search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருவி"

    • பேச்சிப்பாைறயில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றம்
    • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட் டம் 20.40 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழு வதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிபாறை பெருஞ்சாணி சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சிபாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக தடை நீடிக்கப் பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் மழை குறைந்திருந்த நிலையில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

    பேச்சிபாறை, பெருஞ்சாணி மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் சாரல் மழை பெய்தது. புயல் எச்ச ரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அணை யில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குழித்துறை ஆறு, கோதை ஆற்றின் கரை யோர பொதுமக்கள் பாது காப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறிவு றுத்தப்பட்டு உள்ளனர். பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.05 அடியாக உள்ளது. அணைக்கு 967 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 788 கன அடி தண்ணீரும் உபரிநீராக 1024 கனஅடி தண்ணீரும் வெளி யேற் றப்பட்டு வருகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட் டம் 73.10 அடியாக உள் ளது. அணைக்கு 448 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 50 அடியை நெருங்குகிறது.நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட் டம் 20.40 அடியாக உள்ளது.

    • மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு
    • பேரூராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கிழக்கு ரத வீயியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் உடைப்பு ஏற்பட்ட குழாயிலிருந்து செயற்கை நீரூற்று போல தண்ணீர் வெளியேறி பொதுமக்களுக்கு செல்ல வேண்டிய பல லட்சம் லிட்டர் குடிநீர் அருவி போல சாலையில் சென்று வீணாகியது. கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அதன் காரணமாக உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.இது குறித்து பொதுமக்கள் அவிநாசி பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
    • பேச்சிப்பாறையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் குறைப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்து வந்த மழை யின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    பேச்சிபாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வழிகிறது. பாசன குளங்களும் நிரம்பியுள்ளது.இந்த நிலையில் தற்பொழுது மழை சற்று குறைந்துள்ளது‌. மழை குறைந்ததையடுத்து பேச்சிபாறை அணை யிலிருந்து வெளியேற்றப் பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப் பட்டு வருகிறது.

    இன்று பேச்சிபாறை அணையில் இருந்து 316 கன அடி உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளி யேற்றப்படும் உபரிநீரின் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கோதை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதை யடுத்து இன்றும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டு இருந்தது. விடு முறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவிலிருந்தும் ஏராள மான சுற்றுலா பயணி கள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர்.

    ஆனால் அருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டி யதால் அருவியில் குளிப்ப தற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற னர்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 41.23 அடியாக இருந்தது. அணைக்கு 387 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 316 கன அடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.73 அடியாக உள்ளது. அணைக்கு 356 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 350 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    சிற்றார்-1 அணை நீர் மட்டம் 14.89 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 14.99 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 45.93 அடியாகவும் உயர்ந்துள்ளது.

    • மழையால் ஆறுகளில் வெள்ளம்
    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மப்பும் மந்தாரமு மாகவே காட்சியளித்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே மழையின் வேகம் அதிக மாக இருந்தது. இரணி யல், பாலமோர், கோழிப் போர்விளை, அடையா மடை, குருந்தன் கோடு, முள்ளங்கினா விளை, ஆணைக்கிடங்கு பகுதி களில் தொடர்ந்து மழை பெய்தது.

    இரணியலில் 76 மில்லி மீட்டரும், பாலமோரில் 22.4 மில்லி மீட்டரும் பேச்சிப்பாறை, சிவலோ கம் பகுதிகளில் 19 மில்லி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    பேச்சிப் பாறை, பெருஞ்சாணி பகுதிகளில் பெய்து வரும் மழை யின் காரணமாக அணை களுக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அனையில் இருந்து மறுகால் திறந்துவிடப்பட்டு உள்ள தால் திற்பரப்பு அருவி யில் தண்ணீர் அர்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

    ஆனால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்ப தால் சுற்றுலா பயணி கள் அதிக அளவில் வந்திருந்த னர். அவர்கள் அருவியில் குளிக்காமல் வெளியில் இருந்து அருவியை சுற்றி பார்த்து சென்றனர். திற்பரப்பு பேரூராட்சி சார்பாக ஊழியர்கள் தடை உத்தரவு தட்டி போர்டு வைத்து இருக்கிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-19.2, பெருஞ்சாணி-16.2, சிற்றார்-1-18.8, சிற்றார்- 2-19.6, பூதப்பாண்டி-3.2, களியல்-24.2, கன்னிமார்- 3.6, குழித்துறை-18.2, நாகர்கோவில்-1, சுரு ளோடு-12.4, தக்கலை-2, இரணியல்-76, பால மோர்-22.4, மாம்பழத்து றையாறு-16.4, திற்பரப்பு- 24.8.

