search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீகாளஹஸ்தி"

    • ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார்.
    • லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனை வருகிற 22-ந்தேதி வரை நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனையை கோவில் நிர்வாகம் நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 10 நாள் லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனை நேற்று தொடங்கியது.

    கோவிலில் நடக்கும் நான்கு கால அபிஷேகங்களுக்கு பின் உற்சவர்களான ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பிரதான அர்ச்சகர்கள் லட்ச வில்லார்ச்சனை, குங்குமார்ச்சனையை நடத்தினர்.

    அதில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு தம்பதியினர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தம்பதியினர், பிற துறை அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்திருந்தனர். இந்த லட்ச வில்வார்ச்சனை, குங்குமார்ச்சனை வருகிற 22-ந்தேதி வரை நடக்கிறது.

    • ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு கிரகண சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நடை சாத்தப்பட்டது. ஆனால் சிவ ஷேத்திரமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மட்டும் சந்திர கிரகண சமயத்தில் நடை சாத்தப்படாமல் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணிவரை சந்திர கிரகணம் இருந்தது. இந்த கிரகண நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஞான பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு கிரகண சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. மூலவரான ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு நவகிரக கவசம் அலங்கரிக்கப்படுவதால் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மீது கிரகண கால சமயத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படாது என்ற காரணத்தினால் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடத்துவதாக கோவில் வேதப்பண்டிதர்கள் தெரிவித்தனர்.

    மேலும் சந்திரகிரகண சமயத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தால் அனைத்து விதமான தோஷங்கள் நிவர்த்தி அடையும் என்பதால் சந்திரகிரகணமான நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சந்திர கிரகண சமயத்தில் பரணி போன்ற நட்சத்திரம் கொண்டவர்கள் சந்திர கிரகண சமயத்தில் சந்திரனை பார்க்க கூடாது என்றும், இதனால் தீயவை நிகழும் என்பவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்து கொண்டால் அனைத்தும் நல்லதாக நடக்கும் என்றும், தோஷம் நீங்கும் என்றும் கோவில் வேத பண்டிதர் அர்த்தகிரி சுவாமி தெரிவித்தார்.

    • கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு, ‘லகு’ தரிசன ஏற்பாடு செய்தது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று தெலுங்கு கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமையை சோமவாரமாக பக்தர்கள் அனுசரித்தனர். சோமவாரம் சிவபெருமானை வழிபட உகந்த நாள் என்பதால் பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    பல பக்தர்கள் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் தீபம் ஏற்ற கோவில் வளாகத்தில் நான்கு பகுதிகளில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு, 'லகு' தரிசன ஏற்பாடு செய்தது.

    கோவில் வளாகத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சன்னதி அருகில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் மாதிரி லிங்கத்தை ஏற்பாடு செய்து வேதபண்டிதர்கள், அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை செய்து, கற்பூர ஆரத்தி, மகா தீபாராதனை காண்பித்தனர்.

    நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் புனித நீராடி கோவில்களுக்கு சென்று அங்குள்ள பாம்பு புற்றுக்கு பால் ஊற்றினர்.
    • பாம்பு புற்றுக்கு வஸ்திரம் சமர்ப்பித்து நெய் தீபம், கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று நாகசதுர்த்தி உற்சவம் நடந்தது. அதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் புனித நீராடி கோவில்களுக்கு சென்று அங்குள்ள பாம்பு புற்றுக்கு பால் ஊற்றினர். முட்டைகளை வைத்தனர். பின்னர் அங்குள்ள நாகர் சிலைகளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, தேங்காய் உடைத்து, பாம்பு புற்றுக்கு வஸ்திரம் சமர்ப்பித்து மஞ்சள், குங்குமம் தூவி, மாவிளக்கு, நெய் தீபம், கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள 3-ம் கோபுரம் எனப்படும் திருமஞ்சன கோபுரம் அருகில் உள்ள நாகர் சிலைகளுக்கு சிவன் கோவில் சார்பில் வேத பண்டிதர்கள் தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தி நாக தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டனர்.

