search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்ப அலை"

    • தற்போதைய கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது.
    • டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலப்பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு மாநிலத்தில் நிலவும் கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து பள்ளி மாணவச் செல்வங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போதைய கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது.

    வெயிலால் சில நேரம் வெப்பமும், சில நேரம் கடும் வெப்பமும் பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதிக்கிறது.

    எனவே வெயில் காலமான இப்பொழுது மாநிலத்தின் பலப்பகுதிகளில் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். நிலவும் கடுமையான வெப்பத்தால் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் அவர்களது பணிகளில் சரிவர ஈடுபட முடியவில்லை. அது மட்டுமல்ல குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில் தடை ஏற்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    மேலும் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலவும் அதிக வெப்ப நிலையால் மாணவர்கள், மாணவிகள், பெண்கள், முதியோர் மயங்கி விழுந்ததும், சில இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதும் வருத்தத்துக்குரியது.

    குறிப்பாக டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலப்பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய சூழலில் வெளி மாநிலங்களில் வெப்ப நிலை சுமார் 50 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு பள்ளிச்செல்லும் பிள்ளைகளின் ஆரோக்கியத்தையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் கவனத்தில் கொண்டு ஜூன் 6-ந்தேதி பள்ளிகளில் வகுப்புகளை தொடங்குவதற்கு பதிலாக ஒருவார காலம் தள்ளி வகுப்புகளை தொடங்க ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஏ.சி. யூனிட்டிற்கான ஸ்டெபிலைசர் இல்லாததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • வீடியோ வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் வெப்ப அலை தொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    வட இந்தியாவில் பல மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. டெல்லியில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவில் 126 டிகிரி வெயில் கொளுத்தியது. இதே போல ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் வெப்ப அலையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

    இந்நிலையில் கடும் வெப்ப அலை காரணமாக பஞ்சாபில் ஒரு கட்டிடத்தின் வெளிப்புற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி.யூனிட் தீப்பற்றி எரியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏ.சி. யூனிட்டிற்கான ஸ்டெபிலைசர் இல்லாததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    எனினும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் வெப்ப அலை தொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் வாலிபர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டு இருந்தார்.
    • வாலிபரின் உடல் நிலையில் 107 டிகிரி காய்ச்சல் இருந்தது.

    புதுடெல்லி:

    டெல்லியில் வரலாறு காணாத வகையில் 126 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் வெப்ப அலைக்கு பீகாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார்.

    டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு அவர் இறந்தார்.

    அவர் உடல் நிலையில் 107 டிகிரி காய்ச்சல் இருந்தது. இந்த கோடையில் டெல்லியில் வெப்ப தாக்குதலுக்கு பலியான முதல் நபர் ஆவார்.

    • பீகாரில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது.
    • வெப்பம் அதிகரித்ததால் மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.

    பாட்னா:

    இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது.

    டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது. அதனால் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பீகாரின் செய்க்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்துவந்த மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு தண்ணீர் வழங்கி முதலுதவி வழங்கி, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில், வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்ட முதல் மந்திரி நிதிஷ் குமார், வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டார்.

    • ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும்.
    • வடமேற்கு இந்தியா முழுவதும் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது.

    நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ள நிலையில், வட இந்திய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும் என்றும், அரியானா-சண்டிகர்-டெல்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாநிலங்களின் பல மாவட்டங்களில் அதிகபட்ச பகல்நேர வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ்-ஐ மீறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இதுகுறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய ஆய்வாளர் நரேஷ் குமார், "வடமேற்கு இந்தியா முழுவதும் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. மேலும், கடந்த 2-3 நாட்களாக இப்பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

    மாநில வாரியான முன்னறிவிப்பு தொடர்பாக, அடுத்த ஐந்து நாட்களுக்கு ராஜஸ்தானில் ரெட் அலர்ட் விடுத்துள்ளோம். அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸிலிருந்து மேலும் அதிகரித்து 47 டிகிரி செல்சியஸில் நிலைபெற வாய்ப்புள்ளது.

