search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    • கொடி மரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
    • ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இத்திருவிழா அடுத்த மாதம் 4-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.

    அதிகாலை 3 மணிக்கு கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு மேளதாளங்கள் முழங்க அதிகாலை 5.15 மணிக்கு கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் காப்புகட்டிய ஹரிஹரசுப்பிரமணிய பட்டர் கொடியை ஏற்றினார்.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் சங்கரலிங்க தம்பி ரான் சுவாமிகள், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, கோவில் அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், இணை ஆணையர் ஞானசேகரன், கோவில் பணியாளர்கள், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தர் கருத்தப்பாண்டி நாடார், ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன், திரிசுதந்திரப்பெருமக்கள், செந்தில்முருகன், கவுன்சிலர் ரேவதி கோமதி நாயகம், தேவார சபையினர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    கொடியேற்றத்தையொட்டி பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, கனகராஜ் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருநாளான வருகிற 28-ந் தேதி மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனையும், பின்னர் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    7-ம் திருவிழா அன்று அதிகாலை 5 மணிக்கு உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் 8.45 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின்னர் பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    8-ம் திருநாளான 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
    • திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் உற்சம் ஆரம்பம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-8 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: பஞ்சமி நண்பகல் 1.25 மணி வரை. பிறகு சஷ்டி.

    நட்சத்திரம்: அசுவினி நள்ளிரவு 12.03 மணி வரை. பிறகு பரணி.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பெருலயன் ஸ்ரீமுருகப் பெருமான் விழா தொடக்கம். திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் உற்சம் ஆரம்பம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, திருல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் காலை சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆக்கம்

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-தேர்ச்சி

    கடகம்-நலம்

    சிம்மம்-அன்பு

    கன்னி-ஆசை

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- சாதனை

    மகரம்-இரக்கம்

    கும்பம்-தெளிவு

    மீனம்-செலவு

    • அக்டோபர் 3 முதல் 12-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.
    • அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 3 முதல் 12-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.

    பிரம்மோற்சவத்தின் போது சாமியின் வாகன சேவையை காண பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் வருவார்கள். அவர்களுக்கு திருப்திகரமாக தரிசனம் செய்து வைக்கும் வகையில் அக்டோபர் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 3-ந்தேதி (அங்குரார் ப்பணம் ) முதல் 12-ந் தேதி (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) வரை தினமும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் வி.ஐ.பி. தரிசனம் அதிகாரி பதவியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடலில் 18 இடங்களில் பூசிக்கொள்ள வேண்டும்.
    • அவ்வையார் 'நீறில்லா நெற்றி பாழ்' என்று குறிப்பிடுகிறார்.

    சைவ நெறியைப் பின்பற்றுபவர்களின் புனிதச் சின்னமாக இருப்பது, திருநீற்றுப் பட்டை. இந்தத் திருநீறானது, பசுஞ்சாணத்தை எரியூட்டி பெறப்படுகிறது. சிறப்புமிக்க அந்தத் திருநீற்றை, தலை முதல் கால் வரை, உடலில் 18 இடங்களில் பூசிக்கொள்ள வேண்டும் என்று வரைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    திருஞானசம்பந்தர், திருநீற்றின் சிறப்பைப் பற்றி 'திருநீற்றுப் பதிகம்' பாடல் தொகுப்பையே வழங்கியிருக்கிறார். 'மந்திரமாவது நீறு..' என்று தொடங்கும் அந்த பதிகப் பாடல், கூன் பாண்டியனின் வெப்பு நோயை நீக்குவதற்காக, ஞானசம்பந்தரால் பாடப்பட்டது ஆகும். அவ்வையாரும் கூட 'நீறில்லா நெற்றி பாழ்' என்று குறிப்பிடுகிறார்.

    அந்த திருநீறானது, 'கல்பம், அனுகல்பம், உபகல்பம், அகல்பம்' என்று நான்கு வகைப்படும். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

    * கன்றுடன் ஆரோக்கியமாக வாழும் பசுவின் சாணம், கீழே விழும் முன்பாக, தாமரை இலையில் பிடித்து, வேதமந்திரங்கள் ஓதி, முறைப்படி தாயரிக்கப்படுவது 'கல்ப திருநீறு.'

    * பசுமை நிறைந்த புற்களை மட்டுமே மேயும், பசுக்களின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுவது 'அனுகல்ப திருநீறு' ஆகும்.

