search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இதயம்"

    • மாரடைப்பு போன்ற இருதய நோய் உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும்.
    • உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    இருதய நோய் வராமல் தடுக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்துகடலூர் கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கல்யாணராமன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆரோக்கியமான உணவு முறை

    ஆண்டு தோறும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இருதய நோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இருதய நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாரடைப்பு போன்ற இருதய நோய் உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப்பிடித்தல், காற்று மாசு ஆகியவை இருதய நோய் வருவதற்கான காரணங்களாக உள்ளன. சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளை, தவிர்த்து அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்கப்படாத பழச்சாறுகளை தேர்வு செய்து ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

    உடற்பயிற்சி

    ஒவ்வொரு நாளும் நாம் தேர்வு செய்த சைவ உணவுகள் மொத்த அளவை, 5 பாகங்களாக பிரித்து, அதில் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து உண்ண வேண்டும். உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் என வாரத்தில் 5 நாட்கள் செய்ய வேண்டும். மேலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் இயங்கும் வகையில், இருத்தல் நல்லது.

    புகைப் பிடிப்பதையும், புகையிலை பயன்படுத்துவதையும், அறவே தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய ஓர் சிறந்த விஷயமாக விளங்குகிறது. புகைப்பிடிப்பதை கைவிட்ட, 2 ஆண்டுகளுக்குள் இருதய நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக குறைகிறது. மேலும் 15 ஆண்டுகளுக்குள் புகை பிடிக்காதவர்களின் இருதய நிலைக்கு வந்துவிடுவீர்கள். புகைப்பிடிப்பதை தவிர்ப்பதன் மூலம், உங்கள் இருதய பிரச்சினைகள் குறைவது மட்டும்இன்றி, அருகில் இருக்கும் சகமனிதர்களின் இருதய பிரச்சினைகளும் குறைய வழி வகை செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஒவ்வொவருக்கும் வேறுபடும்.
    • நமது வாழ்க்கை முறை மூலம் இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

    ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு திடீரென ஏற்படாது. பெரும்பாலும் மக்கள் மாரடைப்பிற்கான அறிகுறிகள் தென்படும் போது அதை கண்டு கொள்ளாமல் சாதாரணமாக விட்டுவிடுவார்கள். இப்படி மாரடைப்பு வருவதற்கு முன் உணர்த்தும் அறிகுறிகளை சாதாரணமாக விட்டுவிட்டால், பின் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.

    சில மணி நேரங்கள் முன்போ, சில நாட்கள் அல்லது சில வாரங்கள் முன்போ சில எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றும். அதன் சில முக்கிய அறிகுறிகளைத் தெரிந்து வைத்திருப்பது மிக்பெரிய ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றும். எனவே ஒவ்வொருவரும் மாரடைப்பிற்கான அறிகுறிகளைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஒவ்வொவருக்கும் வேறுபடும்.

    குடும்பத்தில் ஒருவருக்கு (குறிப்பாக பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோருக்கு) மாரடைப்பு வந்தால், அந்தக்குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு மாரடைப்பு வர 30 சதவிகிதம் வாய்ப்பு அதிகமாக உண்டு. மரபு வழியாக இது வரக்கூடியது என்பதால் இதை தடுக்க வழி எதுவும் இல்லை. அதே நேரத்தில் நமது வாழ்க்கை முறை மூலம் இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

    அவை:

    1) ஆரோக்கியமான உணவுகள், போதிய உடற்பயிற்சி, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றில் இருந்து விலகி இருப்பது,

    2) கோபம், குரோதம், பொறாமை போன்ற தீய எண்ணங்கள் எதுவும் இன்றி மனதையும், எண்ணங்களையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது,

    3) சிறந்த வாழ்க்கை முறையை கடைப்பிடித்து மகிழ்ச்சியுடன் இருப்பது,

    4) அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து பாதிப்புகள் எதுவும் இருந்தால் தொடக்க நிலையிலேயே சிகிச்சை எடுப்பது நல்லது,

    5) சிலர் சமூக வலைத்தளங்களில் கூறப்படும் மருத்துவ முறைகளை சுயமாக பயன்படுத்துவதுண்டு. இது மிகவும் தவறாகும். அரசு அங்கீகாரம் பெற்ற, தகுதியான மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த மருந்துகளையும் எடுக்கக்கூடாது. இவற்றை கடைப்பிடித்து வந்தால் நீண்ட காலம் நோய் ஆபத்து இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

    இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ)

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
    • உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    சென்னை:

    அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து உயிரைக் காத்து உள்ளனா். 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.

    இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூதாட்டி ஒருவா் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை செயலிழக்கும் நிலையில் இருந்தன. அதீத வெப்பத்தில் அவா் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்குள்ளானதும் தெரியவந்தது. இதனால், அவரது உடல் வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உயா்ந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

    தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த மூதாட்டிக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளித்தனா். குறிப்பாக, அவரது உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    3 வார சிகிச்சைக்குப் பிறகு அவா் இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா். சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப் படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்கினால், உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாரடைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • ஆண்டுக்கு ஒருமுறையாவது இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    நீரிழிவு நோயை போல இதய நோயால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' எனப்படும் கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் ஏற்படும் மாரடைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் கை, கழுத்து, தாடை பகுதியில் வலி, மார்பில் குத்துவது போன்ற வலி, தலைச்சுற்றல், பதற்றம், வியர்வை போன்ற மாரடைப்புகளுக்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படாது.

    இரைப்பை பகுதியில் அசவுகரியம் ஏற்படுவதுபோல் சாதாரணமாக தெரியும். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஒரு சில அறிகுறிகள் வெளிப்பட்டாலும் சாப்பிட்ட உணவு ஏதோ ஒத்துக்கொள்ளவில்லை என்று வாயு தொல்லை, அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சினையாகத்தான் பலரும் கருதுகிறார்கள்.

    பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகள் இத்தகைய அறிகுறிகளை எளிதில் உணரமாட்டார்கள். ஏனெனில் அவர்களின் நரம்புகள் வலி பற்றிய அறிகுறிகளை சட்டென்று வெளிப்படுத்தாது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவது மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாமலேயே சில சமயங்களில் மாரடைப்பு ஏற்படக்கூடும்.

    'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்படுவது எப்படி தெரியும்?

    வயிற்றின் மேல் பகுதியிலோ அல்லது மார்பின் மையப் பகுதியிலோ இதுவரை இல்லாத அளவுக்கு அசாதாரண அறிகுறிகளோ, வலியோ 20 முதல் 25 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது அவசியம். ஈ.சி.ஜி. பரிசோதனை எடுத்துக்கொள்வதும் முக்கியமானது. அதன் மூலமே நோய் பாதிப்புக்கான அறிகுறிகளை கண்டறிந்துவிடலாம். டிரோபோனின் டி பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.

    இது இரத்தத்தில் உள்ள டிரோபோனின் ஐபுரோடீன்களின் தன்மையை அளவிடும். இந்த புரதங்கள் இதய தசை சேதமடைவதை சுட்டிக்காட்டும். இதயம் எவ்வளவு சேதமடைகிறதோ, அந்த அளவுக்கு ரத்தத்தில் ட்ரோபோனின் டி அளவு அதிகமாக இருக்கும்.

    இதுபோன்ற அசவுகரியம் தோன்றினாலோ, சிறிது நேரத்திற்கு பிறகு மறைந்தாலோ இவை இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பான எச்சரிக்கை அறிகுறிகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

    35 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் எக்கோ கார்டியோகிராம் ஆகியவை அதில் உள்ளடங்கி இருக்க வேண்டும். நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு கொண்டவர்கள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் கொண்டவர்கள், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்கள், ஏற்கனவே இதய நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. முதல் முறை 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டது தெரியாமலேயே கடந்து சென்றுவிட்டால், இரண்டாவது முறை ஏற்படும்போது கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றன.
    • மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களை தடுக்கும் 5 உணவு வகைகளை பார்ப்போம்.

    இதய நோய்கள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடாமல் புறக்கணிப்பதால் மாரடைப்பு அபாயம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களை தடுக்கும் 5 உணவு வகைகளின் பட்டியலை பார்ப்போம்.

    1. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களுக்கு முக்கிய பங்குண்டு. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட சால்மன், டுனா போன்ற மீன்களை உண்பது, டிரைகிளிசரைடுகளை குறைத்து, உடலில் ஏற்படும் வீக்கத்தை போக்கும். அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் ராஜ்மா போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகள் ரத்த அழுத்தத்தை இயல்பான அளவில் வைத்திருக்கவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.

    2. முழுதானியங்கள்:

    பதப்படுத்தப்பட்ட தானியங்கள் பல்வேறு செயல் முறைகளின் மூலம் வடிகட்டப்படுகின்றன. அப்போது அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் வீரியம் குறைந்து போய்விடக்கூடும். ஆனால் முழு தானியங்களை கழுவி சுத்தம் செய்யும்போது இத்தகைய பாதிப்பு கள் நேராது. மேலும் முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளடங்கி இருக்கும். அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக தக்க வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. நீரிழிவு மற்றும் இதய நோய் ஆபத்துக்களை குறைக்கவும் செய்யும். ''முழு தானியங்களை பதப்படுத்தும்போது, அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் நீக்கப்படக்கூடும். அவற்றை அதிகம் உட்கொள்வது உடல் பருமனையும், ஊட்டச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும். வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசியையும், வழக்கமான பாஸ்தாவை விட முழு கோதுமை நீக்கப்படாத பாஸ்தாவையும், கார்ன் பிளேக்குகளுக்கு பதில் ஓட்ஸையும் தேர்வு செய்யலாம்'' என்கிறார் மும்பையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் பாட்டீல்.

    3. பழங்கள்- காய்கறிகள்: வளமான வாழ்க்கைக்கு பழங்கள், காய்கறிகளை உண்ணுங்கள் என்கிறார்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, பொட்டாசியம், போலிக் அமிலம் ஆகியவை நிரம்பியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்க உதவுவதோடு உடலில் ஏற்படும் தேய்மானத்தை சரி செய்வதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

    4. நிறைவுற்ற கொழுப்பு: இறைச்சி வகைகள் மற்றும் பால் பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு காணப்படுகிறது. இவை எல்.டி.எல் கொழுப்பின் அளவை உயர்த்தலாம். தமனிகளின் செயல்பாடுகளை முடக்கி விடலாம். எனவே நிறைவுற்ற கொழுப்புகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான இறைச்சி வகைகளை தேர்வு செய்ய வேண்டும். வெண்ணெய்க்கு பதில் நெய், கடுகு எண்ணெய் போன்ற நல்ல கொழுப்பு கொண்ட உணவு பொருட்களை சமையலுக்கு தேர்ந்தெடுக்கலாம்.

    5. பால் பொருட்கள்: பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றன. ஆனால் அவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது அவற்றில் உள்ள கொழுப்பு உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்துவிடும். பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும். இருப்பினும் அவற்றில் குறைந்த கொழுப்பு வகை கொண்டவற்றை உட்கொள்வது இதய நோய் அபாயத்தை குறைக்கும்.

    • வெயில் காலத்தில் அதிக அளவில் வியர்வை வெளியேறும்.
    • டீ, காபியை தவிர்ப்பது மிகவும் நல்லது.

    கோடை காலத்தில் இருதய நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.விஸ்வநாதன்.

    அவர் கூறியதாவது:-

    வெயில் காலம் இருதய நோயாளிகளுக்கு நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் மருத்துவர்கள் சொன்ன மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.

    வெயில் காலத்தில் அதிக அளவில் வியர்வை வெளியேறும். இதனால் உடலில் ரத்த அழுத்தம், பொட்டாசியம், சோடியத்தின் அளவு மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மயக்கம், சோர்வு ஏற்படும். அப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஈ.சி.ஜி. எடுக்க வேண்டும்.

    பொதுவாக இரண்டு வகையான இருதய நோயாளிகள் இருக்கிறார்கள். ரத்தத்தை வழக்கமான அளவில் 'பம்பிங்' செய்யும் இருதய நோயாளிகள் ஒருவகை. இதயத்தின் 'பம்பிங்' திறன் குறைவாக உள்ள இருதய நோயாளிகள் மற்றொரு வகை. இவர்களில் 'பம்பிங்' திறன் நன்றாக உள்ள இருதய நோயாளிகள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்தலாம். 'பம்பிங்' திறன் குறைவாக உள்ள இருதய நோயாளிகள் 1.5 லிட்டர் தண்ணீர்தான் குடிக்க வேண்டும்.

    கூடுமானவரையில் டீ, காபியை தவிர்ப்பது மிகவும் நல்லது. அப்படி அருந்துவதாக இருந்தால், காலையில் எழுந்ததும் அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, மற்ற வேலைகளை தொடங்கலாம். சிறிது நேரம் கழித்து அருந்தலாம்.

    காலை 7 மணிக்கே வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், இருதய நோயாளிகள் காலையில் நடைபயிற்சி செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்லும் போது 'சன் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறையவும், அதிக வியர்வையினால் மயக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இரவு 7 மணிக்கு பிறகு நடைபயிற்சி செல்லலாம். வெயில் காலத்தில் இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாலை நேர நடைபயிற்சி மிகவும் நல்லது.

    காலை வேளை உணவாக எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, தோசை போன்றவற்றை சாப்பிடலாம். ஆப்பிள், கொய்யா, பப்பாளி, பேரிக்காய் பழங்களும் சாப்பிடலாம். என்றாலும் அதிகமாக சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளியாக இருந்தால் இவற்றை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மதியம் 11 அல்லது 12 மணி அளவில் காய்கறி சூப், மோர் அருந்தலாம். சிறந்த நீர்பானம் என்றால், அது மோர்தான், குறைவாக உப்பு சேர்த்து மோர் அருந்துவது மிகவும் நல்லது. மோர் குடிப்பதால் கொழுப்பு அதிகரிக்காது.

    இளநீரில் இருக்கும் பொட்டாசியம் சத்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதால் இளநீர் குடிக்கலாம். அதேசமயம், இளநீர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் இளநீரை தவிர்க்க வேண்டும். தர்ப்பூசணி பழம் சாப்பிடுவதாக இருந்தால் குறைவாக சாப்பிடுங்கள்.

    நீர்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காய் சாப்பிடலாம். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சர்க்கரையின் அளவு கூடாது என்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம்.

    கோடை காலத்தில் மதிய உணவில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்ற அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம்.

    பச்சை காய்கறிகளெல்லாம் 'கிரீன் சிக்னல்' மாதிரி. சாலையில் 'கிரீன் சிக்னல்' விழுந்ததும் நாம் செல்வது மாதிரி, பச்சை நிற காய்கறிகள் எல்லாமே உடலுக்கு மிகவும் நல்லது. பீன்ஸ், அவரைக்காய், கோவைக்காய், பாகற்காய், காராமணி, காலிபிளவர், கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். சாதத்தை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மதிய உணவுக்குப் பின் சற்று ஓய்வு எடுப்பது நல்லது. இதனால் வெயிலை தவிர்க்க முடியும் என்பதோடு, சிறிதுநேரம் தூங்கி எழுந்தால் மாலையில் புத்துணர்ச்சி கிடைக்கும்.

    மாலையில் ஏதாவது பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு, அவரவர் விருப்பத்துக் ஏற்ப சர்க்கரை இல்லாமல் சிறிது டீ, அல்லது காபி அருந்தலாம்.

    இரவில் சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டு விட்டு 2 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். தூங்கச்செல்வதற்கு 1.30 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடவேண்டும்.

    மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், இருதய நோயாளிகள் காற்றடைக்கப்பட்ட ரெடிமேட் குளிர்பானங்களை அருந்தக்கூடாது. பழச்சாறு அருந்தலாம். பழச்சாறு அருந்துவதை விட பழங்களை அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.

