search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    • இன்று சதுர்த்தி விரதம்.
    • மாணிக்கவாசகர் நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-25 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை காலை 6.59 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: ஆயில்யம் காலை 9.09 மணி வரை பிறகு மகம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சதுர்த்தி விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி வரும் காட்சி. மாணிக்கவாசகர் நாயனார் குருபூஜை. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கருட வாகனத்தில் பவனி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் ஆளும் பல்லக்கில் புறப்பாடு. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞான சம்பந்தர் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-மகிழ்ச்சி

    மிதுனம்-நலம்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-உயர்வு

    கன்னி-ஆர்வம்

    துலாம்- சிந்தனை

    விருச்சிகம்-மேன்மை

    தனுசு- சிறப்பு

    மகரம்-தெளிவு

    கும்பம்-விவேகம்

    மீனம்-பண்பு

    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம்.
    • ஸ்ரீ கோதண்டராம சுவாமி அனுமார் வாகனத்தில் திருவீதி உலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-24 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை (முழுவதும்)

    நட்சத்திரம்: பூசம் காலை 7.22 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி அனுமார் வாகனத்தில் திருவீதி உலா. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீசுவரரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசியம்மன் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-இரக்கம்

    கடகம்-ஈகை

    சிம்மம்-உதவி

    கன்னி-ஊக்கம்

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- பாராட்டு

    மகரம்-கவனம்

    கும்பம்-நிறைவு

    மீனம்-நிம்மதி

    • அமிர்தத்தோடு வந்ததால் அமிர்த லட்சுமி.
    • அமிர்த லட்சுமியை வணங்குவதால் உடல் நலம் பெறலாம்.

    மகாலட்சுமிக்குரிய விரத நாள்களில் ஒன்று அமிர்த லட்சுமி விரதம். திருப்பாற்கடலை கடைந்தபோது, ஆதிநாளில் வந்தவள் என்பதால் இவளுக்கு ஆதிலட்சுமி என்ற சிறப்புக் காரணப் பெயர் ஏற்பட்டுள்ளது.

     அமிர்தத்தோடு வந்ததால் அமிர்த லட்சுமி. இந்த அமிர்த லட்சுமியை வணங்குவதால் உடல் நலம் பெறலாம். அழகிய, தூய்மையான தாம்பாளத்தின் மீது தலை வாழை இலை இட்டு அதன் மீது அரிசி பரப்பி, கலசம் வைக்க வேண்டும்.

    இக்கலசத்தினுள் சுத்தம்மன் தீர்த்தம் மற்றும் வாசனை பொருட்கள் (பச்சை கற்பூரம், மஞ்சள் பொடி), ஆகியவற்றை இட்டு நிரப்ப வேண்டும். கலசத்தின் மீது தேங்காயின் குடுமிப் பகுதி மேல்புறம் இருக்குமாறு வைக்க வேண்டும். அந்த தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும்.

    முன்பகுதி திருமுகத்துக்குப் பொட்டிட்டு, பூக்களைச் சூட்டி அலங்கரிக்க வேண்டும். மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாடி வழிபட வேண்டும். பூஜை முடிந்த பின்பு தாயாருக்குப் பருப்பு பாயசம், தேங்காய் மற்றும் உளுந்து கொழுக்கட்டை, பால், தயிர், வெற்றிலை பாக்கு, பழம் இவை அனைத்தையும் நைவேத்தியம் செய்து தூப தீபம் காட்டி நிறைவு செய்ய வேண்டும்.