    * ஒரே இடத்தில் கூட்டமாக இருக்கும் பசுக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் சாணத்தை, அக்னியில் எரித்துக் கிடைப்பதுவே 'உபகல்ப திருநீறு.'

    * வெவ்வேறு இடங்களில் இருக்கும் பல்வேறு பசுக்களிடம் இருந்து கிடைக்கும் சாணத்தைக் கொண்டு தயார் செய்யப்படுவது, 'அகல்ப திருநீறு.'

    • அவதாரங்களில் முக்கியமானது கிருஷ்ண அவதாரம்.
    • துவாபர யுகத்தின் முடிவில், கிருஷ்ணரின் அவதாரமும் முடிவுக்கு வந்தது.

    காக்கும் தெய்வம் என்று அழைக்கப்படுபவர் மகாவிஷ்ணு. இந்த உலகத்தில் எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுபவர்.

    அவரது அவதாரங்களில் முக்கியமானது, கிருஷ்ண அவதாரம். அவர் அவதரித்த நாளையே 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடுகிறோம்.

    வசுதேவர்- தேவகி தம்பதியருக்கு ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவில் சிறைச்சாலைக்குள் பிறந்தவர், கிருஷ்ணர். ஆனால் அவர் வளர்ந்தது கோகுலத்தில் உள்ள நந்தகோபர்- யசோதா தம்பதியரிடம்.

    தன்னுடைய 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது காலங்கள் கழிந்தன.

    இந்த காலகட்டங்களில் கிருஷ்ணர், பல அரக்கர்களை அழித்ததோடு, பல அற்புதங்களை செய்து கோபியர்களையும், கோகுலவாசிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    பிறந்தது முதலே கிருஷ்ணரைக் கொல்ல ஏராளமான அரக்கர்களை அனுப்பிய கம்சனுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியாக அவன், கிருஷ்ணரை மதுராவிற்கு அழைத்து கொன்று விட முடிவு செய்தான்.

    அதன்படி "நான் தனுர்யாகம் செய்யப்போகிறேன். அதற்கு வேண்டிய பொருட்களுடன் நந்தகோபரை குடும்பத்துடன் இங்கு வரச் சொல்லுங்கள்" என்று அமைச்சர் அக்ரூரரிடம் கூறி அனுப்பினான். அவரும் நந்தகோபரிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். இதையடுத்து பலராமரும், கிருஷ்ணரும் மதுராவிற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

    ஆனால் அங்கு மல்யுத்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான், கம்சன். கண்ணனை அழிப்பதற்காக சானூரன், முஷ்டிகன், கூடன், சலன் போன்ற பலம் வாய்ந்த மல்லர்களை தயார் செய்து வைத்திருந்தான். அவர்களுடன், கிருஷ்ணரையும், பலராமரையும் யுத்தம் செய்யும்படி கம்சன் உத்தரவிட்டான்.

    அப்போது கிருஷ்ணருக்கு 10-க்கும் குறைவான வயதுதான். ஆனால் கிருஷ்ணரும், பலராமரும் எந்த தயக்கமும் இன்றி, மாமிச மலைபோல் இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்கள் அனைவரையும் கொன்றனர்.


    இறுதியில் கம்சனையும், கிருஷ்ணர் வதம் செய்தார். பின்னர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்த, பெற்றோரான வசுதேவர்- தேவகி, பாட்டனார் உக்கிரசேனர் ஆகியோரை விடுவித்தார்.

    அதன்பிறகுதான் தங்களின் கல்வியையே கிருஷ்ணரும், பலராமரும் கற்கத் தொடங்கினர். அவர்களின் குருவாக இருந்து கல்வியை கற்பித்தவர், சாந்திபனி முனிவர். இவரிடம் சகலக் கலைகளையும் கற்றுத் தேர்ந்த கிருஷ்ணர், அவருக்கு குரு தட்சணையாக வெகு காலத்திற்கு முன்பு, கடலில் விழுந்த குருவின் மகனை, உயிருடன் மீட்டுக்கொண்டு வந்து கொடுத்தார்.

    துவாபர யுகத்தின் முடிவில், கிருஷ்ணரின் அவதாரமும் முடிவுக்கு வந்தது. இதையெல்லாம் நினைவுகூரும் வகையில்தான் ஆண்டுதோறும், கிருஷ்ணரின் அவதார நாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் குதூகலம் நிறைந்திருக்க வாசல் முழுவதும் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை சின்னச் சின்ன காலடிச் சுவடுகளை வரைவார்கள். மாயக்கண்ணன் இளமையில் செய்த சேட்டைகளை நினைத்தாலே பரமானந்தத்தை தரும்.

