search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிபர் புதின்"

    • பிரதமர் மோடி ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
    • இந்தப் பேச்சுவார்த்தை நல்ல முறையில் இருந்தது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நல்ல விதமாக இருந்தது. இரு நாடுகளிடையே நட்புறவை மேலும் வலுபடுத்துவதில் சாதகமான எதிர்கால திட்டங்கள், முன்னேற்றங்கள், பிரிக்ஸ் மாநாட்டிற்கான தலைமையை ரஷ்யா ஏற்றுள்ளது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். உலகளாவிய பிரச்சனைகளில் பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இருந்தது என தெரிவித்துள்ளார்.

    • வரும் ஆண்டில் சில முக்கிய முன்னேற்றங்கள், இரு தரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுபெறும்.
    • சமீபத்தில் பிரதமர் மோடியை ரஷியாவுக்கு வருமாறு அதிபர் புதின் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுக்கும், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு ரஷிய அதிபர் வினாடிமிர் புதின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலகில் கடினமான சூழ்நிலை இருந்த போதிலும் ரஷியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கூட்டாண்மை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. வரும் ஆண்டில் சில முக்கிய முன்னேற்றங்கள், இரு தரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுபெறும். பன்முக இரு தரப்பு உறவுகளை வளர்ப்பதற்கும், பிராந்திய மற்றும் உலகளவில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வளர வேண்டும் என்று கூறினார். சமீபத்தில் பிரதமர் மோடியை ரஷியாவுக்கு வருமாறு அதிபர் புதின் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை ரஷியா நடத்தியது.
    • கீவ் உள்பட 6 நகரங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என அதிகாரிகள் கூறினர்.

    லண்டன்:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை ரஷியா நடத்தியிருக்கிறது. நேற்று முன்தினம் பகலில் தொடங்கி இரவு வரை நீடித்த இந்த தாக்குதலின்போது 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் ஏவப்பட்டன. இதில் பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கீவ் உள்பட 6 நகரங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் விளாடிமிர் புதினை வெற்றி பெற விடமாட்டோம். உக்ரைனுடன் நாங்கள் தொடர்ந்து நிற்போம் என தெரிவித்தார்.

    • உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
    • எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது என்றார் அதிபர் புதின்.

    மாஸ்கோ:

    உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவி வருகிறார்கள்.

    குறிப்பாக அமெரிக்கா இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்து 617 கோடி) வரை நிதி உதவி செய்திருக்கிறது.

    எனினும், ரஷியா தொடர்ந்து உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைனைக் கொண்டுவர ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைனில் மொத்தம் 6 லட்சத்து 17 ஆயிரம் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனவே மேலும் படைகளை அணிதிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பாது என தெரிவித்தார்.

    அதிபராக கடந்த 24 ஆண்டுக்கு மேல் பதவி வகித்துவரும் புதின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆயுதப்படைகளின் வலிமையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்ப்பு நடைபெறும் என்று தெரிவித்தது.

    ரஷிய ராணுவத்தில் தற்போது 13 லட்சத்து 20 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதற்கிடையே படைவீரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷிய அரசு முடிவு செய்தது.

    இந்த நிலையில் ரஷிய ஆயுதப்படைகளில் 1 லட்சத்து 70 ஆயிரம் வீரர்களை சேர்ப்பதற்கான ஆணையில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார் என்று கிரெம்ளின் மற்றும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது சிறப்பு ராணுவ நடவடிக்கை மற்றும் நேட்டோவின் தற்போதைய விரிவாக்கம் ஆகியவற்றால் நாட்டிற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் காரணமாக ஆயுதப்படைகளின் வலிமையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்ப்பு நடைபெறும் என்று தெரிவித்தது.

