என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பு கொடி"

    • 44 குடும்பங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் காலி செய்ய வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
    • ஹவுசிங் போர்டில் மாற்று இடம் வழங்க வேண்டி வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை ராஜ விநாயகர் வீதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வரும் 44 குடும்பங்களை சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலை துறையினர் காலி செய்ய வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையிலும், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் வருகிற ஜனவரி 20ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இதன் காரணமாக ஒருங்கிணைப்பாளர்ஆல்பேட்டை பாபு தலைமையில் 44 வீட்டிலும் மற்றும் முத்தாலம்மன் கோவில் ஆலயத்திலும் தங்களுக்கு குண்டு சாலை சாலை ஹவுசிங் போர்டில் மாற்று இடம் வழங்க வேண்டி வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

      கடலூர்:

      விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் உள்ள பாசன ஏரிக்கரையில் 40 ஆண்டுகாலமாக குடியிருக்கும் வீடுகளை அகற்ற வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி காலக்கெடு வைத்தனர். அதன்படி இதற்கான காலக்கெடு இன்று முடிந்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர். விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையின் இருபுறங்களிலும் சுமார் 40 வீடுகள் கட்டி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலை மற்றும் ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூறி வருவாய்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் அகற்றி வருகின்றனர்

      தொரவளூர் கிராமத்தில் உள்ள பாசன ஏரி கரையில் அமைந்துள்ள 40 வீடுகளை அகற்றக்கோரி வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழக்கும் நிலை இருப்பதால், தங்களுக்கு மாற்று இடம் அளிக்குமாறு பலமுறை விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் மாற்றிடம் ஏதும் அரசால் வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஆக்கிரமிப்பு களை இன்று அகற்ற வருவாய் துறை சார்பில் தொரவலூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

      • பிரதமர் மோடி நாளை சென்னை வரும் போது தமிழக காங்கிரசாரும் கருப்பு கொடி போராட்டம் நடத்த ரகசியமாக ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.
      • நாளை பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்

      சென்னை:

      மோடி இனத்தை அவ மரியாதை செய்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு தண்டனை விதித்ததால் அவரது எம்.பி. பதவி பறிபோனது.

      இந்த பதவி பறிப்புக்கு பா.ஜ.க. தலைவர்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டி நாடுமுழுவதும் காங்கிரசார் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

      குறிப்பாக பிரதமர் மோடி நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் அந்த மாநில காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி நாளை சென்னை வரும்போது தமிழக காங்கிரசாரும் கருப்பு கொடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள் ளனர். போலீஸ் தடையை மீறி ரகசியமாக இதற்கு ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.

      சென்னையில் மீனம்பாக்கம், சென்ட்ரல், மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்ல அரங்கம் மற்றும் பல்லாவரம் ஆகிய இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த 4 இடங்களிலும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்த முயற்சி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

      இந்த நிலையில் சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக காங்கிரசார் திடீரென கருப்புகொடியுடன் ஊடுருவி போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இந்த எச்சரிக்கை தகவலை தமிழக போலீசாருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

      இதையடுத்து சென்னையில் பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 22 ஆயிரம் போலீசாருக்கு பதில் 26 ஆயிரம் போலீ சாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளனர்.

      பிரதமர் மோடி சென்னையில் விமான நிலையம் தொடங்கி நீண்ட தொலைவுக்கு சாலை மார்க்கமாக நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார். பல இடங்களில் மிகப்பெரிய அகலமான சாலைகள் வழியாக செல்ல ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது போலீசாருக்கு கடும் சவாலாக இருக்கும்.

