என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு கடை"

    • பட்டாசு கடைகளில் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
    • தீ மளமள எரிந்து கடையில் இருந்த பட்டாசுகளில் தீ பரவியது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறின.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்து கோவிலில் அம்பலூர் சாலையில் தனியார் பட்டாசு கடை உள்ளது. இதன் அருகே பட்டாசு குடோனும் அமைந்துள்ளது. இந்த பட்டாசு கடைகளில் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மதியம் பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. தீ மளமள எரிந்து கடையில் இருந்த பட்டாசுகளில் தீ பரவியது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறின.

    அருகே இருந்த பட்டாசு குடோன் மீது தீப்பொறி விழுந்தது. குடோனில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடிக்க தொடங்கின. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் உட்பட குழந்தைகள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

    அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும், அம்பலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்பாபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் 2 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. 

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தர விட்டுள்ளார்.

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பட்டாசு கடைகளை தணிக்கை மேற்கொள்வது தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    திருப்பத்தூர் தாலுகாவில் 36, நாட்டறம்பள்ளி தாலுகாவில் 25, வாணி யம்பாடி தாலுகாவில் 17, ஆம்பூர் தாலுகாவில் 4 என மொத்தம் 82 பட்டாசு கடைகள் உள்ளது. இந்த கடைகளை தணிக்கை செய்து, பட்டாசு கடைகள் அமைப்பதற்கான வழிமுறையின்படி அமைக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    மேலும் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக உரிமம் வழங்கும் இடத்தில் இருப்பில் உள்ள பட்டாசுகளை அகற்ற வேண்டும்.

    மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளை ஆய்வு செய்து உடனடியாக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

    அனைத்து தாசில்தார்களும், பொது மக்கள் பயனடையும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதார், குடும்ப அட்டை, பட்டா, வங்கி கணக்கு, வீட்டுமனை ஆகிய அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதுடன், அவர்களின் குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், முத்தையன், வருவாய் கோட்டாட்சி யர்கள் லட்சுமி, பிரேமலதா, தனித்துணை கலெக்டர் கோவிந்தன், தாசில்தார்கள் சிவப்பிரகாசம், சம்பத், குமார், மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் நடத்திய விசாரணையில் பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    சீனாவின் ஹெபெய் மாகாணம் டச்செங் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. இதில், பட்டாசுகள் வெடித்து சிதறி அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பட்டாசு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    • நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 22-ந் தேதி மாலை 5 மணி வரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
    • காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக உரிமம் வழங்கப்படும்

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 22-ந் தேதி மாலை 5 மணி வரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்ப படிவம் ஏ.இ.5-ல் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். உரிம கட்டணம் ரூ.1,200 ஆன்லைனில் செலுத்தியதற்கான சலான் இணைக்க வேண்டும். பட்டாசு இருப்பு வைத்து விற்கப்பட உள்ள இடத்தின் வரைபடம் 6 நகல்கள், வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிட வேண்டும். அதில் மனுதாரர் தனது கையொப்பம் இட வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்த கட்டிடமாக இருந்தால் 2023-24-ம் ஆண்டுக்குரிய சொத்துவரி ரசீது இணைக்க வேண்டும்.

    வாடகை கட்டிடமாக இருந்தால் 2023-24-ம் ஆண்டுக்குரிய சொத்துவரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டிட உரிமையாளருடன் ரூ.20 மதிப்புக்கு குறையாத முத்திரைத்தாளில் ஏற்படுத்திக்கொண்ட வாடகை ஒப்பந்தம் ஆவணம் இணைக்க வேண்டும். மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்ற துறை கட்டிடமாக இருந்தால் அந்த துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் இணைக்க வேண்டும்.

    பட்டாசு உரிமம் பெறுவதற்கான மாநகராட்சிக்கு கட்டிய கட்டிட உரிம கட்டணம் செலுத்திய ரசீது இணைக்க வேண்டும். இந்த ஆவணங்களுடன் அடுத்த மாதம் 22-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு விசாரணைக்கு பின் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக உரிமம் வழங்கப்படும். குறித்த காலக்கெடுவுக்குள் பெறாத விண்ணப்பங்கள் முன்னறிவிப்பு இன்றி தள்ளுபடி செய்யப்படும்.

    இந்த தகவலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பிக்க செப்டம்பர் 21-ந்தேதி கடைசி நாளாகும்‌.

    மதுரை

    மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகர காவல் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாடு வெடிபொருள் சட்டம் 2008-ன் படி வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி படிவம் எண் ஏ.இ.5 என்ற படிவத்தனை பூரத்தி செய்து ரூ.2க்கான நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவம் (இணையதளத்தில் பதிவிறக்கம்) பாஸ்போர்ட் புகைப்படத்துடன், விண்ணப்பதாரரின் கூடுதல் பாஸ்போர்ட் புகைப்படம்-2 (தனியாக இணைக்கப்பட வேண்டும்), தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று, உத்தேசிக்கப்பட்ட கடையின் வரைபடம் (2 வழிகள் இருக்கவேண்டும்) வரைபடத்தில் கடையின் முகவரி முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும்,

