என் மலர்
நீங்கள் தேடியது "அறிவியல்"
- தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் லயன்ஸ் பள்ளி மாணவர் சாதனை படைத்தார்.
- முதல்வர் முருகன், துணை முதல்வர் ஜெயராம கிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தூத்துக்குடியில் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில் மாவட்ட அளவில் 545 மாணவர்களின் 30 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பதின்ம மேனிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் செழியனின் கண்டுபிடிப்பு தேசிய அளவில் குஜராத்தில் நடைபெற இருக்கும் போட்டிக்கு தகுதி பெற்றது.
மேலும் இஸ்ரோவில் நடைபெறும் ஆராய்ச்சிக்கும் தகுதி பெற்றுள்ளார். மாணவர் செழியனை லயன்ஸ் பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகத்தினர். முதல்வர் முருகன், துணை முதல்வர் ஜெயராம கிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டினர்.
- மாணவர்களால் உருவாக்கப்பட்ட உயர்திறன் தொலைநோக்கி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
- தொலைநோக்கியின் மூலம் காண வேண்டிய அம்சங்களையும், விளக்கங்களையும் மாணவர்களுக்கு விளக்கினார்.
சீர்காழி:
சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளியில் சாராபாய் விண்வெளி கழகத்தின் சார்பில் அதிநவீன தொலைநோக்கி மூலம் சிறப்பு விண்வெளி காணொளி காட்சி பள்ளியில் இரண்டாவது முறையாக நடைபெற்றது.
இந்த பள்ளி மாணவ- மாணவிகளால் உருவாக்கப்பட்ட உயர் திறன் தொலைநோக்கி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் இரவில் அனைவரும் முழு சந்திரனையும் விண்வெளி கோள்கள் மற்றும் கிரகங்களையும் கண்டு வியப்புற்றனர். சங்கத்தின் முதல் கூட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சங்கத்தின் வழிகாட்டியும் இஸ்ரோ விஞ்ஞானியுமான இங்கர்சால், தமிழ்நாடு அறிவியல் பேரவை தலைவர் விழிநாதன் மற்றும் ராஜேந்திரன் கலந்து கொண்டு விண்வெளியில் அதிசயங்களையும் தொலைநோக்கின் மூலம் காண வேண்டிய அம்சங்களையும் அதற்கான விளக்கங்களையும் மாணவ -மாணவியர்களுக்கு விளக்கி அவர்களின் சந்தேகங்களை அறிவியல் பூர்வமாக தெளிவுபடுத்தினர்.
இது போன்ற விண்வெ ளியை, தொலைநோக்கி மூலம் பார்க்கும் நிகழ்வுகள் மாதம் ஒருமுறை விண்வெளியை காணும் உகந்த நேரங்களில் ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளியின் தாளாளர் சுதீஷ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் வித்யா, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி அன்பழகன் கலந்து கொண்னர்.
சுபம் வித்யா மந்திர் பள்ளி சாராபாய் விண்வெளி சங்கத்தின் தலைவர் மாணவர் விஷ்வந்த், 9-ம் வகுப்பு மற்றும் மாணவர் மணிகண்டன் ஆகியோர் முதுகலை ஆசிரியர் ரியாஸ் மற்றும் முதுகலை ஆசிரியர் சுப்ரமணியம் ஆகியோரின் வழிகாட்டலில் கழக உறுப்பினர்களை கொண்டு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
- திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
- முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணிவகுப்பில் காவல்துறையுடன் இணைந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சாரணர் - கவர்னர் விருதுத் தேர்வுக்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் தலைமை ஆசிரியர் ராஜா வழங்கி னார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கும், மாநில அளவிலான கலைத்திருவிழாவில் சேவை செய்த மாணவர்களுக்கும், முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணிவகுப்பில் காவல்துறையுடன் இணைந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சாரணர் - கவர்னர் விருதுத் தேர்வுக்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் தலைமை ஆசிரியர் ராஜா வழங்கி னார். உதவித் தலைமை ஆசிரியை சத்யவதி , சாரண ஆசிரியர் திருவருள்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாராட்டினர்.
- காளையார்கோவிலில் அறிவியல் இயக்க கொண்டாட்டம் நடந்தது.
- செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை நன்றி கூறினார்.
காளையார்கோவில்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த திருவிழா மண்டல, ஒன்றிய அளவில் மாவட்டங்கள் தோறும் நடைபெறுகிறது.
ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர் களுக்கும், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும் இது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 350 இடங்களில் இது நடைபெற உள்ளது.
அதன் தொடக்கமாக சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உத்தரவின் பேரில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் சேவல் புஞ்சை நடுநிலைப்பள்ளியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர்லெமாயூ தலைமையில் ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கஸ்தூரிபாய் முன்னிலையில் நடந்தது.
அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் ஆரோக்கியசாமி. ஆயிரம் ஆயிரம் அறிவியல் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கினார். இதில் அந்த பகுதி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை நன்றி கூறினார்.
- கிராமத்திலும் உள்ளி பள்ளிகளில்பள்ளிக் கல்வித்துறையால் அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது.
- பள்ளிபாளையம் ஒன்றியம் கண்டிபுதூர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் இணைந்து அறிவியல் திருவிழா நடைபெற்றது.
பள்ளிபாளையம்:
கோடை விடுமுறையை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டாட ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளி பள்ளிகளில்பள்ளிக் கல்வித்துறையால் அறிவியல் திருவிழா நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையம் ஒன்றியம் கண்டிபுதூர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் இணைந்து அறிவியல் திருவிழா நடைபெற்றது.
இதில் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் அறிவியல் திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் கண்டிப்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) புவனேஸ்வரி, பாதரை பள்ளி தலைமை ஆசிரியர், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன், பள்ளிபாளையம் ஒன்றிய வானவில் மன்றம் கருத்தாளர் குணசேகர் மற்றும் கண்டிப்புதூர் பள்ளியில் உள்ள அனைத்து தன்னார்வலர்கள கலந்து கொண்டனர்.
இதில் எளிய அறிவியல் பரிசோதனைகள், கற்பனையும் கைத்திறனும், சமையலறையில் அறிவியல் மற்றும் புதிர் கணக்குகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக வினாடி வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் அளிக்க ப்பட்டது.
- அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பயன்படக்கூடியது அறிவியல் மன்றம் ஆகும்.
- அமிலத்தன்மை நீக்கும் சோதனையை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித மற்றும் அறிவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, ஆடின் மெடோனா, உமா மகேஸ்வ ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாணவி மோனிகா அனை வரையும் வரவேற்றார்.
மன்னார்குடி பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத்துறை உதவி பேராசிரியர் விமலா கலந்து கொண்டு பேசுகையில்:-
கணித மன்றத்தின் மூலம் கணித புதிர்கள் மற்றும் கணித விளையாட்டுகள் வேதகால கணிதம் மற்றும் மின்னல் வேக கணிதம் அன்றாட வாழ்வில் கணிதத்தின் பயன்பாடுகள், போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஏதுவாக எளிய முறையில் கணித பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவை கணித மன்றத்தின் செயல்பாடுகள் ஆகும். மாணவரின் முழுமையான வளர்ச்சிக்கு பயன்படும் அறிவியல் சார்ந்த பல செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பயன்பட க்கூடியது அறிவியல் மன்றம் ஆகும் என்றார்.
பின்னர், திரவ அடர்த்தி வேறுபாடு சோதனையை சந்தோஷ், அமிலத்தன்மை நீக்கும் சோதனையை புஷ்பா ஆகியோர் செய்து காண்பித்தனர். முடிவில் மாணவி அகத்தியர் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவி ஷாலினி தொகுத்து வழங்கினார். இதில் ஆசிரியர்கள் பாஸ்கரன், சக்கரபாணி, நடராஜன், முகமது ரஃபீக், பாலசுப்பி ரமணியன் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் விஜயகுமார் செய்திருந்தனர்.
- 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- அறிவியல் செயல்திட்டம், சிறுதானிய பயன்பாடு குறித்து கண்காட்சி வைத்திருந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரணியம் சி க .சு அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதாரண்யம் ஒன்றிய அளவிலான வானவில் மன்றம்அறிவியல் கண்காட்சி நடைபெற்றது அறிவியல் கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் துவக்கி வைத்தார்.
வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள பன்னாள் ஆயக்காரன்புலம்பஞ்சநதிக்குளம் தகட்டூர் புஷ்பவனம் கோடியக்காடுஉள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி சேர்ந்தநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் அறிவியல் கண்காட்சி அறிவியல் நாடகம் அறிவியல் செயல் திட்டம் சிறுதானிய பயன்பாடு குறித்துகண்காட்சி வைத்திருந்தனர் நிகழ்ச்சியின் நடுவர்களாக அறிவியல் ஆசிரியர் சிவகுமார் செந்தில்குமார் ராஜ்குமார் ரவி ஆகியோர் மாணவ மாணவிகளின் படைப்புகளை தேர்வு செய்து மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
- மாணவ-மாணவிகளின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மணவாளக்குறிச்சி:
வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளை பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஐ.இ.டி. கன்னியாகுமரி நெட்வொர்க் மற்றும் அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய இந்த கண்காட்சியில் 172 மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கண்காட்சியை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக காட்சிப்படுத்திய மாதிரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளியின் துணை தாளாளர் சுனி, இயக்குநர் தருண்சுரத், அருணாச்சலா பொறியியல் கல்லூரி முதல்வரும், ஐ.இ.டி.கன்னியாகுமரி நெட்வொர்க்கின் முன்னாள் தலைவருமான ஜோசப் ஜவகர், அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜிமலர் ஆகியோர் கலந்துகொண்டனர். கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
- தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கரப்பான் பூச்சிகள் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து மேற்கு நோக்கியும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் நோக்கியும் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வீரர்கள் ஆசியாவிலிருந்து வர்த்தக பாதைகளில் ஐரோப்பாவிற்கு பயணித்த போது, அவர்களின் ரொட்டி கூடைகளில் கரப்பான் பூச்சிகள் ஏறி ஐரோப்பாவிற்குப் பயணித்து அங்கு அதிகம் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அந்த காலகட்டங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நீராவி இயந்திரம் மற்றும் கடிதத்துக்கு உட்புறமாகக் குழாய்கள் போன்ற கண்டுபிடிப்புகள் பூச்சிகள் மேலும் பயணிக்கவும், உட்புறமாக வசதியாக வாழவும் உதவியது. கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவற்றின் பரவலை ஆராய்வது உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

- 100 மதிப்பெண்களுக்கு 35 என்பது குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்காளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்
100 மதிப்பெண்களுக்கு 35 என்பது குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்காளாக தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 20 ஆக குறைக்க மகாராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.
