search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரியாதை"

    • திருப்பூர் குமரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்குஅமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழிசெல்வராஜ் ஆகியோர்மாலை அணிவித்தனர்
    • திருப்பூர்குமரன் வாரிசுதாரர்களுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் குமரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் பிறந்நாளை முன்னிட்டு, திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

    இந்த விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    திருப்பூர் குமரன் சென்னிலையில் 4-10-1904-ல் நாச்சிமுத்து முதலியார், கருப்பாயி தம்பதியினருக்கு முதல் பிள்ளையாக பிறந்தார். இவரது இயற்பெயர் குமாரசாமி. குடும்ப சூழ்நிலை காரணமாக 5&ம் வகுப்பிலேயே தனது பள்ளி படிப்பை முடித்துக்கொண்டார். வறுமையின் காரணமாக மேற்கொண்டு பள்ளி படிப்பை தொடர முடியாத காரணத்தினால் தனது குடும்ப தொழிலான கைத்தறி நெசவு செய்து வந்தார். இவர் தனது 19-வது வயதில் ராமாயி என்ற பெண்ணை 1923-ம் ஆண்டு மணந்தார். கைத்தறி தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால் ஈரோடு சென்று, பஞ்சு மில்லில் எடை போடும் குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார். ஆரம்பம் முதலே காந்தியின் கொள்கையில் ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தியடிகள் அறிவித்த போராட்டங்களில் எல்லாம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மேலும், 4-1-1932-ல் காந்தியடிகளை ஆங்கிலேய அரசு கைது செய்தது.

    இந்த செய்தி காட்டு தீ போல் பரவியது. காங்கிரஸ் தொண்டர்கள் கொதிதெளுந்தனர். இதனால் கண்டன போராட்டங்கள் நடத்தவும், சட்ட மறுப்பு இயக்கம் நடத்தவும் முடிவு செய்தனர். இதன் தொடர்சியாக தமிழ்நாட்டில் திருப்பூரில் போலீசாரின் தடையை மீறி 10-1-1932-ம் ஆண்டு தியாகி பி.எஸ். சுந்தரம் தலைமையில், நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் முதல் வரிசையில் காங்கிரஸ் கொடியை பிடித்துக்கொண்டு குமரன் வந்தார். வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கோஷம் எழுப்பிய போது, போலீசாரின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலால் உடல், தலையில் பலத்த காயத்துடன், தன் கையில் இருந்த கொடியை தரையில் சாய விடாமல் வந்தே மாதரம் என்ற முழக்கத்தை எழுப்பி நன் நாட்டு பற்றியை பறைசாற்றினார். குமரன் கீழே விழுந்தாலும், அவரது கையில் வைத்திருந்த கொடி தரையில் விழாமல் பிடித்திருந்தார். திருப்பூர் வீதியிலேயே கொடிகாத்த குருதி வெள்ளத்தில் குமரன் வீழ்ந்து கிடந்தார். அடிபட்டு பலத்த காயங்களுடன் இருந்த குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, சுயராஜ்யம் வராதா என இறுதி சொற்களுடன் 11-1-1932-ம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு சென்றார். இதனால் அவர் கொடி காத்த குமரன் என பெயர் பெற்றார்.

    விண்ணில் பறக்கும் கொடி மண்ணில் வீழ்வதா என தன்னுயிர் கொடுத்து நாட்டின் மானம் காத்த பெருமை, இந்திய விடுதலை வரலாற்றில் தனிப்பெருமை வாய்ந்தது. திருப்பூர் குமரன் நினைவாக அவரது திருவுருவத்துடன் கூடிய அஞ்சல் வில்லையை 2007-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டு சிறப்பு செய்தது. திருப்பூர் குமரன் நினைவகம், திருப்பூர் ரெயில் நிலையம் எதிரில் 11,195 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. நினைவு மண்டபம் கட்டிடம் 2500 சதுர அடியில் ரூ4,80,353 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் பின்னர் திருப்பூர் குமரன் வாரிசுதாரர்களுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், கவுன்சிலர் திவாகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சதீஷ்குமார், வடக்கு தாசில்தார் கனகராஜ் மற்றும் குமரனின் வாரிசுதாரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • காந்தி ெஜயந்தி கொண்டாட்டத்தில் சிலைக்கு அமைச்சர்-கலெக்டர் மரியாதை செலுத்தினர்.
    • மதுரை கோட்டத்தில் பல்வேறு ெரயில் நிலையங்களில் நடந்து வரும் தூய்மை பிரசார பணிகள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

    மதுரை

    மகாத்மா காந்தி பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மதுரை காந்தி அருங்காட்சி யகத்திலும் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் அனீஷ்சேகர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஆகியோர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் காந்தி மியூசியத்தில் உள்ள அஸ்தி பீடத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மதுரைக்கு வருகை தந்த காந்தி மேல மாசி வீதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கினார். அப்போதுதான் அவருக்கு அரை ஆடை அணிவது பற்றிய ஞானோ தயம் ஏற்பட்டது. அதனை நினைவு கூறும் வகையில் மதுரை மேலமாசி வீதியில் காந்தி தங்கி இருந்த வீடு, நினைவுச் சின்னமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அமைச்சர் மூர்த்தி

    காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு அமைச்சர் மூர்த்தி இன்று காலை மேல மாசி வீதியில் உள்ள நினைவிடத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கதர் ஆடை விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி மேயர் இந்தி ராணி, மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை கிழக்கு ஒன்றியம் ராஜாக்கூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார்.

