்ப்பு நன்றாக இருக்கிறது.

    வெள்ள நிவாரண பணிகள் ஒருபுறம் நடந்த நிலையில் அரசியலுக்கான வியூகத்தையும் பா.ஜனதா வகுத்தது. 39 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களையும் அழைத்து கமலாலயத்தில் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு அலுவலகம். அதேபோல் சட்டமன்ற தொகுதிகள் தோறும் ஒரு அலுவலகம்.

    இன்னும் ஒரு மாதத்திற்குள் திறக்க வேண்டும். இந்த அலுவலகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். வருகிற 20-ந் தேதி முதல் அடுத்த மாதம் 20-ந் தேதிக்குள் எவ்வளவு உறுப்பினர்கள் புதிதாக சேர்க்க முடியுமோ அவ்வளவு பேரையும் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் தொழில் அதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் என்று கட்சி சாராமல் இருக்கும் அனைத்து பிரபலங்களையும் சந்தித்து அவர்களுடைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அரசியல் களத்தில் வாய்ப்பு நன்றாக இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்வது களத்தில் பணியாற்றும் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது. தெலுங்கானாவில் பூத் கமிட்டிகள் சரியில்லாததால் பா.ஜனதாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனது அப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கும் வந்துவிடக்கூடாது. கூட்டணியைப் பற்றி யோசிக்க வேண்டாம். அதை கட்சி தலைமை முடிவு செய்யும்.

    தனித்து நின்றும் சாதிக்கும் அளவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியை வலிமைப்படுத்துங்கள். குறிப்பாக மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வது மட்டுமல்லாமல் தகுதியானவர்களுக்கு திட்ட பலன்கள் கிடைப்பதற்கு உதவி செய்யுங்கள். இந்த அடிப்படை பணிகளே நமது வெற்றிக்கும் அடித்தளம் ஆகும் என்றார்.

    • 2015 சென்னை பெரு வெள்ளத்தின் போது ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
    • கோவை தெற்கு தொகுதியில் கமலை தோற்கடித்தவர் வானதி என்பது குறிப்பிடத்தக்கது.

    மாற்றம் வரவேண்டும். மாற்றத்தை கொண்டு வருவேன் என்ற கமலின் பேச்சில் ஏற்பட்ட மாற்றம் தான் இப்போது அரசியல் களத்தில் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. 2015 சென்னை பெரு வெள்ளத்தின் போது ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

    ஆனால் இப்போது சென்னை தண்ணீரில் தத்தளிக்கும் போது அரசை விமர்சிக்கும் நேரமல்ல என்றும் இயற்கை பேரிடரில் மக்கள் தான் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்த கருத்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

    இது பற்றி பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியதாவது:-

    மாற்றத்தை கொண்டு வருகிறேன் என்று கட்சி தொடங்கியவர். பாவம் இப்போதும் ஏமாற்றம் வந்துவிட கூடாதே. எப்படியாவது ஒற்றை சீட்டாவது வேண்டுமே என்பதற்காக தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார். வேறென்ன சொல்ல? என்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமலை தோற்கடித்தவர் வானதி என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமலாக்கத்துறை குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிய வேண்டும்.
    • பா.ஜனதா அரசு நடத்தி வரும் மிரட்டல் அரசியல் கடும் கண்டனத்துக்குரியது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மிகத் திறமையாகச் செயல்பட்டு, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை பிடித்தது பாராட்டுக்குரியதாகும்.

    பா.ஜனதா அரசு, தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத் துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரியின் கைது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

    மாநில அரசின் அனுமதி இன்றி இந்த அமலாக்க துறையை தலைமை செயலகத்துக்குள் ஏவி விட்டு தி.மு.க. அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்த பா.ஜனதா அரசு முனைந்தது.

    தற்போது மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு உள்ளே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை நுழைந்து சோதனை நடத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.

    மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலங்களிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்.


    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 30-ந் தேதி, 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர்.

    அப்போது ஏலச்சீட்டு மோசடி விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யாமல் இருக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் ரூ. 15 லட்சம்தான் கொடுக்க முடியும் என்று குற்றவாளி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் பணத்தை வாங்கிய போது அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேரையும் கையும் களவுமாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் கைது செய்த நிகழ்வு நடைபெற்றிருந்தது.

    தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பிடிபட்டதன் மூலம் ஒன்றிய பா.ஜனதா அரசின் அரசியல் கருவியான அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து விட்டது.

    அமலாக்கத்துறை குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிய வேண்டும்.

    அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜனதா அரசு நடத்தி வரும் மிரட்டல் அரசியல் கடும் கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு ஆகியவை பற்றி விவாதித்து இருக்கிறார்கள்.
    • கட்சியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்சி பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஒவ்வொரு மாநில தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் இன்று கார்கேவை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு ஆகியவை பற்றி விவாதித்து இருக்கிறார்கள். கட்சியில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்சி பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.


    நேற்று மாலையில் கார்கேவின் 50 ஆண்டுகால தேர்தல் அரசியல் பற்றிய புத்தகத்தை சோனியா காந்தி வெளியிட்டார். அந்த புத்தக பிரதிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சிறுபான்மை துறை தலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்டோருக்கு கார்கே வழங்கியுள்ளார். இதற்கிடையில் முன்னாள் மத்திய மந்திரி பா.சிதம்பரமும் கார்கேவை தனியாக சந்தித்து பேசி உள்ளார்.

    ×