    பஞ்சாப் மற்றும் அரியானாவில், நிலவும் மேற்கத்திய இடையூறு காரணமாக அதிகபட்ச வெப்பநிலை ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் அவை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் நாங்கள் ஏற்கனவே 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளோம். அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில், அடுத்த ஐந்து நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மத்தியப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளோம்.

    எவ்வாறாயினும், கோடை வெயிலின் கீழ் வடக்கில் சுட்டெரிக்கும் போது, தெற்கில் ஒரு அளவு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்" என்றார்.

    தேசிய தலைநகர் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், அவசியமின்றி மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கவனமாக இருக்கவும், அது அவர்களின் உடல்நலம் குறைவதற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 7291 ஏக்கர் அந்த வகையில் நடப்பு ஆண்டில் 7,291 ஏக்கர் நிலப்பரப்பில் 9 ஆயிரம் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்தனர்.
    • மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தை பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் விரும்புகிறார்கள்.

    கரூர்:

    தமிழகத்தில் முருங்கை சாகுபடியில் கரூர் மாவட்டம் புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள பருவநிலை மற்றும் மண்ணின் தன்மை முருங்கைக்கு உகந்ததாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முருங்கைக்காய் ருசியாகவும், சதை பிடிப்பு அதிகமாகவும் இருக்கும்.

    இந்த முருங்கைக்காய்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்கு அரவக்குறிச்சி, மூலனூர், சின்னதாராபுரம், பள்ளப்பட்டி, க. பரமத்தி ஆகிய பகுதிகளில் அதிகம் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 6 மாதங்கள் முருங்கைக்காய்கள் அறுவடை செய்ய இயலும் என்பதால் விவசாயிகளும் முருங்கை சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    7291 ஏக்கர் அந்த வகையில் நடப்பு ஆண்டில் 7,291 ஏக்கர் நிலப்பரப்பில் 9 ஆயிரம் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்தனர். வறட்சியை தாங்கும் பயிராக கருதப்படும் முருங்கைக்காய் கூட கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்யாததாலும், வரலாறு காணாத வெப்பத்தாலும் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

    இதுபற்றி அரவக்குறிச்சி ஈசநத்தம் பகுதியைச் சேர்ந்த முருங்கை விவசாயி செல்வராஜ் கூறும்போது, நான் 2 ஏக்கர் நிலத்தில் முருங்கை பயிரிட்டேன். வழக்கமாக மார்ச் முதல் ஜூன் வரையிலும் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலும் நல்ல மகசூல் கிடைக்கும். ஆனால் இந்த முறை மழை இல்லாத காரணத்தினால் விளைச்சல் 70 சதவீதம் சரிந்து விட்டது. ஒரு சில மரங்கள் ஓரளவு மகசூல் கொடுத்தாலும் தரம் குறைந்து விட்டதால் விலை கிடைக்கவில்லை என்றார்.

    கரூர் லிங்கம நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியன் கூறும்போது, அமராவதி மற்றும் குடகனாறு தண்ணீரை நம்பி நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் இந்த இரண்டு ஆறுகளும் இந்த ஆண்டு வறண்டு விட்டன.

    எனவே நிலத்தடி நீரை பயன்படுத்தி பயிர்களுக்கு நீர் பாசனம் செய்து முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் மரங்களை பாதுகாக்க முடியவில்லை. இந்த முறை எல்லா மரங்களும் பலன் தரவில்லை. பொதுவாக நல்ல மகசூல் காலத்தில் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை டன் முருங்கை கிடைக்கும். ஆனால் தற்போது கோடை வெப்பத்தால் 60 சதவீத இழப்பை சந்தித்துள்ளோம்.

