search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 244157"

    • தியான கூடம், சிலுவை பாதை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.
    • மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    இதனால் அந்த பகுதியே குதுகலமானது.

    பேராலயத்தில்நடைபெறும்திருப்பலிகளிலும், பழையமாதாஆலயம், நடுத்திட்டு, தியான கூடம், சிலுவைபாதை, சிறுவர் பூங்கா, உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று மகிழ்ந்தனர். மேலும் கடற்கரையில் குடும்பத்து டனும், நண்பர்களுடனும் கடலில் நீராடி மகிழ்ந்தனர்.

    இதனால் மனஇறுக்கம் விலகி மனமகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    கடற்கரையில் அசாம்பாவிதங்கல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • 600 கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டு களிக்கலாம்.
    • நாளையும், நாளை மறுநாளும் தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியில் கடந்த 2007-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பிறகு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழா நாளை (வெள்ளிக் கிழமை) சென்னை தீவுத் திடலில் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் உள்ள 16 இடங்களில் 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்படுகிறது. 600 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிகளை கடற்கரை, பூங்காக்களில் கண்டுகளிக்கலாம்.

    தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு திடல், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, ராகேஸ்வர ராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு திடல், அண்ணாநகர் டவர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, திருவான்மியூர் கடற்கரை சாலை, சைதாப்பேட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு திடல், தி.நகர் நடேசன் பூங்கா, எலியட்ஸ் கடற்கரை, மே தின பூங்கா, எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படுகிறது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    நாளையும், நாளை மறுநாளும் தீவுத்திடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிராமிய கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துகிறார்.

    இந்த நம்ம ஊரு திருவிழாவில் கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம் பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    • சாத்தூர் நகராட்சியில் ரூ.60.73 லட்சத்தில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்காவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
    • தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் ரூ.60.73 லட்சத்தில் விளை யாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய பூங்கா திறப்பு விழா நடந்தது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு பூங்காவை திறந்து வைத்தார்.

    சாத்தூர் நகராட்சியில் பெரியார் நகர் வார்டு 1-ல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ11.23 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட பூங்காவும், வார்டு 4-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.50 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய புதிய பூங்காவும் என மொத்தம் ரூ.60.73 லட்சம் மதிப்பிலான 2 பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    திறப்பு விழாவில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, தாசில்தார் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகர் மன்ற தலைவர் குருசாமி, சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ், முருகேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு சிமெண்டு கலவை, பிளாஸ்டா பாரீஸ் மூலம் புலி, மான்,பாம்பு, மயில், பறவை சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது.
    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை முருங்கம்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தில் உள்ளூர் கலைஞர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் அரங்குகள் அமைத்து கைவினை பொருட்கள் உருவாக்கப்படுகிறது.

    இங்கு சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தனி அரங்கு உள்ளது. இங்கு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    அழிந்து வரும் காடுகள், வனவிலங்குகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், மீட்கும் முயற்சியாக சிற்பங்கள் உருவாக்கப்பட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு சிமெண்டு கலவை, பிளாஸ்டா பாரீஸ் மூலம் புலி, மான், பாம்பு, மயில், பறவை சிற்பங்கள் உருவாக்கப்படுகிறது. இவை புதுவைக்கு வருகிற சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை பார்த்தும், வாங்கியும் செல்கின்றனர். மேலும் தங்கள் வீடுகளிலும், நிறுவனங்களிலும் சிற்பங்கள் அமைக்க தேவையான சிற்பங்களை ஆர்டர் கொடுத்தும் செல்கின்றனர்.

    இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த ஆர்டர்கள் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது விலங்கு மற்றும் பறவை சிற்பங்களுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் இரவு பகலுமாக கலைஞர்கள் ஆர்வத்துடன் சிற்பங்களை செய்து வருகின்றனர்.

    மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மிருகங்களின் சிலைகளையும் அரங்கில் அமைக்க ஏற்பாடும் செய்யப்பட்டு வருகின்றது. இங்கு உருவான விலங்குகளின் சிலைகள் ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    தற்போது பறவை, விலங்குகள் என 100 சிற்பங்கள் தயாராகி வருகிறது. இவை ஆந்திரா மாநிலத்தின் உள்ள நகர்வனம் பூங்காவில் வைக்கப்பட உள்ளது. இதேபோல் பிற மாநில பூங்காக்களுக்கும் புதுவையில் தயாராகும் சிற்பங்கள் செல்ல உள்ளது.

    முருகப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த வனவிலங்குகளின் சிலைகள் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்தும், வாங்கியும் செல்கின்றனர்.

    • கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்
    • செயற்கை நீரூற்றுகளை சீரமைக்க மாநகராட்சி மேயர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக வேப்பமூடு பூங்கா திகழ்ந்து வருகிறது.

    இந்த பூங்காவில் காலை மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கி ழமைகளில் கூட்டம் அலை மோதி வரு கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இந்த பூங்காவிற்கு வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவை மேம்படுத்த மாநகராட்சி மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண் டார்.

    இதையடுத்து பூங்கா வில் இருந்த விளை யாட்டு உபகரணங்கள் மேம்படுத்தப்பட்டது.பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொள்ள வசதி யாக செல்பி பாய்ண்ட் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் சிறுவர்களுக்கான ராட்டினங்களும் அமைக்கப் பட்டு உள்ளது.

    இந்த ராட்டினங்களில் ஏற கடந்த சில நாட்களாக கூட்டம் அலைமோதி வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக இந்த ராட்டி னங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக கட்டணங்களும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    இதே போல் மேலும் சில விளையாட்டு உபகர ணங்களை பூங்காவில் அமைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் பாழடைந்து மோசமாக காணப்படுகிறது. அதனை செயற்கை நீரூற்றுகளை சீரமைக்க மாநகராட்சி மேயர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.

    • எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • அகழாய்வு பணிகள் நடைபெற்ற பகுதியினை பார்வையிட்டார்

    பெரம்பலூர்

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் 12.30 மணியளவில் சிப்காட் தொழில் பூங்காவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அதில் அமையவுள்ள பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்தார்.

    அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5.15 மணிக்கு அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் மாளிகைமேட்டுக்கு சென்று, அங்கு அகழாய்வு பணிகள் நடைபெற்ற பகுதியினை நேரில் பார்வையிடுகிறார்.

    நலத்திட்ட உதவிகள்

    இதில், மாளிகைமேடு அகழாய்வில் கண்டறியப்பட்ட பழமையான பொருட்கள் மற்றும் அகழாய்வு மேற்கொண்ட பகுதிகளை பார்வையிடுகிறார். பின்னர் இரவில் அரியலூர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அங்கு 2 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

    அமைச்சர் வருகையையொட்டி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    "

    • ரூ.12 லட்சம் மதிப்பில் உணர்வு ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்கா திறக்கப்பட்டது
    • திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்

    திருச்சி:

    திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

    ேமலும், 32 படுக்கைகளுடன் கூடிய இ.சி.ஆர்.பி. தீவிர சிகிச்சை பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை எந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

    அறுவை சிகிச்சைகளை டிஜிட்டல் முறையில் சரி பார்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிகளில் திருநாவுக்கரசர் எம்.பி. கலெக்டர் மா.பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,

    எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், அப்துல் சமது, மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் துரைராஜ், கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்காவை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன். ஆகியோர் திறந்துவைத்த காட்சி. அருகில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலர் உள்ளனர்.

    • போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு
    • தக்கலை போலீஸ் நிலையம் 1936-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    தக்கலை போலீஸ் நிலையம் 1936-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 77 ஆண்டுகள் போலீஸ் நிலையம் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. 2011-ம் ஆண்டு மாடி கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

    அதே வேளையில் பழைய கட்டிடம் போக்குவரத்து போலீஸ் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. வளாகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் சம்பந்தப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் செடி, கொடிகள் அதிகமாக வளர தொடங்கியது. இதை அவ்வப்போது போலீசார் வெட்டி அகற்றி வளாகத்தை சுத்தம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் போலீஸ் நிலைய வளாகம் முழுவதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆலோசனை வழங்கினார்.

