search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சள்"

    • அன்னை தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் பவுர்ணமி தோறும் 108 சுமங்கலிகளை கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
    • நெய் தீபம் ஏற்றுவது அனைத்து தீபங்களிலும் சால சிறந்தது.

    மஞ்சளின் மகத்துவம்

    நாகலோகத்து மங்கையர் இருவர் பெயர் சுந்தரி, சாரதை, இருவரும் சகோதரிகள். அவர்களின் திருமணம் கைகூடாத நிலையில் நாரதரின் ஆலோசனைப்படி திருவேற்காட்டுறை கருமாரியை பணிந்தனர்.

    அன்னை அவர்களுக்கு அருள்புரிந்தாள்.

    'குழந்தைகளே! ஒரு மண்டலம் சாம்பர்ப் பொய்கையில் நீராடி மஞ்சள் நீரை அருந்துங்கள்' என்றாள்.

    அவ்வாறே செய்து வந்தனர்.

    ஒரு மண்டலம் முடிகின்ற தருவாயில் சம்பு, மாலன் என்ற இரண்டு அரச குமாரர்கள் அங்கு வந்து நாக கன்னியர்களை கண்டனர்.

    மனங்கள் இணைந்தன.

    அன்னையின் அருளால் திருமணம் கூடியது.

    இன்றளவும் மணம் கைகூடாத கன்னியர்களின் கவலை தீர்த்து அவர்களுக்கு இல்லற வாழ்வை வழங்குகிறாள் தாய்!

    திருவிளக்கில் விளங்கும் தேவி கருமாரி

    அன்னை கருமாரியின் அம்சங்களில் ஒன்று திருவிளக்கு. மங்கல விளக்கை ஏற்றி மனதார பணிந்தால் மங்கலம் சூழும்.

    விளக்கை சுத்தமாக துடைத்து திரியிட்டு எண்ணெயிட்டு மலர் சூட்டி திலகம் வைத்து அதன் முன்னே பணிய வேண்டும்.

    விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே

    சோதி மணிவிளக்கே சீதேவி பொன்மணியே

    அந்தி விளக்கே அலங்கார நாயகியே

    காந்தி விளக்கே காமாட்சி தாயாரே!

    என்று மனமுருகிப் பாடினால் நினைத்த காரியம் கைக்கூடும். வெற்றிமேல் வெற்றி கிட்டும்.

    பக்தர்கள் திருவிளக்கு பூஜை முறை குறிப்புகள்

    இதை உணர்த்தும் வண்ணம் நமது அன்னை தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் பவுர்ணமி தோறும் 108 சுமங்கலிகளை கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

    அப்பூஜையில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்வோர் அன்னையின் அருள் பெற்று வாழ்வில் உயர்வர்.

    தேவியின் அம்சம் திருவிளக்கு என்று முன்பு கூறினோம். அந்த அம்சம் அனைத்து தீபங்களிலும் உள்ளுறையாக பொதிந்து கிடக்கிறது. எனவே அன்னையின் அம்சமாகிய திருவிளக்கையும் அது தாங்கும் தீபத்தையும் பற்றி சற்று விரிவாக காண்போம்.

    தீப முறைகளும், அதன் நன்மைகளும்

    நெய் தீபம் ஏற்றுவது அனைத்து தீபங்களிலும் சால சிறந்தது. நெய் தீபம் ஏற்றி பரம்பொருளை துதித்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டி வீட்டில் நன்மை வந்து சேரும்.

    விளக்கெண்ணெய் தீபம் தேக நலன் தரும். புகழ் வழங்கும். நல்ல நட்பு வாய்க்க பெறும். ஆரோக்கிய உணவு கிடைக்கும். சுகம் வரும். சுற்றத்தாரும் சுகமடைவர். அனைத்திற்கும் மேலாக இல்லற இன்பம் கிட்டும்.

    எக்காரணத்தை முன்னிட்டும் கடலை எண்ணெயில் தீபமிடக்கூடாது.

    வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றிடின் சகல சுகங்களும் சித்திக்கும். நன்மை வந்து சேரும்.

    நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து தீபமிட்டு ஒரு மண்டலம் எம்பிராட்டியை எண்ணி பூஜை செய்தால் அம்பிகையின் அருள் கிடைப்பது திண்ணம். சகல சவுபாக்கியங்களும் தானாய் வரும். ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

    பொதுவாக பிரம்ம முகூர்த்தம் என்று குறிப்பிடப்படும் விடியற்காலை நேரம் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபமேற்றி வழிபடுதல் சிறப்பானதாகும். அவ்வாறு செய்தால் அனைத்து நலன்களும் அடைய பெற்று மண்ணில் வாழ்வாங்கு வாழ்வர்.

    • மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
    • ரூ 2.கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6113 முதல் ரூ.7533 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.5584 முதல் ரூ.6443 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10312 முதல் ரூ.11699 வரையிலும் மொத்தம் 6000 மூட்டைகள் தொகை ரூ 2.கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த மாதம் 21-ந் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
    • அன்று முதல் 24-ந் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள வடுகபாளையத்தில் எழுந்தருளியுள்ள கண்ணனூர் மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த மாதம் 21-ந் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. அன்று முதல் 24-ந் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    தொடர்ந்து 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை தினந்தோறும் இரவு பூவோடு பற்ற வைத்து ஆடும் நிகழ்ச்சியும், மீண்டும் காலையில் பூவோடு ஆடி கோவில் முன்பு கீழே கொட்டி அம்மன் பாடல்களை வருத்தி பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    30-ந் தேதி மாலை அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்துதலும், இரவு மாவிளக்கு பூஜையும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று கம்பம் பிடுங்கி, கோவில் பூசாரி தோளில் சுமந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் பொதுகிணற்றில் விடும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வடுகபாளையத்தில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா, விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • மொத்தமாக 1,750 மஞ்சள் மூட்டைகள் ரூ.79 லட்சத்திற்கு ஏலம் போனது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம எடுத்தனர். இந்த ஏலத்தில் விரலி ரகம் 1,110 மூட்டைகளும், உருண்டை ரகம் 510 மூட்டைகளும், பணங்காலி ரகம் 130 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.3675 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7743-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.2665-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6199-க்கும், பணங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.6669-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12065-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மொத்தமாக 1,750 மஞ்சள் மூட்டைகள் ரூ.79 லட்சத்திற்கு ஏலம் போனது.

    • ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு, பானை, மஞ்சள், வாழைத்தார், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு, பானை, மஞ்சள், வாழைத்தார், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

    ஈரோடு மாநகரில் உள்ள முக்கிய கடை வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள கரும்பு வியாபாரமும் இன்று அமோகமாக நடந்தது. ஒரு ஜோடி கரும்பு ரூ.70 முதல் ரூ.100 வரைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பனங்கிழங்கு விற்பனையும் நடந்தது.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, சித்தோடு, சென்னிமலை, கொடுமுடி, சிவகிரி, பெருந்துறை, பர்கூர், தாளவாடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் விற்பனை களை கட்டியது.

    ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் பெரியார் நகர் சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஈரோடு பூ மார்க்கெட்டிற்கு உசிலம்பட்டி, திண்டுக்கல், சத்தியமங்கலம், ஓமலூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனையாகி வருகிறது. ஈரோடு பூ மார்க்கெட்டிற்கு 5 டன்கள் பூக்கள் விற்பனைக்கு வரும். தற்போது பொங்கலை முன்னிட்டு 10 டன் பூக்கள் விற்பனைக்கு வந்து உள்ளது.

    தற்போது பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விட்டது. எனினும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் தேவை அதிகரிப்பால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.

    கடந்த வாரம் ரூ.800-க்கு விற்ற முல்லை பூ இந்த வாரம் தேவை அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.3 ஆயிரமாக விற்கப்படுகிறது. இதேபோல் ஜாதி பூ ஒரு கிலோ ரூ.1600, சம்மங்கி பூ ஒரு கிலோ ரூ.100, அரளிப்பூ ரூ.400, செவ்வரளி ரூ.400, செவ்வந்தி ரூ.120 விற்கப்பட்டது.

    இன்று சத்தியமங்கலம்பூ மார்க்ெகட்டுக்கு குறைந்த அளவிலேயே மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்பட்டது. மேலும் தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் மல்லிகைப்பூக்கள்தேவை அதிகரித்து உள்ளது. பூக்கள் வரத்து குறைந்து. தேவை அதிகரித்து உள்ளதால் இன்று நடந்த பூ மார்க்கெட்டில் ஒரு கிேலா மல்லிகைப்பூ ரூ.6200-க்கு விற்பனை ஆனது.

    • வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கடை வீதி, முதல் அக்ரஹாரம், ஓமலூர் சாலை, 5 ரோடு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அருணாச்சல ஆசாரி தெரு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து திருவிழா போல் காட்சியளித்தது.
    • சேலம் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, அழகாபுரம் பகுதிகளில் கரும்புகள், மஞ்சள் குலைகள், விற்பனை களை கட்டி உள்ளது.

    சேலம்:

    உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் கொண்டாட்டம்

    அனைவரும் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் பொங்கி மேலே வரும்போது, அனைவரும் பொங்கலோ பொங்கல் என கூறி தங்கள் பொங்கல் வாழ்த்துக்களை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொள்வார்கள். பொங்கல், கரும்பு, வெல்லம் மற்றும் தேங்காய் பழங்களைக் கொண்டு இறைவனுக்கு படையல் இட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள்.

    இதையொட்டி, சேலத்தில் கரும்பு, மஞ்சள், பூைஜ பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்ற வருகிறது. அதுபோல் ஜவுளி நிறுவனங்களில் புது துணி எடுக்க பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்.

    கடை வீதி, முதல் அக்ரஹாரம், ஓமலூர் சாலை, 5 ரோடு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அருணாச்சல ஆசாரி தெரு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து திருவிழா போல் காட்சியளித்தது.

    ஆண்களும், பெண்களும் தங்களது குடும்பத்தி னருடன் ஜவுளி எடுக்க கடைவீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். சேலம் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காக சேலத்திற்கு வந்திருந்தனர். சிறு, சிறு ஜவுளி கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடந்தது.செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், லீ பஜார், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாப்பேட்டை, சேலம் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, அழகாபுரம் பகுதிகளில் கரும்புகள், மஞ்சள் குலைகள், விற்பனை களை கட்டி உள்ளது.

    தற்காலிக கடைகள் ஆங்காங்கே அமைத்து விற்பனைக்கு மஞ்சள் குலைகள், கரும்புகள் குவித்து வைத்துள்ளனர். தினசரி சந்தைகள், வாழை பழங்கள் விற்பனை கடைகளும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ஊர்காவல் படை, ஈடுபட்டுள்ளனர். மக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீசார் அதிகளவு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். பல பகுதிகளில் பொறுத்தப்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உயர் போலீஸ் அதிகாரிகளும் வாகனங்களில் வந்து அடிக்கடி ரோந்து பணியில் வந்து கண்காணித்தப்படி சென்றனர்.

    மாடுகளுக்கான அலங்கார பொருட்கள்

    16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும். இதை யொட்டி, சேலத்தில் பல்வேறு பகுதி களில் மூக்கணாங்கயிறு, கழுத்து

    கயிறு, ஜலங்கை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்ப னைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து

    வியாபாரிகள் கூறுகையில், அயோத்தியாப்பட்டணத்தை சுற்றியுள்ளவலசையூர், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர், சுக்கம்பட்டி, கூட்டாத்துப்பட்டி, பேளூர் உள்படபல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.

    இவர்கள் பெரும்பாலும் அயோத்தி யாப்பட்ட ணத்திற்கு வந்து தங்கள் கால்ந டைகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதற்காக மூக்கணாங்க யிறு, ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

    • மஞ்சள் சாகுபடியில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    • பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு அடுத்த இடத்தை பெறுவது மஞ்சள் குலை

    பெரம்பலூர் :

    மஞ்சள் சாகுபடி மஞ்சள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மஞ்சளில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் சமையலுக்கு பயன்படுத்துகின்ற மஞ்சளை பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் மஞ்சளுக்கு தற்போது போதிய விலை இல்லாததால், அதனை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். மஞ்சள் குலை விற்பனை மேலும் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையில் கரும்புக்கு அடுத்த இடத்தை பெறுவது மஞ்சள் குலை. மங்கலத்தின் சின்னமாக மஞ்சள் குலை விளங்குகிறது. பொங்கலிடும் பானையை சுற்றி மஞ்சள் குலையை கட்டி, பெண்கள் பொங்கல் இடுவது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் குலையாவது நல்ல விலைக்கு விற்பனை ஆகுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.


    • ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • ஏலத்தில் 142 மஞ்சள் மூட்டைகள் ரூ.6 லட்சத்திற்கு ஏலம் போனது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக் குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.

    ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். ஏலத்தில் 142 மஞ்சள் மூட்டைகள் ரூ.6 லட்சத்திற்கு ஏலம் போனது.