    அவற்றில் முக்கியமானது, கோபியர் வீடுகளில் உறியில் கட்டியிருக்கும் பானைகளை உடைத்து வெண்ணெயை எடுத்து தின்றது. இதை நினைவுகூரும் வகையில்தான், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பல இடங்களிலும் உறியடித் திருவிழா நடத்தப்படுகின்றன.

    கிருஷ்ணர் தனக்காக இல்லாமல், உலகத்தின் உயிர்களுக்காக வாழ்ந்தவர். அதனால்தான் அவரை 'கண்ணா', 'முகுந்தா' என்று அழைக்கிறோம். 'கண்ணன்' என்றால் 'கண் போல காப்பவன்' என்று பொருள். 'முகுந்தா' என்றால் 'வாழ்வதற்கு இடம் அளித்து முக்தி அளிப்பவன்' என்று பொருள்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று பகவான் கிருஷ்ணர், நம் அனைவரின் வீட்டிற்கும் வந்து அருள்பாலிப்பார் என்பதே முக்கியமாக அம்சமாக பார்க்கப்படுகிறது. அவரை வரவேற்கும் விதமாகத்தான், அவரது பிஞ்சுப் பாதங்களை வீட்டில் வரைகிறோம்.

    வீட்டில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு அல்லது படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. அதோடு கிருஷ்ணருக்கு பிடித்த 'தஹிகலா'வை படைத்து வழிபட வேண்டும்.

    'தஹிகலா' என்பது பல்வேறு தின்பண்டங்களுடன் தயிரும், பாலும், வெண்ணெயும் ஆகியவற்றை கலந்து செய்வதாகும். தவிர சீடை, முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளையும் கிருஷ்ணருக்கு படைக்க வேண்டும். இவ்வாறு நைவேத்தியம் படைக்க முடியாதவர்கள், தங்களால் முடிந்ததை செய்யலாம்.

    ஏனெனில் "ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம், கொஞ்சம் தண்ணீர், அதோடு தூய்மையான பக்தியையும் சேர்த்து அளித்தால், நான் அவர்களுக்கு தேவையானதைச் செய்வேன்" என்று கீதையில் கண்ணன் சொல்லியிருக்கிறார்.


    கிருஷ்ணனின், மனைவியும்.. பிள்ளைகளும்..

    கண்ணனைப் பற்றி பேசும் போதெல்லாம், அவர் மீது அன்பு கொண்ட, அவரால் அன்பு செய்யப்பட்ட மூன்று பெண்கள் நினைவுக்கு வருவார்கள். அவர்கள்தான், ராதை, ருக்மணி, சத்யபாமா. கண்ணனுக்கு ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரவிந்தா, நாக்னஜிதி, பத்திரா, லக்குமனை என்று 8 பட்டத்து ராணிகள் உண்டு.

    இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 குழந்தைகள் பிறந்தன. கிருஷ்ணரின் பிள்ளைகளில் பிரத்யும்னன், அனுருத்தன், தீப்திமான், பானு சாம்பன், மது, பருஹத்பானு, சித்ரபானு, விருகன், அருணன், புஷ்கரன், வேதபாசு, ஸ்ருததேவன், சுருந்தனன், சித்திரபாகு, விருபன், கவிநியோக்தன் ஆகியோர் புகழ்பெற்றவர்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிருஷ்ணர் பாதத்துக்கு பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
    • மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுபவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணர் பாதத்துக்கு பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

    மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும். பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும்.

    சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும். வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், சிராவண மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் நடுஇரவில், ரோகிணி நட்சத்திரத்தில் விருஷப ராசியில் பிறந்தார். கோகுலாஷ்டமி திதியில், கிருஷ்ண தத்துவம் இப்பூவுலகில் 1000 மடங்கு அதிகம் ஆகியுள்ளது.

    மீதி நாட்களைக் காட்டிலும் அன்றைக்கு கிருஷ்ண தத்துவம் அதிக செயலாற்றலைக் கொண்டிருப்பதால் 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என நாமஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனைக் கொடுக்கும்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-7 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: சதுர்த்தி பிற்பகல் 3.48 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 1.35 மணி வரை. பிறகு அசுவினி.