    அதன் அடிப்படையில் டி.எஸ்.பி. கணேஷ் வழிகாட்டுதலில் இன்ஸ்பெக்டர் நெப்போலி யன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் இணைந்து முதன் முதலாக தக்கலை பஸ் நிலையத்தில் ஆபத்து விளைவிக்க கூடிய நிலையில் இருந்த புற காவல் அறையை அகற்றி புதிய அறையை கட்ட ஏற்பாடு செய்தனர்.

    மேலும் தக்கலை போலீஸ் நிலைய வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வழக்குகள் சம்பந்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஓரமாக அடுக்கி விட்டனர்.தொடர்ந்து வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் பயமின்றி அமர்ந்து செல்ல அந்தப் பகுதியில் இன்டர்லாக் போடப்பட்டது.போலீஸ் நிலையத்திற்கு முன்புறமுள்ள சுவரோரம் முதன் முதலாக பூந்தோட்டம் அமைக்கப்பட்டது.தொடர்ந்து சுமார் 30 மீட்டர் நீளம் 1½ மீட்டர் அகலம் அளவில் பூந்தோட்டம் அமைக்கப்பட்டது.

    இந்த பூந்தோட்டத்தில் மக்களை கவரும் விதத்தில் பல்வேறு வகையான பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது. புல் மற்றும் பூந்தோட்டத்தை அமைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர், ஆஷா ஜெபகர், அருளப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உட்பட காவல்துறையை சேர்ந்த அனைவரையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    • காரமடை நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
    • நகராட்சியில் உள்ள பகுதிகளில் அரசு நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்

    காரமடை நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் உஷா வெங்கடேஸ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் ஆணையாளர் பால்ராஜ், துணைத்தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    ராம்குட்டி (திமுக): நகராட்சியில் உள்ள பகுதிகளில் அரசு நிலங்களை பலர் ஆக்கிரமித்துள்ளனர்.

    இதனை ஆய்வு செய்து தற்போதுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களை வேலிகள் அமைத்து அந்த இடங்களில் அப்பகுதி மக்களுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சித்ரா(திமுக): எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ெரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் சப்வே உள்ளது. அங்கு வாகனம் சென்று வர முடியாத நிலையில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு பல்வேறு சர்ம வியாதிகள் ஏற்பட்டு வருகிறது. இதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவிதா (மதிமுக): எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் தெருவிளக்கு, குடிநீர்குழாய் சீரமைப்பு, உள்ளிட்ட பணிகளை செய்து தரக்கோரி கடந்த 7 மாத காலமாக கூறி வருகிறேன். இதுகுறித்து சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் மெத்தன போக்காக உள்ளன. பெயரளவிற்கு கூட யாரும் வந்து பார்த்தது இல்லை. மேலும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் பணிகள் எடுத்தும் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. தவறும் பட்சத்தில் எனது வார்டுக்குட்பட்ட பொதுமக்களை திரட்டி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

    மஞ்சுளா(திமுக): அரங்கநாதர் கோவிலில் வாரந்தோறும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அன்று மட்டும் கூடுதலாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    27 வார்டு வனிதா (அதிமுக): எனது வார்டுக்குட்பட்ட ஆர்.வி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல போதிய வடிகால் கால்வாய் அமைக்காததால் குளம் போன்று கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு சரும நோய்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் பழுதுநீக்க நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தால் ஊழியர்கள் ரசீது இருந்தால் மட்டுமே குழாய்களை பழுது பார்க்க முடியும் என கூறி வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விக்னேஷ்(பாஜக): காரமடை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சாலையோரம் மற்றும் நடை பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனை உடனடியாக நகராட்சி நிர்வாகம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    ஆணையாளர் பால்ராஜ்: குடிநீர் தெருவிளக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே மேம்பாலம் சப்வே பகுதியில் ரயில்வே கட்டுப்பாட்டு துறையில் உள்ளதால் அதனை அகற்ற ெரயில்வே மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது என்றார்.