    இதில் விரலி ரகம் 100 மூட்டைகளும், உருண்டை ரகம் 40 மூட்டைகளும், பணங்காளிரகம் 2 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.6020 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7032-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.5902-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6142-க்கும், பணங்காளி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.2012-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8542-க்கும் ஏலம் விடப்பட்டது.

    • பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக மஞ்சள் சாகுபடியை மேற்கொண்டுள்ளோம்.
    • ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் பண்டிகையின் போது விற்பனைக்காக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

    குடிமங்கலம்:

    அறுவடைதிருநாளான பொங்கல் பண்டிகையின் போது விளைந்தும் விளையாத நிலையிலுள்ள பச்சை மஞ்சளை செடியுடன் கொத்தாக பொங்கல் பானையில் கட்டும் பழக்கம் உள்ளது. இதனாலேயே பொங்கல் பண்டிகையின் போது செங்கரும்புக்கு இணையான இடத்தை மஞ்சள் கொத்து பிடிக்கிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் கொத்து விற்பனை செய்யும் வகையில் மஞ்சள் சாகுபடியில் குடிமங்கலம் பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பொங்கலன்று முக்கிய இடம் பிடிக்கும் மங்கலப் பொருளான மஞ்சள் கொத்து சாகுபடி விவசாயிகளுக்கு மன நிறைவைத் தருகிறது. பெரும்பாலும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் பண்டிகையின் போது விற்பனைக்காக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக மஞ்சள் சாகுபடியை மேற்கொண்டுள்ளோம். உணவுக்காகவோ மற்ற பயன்பாட்டுக்காகவோ மஞ்சள் உற்பத்தி செய்யும்போது சுமார் 9 மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும். அதேநேரத்தில் பொங்கலுக்கு மஞ்சள் கொத்து உற்பத்தி செய்வதற்காக ஆடிப்பட்டத்தில் சாகுபடி மேற்கொண்டால் மார்கழி கடைசியில் அறுவடை செய்து விடலாம். வியாபாரிகள் நேரடியாக விளைநிலத்துக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். மனதுக்கு மகிழ்ச்சி தரும் அதேநேரத்தில் நல்ல வருவாயும் தரக்கூடியதாக மஞ்சள் சாகுபடி உள்ளது.இவ்வாறு விவசாயிகள் கூறினார்.

    • தீபாவளி பண்டிகையின்போது, ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை உயர்ந்தது.
    • தமிழகத்தில் சராசரியாக ஓராண்டில் 8 முதல் 10 லட்சம் மூட்டை மஞ்சள் விளையும்.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, 4 இடங்களில் மஞ்சள் ஏல முறை விற்பனை நடக்கிறது. இங்கு தினமும், 3,000 முதல், 4,500 மூட்டை மஞ்சள் விற்பனையாகும்.

    நேற்றைய நிலையில் விரலி மஞ்சள் குவிண்டால், 5,429 ரூபாய் முதல், 8,150 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள், 4,746 ரூபாய் முதல், 7,159 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது.

    தற்போதைய விலை நிலவரம் குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையின்போது, ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை உயர்ந்தது. அதன்பின் தற்போது வரை விலை உயரவில்லை.

    தற்போது வரை மார்க்கெட்டுக்கு அதிகமாக பழைய மஞ்சள் மட்டுமே விற்பனைக்கு வருவதால், விலையில் உயர்வு ஏற்படவில்லை. தற்போது, 80 முதல், 85 சதவீதம் பழைய மஞ்சளும், 20 முதல், 30 சதவீதம் புதியவை வரத்தாகிறது.

    பழைய மஞ்சள், புதிய மஞ்சள் என தனித்தனியாக விற்பனை செய்ய இயலாது. கலந்து விற்பனையாவதால், விலையில் மாற்றம் இல்லை. ஈரோடு மாவட்டத்தில் புதிய மஞ்சள் வரத்து குறைந்த நிலையில், மஹராஷ்டிராவில் வரத்தாகும் புதிய மஞ்சளை நம்பி, ஈரோடு மார்க்கெட் செயல்படுகிறது.

    தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்த புதிய மஞ்சள் 90 சதவீதம் விற்பனை செய்துவிட்டனர். பழைய மஞ்சள் இருப்பில் உள்ளதால், அவற்றை விற்பனைக்கு அதிகமாக கொண்டு வருகின்றனர்.

