search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை கிரிக்கெட்"

    • நசீம்கான்ஷா 2 சிக்சர்களை அடித்து பாகிஸ்தான் வெற்றியை உறுதி செய்தார்.
    • இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான், இலங்கை அணிகள் தகுதி.

    சார்ஜா:

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. சார்ஜாவில் இன்று நடைபெற்ற சூப்பர்-4 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்ங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் துவக்க ஜோடி 36 ரன்களில் பிரிந்தது. அதிகபட்சமாக இப்ராகிம் ஜத்ரன் 35 ரன்கள் சேர்த்தார். கடைசி தருணத்தில் அதிரடி காட்டிய ரஷித் கான் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் விளாசினார். ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் அடித்தது.

    இதையடுத்து 130 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் டக்அவுட்டானார். ரிஸ்வான் 20 ரன் அடித்தார். சதாப்கான் 36 ரன்னும் இப்திகார் அகமது 30 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் 9 விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது.

    ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்த நிலையில், கடைசி ஓவரில் நசீம்கான்ஷா அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து பாகிஸ்தான் அணி வெற்றி பெறச் செய்தார். 4 பந்துகளில் 14 ரன்களை அவர் அடித்தார். இதனால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.  ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்ததால், இந்தியாவின் இறுதி போட்டி வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.

    • ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராகிம் ஜத்ரன் சற்று தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினார்.
    • கடைசி தருணத்தில் அதிரடி காட்டிய ரஷித் கான் 18 ரன்கள் விளாசினார்.

    சார்ஜா:

    ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சார்ஜாவில் இன்று நடைபெறும் சூப்பர்-4 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்ங்கை தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஜோடி 36 ரன்களில் பிரிந்தது. அதன்பின்னர் நிதானமாக விளையாடினர். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.இப்ராகிம் ஜத்ரன் சற்று தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    அதிகபட்சமாக இப்ராகிம் ஜத்ரன் 35 ரன்கள் சேர்த்தார். ஹஸ்ரத்துல்லா 21 ரன்கள், ரஹ்மானுல்லா 17 ரன்கள், கரிம் ஜனத் 15 ரன்கள் எடுத்தனர். கடைசி தருணத்தில் அதிரடி காட்டிய ரஷித் கான் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ராப் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.

    • ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.
    • சூப்பர் 4 சுற்றின் 2 போட்டியிலும் தினேஷ் கார்த்திக்குக்கு 11 பேர் கொண்ட அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். ஆனால் முதல 2 போட்டியில் மட்டுமே அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது.

    'சூப்பர் 4' சுற்றின் 2 போட்டியிலும் தினேஷ் கார்த்திக்குக்கு 11 பேர் கொண்ட அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடைசி கட்டத்தில் அவர் சிறப்பாக ஆடக்கூடியவர். அவர் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில் சேர்க்காதது தவறான முடிவு என்று முன்னாள் வீரர்கள் விமர்சித்து கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    முன்னாள் விக்கெட் கீப்பரும், தேர்வு குழு முன்னாள் தலைவருமான கிரண் மோரே கூறியதாவது:-

    தினேஷ் கார்த்திக் தன்னை ஒரு சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்துள்ளார். அவருக்கு வாய்ப்பு வழங்காதது நியாயம் இல்லை. அவரை ஆடும் லெவனில் தேர்வு செய்து இருக்க வேண்டும். அவருக்கு வாய்ப்பு கொடுக்காதது தவறான முடிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறும்போது, 'தினேஷ் கார்த்திக்கை ஆடும் லெவனில் தேர்வு செய்து இருக்க வேண்டும் அவரை அவரது பங்களிப்பில் இடம்பெற செய்ய வேண்டும் என்றார்.

    இதேபோல பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் தினேஷ் கார்த்திக்குக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார்.

    • ஜடேஜா இடத்தில் இடம் பெறப்போவது ரிஷப் பண்டா, தீபக் ஹூடாவா, அக்‌ஷர் படேலா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
    • வேகப்பந்து வீரர் ஆவேஷ் கான் இடத்தில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    6 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி 'லீக்' முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றன. வங்காள தேசம், ஆங்காங் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    'சூப்பர் 4' சுற்று நேற்று தொடங்கியது. ஷார்ஜாவில் நடந்த இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. இதன் மூலம் 'லீக்' சுற்றில் தோற்றதற்கு இலங்கை பதிலடி கொடுத்தது.

    துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் ஏற்கனவே 'லீக்' ஆட்டத்தில் மோதி இருந்தன. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். அதே நேரத்தில் பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் இரு அணிகளும் இன்று மோதுவது 11-வது போட்டியாகும். இதுவரை நடந்த 10 ஆட்டத்தில் இந்தியா 8-ல் பாகிஸ்தான் 2-ல் வெற்றி பெற்றுள்ளன.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வாரம் நடந்த ஆட்டத்தில் ரிஷப்பண்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தினேஷ் கார்த்திக்குக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு இடம் கிடைத்தும் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப்பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகி உள்ளார்.

    ஜடேஜா இடத்தில் இடம் பெறப்போவது ரிஷப் பண்டா, தீபக் ஹூடாவா, அக்‌ஷர் படேலா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆல்ரவுண்டர் தேவைப்பட்டால் அக்‌ஷர் படேல் இடம் பெறுவார். அது மாதிரியான நிலை தேவையில்லை என்றால் மட்டுமே ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக் இடத்தில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதும் உறுதியாகவில்லை. வேகப்பந்து வீரர் ஆவேஷ் கான் இடத்தில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் விவரம்

    ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் படேல், புவனேஷ்வர் குமார், அவேஷ்கான் அல்லது அஸ்வின், அர்ஷ்தீப்சிங், யுசுவேந்திர சாஹல்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மீண்டும் மோதுகிறது.
    • இந்தியாவுக்கு எதிரான கடந்த போட்டியின் போது தஹானி 2 சிக்சர்கள் விளாசினார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மீண்டும் மோதுகிறது. இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா காயம் காரணமாக ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்தும் விலகி உள்ளார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாநவாஸ் தஹானி காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இருந்து விலகி உள்ளார். கடந்த ஞாயிற்றுகிழமை இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது தஹானி 2 சிக்சர்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடைசி 2 போட்டி இதே போன்று பந்துவீச்சிலும் கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன்களை விட்டு கொடுக்காமல் நெருக்கடி தருவதில் தஹானி வல்லவர். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கூட தஹானி 4 ஓவர் வீசி 29 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. இதே போன்று ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் தஹானி 2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

    தஹானிக்கு பதிலாக ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹசன் அலி, இந்தியாவுக்கு எதிராக கடந்த காலங்களில் சிறப்பாக வீசியுள்ளார். 

    • பாகிஸ்தான்- ஹாங்காங் அணிகள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
    • இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் 3 முறை மோதியுள்ளன.

    ஷார்ஜா:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் 6 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும்.

    'பி' பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், இலங்கை முதல் 2 இடங்களை பிடித்து 'சூப்பர்4' சுற்றுக்கு தகுதி பெற்றன. வங்காளதேசம் அணி வெளியேற்றப்பட்டது. 'ஏ' பிரிவில் இந்திய அணி 2 வெற்றியுடன் முதல் இடத்தை பிடித்து 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றது. 2-வது அணி எது? என்பது இன்று இரவு தெரியும்.

    ஷார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 6-வது மற்றும் கடைசி 'லீக்' ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.

    பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஹாங்காங்கை வீழ்த்தி 'சூப்பர் 4' சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.

    இரு அணிகளும் மோதிய 3 ஒருநாள் ஆட்டத்திலும் பாகிஸ்தானே வெற்றி பெற்று இருந்தது. அந்த அணி நம்பிக்கையுடன் ஹாங்காங்கை எதிர் கொள்ளும். அதே நேரத்தில் ஹாங்காங் அணி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விளையாட கடுமையாக போராடும்.

    'சூப்பர் 4' சுற்று நாளை தொடங்குகிறது. இதில் 4 அணியும் ரவுண்டு ராபின் முறையில் மோதும். 'லீக்' முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

    'சூப்பர் 4' சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் வருகிற 4-ந்தேதி மோதும் வாய்ப்பு உள்ளது. 6-ந்தேதி ஆப்கானிஸ்தானுடனும், 8-ந்தேதி இலங்கையுடனும் இந்திய அணி விளையாடுகிறது.

