என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமசபை கூட்டம்"

    • மாணவர்கள் நிலையான நீர் மேலாண்மை, பாதுகாப்பு நுட்பங்கள் மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிகள் குறித்து கிராமவாசிகளுடன் விவாதித்தனர்.
    • நிலையான நீர் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாக கிராம சபை செயல்பட்டது.

    எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச் 29, 2025 (நேற்று) அன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள சமூக மண்டபத்தில் நீர்ப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் பொருட்டு மாணவர்களையும் உள்ளூர்வாசிகளையும் ஒன்றிணைத்து கிராம சபை கூட்டத்தை நடத்தின.

    மாணவர்கள் நிலையான நீர் மேலாண்மை, பாதுகாப்பு நுட்பங்கள் மற்றும் சமூகம் சார்ந்த முயற்சிகள் குறித்து கிராமவாசிகளுடன் விவாதித்தனர். 

    மழைநீர் சேகரிப்பு, திறமையான நீர்ப்பாசன முறைகள் மற்றும் நீர் வீணாவதைக் குறைத்தல் உள்ளிட்ட நீர்ப் பாதுகாப்பிற்கான நடைமுறை நடவடிக்கைகளை வலியுறுத்தினர்.

    நிலையான நீர் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாக கிராம சபை செயல்பட்டது.

    எதிர்கால சந்ததியினருக்கு நீர் வளங்களைப் பாதுகாக்க சமூகம் தலைமையிலான நடவடிக்கைகளின் அவசியத்தை இந்த நிகழ்வு வலுப்படுத்தியது.

    • உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும்.
    • கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும். இந்த கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிராம சபையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழக்கோட்டை கிராமத்தில் புதியபள்ளி கட்டிடம் கட்ட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கரிசல்பட்டி கிராமத்தில் கிராமசபை கூட்டம் தலைவர் கோட்டூர் குருவுலட்சுமி சின்னவெள்ளை தலைமையில் நடந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அடுத்துள்ள கீழக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சுப்பு லட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஓவர்சீயஸ் ஹேமசுதா, வேளாண்மைத்துறை சார்பில் சேதுராமன், வி.ஏ.ஓ. சுரேந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தனுஷ்கோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசு அறிவித்துள்ளபடி கிராம தூய்மை பாதுகாப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். கீழக்கோட்டைக்கான ரேஷன்கடை கிரியகவு ண்டன்பட்டி கிராமத்தில் உள்ளது. அதனை பிரித்து கீழக்கோட்டையில் தனி ரேஷன்கடை அமைக்க வேண்டும், ஊராட்சி பள்ளியின் கட்டிடம் சேதமடைந்துள்ளது. அதனை அகற்றிவிட்டு புதியகட்டிடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் ஊராட்சி செயலர் குமரேசன் நன்றி தெரிவித்தார். திருமங்கலத்தினை அடுத்துள்ள கரிசல்பட்டி கிராமத்தில் கிராமசபை கூட்டம் தலைவர் கோட்டூர் குருவுலட்சுமி சின்னவெள்ளை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய கிராம தூய்மை பாதுகாவலர்கள், துப்பரவு பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்த லைவர் சித்ராதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் மலர்விழி நன்றி கூறினார்.

    • ராஜபாளையம் தொகுதியில் நடந்த கிராமசபை கூட்டங்களில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
    • பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி யில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு செட்டியார்பட்டி பேரூராட்சி 9-வது வார்டு பிள்ளைமார் சமூக மண்டபத்திலும், சேத்தூர் பேரூராட்சி கோட்டைவிநாயகர் கோவில் அருகிலுள்ள மண்டபத்திலும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.

    இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் மக்களின் குறைகளை கண்டறிய முதல்வர் சென்னையில் பகுதி சபை கூட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.

    இன்று கிராமங்களில் நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் நகர் பகுதிகளில் நடைபெறும் இந்த கூட்டம் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து குறைகளை தீர்க்க பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.

    புத்தூர் ஊராட்சியிலும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு எம்.எல்.ஏ. பதிலளிக்கையில், பி.டி.ஓ. மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், செயல் அலுவலர்கள் சந்திரகலா, வெங்கிடகோபு, பேரூர் செயலாளர் இளங்கோவன், பேரூராட்சி துணை தலைவர் விநாயகமூர்த்தி, காளீஸ்வரி, ஒன்றிய துணை செயலாளர் குமார், புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், கிளார்க் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
    • பொது மக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு- செலவு கணக்குகளை வைக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் குடியரசு தினமான வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும். மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் மற்றும் இதர திட்டம் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

    கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். பொது மக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு- செலவு கணக்குகளை வைக்க வேண்டும்.

    குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும். குறிப்பாக அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற வேண்டும். தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றுவதை தடுக்கும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிராம ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள 044-27237175, 740 260 6005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
    • கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை காலை 11 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

    கிராமசபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2022 முதல் 31.12.2022 முடிய) குறித்து விவாதித்தல், கிராமஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட 2022-23-ம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தினை டிசம்பர் 31-ந் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதித்தல் மற்றும் இத்திட்டத்தில் சாத்தியமான பணிகள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல்,

    தற்போது உள்ள பணி தொகுப்பின் முன்னேற்றத்தினை பகிர்ந்து கொள்ளுதல், 2022-23-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்றநிலை குறித்து விவாதித்தல், 2023-24-ம் ஆண்டில் புதிதாக தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் மற்றும் வேலை வழங்குவதற்கான தொழிலாளர் மதிப்பீடு இறுதி செய்தல் குறித்து விவாதித்தல்,

    பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடுகணக்கெடுப்பு பணி, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து விளக்குதல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும்.

    அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராமசபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு வட்டாரஅளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சிஅளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • தஞ்சை விளார் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடை பெற்றது.
    • இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, நிழற்குடை சீரமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், தெருவிளக்குகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஊராட்சி ஒன்றியம் விளார் ஊராட்சியில் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தலைவர் மைதிலி ரெத்தினசுந்தரம் தலைமை தாங்கினார். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்தும், தூய்மை பணிகள் மேற்கொள்வது, சுத்தமான குடிநீர் வழங்குவது, 100 நாள் வேலை திட்ட பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, நிழற்குடை சீரமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், தெருவிளக்குகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர் . அதனை சரி செய்வது தருவதாக ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சித்ரா, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • பறக்கை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத் திற்கு ஊராட்சி தலைவர் கோசலை சிதம்பரம் தலைமை தாங்கினார்
    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பொது மக்கள் முழு ஒத்துழைப்புஅளிக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    குடியரசு தினத்தை யொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று நடந்தது. அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோ சிக்கப்பட்டது.

    பறக்கை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத் திற்கு ஊராட்சி தலைவர் கோசலை சிதம்பரம் தலைமை தாங்கினார்.கலெக்டர் அரவிந்த் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு பிரச்சனை, உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.

    கூட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்,திடக்கழிவு மேலாண்மை திட்டம் உட்பட பல்வேறு திட்ட பணி கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.அப்போது கலெக்டர் அரவிந்த் கூறுகையில்:- குமரி மாவட்டத்தை குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பொது மக்கள் முழு ஒத்துழைப்புஅளிக்க வேண்டும்.

    பறக்கை ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளில் தனிநபர் உறிஞ்சி குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஆகும்.நமது மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். எனவே பொதுமக்கள் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டாமல் அதற்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் போட வேண்டும்.இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா ஆர்டிஓ சேதுராமலிங்கம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீனாட்சி தாசில்தார் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சியின் அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபை கூட்டம் ஊன்றுகோளாக அமைகின்றன.
    • மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அவிநாசி :

    அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சின்னேரிபாளையம் ஊராட்சியில் குடியரசு தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் வினீத் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:- ஒவ்வொரு முறையும் தங்கள் பகுதியில் நடக்கும் கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்து செயல்படும் போது அந்த ஊராட்சியின் அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபை கூட்டம் ஊன்றுகோளாக அமைகின்றன.

    இது போன்ற கிராமசபை கூட்டத்தில் திட்ட பணிகளை மேற்கொள்ளப்படுவது மட்டுமின்றி பொது சுகாதாரத்தை கடைபிடித்தல், வீடுகள் மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்து டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் தாக்குதலை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக இருக்கும்.

    ஊராட்சி அளவில் மகளிர் திட்டம் மூலமாக செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது. குழுக்கள் மிகவும் குறைவாக உள்ளதால் மேலும் குழுக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழுக்கள் அமைக்க வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவிலான அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும்.

    ஒரு குழுக்களுக்கு 12 நபர்கள் இருந்தால் போதும். அவ்வாறு குழுக்கள் அமைக்கும் போது ரூ.1 லட்சம் முதல் கடனாக வழங்கப்படுகிறது. இன்றைய தினம், குழுக்களுக்கு ரூ.49 லட்சம் வரையிலும் கடனாக குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்கள் தொடங்கி சிறப்பாக செயல்படுத்த குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

    சிறு, குறு விவசாயிகள் சான்று விண்ணப்பித்து அரசின் சலுகைகளை விவசாயிகள் பெறலாம். பள்ளிக்கல்வித்துறையின் மூலம் எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக்கல்வி உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியில் 4 குழந்தைகள் பள்ளிக்கு வருகை தராமல் இருப்பதாக தெரிகின்றது.