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருமாலிஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் கோவிலில் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தேர்ச்சி

    ரிஷபம்-பயணம்

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-ஆர்வம்

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-பாசம்

    துலாம்- வாழ்வு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- வெற்றி

    மகரம்-உழைப்பு

    கும்பம்-பெருமை

    மீனம்-இன்பம்

    • தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம்.
    • ஆலிலை வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.

    தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார்.

    பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள். எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான்.

    மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும்.

    ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான்.

    ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய்.

    குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

    • வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.
    • விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை சந்திரனின் நான்காவது திதியை சதுர்த்தி என்றும், பவுர்ணமிக்குப் பிறகு குறைந்து வரும் சந்திரனின் நான்காவது திதியை சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைப்பது வழக்கம்.

    இதில் ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு கூடுதல் சிறப்பு வாய்ந்தது. இதை மகா சங்கட ஹர சதுர்த்தி என்பார்கள். அதாவது விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

    ஒரு வருடத்தில் 12 சங்கடஹர சதுர்த்திகள் வரும். இவை அனைத்திலும் விரதம் இருந்து விநாயகரை வழிபட முடியாமல் போனாலும் மகா சங்கடஹர சதுர்த்தி அன்று மட்டும் விரதம் இருந்து விநாயகரை மனதார வழிபட்டால், வருடம் முழுவதும் வரும் 12 சங்கடஹர சதுர்த்திகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். நினைத்த காரியங்களை நடத்தி வைக்கும் அற்புத விரதம் இது ஆகும்.

    புதிதாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கத் தொடங்குபவர்கள் மகா சங்கடஹர சதுர்த்தியில் தங்களின் விரதத்தை துவங்கலாம். அதோடு மகா சங்கடஹர சதுர்த்தி அன்று ஒரு குறிப்பிட்ட முறையில் விநாயகரை வழிபட்டால் வீட்டில் எப்படிப்பட்ட கஷ்டம் இருந்தாலும் அது விலகி விடும்.

    இந்த ஆண்டு மகாசங்கடஹர சதுர்த்தி இன்று (வியாழக்கிழமை) வருகிறது. இன்றைய தினம் மாலை 6.14 மணிக்கு பிறகே சதுர்த்தி திதி தொடங்குகிறது. மறுநாள் பகல் 3.48 மணி வரை மட்டுமே சதுர்த்தி திதி உள்ளது. இதனால் இன்றே மகாசங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினையும், விநாயகர் வழிபாட்டினையும் மேற்கொள்ளலாம்.

    பொதுவாக சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினை மாலையில் தான் மேற்கொள்ள வேண்டும். விநாயகரை வழிபட்ட பிறகு, சந்திரனை தரிசனம் செய்த பிறகு தான் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதி.


    இன்று அதிகாலையில் எழுந்து பூஜை அறையில் உள்ள விநாயகரை அலங்கரித்து, அருகம்புல் சாத்தி, விளக்கேற்றி விரதத்தை துவக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் பால்,பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

    அதுவும் முடியாதவர்கள் எளிமையான உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். மாலையில் வீட்டிலோ அல்லது விநாயகர் கோவிலுக்கு சென்றோ விநாயகர் வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

    விநாயகருக்கு விருப்பமான சுண்டல், கொழுக்கட்டை, மோதகம், பிள்ளையார் உருண்டை போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். விநாயகருக்கு கொழுக்கட்டை செய்யும் போதே உங்களின் வேண்டுதல்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

    பூஜை முடிந்த பிறகு அதை வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கோ அல்லது கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு வருபவர்களுக்கோ பிரசாதமாக வழங்கலாம். மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு உரிய விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டகம், விநாயகர் அஷ்டோத்திரம் போன்ற மந்திரங்களை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

    ஒரு ரூபாய் நாணயத்தை வீட்டில் உள்ள விநாயகரின் பாதத்தில் வைத்து மனதார உங்களின் வேண்டுதல்களை சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அந்த நாணயத்தை விநாயகர் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

    அடுத்த ஆண்டு மகா சங்கடஹர சதுர்த்தி நாளுக்குள் வேண்டுதல்கள் முழுமையாக நிறைவேறி, பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டால், இதேபோல் அடுத்த ஆண்டும் மகாசங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.

