என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி விவகாரம்"
- கைதான கண்ணுக்குட்டியிடம் போலீசார் மாமுல் வாங்கியதாக குற்றச்சாட்டப் பட்டுள்ளது.
- கள்ளச்சாராய விவகாரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.
எதிர்கட்சிகள் இது தொடர்பாக சிபிஐ வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக இரண்டு டிஎஸ்பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 டி.எஸ்.பி.க்கள் உட்பட 9 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கைதான கண்ணுக்குட்டியிடம் போலீசார் மாமூல் வாங்கியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. கருணாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதுவரை கள்ளச்சாராய விவகாரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 3 பேரின் கல்வி செலவை அ.தி.மு.க. ஏற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
- தாயையும், தந்தையையும் கள்ளச்சாராயத்துக்கு பறி கொடுப்போம் என்று கோகிலா கனவிலும் நினைத்து பார்த்துக் இருக்க மாட்டாள்.
கோகிலாவுக்கு ஏற்பட்டு இருக்கும் சோகம் உலகில் யாருக்கும் ஏற்பட கூடாது. அந்த சிறுமிக்கு தற்போது 16 வயதே ஆகிறது.
உலகம் எப்படிப்பட்டது? உறவினர்கள் எத்தகையவர்கள்? நட்பு வட்டாரங்களின் நோக்கம் என்ன? என்பது போன்ற எதுவுமே தெரியாத பருவம். சுருக்கமாக செல்ல வேண்டுமானால் வஞ்சகம் நிறைந்த இந்த உலக வாழ்க்கையின் எந்த ஒரு பாகத்தையும் அனுபவித்து அறியாத பருவத்தில் இருப்பவள்.
மற்ற சிறுவர்-சிறுமிகள் ஓடியாடி துள்ளி விளையாடி துளியும் கவலை இல்லாமல் வாழும் நிலையில் மனதில் அந்த சிறுமி பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஏற்பட்ட இந்த சோகத்துக்கு காரணம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்.
அந்த சம்பவத்தில் பலியான 64 பேரில் கோகிலாவின் தாயும், தந்தையும் அடங்குவார்கள். ஒரே நாளில் தனது தாயையும், தந்தையையும் கள்ளச்சாராயத்துக்கு பறி கொடுப்போம் என்று கோகிலா கனவிலும் நினைத்து பார்த்துக் இருக்க மாட்டாள்.
அவளது தந்தை சுரேஷ். பெயிண்டர். தாய் வடிவுக்கரசி. பண்ணையில் வேலை பார்தது வந்த கூலித்தொழிலாளி. அவர்கள் இருவரும் சேர்ந்து குடும்பத்தை நடத்தி வந்தனர். 20க்கு 20 அடி வாடகை வீட்டில் வசித்த வந்த அவர்கள் தினசரி உழைத்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் காலத்தை தள்ளியவர்கள்.
அவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மகள் கோகிலா. 2 மகன்கள் ஹரிஸ், ராகவன். கோகிலாவுக்கு 16 வயது. ஹரிசுக்கு 15 வயது, ராகவனுக்கு 14 வயது.
இந்த இளம் வயதில் இந்த 3 பிஞ்சுகளையும் தவிக்க விட்டுவிட்டு சுரேசும், வடிவுக்கரசியும் கள்ளச்சாராயத்துக்கு பலியாகி உள்ளனர். இவர்களில் சுரேஷ் தினமும் உடல்வலி நீங்குவதற்காக கள்ளச்சாராயம் குடிப்பதை பழக்கத்தில் வைத்திருந்தார்.
சம்பவத்துன்று கள்ளச்சாராயத்தை அவர் ரகசியமாக ஒளித்து வைப்பதற்காக வேறு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்திருந்தார். வடிவுக்கரசி அதை ஏற்கனவே தான் வாங்கி வைத்திருந்த ஓமம் தண்ணீர் என்று தவறுதலாக நினைத்து குடித்து விட்டார். விளைவு கணவன்-மனைவி இரண்டு பேருமே உயிரை பறிக்கொடுத்து விட்டனர்.
இந்த பரிதாபத்தால் தற்போது குடும்ப பொறுப்பு 16 வயது கோகிலா மீது விழுந்துள்ளது. 15 வயது ஹரிசையும், 14 வயது ராகவனையும் படிக்க வைத்து ஆளாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பை கோகிலா ஏற்று இருப்பதாக கூறி உள்ளாள். ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் அவளுக்கு இடையூறு ஏற்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.
தந்தை சுரேசுக்கு கடன் கொடுத்து இருப்பதாகவும் எனவே அரசு தரும் ரூ.10 லட்சம் நிதி உதவியை தங்கள் கடனை கழிக்க தர வேண்டும் என்றும் மிரட்ட தொடங்கி இருக்கிறார்களாம்.
இந்த 3 பேரின் கல்வி செலவை அ.தி.மு.க. ஏற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த பணத்தையும் சிலர் கேட்டு மிரட்டுகிறார்களாம். இதனால் கோகிலா மிரண்டு போய் இருக்கிறாள்.
திக்கு தெரியாமல் தவிக்கும் அந்த சிறுமி ஒரே ஒரு உதவிதான் கேட்கிறாள். சொந்தமாக குடியிருக்க வீடு இல்லை. முதலமைச்சர் தனக்கு ஒரு வீடு தந்தால் பிழைத்துக் கொள்வோம் என்று அவள் கண்ணீர் மல்க சொன்னது நெஞ்சை கடப்பாரையால் குத்துவது போல் இருக்கிறது.
சிறு வயதிலேயே இப்படி ஒரு பாரத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கோகிலா நிச்சயம் போராடி ஜெயிப்பேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறாள். அவளுக்கு உற்சாகம் கொடுத்தாலே போதும் 3 குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி விட முடியும்.
