search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமசபை கூட்டம்"

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
    • கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான நாளை காலை 11 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

    கிராமசபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2022 முதல் 31.12.2022 முடிய) குறித்து விவாதித்தல், கிராமஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட 2022-23-ம் ஆண்டுக்கான தொழிலாளர் வரவு-செலவு திட்டத்தினை டிசம்பர் 31-ந் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதித்தல் மற்றும் இத்திட்டத்தில் சாத்தியமான பணிகள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல்,

    தற்போது உள்ள பணி தொகுப்பின் முன்னேற்றத்தினை பகிர்ந்து கொள்ளுதல், 2022-23-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்றநிலை குறித்து விவாதித்தல், 2023-24-ம் ஆண்டில் புதிதாக தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் மற்றும் வேலை வழங்குவதற்கான தொழிலாளர் மதிப்பீடு இறுதி செய்தல் குறித்து விவாதித்தல்,

    பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடுகணக்கெடுப்பு பணி, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து விளக்குதல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும்.

    அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராமசபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு வட்டாரஅளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சிஅளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
    • பொது மக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு- செலவு கணக்குகளை வைக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் குடியரசு தினமான வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும். மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் மற்றும் இதர திட்டம் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

    கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். பொது மக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ் பேனர் மூலம் வரவு- செலவு கணக்குகளை வைக்க வேண்டும்.

    குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும். குறிப்பாக அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற வேண்டும். தேசிய கொடியை ஏற்றுவதில் குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றுவதை தடுக்கும் வகையில் செயல்பட்டால் அவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிராம ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை இருந்தால் காஞ்சிபுரம் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள 044-27237175, 740 260 6005 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜபாளையம் தொகுதியில் நடந்த கிராமசபை கூட்டங்களில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
    • பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி யில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு செட்டியார்பட்டி பேரூராட்சி 9-வது வார்டு பிள்ளைமார் சமூக மண்டபத்திலும், சேத்தூர் பேரூராட்சி கோட்டைவிநாயகர் கோவில் அருகிலுள்ள மண்டபத்திலும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.

    இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் மக்களின் குறைகளை கண்டறிய முதல்வர் சென்னையில் பகுதி சபை கூட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.

    இன்று கிராமங்களில் நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் நகர் பகுதிகளில் நடைபெறும் இந்த கூட்டம் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து குறைகளை தீர்க்க பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.

    புத்தூர் ஊராட்சியிலும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு எம்.எல்.ஏ. பதிலளிக்கையில், பி.டி.ஓ. மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், செயல் அலுவலர்கள் சந்திரகலா, வெங்கிடகோபு, பேரூர் செயலாளர் இளங்கோவன், பேரூராட்சி துணை தலைவர் விநாயகமூர்த்தி, காளீஸ்வரி, ஒன்றிய துணை செயலாளர் குமார், புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், கிளார்க் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கோட்டை கிராமத்தில் புதியபள்ளி கட்டிடம் கட்ட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கரிசல்பட்டி கிராமத்தில் கிராமசபை கூட்டம் தலைவர் கோட்டூர் குருவுலட்சுமி சின்னவெள்ளை தலைமையில் நடந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அடுத்துள்ள கீழக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சுப்பு லட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஓவர்சீயஸ் ஹேமசுதா, வேளாண்மைத்துறை சார்பில் சேதுராமன், வி.ஏ.ஓ. சுரேந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தனுஷ்கோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசு அறிவித்துள்ளபடி கிராம தூய்மை பாதுகாப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். கீழக்கோட்டைக்கான ரேஷன்கடை கிரியகவு ண்டன்பட்டி கிராமத்தில் உள்ளது. அதனை பிரித்து கீழக்கோட்டையில் தனி ரேஷன்கடை அமைக்க வேண்டும், ஊராட்சி பள்ளியின் கட்டிடம் சேதமடைந்துள்ளது. அதனை அகற்றிவிட்டு புதியகட்டிடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் ஊராட்சி செயலர் குமரேசன் நன்றி தெரிவித்தார். திருமங்கலத்தினை அடுத்துள்ள கரிசல்பட்டி கிராமத்தில் கிராமசபை கூட்டம் தலைவர் கோட்டூர் குருவுலட்சுமி சின்னவெள்ளை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய கிராம தூய்மை பாதுகாவலர்கள், துப்பரவு பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்த லைவர் சித்ராதேவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் மலர்விழி நன்றி கூறினார்.

    • உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும்.
    • கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும். இந்த கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிராம சபையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • இதில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் காஞ்சிரங்குடி ஊராட்சி வளாகத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் லட்சுமிபுரம் சமுதாய கூடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி தலைமையில் நடந்தது.