    கோழிப்போர்விளை- 7.8, அடையாமடை-19.2, குருந்தன்கோடு-5.2, முள்ளங்கினாவிளை- 10.2, ஆணைக்கிடங்கு-15, முக்கடல்-2

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 42.31 அடியாக உள்ளது. அணைக்கு 921 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1016 கனஅடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.04 அடியாக உள்ளது. அணைக்கு 930 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணை யில் இருந்து 1872 கன அடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது.

    சிற்றார்-1 அணை நீர்மட்டம் 14.07 அடியாக வும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 14.17 அடியா கவும், பொய்கை நீர்மட் டம் 16 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு நீர்மட்டம் 40.60 அடியா கவும், முக்கடல் நீர்மட்டம் 13.60 அடியாகவும் உள்ளது.

    • குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது.
    • சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் ஐந்தருவி,மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் மெயினருவியில் தொடர்ந்து தண்ணீர் அதிகளவில் விழுந்ததால் அங்கு மட்டும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

    • மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
    • கூடலூர்-மசினகுடி இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளது. நேற்று நடுவட்டம்(128 மி.மீ.), கூடலூரில்(107 மி.மீ.) அதிகபட்ச மழை அளவு பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில் நடுவட்டம், பைக்காரா பகுதியில் இருந்து வரும் தண்ணீர் மாயார் ஆற்றில் கலந்து ஓடுவதாலும், முதுமலை வனப்பகுதியில் பெய்த தொடர் மழையாலும் எம்.ஜி.ஆர். அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதேபோல் தரைப்பாலம் மூழ்கியவாறு உள்ளதால் கூடலூர்-மசினகுடி இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பஸ் போக்குவரத்தும் இல்லாததால் மாணவ- மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வர முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    கூடலூர் நகரில் இன்று காலை முதல் கனமழை பெய்தது. பின்னர் படிப்படியாக மழை குறைந்து லேசான வெயில் தென்பட்டது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு பிறகு பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதேபோன்று தேவர்சோலை பேரூராட்சி கணியம் வயல் பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவரது வீடு மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்தது. மேலும் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா பகுதியில் வாய்க்காலில் இன்றும் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தெருவுக்குள் வழிந்து ஓடியது.

    இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கூடலூர் சின்னப்பள்ளி வாசல் தெருவில் இருந்து கோத்தர் வயல் செல்லும் சாலையில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் சாலையில் தேங்கியது. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து அடைப்புகளை அதிகாரிகள் சரி செய்தனர். அதன் பின்னர் தண்ணீர் சீராக வழிந்து ஓடியது.

    • குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது
    • சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியதையடுத்து திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.

    நேற்று இரவும் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலையிலும் மாவட்ட முழுவதும் மழை நீடித்தது. நாகர்கோவிலில் காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

    வடசேரி, பார்வதிபுரம், கோட்டார், புத்தேரி பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. கோட்டார் பகுதியில் மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    இரணியல், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், கொட்டாரம், மயிலாடி, பூதப்பாண்டி, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியதையடுத்து அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 22.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.பேச்சிப்பாறை நீர்மட்டம் இன்று காலை 39.50 அடியாக உள்ளது.அணைக்கு 939 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 639 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.80 அடியாக உள்ளது.அணைக்கு 769 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.சிற்றாறு-1அணை நீர்மட்டம் 11.28 அடியாகவும் சிற்றார்- 2 அணை நீர்மட்டம் 11.38 அடியாகவும் பொய்கை நீர்மட்டம் 16.90 அடியாகவும் மாம்பழத்துறையார் அணையின் நீர்மட்டம் 28.63 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை12, பெருஞ்சாணி 15. 6, சிற்றாறு1- 7.2, சிற்றார்-2-6.4 , பூதப்பாண்டி-12.6, களியல்-18.4, கன்னிமார்-8.2, கொட்டாரம்-2.8, குழித்துறை-4 , மயிலாடி-3.8 , நாகர்கோவில்-7.6, தக்கலை 5, சுருளோடு 11, பாலமோர்-16.4 , இரணியல்-9, திற்பரப்பு-22.2, ஆரல்வாய்மொழி-4, கோழி போர் விளை-9, அடையாமடை-4.4, குறுந்தன்கோடு-6.8.

    திருவட்டார் ஒன்றியத்குட்பட்ட பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ×