என் மலர்
நீங்கள் தேடியது "குரங்குகள்"
- குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து சமையல் பொருட்களை சேதப்படுத்துவதும், விவசாய விளைநிலங்களில் நாசப்படுத்தியும் பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.
- இரும்பு கூண்டுக்குள் நிலக்கடலை, வாழைப்பழம், தக்காளி போன்ற பொருட்களை வைத்து 8 குரங்குகளை பிடித்தனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெரு, லிங்காபுரம், முத்து மாரியம்மன் கோவில் தெரு, கெங்கையம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது.
குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து சமையல் பொருட்களை சேதப்படுத்துவதும், விவசாய விளைநிலங்களில் நாசப்படுத்தியும் பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.
இதுகுறித்து ஊராட்சி துணை தலைவர் கோவிந்த சாமி செங்கல்பட்டு வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வனத்துறை அலுவலர் கமலாசனன், வனக்காப்பாளர் ஏழுமலை உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு உள்ளுர் மக்கள் உதவியுடன் இரும்பு கூண்டுக்குள் நிலக்கடலை, வாழைப்பழம், தக்காளி போன்ற பொருட்களை வைத்து 8 குரங்குகளை பிடித்தனர்.
பின்னர் அவைகளை பாதுகாப்பாக, சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் காட்டுக்குள் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
- நொச்சிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக 3 குரங்குகள் சுற்றித் திரிகின்றன.
- குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக 3 குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இவைகள் ஆளில்லாத வீடுகளுக்குள் புகுந்து உணவு தேடி விட்டு, எதுவும் கிடைக்காத நிலையில் வீடுகளில் உள்ள பாத்திரங்கள், துணிகள் உள்ளிட்டவற்றை தூக்கிச் செல்கின்றன.
திடீரென வீடுகளுக்குள் வருவதால் சிறுவர்கள், பெண்கள் அச்சமடைகின்றனர். இதனால் குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குரங்குகளின் தொல்லை குறித்து கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
- தனியார் ஏஜென்சியை சேர்ந்த 3 குழுவினர் டெண்டர் எடுத்து குரங்குகளை பிடிக்க 10 பேரை நியமித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம், அரட்ல கோடா கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்திற்கு வந்த குரங்குகள் அங்குள்ள வீடுகளில் புகுந்து தொல்லை கொடுத்து வந்தது. தோட்டங்களில் புகுந்து பழம், காய்கறிகளை கடித்து நாசம் செய்து வந்தன. மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவரையும் கடித்து குதறியது.
கடந்த சில ஆண்டுகளாக குரங்குகளின் தொல்லை எல்லை மீறி போகவே கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரங்குகளின் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென எண்ணினர்.
குரங்குகளின் தொல்லை குறித்து கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி குரங்குகளை பிடிப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. தனியார் ஏஜென்சியை சேர்ந்த 3 குழுவினர் டெண்டர் எடுத்து குரங்குகளை பிடிக்க 10 பேரை நியமித்தனர். அவர்கள் அரட்ல கோடா கிராமத்திற்கு வந்து குரங்களை பிடித்தனர். பிடிக்கப்பட்ட 300 குரங்குகளை கூண்டில் அடைத்தனர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மூலம் 12 மைல் தூரத்தில் உள்ள படேறு அடர்ந்த வனப்பகுதியில் குரங்குகளை விட்டனர். குரங்குகளின் அட்டகாசம் தீர்ந்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
- கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சேட்டை செய்து வரும் குரங்குகள் அங்கிருந்து வெளியேறி மலைஅடிவார பகுதியில் சுற்றி திரிந்தது.
- சென்னிமலை கடை வீதிக்குள் நுழைந்து குரங்குகள் பழம், பன் உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில் மலைப்பகுதியில ஏராளமான குரங்குகள் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சேட்டை செய்து வரும் குரங்குகள் அங்கிருந்து வெளியேறி மலைஅடிவார பகுதியில் சுற்றி திரிந்தது.
அடிவாரப் பகுதியில் சுற்றி திரிந்த குரங்கு கூட்டம் கடந்த சில நாட்களாக அங்கிருந்து வெளியேறி சென்னிமலை நகருக்குள் நுழைந்து விட்டது. தினமும் குரங்கு கூட்டம் வீடுகளுக்கு படையெடுத்து வருகிறது.
வீடுகளின் ஜன்னல் திறந்து இருந்தால் உள்ளே நுழைந்து உணவுப் பொருட்களை எடுத்து சென்று விடுகிறது. மேலும் வெயிலில் காயவைக்கும் உணவுப் பொருட்களையும் எடுத்து சென்று விடுகிறது.
அதோடு இல்லாமல் சென்னிமலை கடை வீதிக்குள் நுழைந்து பழம், பன் உள்ளிட்டவற்றை தூக்கிக்கொண்டு ஓடி விடுகிறது. ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் சென்னிமலை நகருக்குள் குரங்கு கூட்டம் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து வனத்துறையினர் குரங்குகளை பிடித்து சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட்டனர். இந்த நிலையில் மீண்டும் தற்போது குரங்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உணவுப் பொருட்களை எடுத்து செல்லும் குரங்குகள் தாக்கி விடுமோ என்ற அச்சமும் உள்ளது. எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து இந்த குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- குரங்குகள் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம்- கோவில்பட்டி செல்லும் சாலையில் 13-வது வார்டு பகுதி உள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதாகவும், அவற்றின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவை வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை தூக்கி செல்கின்றன. அவைகளை விரட்ட முயற்சிப்பவர்களின் மீது பாய்ந்து கடித்து காயப்படுத்துகின்றன.
குடியிருப்பு பகுதிகளில் உள்ள தென்னை, மாதுளை, கொய்யா போன்ற மரங்களில் ஏறி, காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன. மேலும் இந்த பகுதியில் ஒரு வருட காலமாக இந்த குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதால் வீடுகளில் அச்சத்துடன் முடங்கி உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வா கத்திற்கும், வனத்துறை அலுவலகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அபிராமம் தெருக்களில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி. அபிராமம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர், கிடைக்காமல் குரங்குகள் வெளியேறி அபிராமம் டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றிதிரிகின்றன.
அபிராமம், வல்லகுளம், விரதக்குளம், பள்ளபச்சேரி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தென்னைமரங்களில் தாவி குதித்து வருவதுடன் தென்னை மரங்களையும், தென்னங்காய்களையும் நாசம் செய்து வருகின்றன. மேலும் அபிராமம் தெருக்களில் குரங்குகள் சுற்றிதிரிவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை நிலவுகிறது.
அபிராமம் தெருக்க ளிலும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.
- பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன,
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இந்த குரங்குகள் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளை துரத்துவதும், கடை தெருவில் தின்பண்டங்கள் வாங்கிச் செல்லும் சிறார்களை விரட்டு வதுமாக அட்டகாசம் செய்து வந்தது.
அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு உத்தரவின் பேரில் செயல் அலுவலர் அருள்குமார் முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் குரங்கு பிடிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் ஏராளமான குரங்குகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டன. அரகண்டநல்லூர் பேரூ ராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்களும் வியாபாரிகளும் குறிப்பாக பெண்களும் பள்ளி செல்லும் குழந்தைகளும் பாராட்டு தெரிவித்தனர்.
- பொன்னேரி பகுதியில் குரங்குகள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.
- பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகள் முழுவதையும் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரி பகுதியில் குரங்குகள் தொல்லை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதியில் ஹாயாக சுற்றி வருகின்றன.
வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை தின்று சென்று விடுகிறது. இதனை தடுக்க வரும் பொது மக்களையும் கடித்து மிரட்டுகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இதேபோல் பொன்னேரி ரெயில் நிலையத்திலும் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை விடாமல் துரத்துகிறது.