    • இன்று சந்திர தரிசனம். சுபமுகூர்த்த தினம்.
    • ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் சந்திர பிரபையில் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-23 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவிதியை மறுநாள் விடியற்காலை 5.44 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: பூசம் (முழுவதும்)

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சந்திர தரிசனம். சுபமுகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் சந்திர பிரபையில் புறப்பாடு. ஆவுடையார் கோவில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-முயற்சி

    கடகம்-அமைதி

    சிம்மம்-கவனம்

    கன்னி-சுபம்

    துலாம்- உற்சாகம்

    விருச்சிகம்-வரவு

    தனுசு- பெருமை

    மகரம்-உயர்வு

    கும்பம்-புகழ்

    மீனம்-கவுரவம்

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தெப்ப உற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-22 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை மறுநாள் விடியற்காலை 5.06 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: பூனர்பூசம் மறுநாள் விடியற்காலை 5.52 மணி வரை பிறகு பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ராமநாதபுரம் ஸ்ரீ கோண்டராம சுவாமி உற்சவம் ஆரம்பம், தோளுக்கினியானில் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தெப்ப உற்சவம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருப்புல்லாணி ஸ்ரீ ஆதிஜெகநாதப் பெருமாள் காலை சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீ சனி பகவான் சிறப்பு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தெளிவு

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-ஆதாயம்

    கடகம்-பெருமை

    சிம்மம்-அன்பு

    கன்னி-ஆக்கம்

    துலாம்- அனுகூலம்

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- உவகை

    மகரம்-பணிவு

    கும்பம்-நிம்மதி

    மீனம்-போட்டி

    • முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் காட்சி அளித்தார்.
    • கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி உள்ள பகுதியில் தங்கி இருந்தனர்.

    இன்று அதிகாலை கோவில்குளக்கரை மற்றும் காக்களூர் ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆனி அமாவாசையை முன்னிட்டு கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதேபோல் முத்தங்கி சேவையில் வருகிற 7-ந்தேதி வரை மூலவர் வீரராகவ பெருமாள், கன கவல்லி தாயார் காட்சியளிப்பர்.

    இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள்கிறார். குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இதேபோல் நாளையும் மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை.
    • பாதாள லிங்கேஸ்வரர் என்ற பெயரில் இறைவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம். இந்த கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ளது பாதாள லிங்கம்.

    இங்கு 'பாதாள லிங்கேஸ்வரர்' என்ற பெயரில் இறைவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்ய, சில படிகள் பாதாளத்தில் இறங்கிச் சென்று வழிபட வேண்டும். இந்த சிவலிங்கத்திற்கு முன்பாக நந்தி சிலையும் இருக்கிறது.

    ஆன்மிக மற்றும் ஞானத்திற்கான தேடலுடன் திருவண்ணாமலைக்கு வந்தவர், ரமண மகரிஷி. அவருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது, இங்குள்ள பாதாள லிங்கத்தின் சன்னிதியில் சென்று வழிபட்டார். அங்கு ஒரு புற்று இருந்தது. அதற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து ஞானம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

    மரண பயத்தை போக்கும் இந்த பாதாள லிங்கமும், கிரிவலப் பாதையின் மலைக்கு பின்புறம் அமைந்த அடி அண்ணாமலை என்ற பெயரில் அமைந்த தனி ஆலயத்தில் உள்ள சிவலிங்கமும் விசேஷமானது. இந்த இரண்டு லிங்கங்களையும் மனமுருக வழிபட்டால், மரணபயம் விலகும், மன நிறைவு உண்டாகும்.

    ஷோடச லிங்க பலன்கள்

    * புற்று மண் லிங்கம் - முக்தி கிடைக்கும்

    * ஆற்று மணல் லிங்கம் - பூமி லாபம் உண்டு

    * பச்சரிசி லிங்கம் - பொருள் பெருக்கம் ஏற்படும்

    * சந்தன லிங்கம் - இன்பங்கள் வந்துசேரும்

    * மலர்மாலை லிங்கம் - நீண்ட வாழ்நாள் அமையும்

    * அரிசி மாவு லிங்கம் - உடல் வலிமை பெறும்

    * பழம் லிங்கம் - நல்லின்ப வாழ்வு

    * தயிர் லிங்கம் - நல்ல குணம்

    * தண்ணீர் லிங்கம் - மேன்மைகள் உண்டாகும்

    * சோறு (அன்னம்) லிங்கம் - உணவு பெருக்கம்

    * முடிச்சிட்ட நாணல் (கூர்ச்சம்) - முக்தி கிடைக்கும்

    * சர்க்கரை வெல்லம் லிங்கம் - விரும்பிய இன்பம் கிடைக்கும்

    * பசுவின் சாணம் லிங்கம் - நோயற்ற வாழ்வு அமையும்

    * பசு வெண்ணெய் லிங்கம் - மனமகிழ்ச்சி பெருகும்

    * ருத்திராட்ச லிங்கம் - நல்ல அறிவு

    * திருநீற்று விபூதி லிங்கம் - ஐஸ்வரியம் வந்துசேரும்

    • செவ்வாய்க்கிழமை நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபடலாம்.
    • குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபடலாம்.

    * குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து, அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபட்டு, ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து வணங்கினால், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

    * கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.

    * ஒரு சில பெண்கள் ருதுவாவது தள்ளிப்போகும். அந்த குறைபாடு உள்ளவர்கள், ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயத்தில் தொடர்ச்சியாக 5 வியாழக்கிழமைகளில், சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து, வெள்ளி நாணயத்தை பிரசாதமமாகப் பெற்றுச் செல்கின்றனர். இந்த பரிகாரத்தால் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளும் நீங்குகிறதாம்.

    * வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, பூச நட்சத்திரம், அட்சய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து வழிபட்டால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். அதோடு மன அமைதி, வீடு, வாகன யோகம், திருமண வரம், குழந்தை வரம், தொழில் அபிவிருத்தி, உத்தியோகம் ஆகியவற்றையும் பெற்றிடலாம்.

    * மேற்குமுகமாக வீற்றருளும் கால பைரவரை, தொடர்ச்சியாக 6 தேய்பிறை அஷ்டமி அல்லது ராகு காலங்கள், அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 8 நெய் தீபம் ஏற்றி, செவ்வரளியால் அர்ச்சனை செய்து வணங்கினால், பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இனிதாக நடந்தேறும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள் அகலும்.

    * பிரம்மஹத்தி தோஷம் மற்றும் குரு சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்ரீநிதீஸ்வரருக்கு வியாழக்கிழமையில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை, ஐந்து நெய் தீபமேற்றி, ஐந்து முறை ஆலய வலம் வந்து வழிபட்டால், அந்த பாதிப்புகள் நீங்குவதுடன், பூர்வ ஜென்ம பாவங்களும் விலகும். மேலும் அவர்களின் இல்லத்தில் நிலவும் வறுமை நீங்கி, செல்வம் பெருகும்.

    • ஆலயத்தின் பின்புறம் பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் உள்ளது.
    • கணபதி, தன் கையில் பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கிறார்.

    இன்றைய உலகில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது, நிதிதான். பணத்தேவை இருப்பவர்களே இன்று அதிகம். சிலருக்கோ நிதியை சேகரிப்பதில் சிக்கல். பலருக்கு நிதியை பாதுகாப்பதில் சிக்கல். இதற்கெல்லாம் விடை தருபவராக இருக்கிறார், விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூரில் உள்ள ஸ்ரீநிதீஸ்வரர். இத்தல இறைவனை பிரம்மதேவரும், நிதிகளுக்கு அதிபதியான குபேரனும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.

     தல வரலாறு

    அன்ன வாகனன் என்றழைக்கப்படும் படைப்பு கடவுளான பிரம்மதேவரும், காக்கும் கடவுளான திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று போட்டியிட்டனர். ஈசனின் அடியையும், முடியையும் காண்பர்களே வெற்றி பெறுவர் என்று கூறபட்பட்டதும், பிரம்மன் அன்னமாக மாறி, சிவபெருமானின் முடியைத் தேடியும், திருமால் வராக உருவெடுத்து ஈசனின் திருவடியைத் தேடியும் பயணித்தனர். ஒரு கட்டத்தில் ஈசனின் திருவடியை காண முடியாமல், தன் தோல்வியை ஒப்புக் கொண்டார், திருமால்.

    ஆனால் பிரம்மனோ, மகாதேவரின் முடியை கண்டு விட்டதாக பொய் சொன்னார். அதற்கு சாட்சியாக, ஈசனின் தலையில் இருந்து விழுந்து பூமி நோக்கி வந்து கொண்டிருந்த தாழம்பூவை கூட்டு சேர்த்துக் கொண்டார்.

    இதை அறிந்த ஈசன் கடும் கோபம் கொண்டு, பிரம்மனை அன்னப்பறவையாகவே இருக்கும்படி சாபம் கொடுத்தார். அந்த சாபத்திற்கு விமோசனம் தேடி பிரம்மன், அன்னப் பறவையின் தோற்றத்திலேயே பல உலகங்களுக்குச் சென்றார்.

    இறுதியில் பூலோகம் வந்து, ஒரு பொய்கையை உருவாக்கினார். பின்னர் ஒரு சிவலிங்கத்தைச் செய்து, அதற்கு தான் உருவாக்கிய தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து வந்து அபிஷேகித்து வழிபட்டார்.

    பல காலமாக பிரம்மன் செய்த பூஜையால் மனமுருகிய சிவபெருமான், ரிஷப வாகனத்தில் பிரம்மனுக்கு காட்சி கொடுத்து, அவரது சுய உருவை மீண்டும் கொடுத்தார். அன்னப் பறவையின் வடிவத்தில் பிரம்மன், இங்கு வழிபாடு செய்த காரணத்தால், இந்த திருத்தலத்திற்கு 'அன்னம்புத்தூர்' என்ற பெயர் வந்தது.

    ஒருமுறை இத்தலத்திற்கு வந்த குபேரன், தன்னிடம் அள்ள அள்ள குறையாத செல்வம் இருக்க வேண்டும். எக்காலத்திலும் நான் தனாதிபதியாக விளங்கிட வேண்டும் என்று கேட்டு, இத்தல இறைவனை வழிபட்டான்.

    அதன்படியே குபேரனுக்கு, அவனை விட்டு என்றும் நீங்காத நவ நிதிகளையும் இறைவன் வழங்கியதாக இத்தல மகாத்மியம் கூறுகிறது. குபேரன் வழிபட்டதால், இத்தல இறைவன் 'ஸ்ரீநிதீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    ஆலய அமைப்பு

    ஊருக்கு மேற்கே உள்ள ஏரியின் எதிரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லை. கிழக்கு நோக்கியபடி சுவாமி சன்னிதியும், தெற்கு பார்த்தவாறு அம்பாள் சன்னிதியும் உயரமான மேடை மீது அமைக்கப்பட்டுள்ளன. ஆலயம் முழுவதும் கல் கட்டிடமாக உள்ளது.

    கருவறைக்குள் கிழக்கு நோக்கியபடி ஸ்ரீநிதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். பிரம்மனும், குபேரனும் வணங்கிய ஈசனை நாமும் வணங்குகின்றோம் என்று நினைக்கும்போதே மெய் சிலிர்ப்பதை உணர முடியும்.

    ஆலய மகா மண்டபத்தில் வீற்றருளும் கணபதி, தன் கையில் பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கிறார். பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட பாட்னாவில் இருந்து, இந்த கணபதியின் சிலை கொண்டுவரப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

    தெற்கு நோக்கிய சன்னதியில் நின்ற கோலத்தில் கனக திரிபுரசுந்தரி அம்மன் அருள்பாலிக்கிறார். இந்த அன்னைக்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருக்கின்றன.

    ஆலய வளாகத்துக்குள் தென்மேற்கு மூலையில் லட்சுமி கணபதியும், வடமேற்கில் வள்ளி - தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியரும் தனித்தனியே சன்னிதி கொண்டுள்ளனர். தென்புறம் தனியாக உள்ள சன்னிதியில் மிகப் பழமை வாய்ந்த துர்க்காதேவியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக புதிய சிலையில் இருக்கிறது.

    கிழக்குப்புறத்தில் பைரவருடன், தனா ஆகர்ஷண பைரவரும் காட்சி தருகிறார். ஆலயத்தின் பின்புறம் பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் உள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சம், கொன்றை மரம் ஆகும்.

    ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஆலயத்தை, ராஜராஜ சோழன் கண்டு வியந்து பல்வேறு திருப்பணிகள் செய்ததற்கான கல்வெட்டு இங்கே காணப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிதலமடைந்து மண்மூடிப் போன இந்த ஆலயமானது, பக்தர்களின் அர்ப்பணிப்பு காரணமாக கற்கோவிலாக எழுப்பப்பட்டு, 2014-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த ஆலயமானது, தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற இடம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, அன்னம்புத்தூர்.

    • இன்று சர்வ அமாவாசை.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 21 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: அமாவாசை நாளை விடியற்காலை 5 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: திருவாதிரை நாளை விடியற்காலை 5.01 மணி வரை. பிறகு புனர்பூசம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வ அமாவாசை. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளுர் தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் தெப்போற்சவம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பெருமை

    ரிஷபம்-விவேகம்

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்- பொறுமை

    சிம்மம்-லாபம்

    கன்னி-உதவி

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-உற்சாகம்

    தனுசு- விருத்தி

    மகரம்-மேன்மை

    கும்பம்-பாராட்டு

    மீனம்-ஊக்கம்

    • இன்று மாத சிவராத்திரி.
    • திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-20 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி காலை 6.27 மணி வரை பிறகு சதுர்த்தசி. நாளை விடியற்காலை 4.55 மணி வரை பிறகு அமாவாசை.

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் நாளை விடியற்காலை 4.35 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று மாத சிவராத்திரி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-பரிவு

    கடகம்-ஜெயம்

    சிம்மம்-பக்தி

    கன்னி-கவனம்

    துலாம்- நற்செயல்

    விருச்சிகம்-சாந்தம்

    தனுசு- களிப்பு

    மகரம்-துணிவு

    கும்பம்-சுபம்

    மீனம்-வரவு

    • சுருட்டப்பள்ளி பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற சிறந்த தலம்.
    • இங்கு சயன கோலத்தில் காட்சி தரும் சிவனை தரிசிக்கலாம்.

    சுருட்டப்பள்ளி:

    பிரதோஷத்திற்கு பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் ஒன்று சுருட்டப்பள்ளி. இது ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ளது.

    சிவபெருமானை பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை சுருட்டப்பள்ளி திருத்தலத்தில் தரிசிக்கலாம். இத்தலம் உருவானதே பிரதோஷத்தை ஒட்டி தான். பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற தலம் என்பதை உணர்த்தும் வகையில் கோவிலின் எதிரே பெரிய நந்தி அமைந்துள்ளது.

    துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தார் இந்திரன். அசுரர்கள் இந்திரனின் அரசை கைப்பற்றினர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெறவேண்டும் என தேவகுரு பிரகாஷ் பத்தி தெரிவித்தார். அதன்படி திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர்.

    அப்போது வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தைக் கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து அதிலிருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என சிவபெருமானை வேண்டினர்.

    சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்துவரும்படி கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி கொண்டு வந்து சிவபெருமானிடம் தந்தார். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும், உலகமும் அழிந்துவிடும். எனவே இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எங்களைக் காத்திடுங்கள் என சிவனிடம் மன்றாடினர்.

    உடனே சிவன் அந்தக் கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த பார்வதி தேவி, சிவனை தன் மடியில் கிடத்திக் கொண்டு சிவபெருமானின் வாயில் இருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கழுத்தின் பகுதியில் கைவைத்து அழுத்தினார். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. இதனால் அவர் நீலகண்டன் ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் அமுதாம்பிகை ஆனார். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார்.

    அப்படி செல்லும் வழியில் சுருட்டப்பள்ளி தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும், ஸ்கந்த புராணமும் கூறுகிறது.

    சிவன் பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை இந்தியாவில் எந்த இடத்திலும் பார்க்க முடியாது.

    சிவபெருமான் சுருட்டப்பள்ளி ஆலயத்தில் அம்மன் மடியில் படுத்தவாறு இருப்பதைப் பார்க்கலாம். இந்தத் தலத்தில் சுவாமி பள்ளி கொண்டிருப்பதால் பள்ளி கொண்டீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

    ஒவ்வொரு மாதம் நடைபெறும் பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சவுபாக்கிய செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கையாக இருக்கின்றது.

    ×