      அகலமான சாலை பகுதிகளில் பாதுகாப்பு அரணை உடைத்துக்கொண்டு காங் கிரசார் கருப்பு கொடியுடன் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அத்தகைய சாலை பகுதிகளில் அதிக அளவில் போலீசாரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

      பிரதமர் மோடி நாளை 3-வது நிகழ்ச்சியாக விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் சென்ட்ரலில் இருந்து காரில் மெரினா கடற்கரை வழியாக செல்ல உள்ளார். அந்த சமயத்தில் மெரினா கடற்கரையில் ஆங்காங்கே பதுங்கி இருந்துகொண்டு காங்கிரசார் கருப்பு கொடியுடன் ஓடிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

      இதை கருத்தில் கொண்டு மெரினா கடற்கரையில் நாளை கூடுதல் போலீசார் குவிக்கப்பட உள்ளனர். மேலும் மெரினா கடற்கரையை நாளை காலை முதலே சீல் வைத்து தேவையில்லாதவர்கள் நடமாட் டத்தை தடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

      மெரினா கடற்கரை திறந்தவெளி பகுதி என்பதால் நாளை மதியத்துக்கு பிறகு மக்கள் நடமாட்டத்தை முழுமையாக தடுத்து நிறுத்த தீர்மானித்துள்ளனர்.

      நாளை பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

      • ராமநாதபுரம் வரும் கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவோம் பா.ம.க. அறிவித்துள்ளது.
      • ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

      ராமநாதபுரம்

      ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சந்தானதாஸ் முன்னிலை வகித்தார்.

      பின்னர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அக்கிம் நிருபரிடம் கூறியதாவது:-

      வருகிற 18,19 ஆகிய தேதிகளில் கவர்னர் ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்வதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடந்த 23 ஆண்டுகால போராட்டமான கடலாடி ஒன்றியத்தை பிரித்து சிக்கலை தலைமையிடமாகக் கொண்ட புதிய யூனியன் அமைத்தல், மக்களுக்கு இடையூறாக இருக்கும் கலெக்டர் அலு வலகம் முன்புள்ள மதுக்கடையை மாற்றுதல், ராமநாதபுரத்தில் புதிய மிகப்பெரிய மக்கள் தொகைக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியே அமைக்க வேண்டும்.

      தற்போதிருக்கும் பஸ் நிலைய விரிவாக்கத்தை தடை செய்தல், திருவாடானை தாலுகா சிறுகம்பையூர் பகுதி யில் நடத்தப்படும் மணல் குவாரியை தடுத்து நிறுத்த வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

      மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு மேற்கண்ட கோரிக்கைகளை கண்டு கொள்ளாத நிலையிலும் ஜனநாயக முறையில் எத்த னையோ போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி னாலும் வேடிக்கைக்காக நடத்துவது போல பார்ப்பதும், எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்ற முயற்சி எடுக்கா மல் இருப்பதால் கவர்னர் ரவி வருகையை எதிர்த்து கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

      எங்கள் கோரிக்கையை செவி சாய்க்காமல் இருக்கும் தமிழக அரசு மற்றும் தலைமையில் 1000 கருப்பு பலூன்க ளையும் பறக்கவிட்டு கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

      இவ்வாறு அவர் கூறினார்.

      கூட்டத்தில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், ராமநாதபுரம் நகர செயலாளர் இப்ராகிம், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம்கான், இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் பாலா, மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

      • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
      • திருஆரூரான் சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் 140 நாட்களை தாண்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

      தஞ்சாவூர்:

      தஞ்சையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

      தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அரசியல்வாதி போல் செயல்படுகிறார்.

      மரபை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தஞ்சைக்கு வருகிற 24-ந் தேதி வரும் கவர்னரை கண்டித்து கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம்.

      திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் 140 நாட்களை தாண்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்.