அவர்கள் கொண்டு வரும் உணவு பொருட்கள் மற்றும் பழங்களை குரங்குகள் பறித்து சென்று விடுகின்றன. இதனால் பொன்னேரி ரெயில் நிலையத்துக்கு வரவே பயணயிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
திருவாயர்பாடி, வேண்பாக்கம் ரெயில் நிலையத்திலும் குரங்குகள் அட்டகாசம் இருப்பதாக பயணிகள் தெரிவித்து உள்ளனர். பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகள் முழுவதையும் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
- இலங்கையிடம் இருந்து ஒரு லட்சம் குரங்குகளைக் கொள்முதல் செய்ய விரும்புவதாக சீனா தெரிவித்து உள்ளது.
- பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து சில வகை விலங்கினங்களை சீனா கடந்த ஆண்டு நீக்கியது.
கொழும்பு:
டாக் மகாக் வகையைச் சேர்ந்த குரங்குகள் இலங்கையில் வசிக்கின்றன. இவை ஆபத்தின் விளிம்பில் உள்ளதாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சிவப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிடம் இருந்து ஒரு லட்சம் குரங்குகளைக் கொள்முதல் செய்ய விரும்புவதாக சீனா தெரிவித்து உள்ளது. சீனாவின் இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை வேளாண்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா தன் நாட்டு உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். சீன உயிரியல் பூங்காக்களில் விடுவதற்காக குரங்குகள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சீனாவில் உள்ள 1,000 உயிரியல் பூங்காக்களில் விடுவதற்காக ஒரு லட்சம் குரங்குகளை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பான நிதி சார்ந்த அம்சங்கள் ஏதும் தெரியவில்லை.
சீனாவுக்கு குரங்குகளை அனுப்பி வைப்பது தொடர்பாக கடந்த 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சிறப்பு விவாதம் நடைபெற்றது.
இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியுள்ளதாகவும் குரங்குகள் உள்ளூரில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து ஒரு குழுவை அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து சில வகை விலங்கினங்களை சீனா கடந்த ஆண்டு நீக்கியது. அவற்றில் அந்நாட்டின் 3 குரங்கு இனங்கள், மயில்கள் உள்ளிட்டவை அடங்கும். இதன்மூலம் அவற்றை விவசாயிகள் கொல்வதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது.
இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் கடன் கொடுக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று என்பதை மனதில் கொண்டு குரங்கள் தொடர்பான அந்நாட்டின் கோரிக்கையை இலங்கை பரிசீலிக்கும் என்று தெரிகிறது.
- வீடுகளில் உள்ள ஜன்னல் கதவு மற்றும் பொருட்களை சேதப்படுத்துகிறது.
- குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டில் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை அருகே உள்ள சங்கேந்தி குடியிருப்பு பகுதியில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு சமீப காலமாக குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வீடுகளில் உள்ள ஜன்னல் கதவு மற்றும் பொருட்களை சேதப்படுத்துவதும், வீட்டில் உள்ளவர்கள் குரங்கை விரட்டினால் அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால், வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி அங்கு சுற்றித்திரியும் குரங்களை வனத்துறையினர் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாளுக்கு நாள் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமானதால் முழுமையாக குரங்குகளை பிடிக்க முடியவில்லை.
- வீட்டில் உள்ள உணவு பொருட்கள், வெயிலில் காய வைத்திருக்கும் தானியங்கள் மற்றும் கடைகளில் உள்ள பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சூறையாடி வருகின்றன
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ள வனப்பகுதி சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு ஏராளமான குரங்குகள் உள்ளன.
இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குரங்குகளுக்கு உணவுகளை கொடுத்து பழக்கியதால் உணவு கிடைக்காத சமயங்களில் இந்த குரங்குகள் சென்னிமலை நகரத்தில் உள்ள வீடுகளுக்கு வந்து அட்டகாசத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது.
அவ்வப்போது வனத்துறையினர் கூண்டுகள் வைத்து பிடித்து வருகின்றனர். ஆனாலும் நாளுக்கு நாள் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமானதால் முழுமையாக குரங்குகளை பிடிக்க முடியவில்லை. இதனால் குரங்குகள் சென்னி மலையில் உள்ள வீடுகளுக்கு வந்து புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்கின்றன.