    தற்போதைய நிலையில் தமிழகத்தில், 65 கிலோ எடை கொண்ட, 5 லட்சம் மூட்டை வரை பழைய மஞ்சள் உள்ளது.

    தவிர, ஈரோட்டில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டுக்கு வேலுார், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, ஆத்தூர், சேலம், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இம்மஞ்சள் தமிழகத்துக்கு மட்டுமின்றி, டெல்லி, கொல்கத்தா, பீகார் போன்ற வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

    தமிழகத்தில் சராசரியாக ஓராண்டில் 8 முதல் 10 லட்சம் மூட்டை மஞ்சள் விளையும். இதில், 80 சதவீதம் ஈரோடு மாவட்டத்தில் விளைவிக்கப்படும். கடந்தாண்டும், நடப்பாண்டிலும் மழை அதிகமாக உள்ளதால், இந்தாண்டு தமிழகத்தில் கூடுதலாக மஞ்சள் பயிரிட்டுள்ளனர். இதனால், 10 முதல், 12 லட்சம் மூட்டை மஞ்சள் வரத்தாகும் என எதிர்பார்ப்பு உள்ளது.

    இதனால் புதிய மஞ்சள் வரத்தாகும்போது விலை உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பரமத்தி வேலூர் தாலு–காவில் பல்வேறு பகுதி–களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டு வந்தது.
    • விலை கட்டுபடி ஆகாத விவசாயிகள் தங்கள் மஞ்சள் மூட்டைகளை அங்குள்ள குடோனில் இருப்பு வைக்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலு–காவில் சோழசிராமணி, ஜமீன்–இளம்பள்ளி, கொத்த–மங்கலம், ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், வடகரையாத்தூர், பிலிக்கல்பாளையம், கபிலர்மலை, பெரிய–சோளிபாளையம், குரும்ப–லமகாதேவி, சின்னமருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி–களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டு வந்தது.

    இங்கு விளையும் மஞ்சள்கள் ஈரோடு பகுதி–களில் உள்ள தனியார் மற்றும் அரசு மஞ்சள் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது மஞ்சளுக்கு நல்ல விலை இல்லாததால் மஞ்சள் பயிரிட்டு வந்த விவசாயிகள் மஞ்சள் பயிரிடுவதை தவிர்த்து கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்கின்றனர். தற்போது மஞ்சள் பயிர் சுமார் 500 ஏக்கர் வரை மட்டுமே சாகுபடி செய்து

    வருகின்றனர்.

    மஞ்சள் பயிரிட்ட 10-வது மாதத்தில் மஞ்சள் தலையை அறுத்து விடுகின்றனர். பின்னர் சில நாட்கள் கழித்து கூலி ஆட்கள் மூலம் மஞ்சளை வெட்டி எடுக்கின்றனர். பின்னர் விரலி மஞ்சள், கிழங்கு மஞ்சள் என இரண்டாக பிரிக்கின்றனர். அதனை தொடர்ந்து வாகனங்கள் மூலம் ஈரோடு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு மஞ்சள் மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    விலை கட்டுபடி ஆகாத விவசாயிகள் தங்கள் மஞ்சள் மூட்டைகளை அங்குள்ள குடோனில் இருப்பு வைக்கின்றனர். மஞ்சளுக்கு நல்ல விலை வரும்போது விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்பனையானது.தற்போது 100 கிலோ கொண்ட ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனையாகிறது.மஞ்சள் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் மஞ்சள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    • துலாம் மாத தேய்பிறையில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிக சிறப்பானது.
    • மற்ற சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை விட மும்மடங்கு பலன்களை தரும் என்பது ஐதீகம்.

    தஞ்சாவூர்:

    ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பதால் துலாம் மாத தேய்பிறையில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிக சிறப்பானது.

    மற்ற சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை விட மும்மடங்கு பலன்களை தரும் என்பது ஐதீகம்.

    அதன்படி நேற்று ஐப்பசி மாத சனி பிரதோ ஷம் என்பதால் தஞ்சை பெரிய கோவிலில்உள்ள மகா நந்திக்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர், விபூதி உள்ளிட்ட மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெ ற்றது.

    தொடர்ந்துநந்தி, பெருவுடையார், பெரி யநாயகி அம்மன் ஆகியோ ருக்கு தீபாராதனைகாண்பி க்கப்பட்டது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×