      வருகிற ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். எனவே உடனடியாக நீர் நிலைகளை தூர்வார வேண்டும். ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். தொழிலாளர் சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், கண்ணன், செந்தில், தமிழ்செல்வி, சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

      • அரசு ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி அருகே மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
      • மின்மயானம் நம்பியூரில் இருந்து செல்லும் எலத்தூர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

      நம்பியூர்:

      ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த காமராஜர் காலனியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

      இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி அருகே மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மின்மயானம் நம்பியூரில் இருந்து செல்லும் எலத்தூர் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

      இந்த நிலையில் இங்கு மின்மயானம் கட்டினால் சுகாதார சீர்கேடும் ஏற்படும் என்று கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

      மேலும் இந்த திட்டம் கைவிடவில்லையென்றால் பல்வேறு போரட்டங்கள் நடத்தபடும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

      • இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
      • ஒட்டு மொத்த பட்டியலின மக்களும் மத மாற்றம் செய்து கொள்வோம்

      விழுப்புரம்:

      விழுப்புரம் அருகே உள்ள மேல் பாதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல க்கூடாது என மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில் 145-வது சட்டப்பிரிவை பயன் படுத்தி பிரச்சினைக்குள்ளாாள திரவுபதி அம்மன் கோவிலை கடந்த மாதம் 7-ந் தேதி வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கோவில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என இரு சமூக மக்களும் பரஸ்பரம் போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக ஜூன் 9-ந் தேதி விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே வரு வாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

      இதனை ெதாடர்ந்து 2-ம் கட்ட விசாரணை கடந்த 7-ந் தேதி விழுப் புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்த ஊர் முக்கி யஸ்தர்கள் 5 பேருக்கு மட்டும் சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி விசாரணை நடத்தி னார். இேதபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் 5 பேரிட மும் வருவாய் கோட்டாட்சி யர் விசாரணை நடத்தி னார். அப்போது வருகிற 31-ந் தேதிக்குள் திரவுபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று வழிபாடு நடத்த சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

      அவ்வாறு நடவடிக்கை எடுக்கா விட்டால் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் மேல் பாதி கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடுவோம். அதன் பிறகும் கோவி லுக்குள் செல்ல அனு மதி மறுக்கப்பட்டால் இந்து மதத்தில் இருந்து வெளியேறி ஒட்டு மொத்த பட்டியலின மக்களும் மத மாற்றம் செய்து கொள்வோம் என கோட்டாட்சியர் பிரவீனா குமாரியிடம் தெரிவித்த னர். இதனால் மேல்பாதி கிராமத்தில் மீண்டும் பதட்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

      • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த கருப்பு கொடிகளை அகற்றினர்.
      • உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

      பெரியகுளம்:

      தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 22). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். இவர்கள் வெ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடிகள் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினர். காந்தி நகர் அருகே உள்ள மாந்தோப்புக்கு சென்று அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

      இதனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சமாதானம் அடைந்த பெண்ணின் பெற்றோர் உடலை வாங்கிச் சென்றனர். ஆனால் மாரிமுத்துவின் உறவினர்கள் உடலை வாங்கவில்லை. மாரிமுத்துவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று இந்திய ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் பெரியகுளம் அருகே காந்திநகர் கும்பக்கரை பிரிவு பகுதியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

      போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த கருப்பு கொடிகளை அகற்றினர். மேலும் கொடிகளை கட்டியதாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 8 நாட்களாக மாரிமுத்துவின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

      • 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருந்த னர்.
      • போலீசார் அங்கு விரைந்து சென்று கருப்பு கொடிகளை அகற்றினர்.

      கடலூர்: 

      கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் பெரிய நற்குணம், ஆதனூர். வீர முடியா நத்தம் உள்ளிட்ட கிரா மங்களில் 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருந்த னர். இதுகுறித்து சேத்தியாத் தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று கருப்பு கொடிகளை அகற்றினர்.

      • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
      • தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

      கோவை:

      கோவை இடையர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் கிரைண்டர், மிக்சி உதிரி பாகங்கள், வாகன உதிரிபா கங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

      இந்த தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மூலப்பொருட்கள் விலை உயர்வு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல இன்னல்களை தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர்.