வீட்டில் உள்ள உணவு பொருட்கள், வெயிலில் காய வைத்திருக்கும் தானியங்கள் மற்றும் கடைகளில் உள்ள பழங்கள் உள்ளிட்ட பொருட்களை சூறையாடி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட மலை அடிவார பகுதி, அருணகிரிநாதர் வீதி, பொறையங்காடு, களத்துக்காடு பகுதிக்குள் புகுந்து குரங்குகள் அட்டூழியம் செய்து வருகின்றன. அங்குள்ள ஓட்டு வீடுகளின் மேல் குரங்குகள் ஏறி ஓடுகளை பிரிப்பதும், செல்போன் கோபுரங்களில் உள்ள ஒயர்களை பிடுங்கு வதும் போன்ற செயல்களை குரங்குகள் அரங்கேற்றி வருகின்றன.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது,
'வீட்டு வாசல்களில் தனியாக குழந்தைகள் உணவு சாப்பிடும் போது குரங்குகள் கூட்டமாக வந்து உணவுக்காக குழந்தைகளை தாக்க முயற்சி செய்கின்றன.
அதேபோல் ஓட்டு வீடுகளின் மேல் ஏறி குதிப்பதும், ஓடுகளை பிரிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் கொள்ளையர்கள் தான் வந்து விட்டார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
அதனால் குடியிருப்பு பகுதிக்குள் அட்டூழியம் செய்யும் குரங்குகளை முழுமையாக கூண்டு வைத்து பிடித்து செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
- வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
- உணவுப் பழக்கத்துக்கு மாறுபட்ட உணவுகளைச் சாப்பிடும் குரங்குகளின் உடல் நலமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சானமாவு, தளி உள்ளிட்ட பகுதிகள் வனத்தை ஒட்டியுள்ளன.
இந்த வனப்பகுதிகளில் மான், குரங்கு, முயல், காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
கோடைக் காலங்களில் வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்காததால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கு அவ்வப்போது வந்து செல்கின்றன.
இவ்வாறு வரும் விலங்குகள் மின்வேலிகளில் சிக்கியும், வனப்பகுதியில் உள்ள விஷக்காய்களை சா ப்பிட்டும் உயிரிழக்கின்றன.
இந்நிலையில், ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள சானமாவு வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால், அப்பகுதியில் உள்ள குரங்குகள் கூட்டமாக வனத்தை விட்டு வெளியேறி, சாலைகளில் சுற்றி வருகின்றன.
மேலும், சாலைகளில் செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் குரங்கை வேடிக்கை பார்ப்பதோடு, தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களைக் குரங்குகளின் பசியைப் போக்க வழங்கி வருகின்றனர்.
இந்த உணவுகளை எடுக்கக் குரங்குகள் போட்டிப் போட்டு சாலையைக் கடக்கும்போது, அவ்வழியாக அதிவேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இதுதொடர்பாக வன ஆர்வலர்கள் கூறிய தாவது:-
குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளின் இருப்பிடத்துக்கு ஏற்கெனவே நாம் ஆபத்தை உருவாக்கி விட்டோம். தற்போது, சாலைகளில் சுற்றும் குரங்குகளுக்கு உணவுகளை வழங்கி அவற்றுக்கு ஆபத்தை உருவாக்கி வருகிறோம்.
சானமாவு வனப்பகுதி சாலையோரங்களில் வீசப்படும் உணவுகளை எடுக்க சாலையை கடக்கும் குரங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
மேலும், தனது உணவுப் பழக்கத்துக்கு மாறுபட்ட உணவுகளைச் சாப்பிடும் குரங்குகளின் உடல் நலமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, இதைத் தடுக்க சாலையோரங்களில் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவுகளை வீசிச் செல்ல வேண்டாம் என வனத்துறை மூலம் எச்சரிக்கை செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.