    'சூப்பர் 4' சுற்றின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இறுதி போட்டி வருகிற 11-ந்தேதி நடக்கிறது. 

    • இன்று நடைபெறும் 5-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
    • இரு அணிகளும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று இருந்தது.

    ஆசிய கோப்பை போட்டியில் 'ஏ' பிரிவில் இருந்து இந்தியாவும், 'பி' பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தானும் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன.

    இன்று நடைபெறும் 5-வது 'லீக்' ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும். இரு அணிகளும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று இருந்தது.

    • உலக கோப்பை அணியில் நான் இல்லை என்பது மிக சிறிய வதந்தியாகும்.
    • மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதில் தான் தற்போது எனது கவனம் இருக்கிறது.

    துபாய்:

    இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் சிறப்பாக ஆடி 35 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஆங்காங்கை இன்று எதிர் கொள்கிறது. இந்த போட்டிக்காக ஜடேஜா நேற்று நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவரிடம் காயம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை அணியை இழக்க கூடும் என்று செய்திகள் பரவி வருவது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து ஜடேஜா கூறியதாவது:-

    உலக கோப்பை அணியில் நான் இல்லை என்பது மிக சிறிய வதந்தியாகும். ஒரு முறை எனது மரணம் குறித்த வதந்தி பரவியது. இதை பற்றி எல்லாம் நான் அதிகம் யோசிக்கவில்லை. மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதில் தான் தற்போது எனது கவனம் இருக்கிறது.

    இவ்வாறு ஜடேஜா கூறியுள்ளார்.

    • ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்று இருந்தது.
    • இந்தியா-ஆங்காங் அணிகள் 20 ஓவர் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பையை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது.

    இந்தப் போட்டியில் 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஆங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும்.

    தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. 2-வது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. ஷார்ஜாவில் இன்று நடைபெறும் 3-வது 'லீக்' ஆட்டத்தில் வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்துக்கும் அதிர்ச்சி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. வங்காளதேசம் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    துபாயில் நாளை நடைபெறும் 4-வது 'லீக்' ஆட்டத்தில் இந்தியா-ஆங்காங் அணிகள் மோதுகின்றன.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்று இருந்தது. இதனால் பலவீனமான ஆங்காங்கை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பாகிஸ்தானுக்கு எதிராக ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முத்திரை பதித்தார். ஜடேஜா பேட்டிங்கிலும், புவனேஸ்வர் குமார் பந்து வீச்சிலும் சாதித்தனர்.

    முதல் போட்டியில் விளையாடாத வீரர்களுக்கு கேப்டன் ரோசித்சர்மா வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப்பண்ட், தீபக் ஹூடா, அஸ்வின், பிஷ்னோய் ஆகியோருக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    தொடக்க வீரர் லோகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

    இந்தியா-ஆங்காங் அணிகள் 20 ஓவர் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும். ஒருநாள் போட்டியில் 2 முறை விளையாடி உள்ளன. இந்த 2 ஆட்டத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றது.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலி விஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கும் ஷகிப் அல்-ஹசனுக்கு இது 100-வது டி20 போட்டியாகும்.
    • சார்ஜா மைதானம் சிறியதாகும். இருப்பினும் அங்கு தற்போது நிலவும் கடுமையாக வெப்பத்தின் தாக்கம் காரணமாக ரன்கள் எடுப்பது கடினமாக இருக்கும்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. சார்ஜா, 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் சார்ஜாவில் இன்று இரவு நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன. முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கைக்கு அதிர்ச்சி அளித்து அபார வெற்றி பெற்றது.

    105 ரன்னுக்குள் இலங்கையை சுருட்டிய ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து அசத்தியது. ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஹஸ்ரத்துல்லா ஷசாய், ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், முகமது நபியும், பந்து வீச்சில் பாசல்ஹக் பரூக்கி, முஜீப் ரகுமான், ரஷித் கானும் நல்ல நிலையில் உள்ளனர்.

    வங்காளதேச அணியை பொறுத்தமட்டில் சமீபகாலங்களில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. அந்த அணி ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்றது. ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் ஆடாத ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதேபோல் சபிர் ரகுமான், முகமது நைம் ஆகியோரும் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்களின் வருகை அந்த அணியின் பலத்தை அதிகரிக்கும்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கும் ஷகிப் அல்-ஹசனுக்கு இது 100-வது 20 ஓவர் சர்வதேச போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க லீக் ஆட்டத்தில் வென்ற நம்பிக்கையுடன் களம் காணும் ஆப்கானிஸ்தான் அணி 2-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்றுக்குள் நுழைய ஆர்வம் காட்டும்.