    • ரஷிய அதிபர் புதினுக்கு உடல்நல குறைவு என பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
    • அதிபர் புதின் நன்றாகவே இருக்கிறார் என அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உடல்நிலை குறித்து அடிக்கடி பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்தன. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், அதிபர் புதினுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. புதின் தனது அறையில் இருந்தபோது ஏதோ சத்தம் கேட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்றனர் என்றும், அப்போது புதின் தரையில் விழுந்து கிடந்தார் என்றும், அங்கிருந்த மேஜை கவிழ்ந்து கிடந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    புதினுக்கு சரியான நேரத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். அதிபர் மாளிகையிலேயே மருத்துவ வசதிகளை கொண்ட அறைக்கு புதினை டாக்டர்கள் கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் புதின் சுய நினைவுக்கு திரும்பினார் என்று தகவல் வெளியானது.

    இதற்கிடையே, அதிபர் புதின் உடல்நிலை குறித்து வெளியான தகவலை ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகை மறுத்துள்ளது.

    அதிபர் புதின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் உடல்நலக் குறைவால் இருப்பதாகவும், அவருக்கு பதிலாக அவரை போல தோற்றமளிக்கும் ஒருவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகவும் வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்துள்ளது.

    அதிபர் புதின் கடந்த வாரம் சீனாவில் நடந்த சர்வதேச ஒத்துழைப்புக்கான சாலை மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவின் உயர் தொழில் நுட்ப ஏற்றுமதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
    • ஆசிய நாடுகளின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் புதின் இந்தியாவை பாராட்டி பேசி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஆசிய நாடுகளின் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியாவின் உயர் தொழில் நுட்ப ஏற்றுமதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் மிகவும் வலிமையான நாடாக மாறி வருகிறது. மேற்கத்திய நாடுகளை பின்பற்றாத நாடுகளை எதிரிகளாக்க கண்மூடித்தனமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதன்முறையாக அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
    • அதிபர் சல்வா கீர் ரஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் கடந்த 2011-ம் ஆண்டு சூடானில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக பிரிந்தது. அதுமுதல் அங்கு அதிபர் சல்வா கீர் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதன்முறையாக அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் அதிபர் சல்வா கீர் ரஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அதிபர் புதின் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தெற்கு சூடானின் உள்நாட்ட அரசியல் சூழ்நிலையை கையாளுதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ரஷியா உதவும் என புதின் கூறினார். மேலும் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக நடந்துள்ள மற்றும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த திட்டம் இது.
    • இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் திட்டம் ரஷியாவுக்கே பலன் தரும் என்றார்.

    மாஸ்கோ:

    சமீபத்தில் டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின் முதல் நாளில் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான கப்பல் மற்றும் ரெயில் இணைப்புக்கான ஒரு பெரிய வழித்தடம் விரைவில் தொடங்கப்படும் என்ற வரலாற்று ஒப்பந்தம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இதனை இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் அறிவித்தன.

    இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கான இந்த திட்ட தொடக்கம் என்பது, இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக நடந்துள்ள மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டம் ஆகும்.

    இந்நிலையில், ரஷியாவின் துறைமுக நகரான விளாடிவோஸ்டக்கில் 8-வது கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு பேசியதாவது:

    புதிய பொருளாதார வழித்தடம் உருவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் ஐரோப்பிய யூனியன், சவுதி அரேபியா மற்றும் இந்தியாவுடன் கடைசியாக அமெரிக்காவும் இணைந்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் பயன் ஏற்படும் என நான் பார்க்கவில்லை.

    எங்களுடைய வடக்கு-தெற்கு திட்டத்துடன் கூடுதலாக, இந்த வழித்தடம் வழியே கூடுதல் சரக்கு போக்குவரத்து இயக்கம் நடைபெறும். இதில் எங்களுக்கு தடை ஏற்படுத்தக்கூடிய விஷயம் என எதனையும் நான் பார்க்கவில்லை.

    இந்தத் திட்டம் ரஷியாவுக்கே பலன் தரும். இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் (ஐ.எம்.இ.சி.) திட்டம் ரஷியாவின் தளவாட போக்குவரத்துக்கான வளர்ச்சிக்கு உதவும். இந்த திட்டம் பல்வேறு ஆண்டுகளாக ஆலோசனையில் இருந்து வந்தது என தெரிவித்துள்ளார்.