    ஒரு பருவத்தில் ஒரு மரத்திலிருந்து 300 முதல் 400 வரை முருங்கைக்காய் கிடைக்கும். சுவை மற்றும் சதைப்பற்று அடிப்படையில் விலை கிடைக்கும். ஆனால் இப்போது சதைப் பற்று சுருங்கி விட்டது. இதனால் விலையும் குறைந்து விட்டது. மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தை பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் விரும்புகிறார்கள்.

    இதனால் வேலை ஆட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே போன்று மயில் மற்றும் பூச்சிகளின் தாக்கமும் அதிகம் உள்ளது. வெப்ப காலங்களைத் தவிர விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதற்கு இவையும் ஒரு காரணமாக உள்ளது என்றார்.

    அரவக்குறிச்சி மொத்த முருங்கை விற்பனை வியாபாரி கே.ஆர்.கே.குப்புசாமி கூறும்போது, இந்த ஆண்டு விளைச்சல் குறைந்ததால் சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து மிகவும் மோசமாக உள்ளது. அரவக்குறிச்சியில் இருந்து கேரளா, சத்தீஸ்கர், ஐதராபாத், பெங்களூரு போன்ற இடங்களுக்கு இந்த சீசனில் மார்ச் முதல் ஜூன் வரை நாங்கள் முருங்கைக்காய் கொண்டு செல்வோம். இருப்பினும் குறைந்த அளவு கிடைப்பதால் எங்களால் வணிகத்தை வழக்கம்போல் நடத்த முடியவில்லை.

    பொதுவாக சந்தைகளுக்கு ஒரு நாள் 300 டன் முருங்கை வரும். ஆனால் இந்த ஆண்டு 150 முதல் 200 டன்னாக குறைந்துள்ளது என்றார்.

    வேளாண் வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் துறையின் அதிகாரி ஆர்.கண்ணன் கூறும்போது, பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்ப ட்டுள்ளது. அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இப்போது ரூ. 4 கோடி செலவில் முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    கிட்டத்தட்ட இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மகசூல் அதிகமாகும்போது பச்சை முருங்கைக்காய்க்கு குறைந்த விலை கிடைப்பதால், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக உற்பத்தி செய்வதற்கான விருப்பங்களை ஆராய விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால், பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது.
    • நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு சென்னை தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குனர் நேற்று அறிவுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில் தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால், பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்தவகையில் நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கும்படி, இணை இயக்குனர்களுக்கு, தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    • கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.
    • வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எவ்வகையான பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்பப் பகுதிகளில் மார்ச்சு முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-5° C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது தலைமையிலும். கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் தலைமையிலும் பல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், எதிர்வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40° C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால் பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.

    வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள். சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குறைவான வருமானம் கொண்டவர்களும் ஏசி வாங்கும் சூழல் உருவாகி உள்ளது.
    • தற்போது 500 முதல் 2000 வரை ஏசி எந்திரங்கள் விற்பனையாகி உள்ளது.

    கோவை:

    தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதமான தட்ப வெப்பநிலை நிலவும் கோவை மாவட்டத்தின் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.

    பகல் நேரங்களிலும் வெப்ப அலை வீசுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கோடை வெயில் காரணமாக புழுக்கம் அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் மக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதனால் ஏர் கண்டிஷன் வாங்குவோரின் எண்ணிக்கையும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதே வேளையில் ஏர் கூலர்கள் டவர் பேன்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    இது தொடர்பாக ஏசி, ஏர் கூலர்கள் விற்பனை செய்யும் கடையினர் கூறியதாவது:-

    கோடை வெயில் காரணமாக கோவையில் ஏசி விற்பனை அதிகரித்துள்ளது. ஏசி எந்திரங்களை நடுத்தர மக்கள் வாங்கி வந்த நிலை மாறி குறைவான வருமானம் கொண்டவர்களும் ஏசி வாங்கும் சூழல் உருவாகி உள்ளது.