அம்மாநிலத்தில் நிறைய மாணவர்கள் 35 மதிப்பெண்கள் கூட எடுக்க முடியாமல் திணறுவதால் தேர்ச்சிபெறுவோர் விகிதம் குறைந்தவண்ணம் உள்ளது. பரீட்சையில் தோல்வியடைந்த மாணவர்கள் 10 ஆம் வகுப்புக்கு பிறகு கல்வியை கைவிடுகிறனர். எனவே மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது.
இதை சரிசெய்யும் வகையில் 10 ஆம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண்களை 35-ல் இருந்து 20ஆகக் குறைக்க மகாராஷ்டிர பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. ஆனாலும் இதன்படி அந்த மாணவர்களால் தொடர்ந்து கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளைப் படிக்க முடியாது.
கலை, மானுடவியல் சார்ந்த படிப்புகளையே உயர்கல்வியில் அவர்கள் தேர்வு செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும்போது இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த முடிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் கூகுலின் குவாண்டம் ஆய்வகம் உள்ளது
- 30 ஆண்டுகால சவாலை முறியடித்து ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது குவாண்டம் கோட்பாட்டின் கொள்கைகளின் அடிப்படையில் கணினிகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் கணினி அறிவியலின் ஒரு பகுதியாகும். இயற்பியலின் கூறுகளை பயனப்டுத்தி மிகவும் சிக்கலான சிக்கல்களைத் தீர்க்க குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்படுத்துகிறது.
குவாண்டம் கம்ப்யூட்டிங் ஒரு வளர்ந்து வரும் அறிவியல் துறையாக உள்ள நிலையில் தற்போது அதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகிள் நிறுவனம் சார்பில் புதிய குவாண்டம் கம்பியூட்டிங் சிப் [CHIP] ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள கூகுள் நிறுவனத்தின் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய குவாண்டம் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த புதிய சிப்-க்கு வில்லோ [WILLOW] என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒரு சிக்கலான கணித பிராப்லம் -ஐ இன்றைய சூப்பர் கம்ப்யூட்டர்கள் தீர்க்க 10 செப்டில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொண்டால், அதே சிக்கலை 'வில்லோ' 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தீர்க்கிறது என்று கூறப்பட்டுள்ளது. [1 (24 சைபர்கள்) = 1 செப்டில்லியன்]

எங்கள் புதிய அதிநவீன குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் 30 ஆண்டுகால சவாலை முறியடித்து ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் சுந்தர் பிச்சை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- கிரேட்டர் லண்டன் நகரை விட இருமடங்கு பெரிய அளவில் இருக்கும்
- இறுதியில் சிறிய பனிப்பாறைகளாக உடைந்து பின்னர் உருகும்
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என்று அறியப்படும் A23a சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நகர்வும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நகரத் தொடங்கியுள்ளது.
லண்டனில் உள்ள கிரேட்டர் லண்டன் நகரை விட இருமடங்கு பெரிய அளவில் சுமார் ஒரு டிரில்லியன் டன் எடையுள்ள இந்த பனிப்பாறை பனிப்பாறை, 1986 ஆம் ஆண்டு அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து உடைந்தது.
அன்றிலிருந்து, வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் கடலின் அடிப்பகுதி சேற்றில் சிக்கிக் கொண்டது. இந்நிலையில் கடந்த 2020 இல் இந்த பனிப்பாறை வடக்கு நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தெற்குப் பெருங்கடலுக்குள் அண்டார்டிக் சர்க்கம்போலார் என்ற நீரோட்டத்தை பின்தொடர்ந்து இந்த பனிப்பாறை நகரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நீரோட்டம் பனிப்பாறையை ஜார்ஜியாவின் தெற்குப் பகுதியை ஒட்டி உள்ள துணை அண்டார்டிக் தீவை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் அங்கு வெப்பமான நீருடன் சந்திக்கும் A23a பனிப்பாறை இறுதியில் சிறிய பனிப்பாறைகளாக உடைந்து பின்னர் உருகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.