    மகாத்மா காந்தி கடந்த 1921-ம் ஆண்டு மதுரைக்கு ரெயில் மூலம் வந்தார். அதனை நினைவு கூறும் வகையில் ெரயில் நிலையத்தில் ஒரு நினைவுச் சின்னம் (காந்தி கார்னர்) அமைக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அங்குள்ள படத்திற்கு கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உட்பட அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மேலும் காந்தி வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட 100 புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு கண்காட்சி நடந்தது. இதனை கோட்ட ெரயில்வே மேலாளர் தொடங்கி வைத்தார்.

    அப்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மூங்கில், மரக்குச்சிகள், பேப்பர், சில்வர் டப்பா க்கள் போன்றவற்றை பயன்படுத்த வலியுறுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து மதுரை கோட்டத்தில் பல்வேறு ெரயில் நிலையங்களில் நடந்து வரும் தூய்மை பிரசார பணிகள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.

    மதுரை ெரயில் நிலைய முதல் நடைமேடை சுற்றுச்சுவரில் காந்தி மார்பளவு உருவம் மற்றும் தூய்மை பிரச்சாரம் பற்றிய நவீன ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

    நிகழ்ச்சியில் கூடுதல் கோட்ட ெரயில்வே மேலா ளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலை பொறியாளர் நாராயணன், முதுநிலை எந்திரவியல் பொறியாளர் சதீஷ் சரவணன், சுற்றுச்சூழல் மேலாளர் மகேஷ் கட்கரி, கோட்ட வர்த்தக மேலாளர் பிரபு பிரேம்குமார், ஊழியர் நல அதிகாரி சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை நேருயுவகேந்திரா சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்க நுழைவு வாயில் முன்பு கலெக்டர் அனீஷ்சேகர் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் ெதாடங்கி வைத்தனர்.

    இதையொட்டி தினந்தோறும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் நேருயுவகேந்திரா மதுரை மண்டல இயக்குநர் செந்தில், மதுரை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் கண்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பயிற்றுநர்கள், நேருயுவகேந்திரா தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
    • நாடார் மகாஜன சங்கம் சார்பில் ப.ரா.முத்துச்சாமி நாடார் மகாஜன மேன்ஷனில் கொண்டாடப்பட்டது.

    மதுரை

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா நாடார் மகாஜன சங்கம் சார்பில் ப.ரா.முத்துச்சாமி நாடார் மகாஜன மேன்ஷனில் ெகாண்டாடப்பட்டது.

    இதையொட்டி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு நாடார் மகா–ஜன சங்க பொருளாளர் நல்லதம்பி மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாைத செய்தார். இந்த நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்க இணை செயலாளரும், உமா  கேட்டரிங் அதி–ப–ரு–மான ஆனந்–த–கு–மார், நா.ம.ச. காம–ராஜ் தொழில்–நுட்ப கல்–லூரி பரி–பா–லன சபை ெபாரு–ளா–ளர் ஏ.சி.சி.பாண்–டி–யன், நா.ம.ச. சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி தலைவர் மாரீஸ்குமார், நா.ம.ச. அன்னபாக்கியம் ஜெயராஜ் நாடார் பார்மசி கல்லூரி தாளாளர் ஐசக் முத்துராஜ், நா.ம.ச. துணைத்தலைவர்கள் சி.முருகேசன், எஸ்.ஆர்.பார்த்தின், பெரியசாமி, கே.எஸ்.கே.முத்துவேல், டி.மாணிக்கராஜ், நா.ம.ச. செயற்குழு உறுப்பினர்கள் அருஞ்சுணைராஜன், ஐயர்கனி, நா.ம.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிவேல், வேட்டையார், ரவிச்சந்திரன், தெற்கு வாசல் ரமேஷ், நா.ம.சங்க முன்னாள் மேலாளர் அசோகன், நா.ம.சங்க பணியாளர்கள் மாரிச்செல்வன், சரவணக்குமார், ஜஸ்டின், மகேஷ் அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்கள்.

    • பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ராஜபாளையம்

    தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி ராஜபாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரை முருகேசன் தலைமையில் மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் சிவகுருநாத பாக்கியம் முன்னிலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட பேரவை துணைச் செயலாளர் ராசா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் யோக சேகரன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் திருப்பதி, பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக பிரிவு வெங்கடேஷ் ராஜா, அவைத்தலைவர் கணேசன், பொருளாளர் ஜீவா, சிறுபான்மை பிரிவு மைதீன் என்ற ராஜப்பா, ஆந்திரா குமார், விக்னேசுவரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராமர், ராமராஜா, ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    ராஜபாளையம் நகர ம.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு விருதுநகர் மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நகரசெயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன், தலைமை கழக பேச்சாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன், நகர அவைத்தலைவர் சேது.இன்பமணி, மாவட்ட பிரதிநிதிகள் புஷ்பவேல், ஞானசேகரன், நகரத் துணைச் செயலாளர்கள் அக்பர்அலி, லிங்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.நிஜாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி காரைக்குடியில் அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காரைக்குடி

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணித்தனர். நகர செயலாளர் மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ கற்பகம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் குருபாலு, பிரகாஷ், அமுதா, நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் மாலை அணிவித்தனர்.மாவட்ட பேரவை பாலா, நிர்வாகிகள் திருஞானம், வழக்கறிஞர்கள் ராமனாதன், ஆசைத்தம்பி, தேவகோட்டை ரவிக்குமார், வட்டச் செயலாளர் மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க சார்பில் நகர செயலாளர் குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், பொருளாளர் துரைராஜ், நகர்மன்ற கவுன்சிலர்கள் அன்னை மைக்கேல், சொ.கண்ணன், கலா, தெய்வானை இளமாறன், ஹரிதாஸ், கார்த்திகேயன் வட்டச் செயலாளர்கள் விஜயகுமார், ரமேஷ், முகமது கனி, லட்சுமி ராஜ்கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திராவிடர் கழகத்தினர் திராவிட மணி தலைமையில் மரியாதை செலுத்தினர்.தலைமை கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • முத்துகுமரனை அவர் ஒட்டகம் மேய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
    • சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று குவைத்தில் நடந்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன்(வயது30). பி.பார்ம் படித்துள்ள இவருக்கு வித்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். காய்கறி வியாபாரம் செய்து வந்த முத்துக்குமரனுக்கு போதிய வருமானம் கிடைக்காததால் ரூ.1.5 லட்சம் கடன் வாங்கி ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் மூலம் குவைத்துக்கு கடந்த 4-ந்தேதி சென்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 7-ந்தேதிக்குப்பிறகு முத்துக்குமரனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். இதற்கிடையே கடந்த 9-ந்தேதி குவைத்தில் முத்துகுமரன் இறந்து விட்டதாக வந்த தகவலால் குடும்பத்தினர் கலங்கி போனார்கள்.

    குவைத்துக்கு சென்ற முத்துகுமரன் அங்குள்ள சபா அல்அகமது சிட்டி என்ற பகுதியில் ஒருவரிடம் பணிக்கு சேர்த்து விடப்பட்டதும், முத்துகுமரனை அவர் ஒட்டகம் மேய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒட்டகம் மேய்க்க மறுத்த முத்துகுமரனுக்கும், அவரது முதலாளிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    மேலும் முத்துகுமரன் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள முயற்சி செய்ததை அறிந்த குவைத் முதலாளி் அவரை சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

    இந்த நிலையில் குவைத்தில் முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குவைத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன், ஆந்திராவை சேர்ந்த ஏஜெண்டு மோகனா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று குவைத்தில் நடந்தது. இதில் குவைத்தில் உள்ள தமிழர்கள் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் முத்துக்குமரன் உடல் விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சொந்த ஊரில் இன்று இறுதி சடங்கு அதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு முத்துக்குமரனின் உடல் வந்து சேருகிறது.

    அதன் பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் முத்துக்குமரனின் உடல் கூத்தாநல்லூருக்கு கொண்டு வரப்பட்டு மாலை 6 மணிக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு இறுதி ஊர்வலம் நடக்கிறது. பின்னர் முத்துக்குமரனின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    முத்துக்குமரனின் உடலை கூத்தாநல்லூருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம், முத்துக்குமரன் மனைவி வித்யா மனு கொடுத்தார். இதனையடுத்து கலெக்டர் விரைவான நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து முத்துக்குமரனின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதற்காக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் சமூக நல அமைப்புகளுக்கு முத்துக்குமரன் மனைவி வித்யா மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    • அண்ணா படத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • அண்ணா பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாள் விழா தி.மு.க கொண்டாடப்பட்டது. முன்ன தாக சந்தைப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ.செங்குட்டுவன் தலைமையில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    அதேபோல் திருமருகல் தெற்கு ஒன்றியம் பூதங்குடியில் அண்ணாவின் படத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திட்டச்சேரியில் நகர செயலாளர் முகமது சுல்தான் தலைமையில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காரையூரில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதேபோல் 39 ஊராட்சிகளிலும் அண்ணாவின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    • மதுரையில் 3 இடங்களில் அண்ணா சிலைக்கு நாளை அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    • திருப்பரங்குன்றத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நெல்பேட்டையில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    நாளை (15-ந்தேதி) காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னோடிகள், கூட்டுறவு சங்க, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கும்படி வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்த தினத்தையொட்டி கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டியில் உள்ள சிலைக்கு நாளை காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ராஜன் செல்லப்பா