    1 டன் ஏசி ரூ.30 ஆயிரம் முதல் கிடைக்கி றது. தவணை முறையில் கடனை திருப்பி செலுத்தும் வசதி இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ஏசி வாங்குவது உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டில் மாதம் 800 முதல் 1300 ஏசி எந்தி ரங்கள் விற்பனையாகி வந்தன. தற்போது நடப்பாண்டில் 1500 முதல் 2000 வரை ஏசி எந்திரங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த பிப்ரவரி முதல் ஏசி விற்பனை 3 மடங்காக அதிகரித்துள்ளது.

    ஏசி எந்திரங்களின் தேவை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. இதனால் ஏசி எந்திரங்களின் இருப்பு குறைந்து விற்பனையும் பாதித்துள்ளது. மேலும் ஏசி எந்திரங்கள் நிறுவ 7 நாட்கள் ஆகின்றன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஏசி டெக்னீசியன்கள் கூறும்போது வெளியில் இருக்கும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப ஏசி அளவை வைக்க வேண்டும். 25 டிகிரி செல்சியஸ் வைப்பது தான் சிறந்தது. அறைக்கு தேவையான குளிர்ச்சியை தருகிறது. மின் சேமிப்பையும் உறுதி செய்கிறது என்றனர்.

    • வெயிலின் தாக்கத்தாலும், வெப்ப அலை வீசுவதாலும் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
    • சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சே ர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காட்டில் இன்று காலை முதலே குவிந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து 48 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது நிலையில் நேற்று 105 .5 டிகிரி வெயில் பதிவானது.

    வெயிலின் தாக்கத்தாலும், வெப்ப அலை வீசுவதாலும் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வந்தனர். அதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

    இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. பல மாதங்களுக்கு பிறகு பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    குறிப்பாக இந்த மழை காடையாம்பட்டி, மேட்டூர், சேலம் மாநகர், ஆனைமடுவு , ஏற்காடு உள்பட பல பகுதிகளில் கன மழையாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் கொட்டியது. இந்த மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் கோடை காலத்தில் பெய்த இந்த மழை விவசாய பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சே ர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காட்டில் இன்று காலை முதலே குவிந்தனர்.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், தாதாகாப்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி என பெரும்பாலான பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையை தொடர்ந்து வீசிய குளிர்ந்த காற்றால் கடந்த சில மாதங்களாக கடும் உஷ்ணத்தில் தவித்த பொதுமக்கள் இன்று அதிகாலை நிம்மதியாக தூங்கினர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக காடையா ம்பட்டியில் 34 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மேட்டூர் 23.6, சேலம் 20.3, ஆனைமடுவு 17, ஓமலூர் 16, ஏற்காடு 13, சங்ககிரி 9, பெத்தநாயக்கன்பாளையம் 3.5, கரிய கோவில் 2, எடப்பாடி 1.4 மி.மீ. மழை என மொத்தம் 139.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • வங்காளதேச நாட்டின் தென்மேற்கு மாவட்டமான மகுரா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
    • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக வெப்பம் அலை வீசுவதால், மக்கள் வெளியில் நடமாட நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி கடுமையான வெப்ப அலை வீசுகிறது. கடந்து இரண்டு வாரங்களில் வெப்பம் தாங்க முடியாமல் 15 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 11 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வங்காளதேச நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள மகுரா மாவட்டத்தில்தான் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் வெப்பநிலை 43.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

    கடந்த சில வருடங்களாக இல்லாத வகையில் வங்காளதேசத்தின் பெரும்பாலான இடத்தில் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்ப அலை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், மதராஸ், தொழிநுட்ப கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்குள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

    சீரற்ற மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரும் ஆண்டுகளிலும் வங்காளதேசத்தில் அதிக வெப்ப அலை வீசும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    • வரும் 12ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
    • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை.

    வடதமிழக உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு ஆரெஞ்சு அலர்ட் விடுத்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 15 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான ஆரெஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 12ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருபத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

    நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதனால், இன்றும், நாளையும் ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×