    • கோவிலுக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
    • நாகசதுர்த்தியையொட்டி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது.

    தெலுங்கு கார்த்திகை மாதம் 3-வது நாள் வெள்ளிக்கிழமை வந்ததால் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகாலையில் இருந்து இரவு வரை அலைமோதியது. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். பக்தர்களுக்கு போதிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நிர்வாக அதிகாரி சாகர்பாபு கூறியதாவது:-

    தெலுங்கு கார்த்திகை மாதத்தில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கோவிலின் தூய்மையை பாதுகாக்கும் வகையில் கோவிலுக்கு வெளியில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே தீபங்கள் ஏற்றுவதற்கு கோவிலின் 3-வது கோபுரம் அருகில் உள்ள நாகாலம்மன் புற்று அருகில் தீபங்கள் ஏற்றலாம். இதேபோல் பிக்சால காளி கோபுரம் நுழைவு வாயில் மற்றும் 2-வது கோபுரம் முன்பு பக்தர்கள் தீபங்களை ஏற்றுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்.

    நாகசதுர்த்தியையொட்டி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள பாம்புபுற்று அருகில் வழிபாடு நடத்தலாம். கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் ஆகாச தீபத்தை அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு.தாரக சீனிவாசுலு ஏற்றினார். அங்கு சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெலுங்கு கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
    • பக்தர்கள் கோவிலின் மாண்பை இழிவுப்படுத்தும் விதமாக நடக்கக்கூடாது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த 25-ந்தேதி சூரிய கிரகணத்தின்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கிடையே இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இது, திட்டமிட்டு செய்யப்பட்டதாகக் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது தெரிய வந்தது. பக்தர்களின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது. பக்தர்கள் கோவிலின் மாண்பை இழிவுப்படுத்தும் விதமாக நடக்கக்கூடாது.

    தற்போதுள்ள அறங்காவலர் குழு எந்தவித சுயநலமுமின்றி கோவிலின் வளர்ச்சிக்காகவும், கோவிலின் புகழை இழிவுப்படுத்தும் விதமாக எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை. இதேபோல் கோவிலில் மூலவர் சன்னதியில் சம்பிரதாய உடை அணிந்தவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    தற்போது தெலுங்கு கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, மகா லகு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைப் பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

    நவம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் செல்போன்களை கோவிலுக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. இதை, பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.

    • தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் சமுதாய கேதார கவுரி விரதப் பூஜை நடப்பது வழக்கம்.
    • 25-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்வு நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் சமுதாய கேதார கவுரி விரதப் பூஜை நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி வருகிற 24-ந்தேதி நடக்கிறது.

    மறுநாள் 25-ந்தேதி சூரிய கிரகணம் நிகழ்வு நடக்கிறது. எனவே கோவில் சுவாமிநாத குருக்கள் மற்றும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் அறிவுரையின் பேரில் கோவிலில் நடக்க இருந்த கேதார கவுரி விரத பூஜை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, பக்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும், எனக் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு தெரிவித்துள்ளார்.

    • வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹூதி நடத்தினர்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று சங்கடகர சதுர்த்தியையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அஞ்சி விநாயகர் சன்னதியில் சிறப்பு ஹோம பூஜைகள் நடந்தது.

    முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் ஆகம விதிப்படி ஹோம குண்டத்தை ஏற்பாடு செய்து, அதில் சிறப்பு ஹோமத்தை வளர்த்தனர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹூதி நடத்தினர்.