    அரபிக்கடலில் ஈரான் வழியாக இந்தியாவின் மேற்கு துறைமுகங்களுடன் ரஷியாவை இணைக்கும் வகையிலான சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் பற்றி அதிபர் புதின் குறிப்பிட்டுள்ளார்.

    • விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் சாதனைக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
    • சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.

    மாஸ்கோ:

    அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் நிலவில் பத்திரமாக விண்கலங்களை இறக்கி இருக்கின்றன. ஆனாலும், நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் விண்கலங்களை இறக்கியதில்லை.

    தற்போது சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் இந்தியா, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. விண்வெளி துறையில் இந்தியா படைத்திருக்கும் வரலாற்று சாதனைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அனுப்பியுள்ள செய்தியில், இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் தென் துருவத்திற்கு அருகில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். விண்வெளியை ஆராய்வதில் இது ஒரு நீண்ட முன்னேற்றம். அறிவியல் மற்றும் பொறியியலில் இந்தியா அடைந்துள்ள வியத்தகு முன்னேற்றத்திற்கான சான்றாகும் இது என வாழ்த்தியுள்ளார்.

    • உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்தும் நீடித்து வருகிறது.
    • பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    புதுடெல்லி:

    உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்தும் நீடித்து வருகிறது. மேலும் வாக்னர் எனப்படும் கூலிப்படை அமைப்பு ரஷியாவுடன் இணைந்து உக்ரைன் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. கடந்த ஆண்டு உக்ரைனின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்ற உதவிய வாக்னர் அமைப்பு உக்ரைனில் ரஷிய கொடியை நாட்டவும் செய்தது.

    சமீபத்தில் வாக்னர் அமைப்பின் தலைவர் பிரிகோஜின் அதிபர் புதினுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த கிளர்ச்சி நடவடிக்கையால் ரஷியாவில் உள்நாட்டு போர் ஏற்படக்கூடிய சூழல் காணப்பட்டது. அதன்பின் சமரசம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷிய அதிபர் புதின் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உக்ரைன், வாக்னர் குழு பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் பேசியதாக தகவல் வெளியானது.

    • தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
    • போரால் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

    மாஸ்கோ:

    உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 1½ ஆண்டாக நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே இப்போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்பிரிக்க அமைதி இயக்கம் என்ற பெயரில் தென் ஆப்பிரிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    தென் ஆப்பிரிக்கா, எகிப்து, செனகல், காங்கோ-பிராசாவில்லி, கொமுமா ரோஸ், ஜாம்பியா, உகாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆப்பிரிக்க குழு, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    இந்நிலையில் ஆப்பிரிக்க குழுவினர் ரஷியாவுக்கு சென்றனர். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்ற தென் ஆப்பிரிக்க அதிபர் சிரிஸ் ரமபோசா, அங்கு ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.

    அப்போது புதினிடம் சிரில் ராமபோசா கூறும்போது,, 'போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். அது தொடர்பாக அவர் கூறும்போது, 'போரை என்றென்றும் தொடர முடியாது. அனைத்து போர்களும் தீர்க்கப்பட்டு ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று மிகத் தெளிவாக செய்தியை தெரிவிக்க இங்கு வந்துள்ளோம். இந்த போரால் ஆப்பிரிக்க கண்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளும் பாதிப்பு அடைந்துள்ளன.

    போரால் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதிலளித்து புதின் கூறும்போது, 'உக்ரைன் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு மறுத்து வருகிறது. குழந்தைகள் புனிதமானவர்கள். அவர்களை மோதல் மண்டலத்திலிருந்து வெளியேற்றினோம். அவர்களின் உயிரையும், ஆரோக்கியத்தையும் காப்பாற்றினோம் என்றார்.

    ×