    வெயில் அதிகமாக இருக்கும் போது வீட்டினுள் குளிர்ச்சியான இடத்தில் இருங்கள். குளிர்சாதன வசதி இல்லாதவர்கள் வெயில் படாத காற்றோட்டமான அறையில் இருக்கவேண்டும். வீட்டுக்கு வெளியே மரத்தின் நிழலிலும் அமரலாம்.

    பொதுவாக எல்லா இருதய மற்றும் சர்க்கரை நோயாளிகளுமே 3 மாதத்துக்கு ஒருமுறை டாக்டரை சென்று பார்க்க வேண்டும். உடல் நிலைக்கு ஏற்ப அவர்கள் மாத்திரைகளை மாற்றிக்கொடுப்பார்கள் அல்லது ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடச் சொல்வார்கள்.

    இந்த யோசனைகள் இருதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி வயதான எல்லோருக்குமே பொருந்தும்.

    இவ்வாறு டாக்டர் என்.விஸ்வ நாதன் கூறினார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஓய்வெடுத்தாலும் வலி குறையாது.
    • நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும்.

    சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்கும் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பின் அறிகுறிகள். இந்த வலியை முதன்முறையாகத் தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன.

    பரம்பரை காரணம், அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலை, உயரமான இடங்களுக்குச் செல்வது, அதிகமாக உணர்ச்சி வசப்படுவது போன்றவற்றை குறிப்பிடலாம்.

    புகைப்பவர்கள், மதுகுடிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என மருத்துவ துறையினர் கூறுகின்றனர்.

    நிமோனியா எனும் நுரையீரல் அழற்சி, நுரையீரல் உறைக்காற்று நோய், நுரையீரல் உறை அழற்சி, கடுமையான காச நோய் ஆகியவற்றாலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும்.

    நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம். நீண்டகாலமாக படுத்த படுக்கையாக இருப்பவர்கள், நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்கள் ஆகியோருக்கும் ஏற்படலாம். நெஞ்சில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்த வலி வரலாம். வலியுள்ள பகுதியைத் தொட்டு அழுத்தினால் வலி அதிகரிக்கும். உடல் அசைவின்போதும் மூச்சுவிடும்போதும் வலி அதிகரிக்கும். தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும்போது நெஞ்சில் வலிக்கும். குடல் புண் நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான்.

    • தற்போது இதய நோய் என்பது வயது வித்தியாசமின்றி பலரையும் தாக்கத்தொடங்கிவிட்டது.
    • இதய நோயில் இருந்து நிவாரணம் பெற பல்வேறு சித்த மருந்துகள் உள்ளன.

    இதய நோய் வராமல் தடுக்கவும், இதய நோயில் இருந்து நிவாரணம் பெறவும் பல்வேறு சித்த மருந்துகள் உள்ளன. அவற்றில் மிக எளிமையான சித்த மருத்துவ முறைகளில் ஒன்று தான் குடிநீர் வகைகள். சித்த மருந்துகள் மற்றும் இயற்கை மூலிகை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த குடிநீரை பயன்படுத்தி வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த குடிநீர் வகைகள் வருமாறு:

    குடிநீர் 1: மருதம் பட்டை, நொச்சி இலை, தாளிக்கீரை, சாதிக்காய், சாதிபத்திரி, நாவல் விதை இவற்றை சம அளவில் எடுத்து நன்றாக பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் எடுத்து 100 மில்லி தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி குடிநீராக்கி 60 மில்லி அளவு காலை, மாலையில் குடிக்கலாம்.

    குடிநீர் 2: பேரீச்சை, சிங்காரக் கிழங்கு (பண்ணிமோந்தான் கிழங்கு), நிலப்பனை, தண்ணீர் விட்டான், வில்வப் பட்டை, தாமரைக் கிழங்கு, மருதம் பட்டை இவற்றை தலா 35 கிராம் எடை அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் இருந்து ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து அதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிநீராக்கி காலையில் மட்டும் குடிக்கவும்.