      இந்நிலையில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளதால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட தொழில்துறையினர் தொடர்ந்து பல்வேறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

      சமீபத்தில் கூட சென்னை சென்று, அமைச்சர்களை சந்தித்து பேசினர். ஆனாலும் தொழில் முனைவோரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.

      அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. கோவை இடைய ர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அங்கு பணியாற்றியவர்களும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

      மேலும் கோவை மாவட்ட தொழில் முனைவோர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தபடி ஊர்வலமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

      இதேபோல் கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களிலும் இன்று கருப்பு கொடியேற்றப்பட்டு போராட்டம் நடந்தது.

      இதுதொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

      கோவை மாவட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. அன்று மின்தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், இன்று மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்று வருகிறது.

      நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மேற்கூரை சூரியஒளி ஆற்றல் உற்பத்திற்கு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

      12 கிலோ வாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பி-யிலிருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல், 2 ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை கைவி டுதல் என்பன 5 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதில் 12 கிலோவாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பியில் இருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் அரசு நிறைவேற்றியுள்ளது.

      மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எங்கள் கூட்டமைப்பில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் சார்பில் இன்று கோவை உள்பட தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

      தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அடுத்த கட்டமாக சென்னையில் வருகிற 16-ந் தேதி 25 ஆயிரம் தொழில் முனைவோர் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத போரா ட்டம் நடத்தப்படும். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

      • 36 அமைப்பினர் ஆதரவு தெரிவித்து ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
      • வருகிற 16-ந் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

      பல்லடம்:

      தொழில் நிறுவனங்களுக்கான 430 சதவீதம் உயர்த்திய மின்சாரநிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 3பி-யில் இருந்து 3 ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

      கடந்த மாதம் 25-ந்தேதி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் பனியன் தொழில் சார்ந்த தொழில் அமைப்பினர் மற்றும் சிறு, குறு தொழில் அமைப்பினர் என 36 அமைப்பினர் ஆதரவு தெரிவித்து ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

      இந்நிலையில் இன்று தொழில்துறையின் நிலை குறித்து அரசிடம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொழில் துறையினர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

      இதில் பங்கேற்ற தொழில் துறையினர் பலர் கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். மேலும் தொழில் பாதிப்பை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் அவரவர் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றினர். ஒவ்வொரு தொழில் சங்கத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

      ஒவ்வொரு அமைப்பினரும் மின்கட்டண பாதிப்பு குறித்து மனுவில் கையெழுத்திட்டு கலெக்டரிடம் வழங்கினர். முன்னதாக அனைத்து அமைப்பினரும் ஒன்று சேர்ந்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தின் முன் திரண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மேலும் மனுக்களை முதல்-அமைச்சருக்கு அனுப்ப இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

      இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கோபி பழனியப்பன் கூறும்போது, மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி இன்று தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக தொழில்துறையினர் கருப்பு பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் கலெக்டரை சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வருகிற 16-ந் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இதில் திரளானவர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

      போராட்டத்தையொட்டி திருப்பூர், பல்லடம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. 

      • மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுகாதாரமற்ற சூழல் ஏற்படுகிறது.
      • மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட பொழுது நேரில் வந்து பார்த்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

      கோவை:

      கோவை உக்கடம் 86-வது வார்டு ரேஸ்மா கார்டன் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

      இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

      எங்கள் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தோம்.

      உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணையில் இருந்து தண்ணீர் செல்வதற்கான பாதையில் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் அடிக்கடி தண்ணீர் தேங்கி நிற்கிறது.

      மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுகாதாரமற்ற சூழல் ஏற்படுகிறது. இதனால் உடல் பாதிப்பு ஏற்படுகிறது.

      மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட பொழுது நேரில் வந்து பார்த்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடக்காமல் மந்த கதியில் உள்ளது.

      எனவே நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், காலதாமதம் செய்வதை கண்டித்தும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

      இவ்வாறு அவர்கள் கூறினர்.

      ×