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்த தினம் கொண்டாட்டம் திருப்பரங்குன்றத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

    16 கால் மண்டபம் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது இதில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்கும் படி வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    • மகாகவி பாரதி தேசிய பேரவை தஞ்சை மாவட்டத்தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் தலைமை வகித்தார்.

    தஞ்சாவூர்:

    பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் உள்ள பாரதியார் சிலைக்கு மகாகவி பாரதி தேசிய பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மகாகவி பாரதி தேசிய பேரவை தஞ்சை மாவட்டத்தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் தலைமை வகித்தார்.

    மாவட்ட செயல் தலைவர் மூவர் கோட்டை ஸ்ரீதர் மாலை அணிவித்தார்.

    நிகழ்ச்சியில் துணை த்தலைவர்கள் பூதலூர் மோகன்ராஜ், முனைவர் செந்தில்குமார், குருவி ரமேஷ்குமார், சாய்சரன், பாரத் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மா.சதானந்தம். பேராசிரியை சிவரஞ்சனி, பாரத் அலைகள் இணை ஆசிரியர் வே. தேவநேசன், பாரதி இயக்கத்தை சேர்ந்த மோகன்,கண்ணையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இமானுவேல் சேகரன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    சிவகாசி

    இமானுவேல் சேகரனின் 65-வது குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள பெரியபொட்டல்பட்டியில் அவரது சிலைக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.

    முன்னதாக சிவகாமிபுரம், மாரனேரியில் வைக்கப்ப ட்டிருந்த இமானுவேல் சேகரனின் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். பெரியபொட்டல்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார்- ரோஷினி தம்பதியினரின் பெண்குழந்தைக்கு ஜெயலட்சுமி என பெயர் சூட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளராக வேண்டுராயபுரம் சுப்பிரமணி, சிவகாசி மண்டல செயலாளர்கள் சரவணகுமார், கருப்ப சாமிபாண்டியன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜயஆனந்த், மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன், பள்ளபட்டி ரமேஷ், பிரியா, சசி மலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாமிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி கிழக்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமிபாண்டியன் செய்திருந்தார். பெரியபொட்டல்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் கவிதாசுந்தரராஜமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் சசிமலர், பள்ளபட்டி ரமேஷ். ஊர் நாட்டாமை ராஜீவ்காந்தி, உதவி நாட்டாமை மான்ராஜ் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் மம்சாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் தங்கமுனியான்டி, கிளை செயலாளர் சிவக்குமார், சுந்தரராஜமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாரனேரியில் வீரன் சுந்தரலிங்கம் ஆட்டோ சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் துலுக்கப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, அம்மாபட்டி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைசெயலாளர் சுப்புகாளை, பொன்னுசாமி, மூவேந்தர், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இமானுவேல்சேகரன் சிலைக்கு பா.ஜ.க. மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாவட்ட துணை தலைவர் ரமேஷ்,பொதுச் செயலாளர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    இமானுவேல் சேகரன் நினைவு நாளைெயாட்டி ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெரு, மலையடிப்பட்டி, சுந்தரராஜபுரம், இளந்துறை கொண்டான் ஆகிய பகுதிகளில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் மாவட்ட தொழில் பிரிவு பார்வையாளர் சுகந்தம் ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதில் ஒன்றிய செயலாளர் சிவசக்தி, பட்டியல் அணி பிரிவு ராமசுப்பு, மாவட்ட துணை தலைவர் ரமேஷ்,பொதுச் செயலாளர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மரியாதை செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் நாடு முழுவதும் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும்.
    • தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தன.

    தஞ்சாவூர்:

    இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம்எலிசபெத் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் நாடு முழுவதும் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்றும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று நாடு முழுவதும் ராணி எலிசபெத் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டது.

    தஞ்சை கலெக்டர் அலுவல கத்தில் தேசிய க்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

    தஞ்சை ரயில் நிலையம் முன்பு உள்ள 100 அடி உயர கம்பத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தன.

    தஞ்சை மாநகராட்சி அலுவல கத்திலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தன.

    இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசி யக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

    மாவட்டத்தில் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. 

    ×