    இப்படி நீங்கள் வழிபட்டால் அடுத்த 11 நாட்களில் உங்களின் வேண்டுதல் நிறைவேறத் தொடங்குவதற்கான அறிகுறி தெரியத் தொடங்கும். மகா சங்கடஹர சதுர்த்தி தொடங்கி, ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விரதம் இருந்து விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.

    ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்றும் விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். சனி தோஷம், ராகு-கேது தோஷம், சனியால் ஏற்படும் பிரச்சனைகள், சர்ப தோஷத்தால் திருமணம் போன்றவற்றில் தடை உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.


    அதேபோல் சங்கடஹர சதுர்த்தி தோறும் விநாயகருக்கு மாலை வாங்கி சாற்றி, அந்த மாலையை வாங்கி வந்து வீட்டின் நிலைப்படியில் மாட்டி வைத்தால் வீடு வாங்க முடியாமல் தவிப்பவர்கள், வீட்டில் பல விதமான பிரச்சனைகளை அனுபவிப்பவர்கள், பலவிதமான தடை, தோல்விகளை சந்திப்பவர்கள் ஆகியோருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

    விநாயகருக்கு அணிவிக்கப்படும் அருகம்புல்லை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடுவதால் தீய சக்திகளால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.

    ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகருக்கு விரதம் இருக்க முடியாதவர்கள் அல்லது மாதந்தோறும் வரும் சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபட்டு, பூஜை செய்ய முடியாதவர்கள் இன்று மகா சங்கடஹர சதுர்த்தி அன்று, விரதம் இருந்து வழிபட்டால், ஓராண்டு முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


    இந்த சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது. ஜாதக ரீதியாக சந்திர தோஷம் இருந்தால் கூட நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருக்க முடியாதவர்கள், சந்திரன் உதயமாகும் நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தமனம் ஆகி சந்திரன் தோன்றிய பிறகு விநாயகரை வழிபடுவது எல்லா விதமான தோஷங்களையும் போக்கும். வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தீரும்.

    • இன்று சுபமுகூர்த்த தினம். மகா சங்கட ஹர சதுர்த்தி.
    • வாஸ்து நாள் (காலை 7.23 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று).

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-6 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை இரவு 6.14 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: உத்திரட்டாதி பின்னிரவு 3.13 மணி வரை பிறகு ரேவதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். மகா சங்கடஹர சதுர்த்தி. வாஸ்து நாள் (காலை 7.23 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று). சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-சாந்தம்

    கடகம்-களிப்பு

    சிம்மம்-பெருமை

    கன்னி-வெற்றி

    துலாம்- மகிழ்ச்சி

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- கீர்த்தி

    மகரம்-வரவு

    கும்பம்-வாழ்வு

    மீனம்-சிறப்பு

    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பாலாபிஷேகம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-5 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை இரவு 8.39 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: சதயம் காலை 6.23 மணி வரை பிறகு பூரட்டாதி மறுநாள்

    விடியற்காலை 4.32 மணி வரை பிறகு உத்திரட்டாதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பாலாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப்பெருமாள் கோவிலில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-சாதனை

    கடகம்-உதவி

    சிம்மம்-செலவு

    கன்னி-ஈகை

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- உயர்வு

    மகரம்-உதவி

    கும்பம்-விவேகம்

    மீனம்-மாற்றம்

    • 24-ந் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆவணி உற்சவம் ஆரம்பம்.
    • 26-ந்தேதி கிருஷ்ண ஜெயந்தி

    20-ந்தேதி (செவ்வாய்)

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி தெப்பம்.

    * வரகூர் உறியடி உற்சவம் ஆரம்பம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டா ளுக்கு திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்,

    21-ந்தேதி (புதன்)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம்.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    22-ந்தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * கீழ்திருப்பதி எழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    23-ந் தேதி (வெள்ளி)

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * சமநோக்கு நாள்.

    24-ந் தேதி (சனி)

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆவணி உற்சவம் ஆரம்பம்.

    * திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    25-ந்தேதி (ஞாயிறு)

    * திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடய சப்பரம், இரவு பல் லக்கில் பவனி.

    * பெருவயல் முருகப்பெருமான் புறப்பாடு.

    * திருப்போரூர் முருகப்பெருமா னுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    26-ந்தேதி (திங்கள்)

    * கிருஷ்ண ஜெயந்தி.

    * திருநெல்வேலி சந்தான நவநீத கிருஷ்ணசுவாமி கோபால கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * திருப்பரங்குன்றம், பழனி தலங்களில் முருகப்பெருமான் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    ×