என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜிம்பாப்வே இந்தியா தொடர்"
- சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை நாளை எதிர் கொள்கிறது.
- டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
பிரிட்ஜ்டவுன்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது.
குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு எதிர்கொள்கிறது. அரை இறுதியில் நுழைய 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டும். இதனால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முன்னேற இந்திய அணி முயற்சிக்கும்.
இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் மூத்த வீரர்கள் ரோகித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களில் கவனம் செலுத்த ஓய்வு வழங்கப்பட உள்ளதாகவும், புதுமுக, இளம் வீரர்களை உள்ளடக்கிய அணி ஜிம்பாப்வேவுக்கு செல்லும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- 2016-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஜிம்பாப்வேயில் இந்தியா டி20 தொடரில் விளையாடுகிறது.
- ஐந்து போட்டிகளும் ஹராரேயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் 3 போட்டிகள் உள்ளது. 5-வது டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
இதனையடுத்து ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. ஐ.பி.எல். போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் தான் விளையாடுகிறது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது.
2016-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஜிம்பாப்வேயில் இந்தியா டி20 தொடரில் விளையாடுகிறது. ஐந்து போட்டிகளும் ஹராரேயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. போட்டிகள் ஜூலை 6, 7, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
- முதலில் ஆடிய இந்தியா 289 ரன்களை எடுத்துள்ளது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 276 ரன்களை எடுத்தது.
ஹராரே:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய ஷுப்மான் கில் சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் முதல் சதம் அடித்தார். அவர் 130 ரன்னில் வெளியேறினார். இஷான் கிஷன் அரை சதமடித்து 50 ரன்னில் அவுட்டானார். கே.எல்.ராகுல் 40 ரன்னிலும், தவான் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஜிம்பாப்வே அணி சார்பில் பிராட் எவான்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. சீரான இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்கள் வீழ்ந்தது.
ஆனாலும் சிக்கந்தர் ராசா தனி ஆளாகப் போராடினார். அவர் சதமடித்து அசத்தினார். 8-வது விக்கெட்டுக்கு சிக்கந்தர் ராசா, எவான்ஸ் ஜோடி
104 ரன்கள் சேர்த்து அசத்தியது.
சிக்கந்தர் ராசா 115 ரன்னில் ஆட்டமிழந்தார். சீன் வில்லியம்ஸ் 45 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
இந்தியா சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய இந்தியா 289 ரன்களை எடுத்துள்ளது.
- ஷுப்மான் கில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
ஹராரே:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்த நிலையில் கே.எல்.ராகுல் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் 30 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடினார். அவர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் அரை சதமடித்து 50 ரன்னில் அவுட்டானார்.
நிதானமாக ஆடிய ஷுப்மான் கில் 82 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் கில்லின் முதல் சதம் இதுவாகும்.
அவர் 130 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.
ஜிம்பாப்வே அணி சார்பில் பிராட் எவான்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
- டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.
- ஷுப்மான் கில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
ஹராரே:
ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். ராகுல் 40 ரன்னும், தவான் 30 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடினார். அவர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து 140 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் அரை சதமடித்து அவுட்டானார்.
நிதானமாக ஆடிய ஷுப்மான் கில் 82 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் கில்லின் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்தில், இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- தொடரை முழுமையாக வெல்லும் ஆர்வத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.
ஹராரே:
ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல், பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிராஜ், பிரசித் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதில் தீபக் சாகர், ஆவேஷ் கான் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
ஹராரே ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து அந்த அணியை நிலைகுலைய வைத்தனர். இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்குகிறார்கள். அதேசமயம் கடைசி போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் ஜிம்பாப்வே வீரர்கள் விளையாடுவார்கள்.
- முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.
- இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை வேகமாக சாய்த்தனர்.
ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜிம்பாப்வே விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து அந்த அணியை நிலைகுலைய வைத்தனர்.
இன்றைய ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட், சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் அகமது, வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை வெல்லும் நோக்கத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
- ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா தொடர்ந்து 14 வெற்றியை பதிவு செய்துள்ளது.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 161 ரன்களை எடுத்துள்ளது. அடுத்து ஆடிய இந்தியா 167 ரன் எடுத்து வென்றது.
ஹராரே:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சீன் வில்லியம்ஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ரியான் பர்ல் 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ராகுல் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்தனர். இஷான் கிஷன் 6 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடா 25 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 43 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
- ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ந்து 13 வெற்றியை பதிவு செய்துள்ளது.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 161 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஹராரே:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே அணியின் விக்கெட்கள் விழுந்தன.
சீன் வில்லியம்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடினார். அவர் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ரியான் பர்ல் பொறுப்புடன் ஆடி 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஹராரே:
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபக் சாஹருக்கு பதிலாக சர்துல் தாகூர் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் விபரம்:-
ஷிகர் தவான், ஷுப்மான் கில், இஷான் கிஷன், கே.எல். ராகுல்(கே), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
ஜிம்பாப்வே அணி வீரர்கள் விபரம்:-
இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நியுச்சி, தனகா சிவாங்கா.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 30.5 ஓவர்களில் இலக்கை எட்டியது.
ஹராரே:
ஜிம்பாப்வே- இந்தியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர்கள் ஷிகர் தவான் 88 ரன்களும், ஷூப்மான் கில் 82 ரன்களும் விளாச, இந்தியா 30.5 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது. இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 20ம் தேதி நடைபெறுகிறது.
- வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
- 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
ஹராரே:
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டை இழந்தனர். நிலைக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை கைப்பற்றி, ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் ஜிம்பாப்வே அணி சற்று நிதானமாக ஆடியது. கேப்டன் ரெஜிஸ் 35 ரன்களும், பிராட் ஈவன்ஸ் 33 ரன்களும், ரிச்சர்டு 34 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் ஜிம்பாப்வே, 40.3 ஓவர்களில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
6 மாதத்திற்கு பிறகு பார்முக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஆகியோரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்