    அதே நேரத்தில் போட்டியை வெற்றியுடன் தொடங்க வங்காளதேச அணி வரிந்து கட்டும். இவ்விரு அணிகளும் இதுவரை 8 இருபது ஓவர் சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆப்கானிஸ்தான் 5 ஆட்டத்திலும், வங்காளதேசம் 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    சார்ஜா மைதானம் சிறியதாகும். இருப்பினும் அங்கு தற்போது நிலவும் கடுமையாக வெப்பத்தின் தாக்கம் காரணமாக ரன்கள் எடுப்பது கடினமாக இருக்கும். இந்த ஆடுகளம் வழக்கம் போல சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும். இரு அணியிலும் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அங்கம் வகிப்பதால், இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஷசாய், ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், கரிம் ஜனத், முகமது நபி (கேப்டன்), ரஷித் கான், அஸ்மத்துல்லா ஒமர்ஷாய், நவீன் உல்-ஹக், முஜீப் ரகுமான், பாசல்ஹக் பரூக்கி.

    வங்காளதேசம்: முகமது நைம், அனாமுல் ஹக், ஷகிப் அல்-ஹசன் (கேப்டன்), அபிப் ஹூசைன், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, சபிர் ரகுமான், மெஹதி ஹசன், முகமது சைபுதீன், நசும் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான்.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • டோனி, டெண்டுல்கர் ஆகியோர் 6 ஆசிய கோப்பையில் ஆடி உள்ளனர்.
    • 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பையில் அறிமுகம் ஆனார். தற்போது அவர் 7-வது ஆசிய கோப்பையில் ஆடி வருகிறார். இதன் மூலம் 7 ஆசிய கோப்பையில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

    டோனி, டெண்டுல்கர் ஆகியோர் 6 ஆசிய கோப்பையில் ஆடி உள்ளனர்.

    ரோகித் சர்மா ஆசிய கோப்பையில் 28 ஆட்டத்தில் விளையாடி இலங்கையின் ஜெயவர்த்தனேயை சமன் செய்தார்.

    அவர் 26 இன்னிங்கில் 883 ரன் எடுத்துள்ளார். 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 3499 ரன் எடுத்துள்ளார். மார்ட்டின் குப்தில் (நியூசிலாந்து) 3497 ரன்னுடன் 2-வது இடத்திலும், விராட்கோலி 3343 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துபாயில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
    • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா இந்தப் போட்டியை நேரில் ரசித்தார்.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த ரசிகர்களும், போட்டியை டெலிவிஷனில் பார்த்த ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா இந்தப் போட்டியை நேரில் ரசித்தார். இந்தியா வெற்றி பெற்றதும் அவர் கைதட்டி ஆரவாரம் செய்தார்.

    அப்போது ஒருவர் அவரது கையில் தேசிய கொடியை கொடுக்க வந்தார். ஆனால் ஜெய்ஷா தேசிய கொடியை வாங்க மறுத்தார்.

    வெற்றி கொண்டாட்டத்தில் ஜெய்ஷா தேசிய கொடியை வாங்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஜெய்ஷா மறுக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். இது தொடர்பாக ஜெய்ஷாவை பலரும் விமர்சனம் செய்கிறார்கள்.

    இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த படி டி.ஆர்.எஸ். தலைவர் ஒருவர் கூறும்போது, "இதுவே பா.ஜனதாவை சேராத ஒருவர் கொடியை ஏற்க மறுத்து இருந்தால் அந்த நபர் தேச விரோதி ஆக்கப்பட்டு இருப்பார்.

    நாள்முழுவதும் விவாதமாக்கப்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக அது ஹாஹின்ஷாவின் மகன் ஜெய்ஷா ஆகிவிட்டார் என கிண்டலுடன் தெரிவித்தார்.

    இதே வீடியோவை மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்துள்ளது. உள்துறை மந்திரியின் மகன் தேசிய கொடியை வாங்க மறுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

    ×