    சிறப்பு அழைப்பாளர்களாக திருப்புல்லாணி ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி, மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி துணைத்த லைவர் பரீக்கா, ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்த மூர்த்தி, பற்றாளர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட 2022-23-ம் ஆண்டு வரவு-செலவு கணக்கு பிளக்ஸ் போர்டு மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

    கோகுல் நகரில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். காஞ்சிரங்குடி ஊராட்சி க்கு உட்பட்ட தனியார் ஆக்கிரமிப்பு செய்த அரசு நிலத்தை மீட்க வேண்டும். ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

    ராமநாதபுரம் கீழக்கரை வழித்தடத்தில் லட்சுமிபுரம் வழியாக இயக்கப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    இதில் வட்ட வழங்கல் அலுவலர் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சின்னப்பன் (சைல்டு லைன்) சகாயராணி (கல்வித்துறை) உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற செயலர் அமுதா சத்தியேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சி வளாகத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமையிலும், ஒன்றிய குழு உறுப்பினர் பைரோஸ்கான், பற்றாளர் அருண் பிரசாத் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

    இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் வேளா ண்மை துறை உதவி இயக்குனர் அகர்லால், கிராம நிர்வாக அலுவலர் அங்கையற்கண்ணன், கொத்தாலிங்கம் (மீன்வளத்துறை), குழந்தை வேலு (மின்சாரத்துறை) சுகாதார ஆய்வாளர்கள் இளையராஜா, கலை முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி மன்ற துணை தலைவர் புரோஸ் கான் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவெற்றியூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் கலா முத்தழகு தலைமை தாங்கினார். இதில் பஞ்சாயத்து யூனியன் சார்பில் மாரியம்மாள் பார்வையாளராக கலந்துகொண்டார். கிராம சபைக்கான கோரம் இல்லாதால் கூட்டம் நடைபெறவில்லை.

    இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த இந்து மக்கள் நல இயக்க மாநில தலைவர் இளையராஜா கூறும்போது, ஊராட்சிகள் சட்டத்தின்படி கிராம மக்கள் தொகை 501 முதல் 3000 பேர் உள்ள கிராமத்தில் 100 பேர் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இக்கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது.ஆனால் 40-க்கும் குறைவாகவே பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கடந்த கிராம சபை கூட்டத்தில் வாரம் ஒரு முறை கொசு மருந்து தெளிக்க வேண்டும். கிராம கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும். தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆனால் அதில் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாததால், பொதுமக்கள் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்று கூறினார்.

    • கூட்டத்தில், சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • இதில் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே, பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் நேற்று காந்திஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ஜெயகணேஷ் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசு அறிவித்துள்ள பல்வேறு தீர்மானங்கள் மற்றும் குடிதண்ணீர், சுகாதாரம், அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆத்தூர் வட்டாரம் பாளையங்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகுமலை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தெய்வலட்சுமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் முத்துப்பாண்டி வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    போடிகாமன்வாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் நாகலட்சுமி சசிகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடி தண்ணீர், சுகாதாரம் உள்பட முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சீவல்சரகு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு, தலைவர் ராணி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் துணைத் தலைவர் தனபாக்கியம், ஊராட்சி செயலர் சேசு மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் துணைத் தலைவர் சையது அபுதாஹிர் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் கண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அக்கரைப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைவர் லட்சுமி சக்திவேல் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணைத்தலைவர் மலைச்சாமி, ஊராட்சி செயலர் (பொறுப்பு) நடராஜ், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்.பாறைப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் துணைத்தலைவர் சுருளியம்மாள் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் நடராஜன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வீரக்கல் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தலைவர் ராஜேஸ்வரி தங்கவேல் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணைத் தலைவர் யூசின்ராஜா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் முத்துசாமி, வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வக்கம்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், தலைவர் பேட்ரிக் பிரேம்குமார் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் ஜான் கென்னடி, ஊராட்சி செயலர் தமிழ்ச்செல்வன் மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பித்தளைப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, தலைவர் மயில்சாமி தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணைத்தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி செயலர் கண்ணையன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், துணைத் தலைவர் கவிதா, ஊராட்சி செயலர் அழகர்சாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு அறிவித்துள்ள முக்கிய தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சித்தரேவு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி மலர்கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜோதி மயில்சாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, ஊராட்சி செயலர் சிவராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தேவரப்பன்பட்டி ஊராட்சி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மாரிமுத்து தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரிதிவிராஜன், ஊராட்சி செயலர் மணவாளன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மொத்தம் 7 கிராமங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
    • பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1159 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    ஏகனாபுரம் கிராமமக்கள் இன்று 67-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் காந்தி ஜெயந்தியையொட்டி பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஏகனாபுரத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    ஊராட்சி தலைவர் சுமதி தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் கோபி, ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஜெயகாந்தன் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆவேசம் அடைந்த கிராமமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் விமான நிலையம் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அங்கிருந்த கிராம மக்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அந்த தீர்மானத்தில், "ஏகனாபுரம் ஊராட்சியில் வர இருக்கின்ற பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்ப்பது எங்கள் கிராமத்தின் நோக்கம் அல்ல. அதே நேரத்தில் எங்கள் கிராமத்தில் குயிருப்பு பகுதிகளையும் விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு எங்களை அப்புறப்படுத்துகின்ற இந்த பசுமை விமான நிலைய திட்டத்தை இந்த கிராம சபை கூட்டத்தின் மூலமாக எங்கள் கிராம பகுதிக்கு முழுமையாக வேண்டாம் என்று ஏகமனதாக எதிர்க்கின்றோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

    கிராம சபை கூட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மேலேறி, நெல்வாய், வளத்தூர், பரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் புதிதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றினர். மொத்தம் 7 கிராமங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 526 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார்.

    கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளின் வரவு செலவு அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதேபோல் கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் தலைவர் ரமேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, பட்டா வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் தெரிவித்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

    • கும்மிடிப்பூண்டிக்குட்பட்ட ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார்.
    • கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, பட்டா வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் தெரிவித்தனர்.

    திருவள்ளூர்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1159 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் அதன் தலைவர்கள் தலைமையில நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டிக்குட்பட்ட ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார்.

    கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளின் வரவு-செலவு அறிக்கை, ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதேபோல் கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் தலைவர் ரமேஷ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, பட்டா வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.

    • காலை 11 மணியளவில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
    • ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினமான 2.10.2022 அன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொதுஇடங்களில் நடைபெறும் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினமான 2.10.2022 அன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும்.

    கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த தொழில்கள், இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்ப்பட்ட 265 கிராம ஊராட்சிகளிலும் மேற்படி கூட்டப்பொருட்கள் குறித்து 2.10.2022 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, கிராம பொது மக்கள் மேற்படி கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டையில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், நாலுகோட்டை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்து.கலெக்டர் மதுசூதன் ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், கிராமப்புறங்களில் கழிப்பறைகளை முறையாகப் பயன்படுத்தி, சுகாதாரத்தினை பொதுமக்கள் பேணிக்காக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில், காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    இதில் திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வானதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணி பாஸ்கரன், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) பழனிக்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், உதவி இயக்குநர் ஊராட்சிகள் குமார், நாலுகோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன் வட்டாட்சியர் தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என கீழக்கோட்டை, மேலக்கோட்டை கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • ஊராட்சி செயலர் குமரேசன், வி.ஏ.ஓ. சுரேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் யூனியனை சேர்ந்த கீழக்கோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் காளம்மாள் தனுஷ்கோடி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சுப்புலட்சுமி, நிர்வாக உதவியாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். கீழக்கோட்டை, லட்சுமிபுரம், மல்லம்பட்டி ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கிய கீழக்கோட்டை ஊராட்சியில் சுமார் 529 ரேசன்கார்டுகள் உள்ளன. ஆனால் கிராமமக்கள் ரேசன் பொருள்கள் வாங்க 3 கி.மீ தூரமுள்ள கிரியகவுண்டன்பட்டிக்கு செல்லவேண்டி உள்ளது. 500 கார்டுகளுக்கு மேல் இருந்தாலே புதிய கடை திறக்கவேண்டும் என்ற அரசு உத்தரவுபடி கீழக்கோட்டை கிராமத்தில் புதிய ரேசன்கடை அமைக்கவேண்டும்.விதிமுறைகளை மீறி அமைந்துள்ள கப்பலூர் டோல்கேட்டால் திருமங்கலம் நகரம் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ணஎனவே கப்பலூர் டோல்கேட்டை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலர் குமரேசன், வி.ஏ.ஓ. சுரேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலக்கோட்டை

    மேலக்கோட்டை ஊராட்சி கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் கோபிநாத் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஜெயலட்சுமி, பற்றாளர் முகமதுஇலியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலக்கோட்டை ரெயில்வேத ரைப்பாலத்தில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கிறது. இதற்கு நிரந்தரதீர்வு காணவேண்டும்.மேலக்கோட்டையில் இருந்து 4 வழிச்சாலையை கடந்து எதிரேயுள்ள ஹவுசிங்போர்டு காலனிக்கு செல்லவேண்டி உள்ளது. 4 வழிச்சாலையில் கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகிறது.இதனை தடுக்க பேரிகார்டுகள் வைக்கவேண்டும். ஹவுசிங்போர்டு காலனியில் அதிகளவில் வீடுகள் உள்ளன. அங்கு ரோடு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. அவற்றை சரிசெய்யவேண்டும். இல்லையெனில் ஹவுசிங்போர்டுகாலனியை தனி ஊராட்சியாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி இயங்கிவரும் கப்பலூர் டோல்கேட்டை அகற்றவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கொ.புளியங்குளம்

    திருமங்கலம் ஒன்றியம் கொ.புளியங்குளத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சிவகாமிதர்மர் தலைமை தாங்கினார். திருமங்கலம் யூனியன் ஆணையாளர் சங்கர் கைலாசம் முன்னிலை வகித்தார். கிராமத்தின் தேவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    ×