search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.எஸ்.டி.வரி"

    • ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசனை.
    • 100 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம்

    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் கொண்டுவருவது குறித்து, மந்திரிகள் குழுவினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மேற்கு வங்காள மாநில நிதி மந்திரி சந்திரிமா பட்டாச்சார்யா கூறியதாவது:-

    சாமானிய மக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து கலந்தாலோசிக்கப் பட்டது.

    உணவு பொருட் களுக்கு விதிக்கப்படும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைப்பது, சைக்கிள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    வரி குறைக்கப்படும் பட்சத்தில், ஜி.எஸ்.டி. வரி வருவாய் பாதிக்கப்படும். அதை ஈடுகட்ட சிலபொருட்கள் மீதான வரியை உயர்த்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசித்தோம். குறிப்பாக, அழகு சாதனப் பொருட்கள், குளிர்பானங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை உயர்த்த ஆலோசிக்கப்பட்டது.

    மக்களின் வரிச்சுமையை குறைக்க 100 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் கொண்டுவருவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    தற்போது மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது. இதை குறைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி, சில மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார்.

    இந்த நிலையில், மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது குறித்த முடிவு அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த கூட்டம் அக்டோபர் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இறுதி பரிந்துரைகள் உருவாக்கப்படும். அவை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.

    அடுத்த கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், மேகாலயா, பஞ்சாப், குஜராத், பீகார் ,கோவா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 13 மந்திரிகள் பங்கு பெறுகிறார்கள்.

    • ஜி.எஸ்.டி.வரியை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் 22-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு அரசு தடைவிதித்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு அரிசி, பால், தயிர் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இந்த வரியை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வணிகர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதே போல் நேரடியாக விதிக்கப்படும் செஸ் வரியை முதல்வர் திரும்ப பெற வேண்டும். குப்பை வரி, தொழில்வரி என வரிகளை பிரித்து போடாமல், ஒரே வரியாக வசூலித்து லஞ்சம் லாவண்யம் இன்றி லைசென்ஸ் வழங்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைக்கு மேல் சாலை போடுவதால் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் தாழ்வாக சென்று விடுகின்றன. இதனால் மழைக் காலங்களில் கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு அரசு தடைவிதித்துள்ளது. இதை வரவேற்கிறோம். ஆனால் பல்நோக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் உணவுப்பொருட்கள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துகின்றன. அவற்றையும் தடை செய்ய வேண்டும்.

    தமிழக டி.ஜி.பி. அறிவித்துள்ளபடி மாநிலம் முழுவதும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பால் சிறு வணிகர்கள் முதல் பெரிய வணிகர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு பெரிய நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றன.

    சாமானிய வியாபாரிகள் அப்படி விற்க முடியாது. அதனால் சாமானிய வியாபாரிக்கும், அதானி, அம்பானிக்கும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், மாவட்ட கவுரவத் தலைவர் ஜபருல்லாகான், மாவட்ட துணைத் தலைவர் ராசி போஸ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் குப்தா கோவிந்தராஜ், ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் சாதிக் அலி உள்படட ஏராளமான வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

    ×