    • கலெக்டர் ஆகாஷிடம் தர்மபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் 3 கோரிக்கை மனு அளித்தார்.
    • மழைக்காலங்களில் குளத்து கரைகள் உடைப்பு ஏற்படும் நிலையில் உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

    கடையம்:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் தர்மபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் 3 கோரிக்கை மனு அளித்தார். அதில் கடனா அணை அடிவாரத்தில் பாழடைந்த பூங்காவை பராமரித்து சுற்றுலா தளமாக்கி படகு சவாரி அமைத்து தரவேண்டும். மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட அழகப்பபுரத்தில் அரசு நிரந்தர நெல் கொள்முதல் கட்டிடம் அமைத்து தர வேண்டி தெற்கு குருத்துடையார், வடக்கு குருந்துடையார், சம்பன் குளம் ஆகிய பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 3 குளங்களிலும், பள்ளக்காடுபட்டி குளம்,குட்டிக்குளம், செட்டி குளம் ஆகிய குளங்களிலும் கரை உட்பகுதியில் தடுப்பு சுவர்கள் இல்லாத காரணத்தினால் மழைக்காலங்களில் குளத்து கரைகள் மண் அரிப்பு ஏற்பட்டு கரைகள் உடைப்பு ஏற்படும் நிலையில் உள்ளது. உடைப்பு ஏற்பட்டால் நீலமேகபுரம், சம்பன்குளம், அழகப்பபுரம் ஆகிய கிராமங்களில் வெள்ளநீர் சூழும் அபாயம் ஏற்படும். அதனை கருத்தில் கொண்டு குளத்துக்கரைகளில் தடுப்பு சுவர்கள் அமைத்துதர வேண்டியும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுருந்தார்.

    • சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா பூங்கா மற்றும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
    • தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அண்ணா பூங்கா நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    பரமத்தி வேலூர்:

    கர்நாடகா மாநிலத்தில் கொட்டிய கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சுமார் 2. 50 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. அப்போது மேடடூர் அணையிலிருந்து நீரை திறந்து விட்டனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்ததன் காரணமாக காவிரி கரையோரம் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டது.

    இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா பூங்கா மற்றும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

    தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அண்ணா பூங்கா நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் சென்று பார்வையிடவும் குளிக்கவும் அனுமதி இல்லை. அங்கு பராமரிப்பு பணிகள் நடத்து வருவதால் தற்போது அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

    ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சுற்றுலா பயணிகள் வருவதால் அப்பகுதியில் உள்ள வறுத்த மீன் விற்பனை செய்யும் கடைகள், ஓட்டல்களில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இனி வரும் விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் விற்பனை அதிகரிக்கும் . அண்ணா பூங்கா திறப்பால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பூங்கா முழுவதும் தேசியக்கொடி பறக்க விடப்பட்டது.
    • பூங்காவிற்கு 75-வது சுதந்திர தின பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த நீலகிரி ஊராட்சி பாரதி நகரில் ஊராட்சி சார்பில் பூங்கா கட்டப்பட்டது. இந்த பூங்காவிற்கு 75-வது சுதந்திர தின பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த பூங்கா திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி ஊராட்சி தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன், துணைத் தலைவர் சிங் .சரவணன், பாஸ்கரன், உதவி இயக்குனர் (ஊராட்சி)சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 75-வது சுதந்திர தின பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் பூங்காவில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். பூங்கா முழுவதும் தேசியக்கொடி பறக்க விடப்பட்டது. இதை அடுத்து நீலகிரி ஊராட்சிக்கு 2 குப்பைகளும் வாகனங்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.

    இந்த விழாவில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், தாசில்தார் மணிகண்டன், டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×