    பள்ளி மேலாண்மை குழு மூலம் அவர்களை பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சர் கோப்பை நடைபெற்று வருகிறது. அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். அடிப்படை தேவைகள் குறித்து ஊராட்சி மன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

    அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.

    முன்னதாக, 4 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.4.40 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கி, தொழு நோய் மூலம் பதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 2 நபர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்.

    தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மாரியப்பன், சின்னேரிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    மண்டபம் ஒன்றியம் கோரவள்ளி ஊராட்சியில் 74-வது குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, கோரி க்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளை அழைத்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரை வழங்கினார். தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி பேசினார். கோரவள்ளியில் கலை யரங்கம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளி த்தார்.

    மண்டபம் ஒன்றிய ஆணையாளர் சண்முக நாதன், கோரவள்ளி ஊராட்சி தலைவர் கோகிலவாணி சிவஞானம் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஜே.பிரவின் ஏற்பாட்டில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.விற்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரெட்டையூரணியில் புதிய கலையரங்கத்தை திறந்து வைத்து கட்சி கொடி ஏற்றினார்.

    காரான், வழுதூர், வாலாந்தரவை, சாத்தான் குளம் ஆகிய இடங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பொதுமக்கள் முன்னிலையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். அப்போது 500-க்கும் அதிகமான பொதுமக்களுக்கு வேட்டி,சேலை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர்கான், மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர், வாலாந்தரவை ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜீவா சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ஆற்காடு ஒன்றியம் மாங்காடு ஊராட்சியில் 74வது குடியரசுதினத்தை யொட்டிநடைபெற்ற கிராமசபை கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் கண்ணகி தலைமையில் நேற்று நடைபெற்றது

    ராணிப்பேட்டை கோட்டாச்சியர் வினோத்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சி) குமாா், ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட ஊராட்சி க்குழு உறுப்பினர் காந்திமதி பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    இதில் தாசில்தார் சுரேஷ், சமூக பாதுகாப்பு தாசில்தார் செ.ரவி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்பிரபாகரன், அண்ணாமலை, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் சரன்ராஜ், கஜபதி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறுதுறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • வாடிப்பட்டி யூனியனில் குடியரசு தின கிராமசபை கூட்டம் நடந்தது.
    • வட்டசட்டபணிகள் குழு வக்கீல்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் விராலிப்பட்டி, செம்மினிப்பட்டி, குட்லா டம்பட்டி, கச்சைகட்டி, ராமயன்பட்டி, பூச்சம்பட்டி, ஆண்டிபட்டி, கட்டக்குளம் பகுதிகளில் குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராமசபைக்கூட்டங்கள் நடந்தன. கச்சைகட்டியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆலயமணி தலைமை தாங்கினார். சிறப்புஅழைப்பாளர்களாக வெங்கடேசன் எம்.எல்.ஏ., தாசில்தார் வீரபத்திரன், யூனியன் கமிஷனர் கதிரவன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விராலிப்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் காளியம்மாள் தலைமையில் துணைத்தலைவர் மணிகண்டன், பற்றாளர் சரோஜா, ஊராட்சி செயலாளர் செந்தாமரை முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. செம்மினிப்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் தெய்வதர்மர் தலைமையில் துணைத்தலைவர் பஞ்சு, பற்றாளர் லட்சுமி, ஊராட்சி செயலாளர்சரஸ்வதி முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    குட்லாடம்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் ஜோதிமீனா தலைமையில் துணைத்தலைவர் கதிரவன், பற்றாளர் மலர்மன்னன், ஊராட்சிசெயலாளர் தனலட்சுமி முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. ராமயன்பட்டியில் ஊராட்சிமன்றதலைவர் குருமூர்த்தி தலைமையில் துணைத்தலைவர் ராஜலட்சுமி, பற்றாளர் கவிதா, ஊராட்சிசெயலாளர் மகாராஜன் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. பூச்சம்பட்டியில் தலைவர் சாந்தி தலைமையில் துணைத் தலைவர் லதா, பற்றாளர் சங்கர், ஊரட்சிசெயலாளர் செல்வம்முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள், ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், கிராம நி ர்வாக அலுவலர்கள், வட்டசட்டபணிகள் குழு வக்கீல்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    ×