    குடிநீர் 3: வில்வப்பட்டை, தேவதாரம், குரோசாணி ஓமம், லவங்கப்பட்டை, சாதிக்காய், சாதிபத்திரி, மருதம்பட்டை இவைகளை தலா 35 கிராம் அளவு எடுத்து 1½ லிட்டர் தண்ணீர் சேர்த்து, எட்டில் ஒன்றாய்க் காய்ச்சி வடித்து 60 மில்லி வீதம் காலை, மாலை குடிக்கவும்.

    குடிநீர் 4: ஆட்டின் தமரகம் (இருதயம்) ஒன்றை எடுத்து அதை சிறிய துண்டுகளாக்கி அத்துடன் லவங்கப்பட்டை, சாதிக்காய், சாதிபத்திரி இவற்றின் பொடிகள் ஒரு சிட்டிகையும், உப்பு ஒரு சிட்டிகையும் சேர்த்து 200 மில்லி அளவு தண்ணீர்விட்டு நன்றாக காய்ச்சி சூப் போன்று தயாரித்து கொடுக்கலாம்.

    இது தவிர, வெண்தாமரை சூரணம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட வேண்டும். அதுபோல தேனில் ஊறவைத்த கர்ச்சூர் வகை பேரீச்சையை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு நோய் வரும் ஆபத்தை தடுக்கலாம்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, எம்.டி, (சித்தா)

    • 2030-ம் ஆண்டில் இந்தியாவின் மிக முக்கிய நோயாக இதய நோய்தான் உருவெடுக்குமாம்.
    • இதய நோய் வந்துவிட்டால் அதற்கு பைபாஸ் சர்ஜரிதான் இன்றிருக்கும் மிகச் சிறந்த சிகிச்சை.

    இந்தியாவில் இதயநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2030-ம் ஆண்டில் இந்தியாவின் மிக முக்கிய நோயாக இதய நோய்தான் உருவெடுக்குமாம். அப்போது, ஆண்களில் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைபவர்களில் 34 சதவிகிதம் பேரும், பெண்களில் 32 சதவிகிதம் பேரும் இதய நோயால் மரணம் அடைவார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    மன அழுத்தம், அதிக அளவு கொலஸ்ட்ரால், உடற் பயிற்சி ஏதும் இல்லாத நிலை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கூடுதல் எடை, புகைப் பழக்கம் மற்றும் மது அருந்துவதாலும் இதயம் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

    ''இதய நோய் வந்துவிட்டால் அதற்கு பைபாஸ் சர்ஜரிதான் இன்றிருக்கும் மிகச் சிறந்த சிகிச்சை. ஆனால், அப்படிப்பட்ட பைபாஸ் சர்ஜரியை தவிர்க்கலாம்... உணவுப் பழக்கத்தை மட்டும் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் போதும். இதய நோயை ஓட ஓட விரட்டி விடலாம்'' என்கிறார் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவரான டீன் ஆர்னிஷ்.

    அமெரிக்க மருத்துவ அசோசியேஷனின் பத்திரிகையான 'ஜாமா'வில் இவரது விரிவான ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

    ''இன்றைய தேதியில் இதய நோயைக் கட்டுப்படுத்தும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒரே உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம் இதுதான்'' என்கிறார்கள் பிரபல மருத்துவர்கள்.

    ''பெரும்பாலானவர்களின் பரிந்துரை போல் நாங்கள் முற்றிலுமாக சைவத்துக்கு மாறச் சொல்வதில்லை. மீன் எண்ணெய் உள்ளிட்ட கொழுப்பற்ற அசைவத்தை அவ்வப்போது சேர்த்துக் கொள்ளச் சொல்கிறோம். சர்க்கரை, மதுபானம் உள்ளிட்டவற்றைக் கூட நிறுத்தச் சொல்லாமல் குறைத்துக் கொள்ளவே பரிந்துரைக் கிறோம்.