- கள்ளச்சாராயம் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி கவர்னரிடம் பிரேமலதா மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஏற்கனவே கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
சென்னை :
சென்னை கிண்டில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசி உள்ளார்.
கள்ளச்சாராயம் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி கவர்னரிடம் பிரேமலதா மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர்.
- கைது செய்யப்பட்ட 3 பேரும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே கள்ளச்சாராயத்தை தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் வியபாரம் செய்வோர் மற்றும் அதனை கடத்துபவர்களை உடனடியாககைது செய்ய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் இதுவரை சுமார் 86 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் (வயது42) என்பவரை சங்கராபுரம் போலீசார் கள்ளச்சாராய வழக்கில் அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டன் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த தகவல் வெளியானதால் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் தப்பிஓடிய கள்ளச்சாராய வியாபாரி மணிகண்டனை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்கனவே சேஷசமுத்திரம் கிராமத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 40-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அக்கிராமத்தில் மட்டும் 4 பேர் இதுவரை உயிரிழந்தனர். இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சின்னதுரை, செந்தில், ராஜா ஆகிய 3 பேரும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதி அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
- இழப்பீட்டு தொகையை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்.
சென்னை:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்துக்கு பின்னால் அண்ணாமலையின் சதி இருக்கலாம் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னை தொடர்புபடுத்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது வக்கீல், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் பால்கனகராஜ் வாயிலாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், 'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதி அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆதாரமின்றி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். நோட்டீஸ் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் இதற்கு, அவர் மன்னிப்பு கோரவில்லை என்றால், ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.
- கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 63 போ் உயிாிழந்தனா்.
- கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 63 போ் உயிாிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரி நாளை அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது.
இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். அதில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் மறுக்கப்பட்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அடிப்படை ஜனநாயகத்திற்கு விரோதமானது
எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மடைமாற்ற அரசியலால் கடந்துவிட முயற்சிக்கும் திமுக அரசிற்கு எனது கடும் கண்டனம்.
எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரியும் எனது தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை (27.06.2024- வியாழக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம்!
கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.
- கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது அங்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு கூறியதாவது:-
* பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது?
* கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர்.
* பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
* பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.
* கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
* கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குஷ்பு கூறினார்.
- நிவாரணம் வழங்கப்பட்டது கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு அல்ல.
- மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் சிறிது அதிகரித்திருக்கலாம்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் உள்ள வைகல்நாதர் சாமி கோவிலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 61 பேர் உயிரிழந்ததும் ஒரு வகையில் விபத்து தான். நிவாரணம் வழங்கப்பட்டது கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு அல்ல. அவரால் வருமான இழப்புக்கு ஆளாகி தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு தான். எனவே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது சரியா தவறா என்று விமர்சிப்பது தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்ப்பதை போன்றது. எனவே நான் அது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை.
தமிழ்நாடு அரசு படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் நேரில் வந்து பார்த்தால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை. அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் அங்கு பார்வையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளன.
இதனை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தான் செய்யும். இடைத்தேர்தலில் போட்டியிடாமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் போது தேர்தல் நியாயமாக நடக்காது என்று காரணம் கூறுவது இந்திய, தமிழக அரசியலில் வாடிக்கையான ஒன்றுதான். மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் சிறிது அதிகரித்திருக்கலாம். ஓ.பி.எஸ், தினகரன், ஏசி சண்முகம் போன்ற கூட்டணியில் நின்ற கட்சித் தலைவர்கள், பா.ம.க. உடன் வைத்துக்கொண்ட கூட்டணி ஆகியவற்றின் காரணமாக வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதை வைத்து பா.ஜ.க. வானத்துக்கும், பூமிக்கும் குதிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் சபையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல.
- இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது.
சென்னை :
தமிழக சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப்பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர், குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என்று சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். தாங்களும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆனாலும், மக்கள் பிரச்சனையைப் பற்றி சட்டசபையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் சபையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல.
பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அ.தி.மு.க. மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், நாம் இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்றார்.
- கருப்பு சட்டை அணிந்தபடி அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வந்தனர்.
- கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை :
தமிழக சட்டசபை வினாக்கள் விடை நேரத்துடன் தொடங்கியது. பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதனிடையே சட்டசபை தொடங்கியதும் அவையை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனை கண்டித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, பிரதான எதிர்க்கட்சி தலைவர் உட்பட உறுப்பினர்கள் அவையில் அமர வேண்டும். சட்டசபையில் கேள்விநேரம் முடிந்ததும் பேசலாம். அவைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க. வினர் செயல்படுகின்றனர். சட்டசபையில் அமர்ந்து பேச அ.தி.மு.க.வினருக்கு விருப்பமில்லை என்றார்.
இருப்பினும், அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் உத்தரவை அடுத்து அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை அவை காவலர்கள் வெளியேற்றி உள்ளனர்.
முன்னதாக, கருப்பு சட்டை அணிந்தபடி அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வருகை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
#WATCH | Chennai: AIADMK MLAs raise slogans against DMK Government over Kallakurichi Hooch Tragedy and remand resignation of CM M.K. Stalin.
— ANI (@ANI) June 26, 2024
Visuals outside the Tamil Nadu Assembly. pic.twitter.com/VYuNOD9Yuw
- பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
- மேலும் 10 பேருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி நேற்று வரை 59 போ் உயிாிழந்தனா்.
இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏசுதாஸ் (வயது 39) என்பவா் சிகிச்சை பலனின்றி பாிதாபமாக உயிாிழந்தாா். இதனால் இச்சம்பவத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 60 ஆக உயா்ந்துள்ளது.
மேலும் 10 பேருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
- கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் 6 பெண்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.
இதற்காக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்