    சிறப்பு ஹோம பூஜையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, கோவில் இணை ஆணையாளர் மல்லிகார்ஜுன் மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 10-ந்தேதி வரை உற்சவங்கள் நடைபெறுகிறது.
    • மகாதீபாராதனையை தொடர்ந்து நைவேத்தியங்களை சமர்ப்பித்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பவித்ரோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று பவித்ரோற்சவம் தொடங்கியது. முன்னதாக கோவில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் உற்சவமூர்த்திகள் உள்பட பரத்வாஜ் மகரிஷியின் உற்சவ சிலைக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

    முன்னதாக நேற்று முன்தினம் சுவாமி, அம்பாளுக்கு பயன்படுத்தும் கவசங்கள், தூப, தீப, நெய்வேத்தியங்களுக்கு பயன்படுத்தும் பொருட்கள், அலங்கார பொருட்களை கோவில் ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். அதனை பயன்படுத்தி நேற்று பவித்ரோற்சவத்தை தொடங்கினர்.

    கோவில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பன்னீர், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் மகாதீபாராதனையை தொடர்ந்து நைவேத்தியங்களை சமர்ப்பித்தனர். வருகிற 10-ந்தேதி வரை உற்சவம் நடக்கிறது.

    நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு மற்றும் உறுப்பினர்கள், கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்யப்பட்டது.
    • சாமி படம், பிரசாதம் வழங்கினர்.

    சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு ஆகியோர் பங்கேற்று பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.

    கோவிலுக்கு வந்த அவர்களை, காணிப்பாக்கம் விநாயகர் கோவில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். சாமி படம், பிரசாதம் வழங்கினர். அப்போது காணிப்பாக்கம் விநாயகர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகன்ரெட்டி, கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ்பாபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • தங்க நாகப்படகுகளை வைத்து ராகு-கேது பூஜை செய்ய ரூ.10 ஆயிரம் வரை கட்டணம்.
    • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு கூட்டம் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு தலைமை தாங்கினார். முக்கிய விருந்தினராக ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதனரெட்டி பங்கேற்றார்.

    கூட்டத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் முதல் கோவிலில் நிலுவையில் உள்ள தங்கத்தைப் பயன்படுத்தி தங்க நாகப்படகுகளை தயாரித்து ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜைக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தங்க நாகப்படகுகளை பயன்படுத்தி ராகு-கேது பூஜை செய்ய ஒரு பூஜைக்கு ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் துணைக் கோவில்களான அர்த்தநாரீஸ்வரர் கோவில், அகஸ்தீஸ்வரர் கோவில், அன்னப்பூர்னேஸ்வரர் கோவில்களின் மகா கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். ஆன்மிக தலமான ஸ்ரீகாளஹஸ்தி தொகுதியில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயங்களை புனரமைக்க வேண்டும்.

    புதிதாக சிவன் கோவில்களை கட்ட வேண்டும். அதற்காக ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் ரூ.5 லட்சம் வரை பண உதவி வழங்க வேண்டும். இதற்காக, அறநிலையத்துறையிடம் இருந்து அனுமதி வந்ததும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தர்மராஜா கோவில் வளாகத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    வரதராஜ பெருமாள் கோவில் விடுதியை சீரமைக்க வேண்டும். முத்தியாலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தை புனரமைக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    சிவன் கோவிலில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் பிற துறை அதிகாரிகள், வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

    • 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டர்கள் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பங்கேற்றனர்.
    • இந்தக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) வரை நீடிக்கும்.

    தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் ‌கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக. சீனிவாசுலு மேற்பார்வையில் பக்தர்கள் வரிசைகளில் தள்ளுமுள்ளு ஏற்படாமல் நடக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். அத்துடன் கோவிலில் நடக்கும் மற்ற ஆர்ஜித சேவைகளான சுப்ரபாத சேவை, ருத்ர ஹோமம், சண்டி ஹோமம், அர்ச்சனை, கல்யாண உற்சவம், கோ பூஜை, தீபாராதனை மற்றும் 4 கால ருத்ர அபிஷேகம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோவில் அதிகாரிகள், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதி ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், விரைவு தரிசனம் செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) வரை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×