    70 முதல் 75 சதவீத கலோரியை கார்போஹைட்ரேட்ஸ் மூலமும் 15 முதல் 20 சதவீத கலோரியை புரோட்டீன்கள் மூலமும், பெறுவதே எங்கள் உணவுத் திட்டத்தின் நோக்கம். அதோடு கொஞ்சம் மனப் பயிற்சியும் அவசியம்'' என்கிறார் டாக்டர் டீன் ஆர்னிஷ்.

    இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இதயநோய் வராது என்பதோடு, மாரடைப்பின் விளிம்பு நிலையில் இருப்பவர்களைக் கூட மெல்ல மெல்ல குணமாக்கி, மாத்திரை கூடத் தேவைப்படாத நார்மல் மனிதர்களாக்கி விடுகிறதாம் இது.

    இன்று உலகம் முழுவதும் பிரபலமடைந்திருக்கும் இந்த உணவுத்திட்டத்தையும் மனப் பயிற்சியையும் டீன் உருவாக்கியது எப்படித் தெரியுமா? இந்தியாவைப் பார்த்துத்தான்.

    ''உலகின் மிக முக்கிய பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் இந்தியாவில் இருந்தே தொடங்குகிறது. இந்தியர்களை அடிப்படையாக வைத்தே, இந்த பிரச் சினைக்கும் தீர்வு கண்டிருக்கிறோம்'' என்று டாக்டர் டீன் ஆர்னிஷே குறிப்பிட்டிருக்கிறார்.

    • காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    • ஒரு நாளைக்கு 6 கிராம் அளவிற்கு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    மாரடைப்பு ஏற்படுவ தற்கான காரணங்களான வாழ்க்கைச் சூழல், பணிச்சுமை, தூக்கமின்மை, கட்டுப்பாடற்ற உணவு முறை, உடல்நல பிரச்சனைகள் மற்றும் இவை அனைத்தாலும் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக் குறைப் பதோடு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக பின்பற்றினால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும் என்கிறார் நெல்லை ஷிபா மருத்துவமனை இதயநோய் சிகிச்சை மருத்துவர் கிரிஷ் தீபக்.

    மன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம்.

    பொதுவாக மாரடைப்பு ஏற்படும்போது திடீர் நெஞ்சுவலி (வழக்கமாக நெஞ்சிலிருந்து இடது கை அல்லது கழுத்தின் இடப்பாகத்திற்கு பரவும்), மூச்சுதிணறல், வாந்தி, மயக்கம், வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்கு நெஞ்சு வலி இல்லாமல், நெஞ்சு எரிச்சலோ அல்லது இடது கை குடைச்சலோ இருக்கும். இது மட்டுமல்லாமல் முதுகு எரிச்சல், வலது பக்க நெஞ்சுவலி, தாடைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு வலி இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம்.

    மாரடைப்பை கண்டறிய

    இதய சுருள் படம் (ECG) எடுக்க வேண்டும். மேலும் ரத்தப் பரிசோதனை மூலமும் மாரடைப்பை கண்டறிய லாம். இதய ஸ்கேன் (ECHO) மூலம் நம் இதயத்தின் செயல்திறன், மாரடைப்பைக் கண்டறியலாம்.

    ஆஞ்சியோகிராம் / ஆஞ்சியோ பிளாஸ்டி

    ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பார்க்கும்போது இதய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்தால், கை வழியாக ஒரு சிறிய டியூப்பை செலுத்தி, அதன் மூலம் ஒரு பலூனை உட்செலுத்தி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்று அதில் இருக்கும் கொழுப்பு படிவுகளை அகற்றி (விரித்து விடுதல்) அந்த இடத்தில் ஸ்டென்ட் வைத்து அடைப்பை சரி செய்யும் சிகிச்சை முறைக்கு ஆஞ்சியோபிளாஸ்டி.

    பைபாஸ் சர்ஜரி யாருக்கு தேவை?

    இதயத்திற்கான ரத்தக் குழாய்களில் 3 அல்லது 5 இடங்களில் அடைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பைபாஸ் சர்ஜரி பரிந்துரை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையினால் சுலபமாக மற்றும் வலி இல்லாமல் அடைப்பை அகற்றலாம்.

    இதய நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் என்ன?

    இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் அதிகளவு உப்பு, நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள சால மீன், வால்நட்ஸ், கொண்டைக்கடலை, ஓட்ஸ், சிவப்பு திராட்சை, தக்காளி போன்ற உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 6 கிராம் (3 டீஸ்பூன்) அளவிற்கு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் ஒரு நாளைக்கு 4 முதல் 6 டீஸ்பூன் அளவில் சன் பிளவர் எண்ணெய், ரைஸ்பிராண்ட் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சுழற்சி முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

    மாரடைப்பை தடுக்க என்ன செய்வது?

    மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பை வராமல் தடுக்க முடியும். மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய முயற்சிப்பதோடு, முடிந்தவரை எப்போதும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ம ன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம்.

    மாரடைப்பை தடுக்க ரத்த அழுத்தம், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். மது அருந்துதல், புகை மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். தினசரி 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி அரை மணி நேரமாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர் கிரிஷ் தீபக்.

    Dr. கிரிஷ்தீபக் MD, DM.,FNB இதய மருத்துவர், ஷிபா மருத்துவமனை 9442139292

    • நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் ‘கிரீன் காரிடார்’ அமைக்கப்பட்டது.
    • மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்றபோது வாகனம் மோதியது. இதில் திருச்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருச்செல்வத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் நிலையை பார்த்து கண்கலங்கினர்.

    மூளைச் சாவு அடைந்த திருச்செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கோவை மருத்துவமனையில் சந்திரமோகன் என்பவருக்கு கல்லீரலும், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புனேவை சேர்ந்த பாவுராவ் நகாடி என்பவருக்கு இதயமும் தேவைப்படுவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் திருச்செல்வத்தின் இதயம், கல்லீரலை பத்திரமாக அகற்றி ஆம்புலன்ஸ் மூலம், சாலை மார்க்கமாக கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் பிற மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்ல உடனே நடவடிக்கை எடுத்தனர்.

    போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வழிகாட்டுதலில் மதுரையில் இருந்து இன்று காலை கல்லீரல், இதயத்துடன் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கோவை, புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. அதன் முன் போலீஸ் வாகனம் சைரன் ஒலித்தபடி சென்றது.

    நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் 'கிரீன் காரிடார்' அமைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது. இன்று மதியம் 2 மணிக்குள் ஆம்புலன்ஸ் உரிய இடத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. 

    • ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம்.
    • ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. ஆண்டுதோறும் சுமார் 1 கோடியே 73 லட்சம் பேர் மாரடைப்பால் இறக்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன.

    உலக அளவில் நிலைமை இப்படி என்றால், இந்தியாவில் மாரடைப்பின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையை சேர்ந்த ஒரு நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம்.

    என்ஜினை சீராகப் பராமரிப்பது போல இதயத்தைப் பாதுகாக்கவும் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். இன்றைய நெருக்கடி மிகுந்த உலகில் மன அழுத்தம், மாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. எந்தச் செயலையும் பதற்றமின்றி, மனஅழுத்தமின்றி செய்யப் பழகிக்கொண்டாலே இதயத்துக்கு நல்லது. மவுனத்தை கடைபிடித்து, நிதானமாக செயல்பட்டால் மன அழுத்தம் இன்றி வாழலாம். ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல் பருமனும், தொடர்ந்து சேரும் கொழுப்பும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். துரித உணவுப் பழக்கத்தைக் கைவிட்டு, சத்தான, சமச்சீரான உணவை உட்கொண்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

    தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்வது பொதுவாக எல்லாருக்குமே நல்லது. நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்துக்கேற்ற உடல் எடையைப் பராமரிப்பது என ஆரோக்கியத்தைப் பராமரித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரியும் சூழலில் உள்ளவர்கள், அவ்வப்போது சில நிமிடங்கள் காலாற நடை போடுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இவற்றையெல்லாம் முறைப்படி பின்பற்றி வந்தால், உங்கள் இதயம் கடைசிவரை ஆரோக்கியமாகவே இயங்கும்.

    ×