என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கணவனை கொன்ற மனைவி"
- கணவரின் உடலை 22 பாகங்களாக மனைவி வெட்டினார். மகன் உதவியுடன் செயல்கள் அனைத்தையும் பூனம் செய்தார்.
- வெட்டப்பட்ட உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்தார். உடல் துண்டுகளை டெல்லி கிழக்கு பகுதியில் சுற்றுப்புறத்தில் நாள்தோறும் சென்று வீசினார்.
புதுடெல்லி:
டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது.
அதே போன்று டெல்லியில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை மனைவி, மகன் உதவியுடன் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி வீசி உள்ளார்.
டெல்லியை பதற வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
டெல்லி கிழக்கில் இருக்கும் பாண்டவ நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ். இவரது மனைவி பூனம். இவர்களுக்கு தீபக் என்ற மகன் இருக்கிறான்.
அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி பூனம் பலமுறை சொல்லியும் அவர் கள்ளத்தொடர்பை விடவில்லை. இதனால் பூனம் கணவரை கொல்ல முடிவு செய்தார்.
கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து பின்னர் கொலை செய்தார். கடந்த ஜூன் மாதம் இந்த கொலை சம்பவம் நடந்தது.
பின்னர் கணவரின் உடலை 22 பாகங்களாக வெட்டினார். மகன் உதவியுடன் இந்த செயல்கள் அனைத்தையும் பூனம் செய்தார்.
வெட்டப்பட்ட உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்தார். உடல் துண்டுகளை டெல்லி கிழக்கு பகுதியில் சுற்றுப்புறத்தில் நாள்தோறும் சென்று வீசினார்.
கண்காணிப்பு கேமிராவில் தீபக் நள்ளிரவில் ஒரு பையில் வைத்து உடல் பாகங்களை கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. தீபக் இரவில் கையில் பையுடன் செல்வது தெரிந்தது. அவருக்கு பின்னால் அவரது தாயார் பூனம் செல்வது பதிவாகி இருந்தது.
கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் போலீசார் தாசின் உடல் உறுப்புகளை கண்டு பிடித்தனர். சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அவரது உடல் பாகங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அப்போது தான் அது தாசின் உடல் பாகங்கள் என்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து பூனம், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- கடந்த 10-ந் தேதி ஆப்பிரிக்காவில் இருந்து முரளி விசாகப்பட்டினம் வந்தார்.
- அப்போது அக்கம்பக்கத்தினர் மிருதுளாவின் கள்ளக்காதல் குறித்து முரளியிடம் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம், பில்லால வலசை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 43). இவர் ஆப்பிரிக்காவில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி மிருதுளா (29). தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஆப்பிரிக்காவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு முரளியின் மகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மனைவியையும், மகனையும் அவரது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைத்தார். விசாகப்பட்டினம் ரிக்ஷா காலனியில் முரளி சொந்தமாக வீடு கட்டி அங்கு தனது மனைவி மகனை குடிவைத்தார்.
பின்னர் ஆப்பிரிக்கா நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சாய்ராம் நகர் காலனியை சேர்ந்த ஹரிசங்கர் வர்மா என்பவருடன் மிருதுளாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
ஹரி ஷங்கர் வர்மா, மிருதுளா இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி ஆப்பிரிக்காவில் இருந்து முரளி விசாகப்பட்டினம் வந்தார். அப்போது அக்கம்பக்கத்தினர் மிருதுளாவின் கள்ளக்காதல் குறித்து முரளியிடம் தெரிவித்தனர்.
கள்ளக்காதலை கைவிடுமாறு முரளி தனது மனைவியிடம் வற்புறுத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மிருதுளா இதுகுறித்து அவரது கள்ளக்காதலன் ஹரிசங்கர் வர்மாவிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து முரளியை கொலை செய்ய முடிவு செய்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு முரளி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மிருதுளா அவரது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்தார்.
படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த முரளி கையை ஹரிசங்கர் வர்மா பிடித்துக் கொள்ள, மிருதுளா சமையல் செய்யும் குக்கரால் முரளியின் தலையில் சரமாரியாக தாக்கினார்.
இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே முரளி பரிதாபமாக இறந்தார். முரளியின் பிணத்தை போர்வையால் சுற்றி மறைத்து வலசை பாலத்தின் கீழ் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து விட்டனர்.
2 நாட்கள் கழித்து சென்று பார்த்தபோது பிணம் அழுகி துர்நாற்றம் வீசியது. இதையடுத்து முரளியின் பிணத்தின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணவர் பிணத்தை எரித்துக் கொண்டிருந்த மிருதுளா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹரிசங்கர் வர்மா ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
முரளி தங்களது கள்ளக்காதலை கண்டித்ததுடன், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மிருதுளா மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்தனர்.
கள்ளக்காதல் கொலையால் அவர்களது 7 வயது மகன் பெற்றோர் இன்றி தவித்து வருவது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்