    மனுதாரர் கையொப்பம் இட்டிருக்க வேண்டும், உத்தேசிக்கப்பட்ட கடை அமையவுள்ள இடத்தை சுற்றி 50 மீட்டர் அருகாமையில் உள்ள அமைவிடங்களை குறிக்கும் வரைபடம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் சொந்த கட்டிடமாக இருப்பின் சொத்து வரி ரசீது, உரிமையாளரின் சம்மதக் கடிதம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் வாடகைக் கட்டிடமாக இருப்பின் 2023-2024-ம் ஆண்டுக்குரிய முதலாம் அரையாண்டு வரை அதாவது 30.09.2023 வரை செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் கட்டிட உரிமையாளரின் சம்மத க்கடிதம் மற்றும் கட்டிட உரிமையாளருடன் விண்ணப்பதாரர் ஏற்படுத்திக்கொண்ட வாடகை முத்திரைத்தாளில் நோட்டரி பப்ளிக் ஒப்புதலு டன்). ஒப்பந்தப்பத்திரம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் மாநகராட்சி / பொதுப்பணித்துறை / மற்ற துறை கட்டிடமாக இருப்பின் அத்துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம், மாநகராட்சி டி.அண்டு சி. ரசீது,

    ஏற்பு உறுதி ஆவணம் (ரூ.20/- மதிப்புள்ள பத்திரத்தில் நோட்டரி ஒப்புதலுடன்) கடை அமையவுள்ள இடத்தின் புகைப்படம் 2 கோணங்க ளில், விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை (அல்லது) ஆதார் அட்டை நகல்கள் ரூ.900/- விண்ணப்ப உரிமம் கட்டணம் (திருப்பித்தர இயலாது).

    அசல் விண்ணப் பத்துடன் அனைத்து ஆவணங்களும் 3 நகல் இணைக்கப்படவேண்டும். செப்டம்பர் 21ம் தேதி 1 மணிக்குள் பெறப்படும் முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விசார ணைக்குப்பின் காவல்துறை கண்ணோக்கில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும்.

    வெடிபொருள் சட்டம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின் படி, சாலை ஓரக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட மாட்டாது. மேற்கண்ட தேதிக்கு மேல் விண்ணப்பம் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது. குறித்த கால கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப் பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தள்ளுபடி செய்யப்படும். தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க செப்டம்பர் 21-ந்தேதி கடைசி நாளாகும்.

    இவ்வாறு அவர்கள் தெரித்தனர்.

    • பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வரும் அக்., 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    • தீபாவளி பண்டிகை முன்னிட்டு கலெக்டர் கிறிஸ்துராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு, திருப்பூர் ஊரகப் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வரும் அக்., 20ம் தேதிக்குள், உரிய விவரங்களுடன் அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

    கடை அமையும் இடத்தின் வரைபடம். பட்டா மற்றும் ஆவணம், உரிமக்கட்டணம், 600 ரூபாய் செலுத்திய சலான், சொத்து வரிக்கான ரசீது, வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்த பத்திரம், விண்ணப்பதாரர் போட்டோ, முகவரி சான்று மற்றும் தீயணைப்பு துறை சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில், கூறியுள்ளார்."

    • பழைய பட்டா சுகளை வைத்திருந்து விற்பனை செய்யக்கூடாது
    • உரிமத்தில் குறிப்பிட்டுள்ள அளவில் மட்டுமே பட்டாசு வைத்திருக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் காவல்துறை சார்பில் ஆலோச னைக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு லாமெக் தலைமை வகித்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டி.எஸ்.பி லாமெக் பேசுகையில், கடையின் உரிமம், வெடி இருப்பு பதிவேடு ஆகியவற்றை கடை உரிமையாளர்கள் சரியாக பராமரிக்க வேண்டும்.

    உரிமத்தில் குறிப்பிட்டுள்ள அளவில் மட்டுமே பட்டாசு வைத்திருக்க வேண்டும். எளிதில் தீ பற்றக்கூடிய எந்த பொருளையும் வைத்திருக்ககூடாது.

    பட்டாசு கடை களில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கண்டிப்பாக காப்பீடு செய்திருக்க வேண்டும்.

    பழைய பட்டா சுகளை வைத்திருந்து விற்பனை செய்யக்கூடாது என்று கூறினார்.

    இதில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

    • ஒசூரில் பட்டாசுக் கடைகள் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தாசில்தார் வலியுறுத்தினர்.
    • அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை கோர வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

    கிருஷ்ணகிரியில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து, ஓசூர் அருகே பட்டாசு ஆலையை பார்வையிட சென்றபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த, மாவட்ட வருவாய் அலுவலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துகளை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை கோர வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் 15பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

    இவ்வாறு, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், எல்லை பகுதி அருகிலும். நடந்த பட்டாசு வெடி விபத்துக்கள், உயிர் சேதங்கள் பொது மக்களை அச்சத்திலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளன. அடுத்த (நவம்பர்) மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஓசூர் மாநகரில் உள்ள பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஓசூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று, தாசில்தார் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய அவர், "பட்டாசு கடைகளில் 18 வயதிற்கு கீழ் யாரையும் வேலைக்கு அமர்த்த க்கூடாது. என எச்சரித்தார். மேலும், தொழிலாளர்கள் குறித்த விபரம் முழுமையாக சேகரித்து தினமும் வருகை பதிவேடு பின்பற்ற வேண்டும், கட்டா யமாக தொழிலா ளர்களுக்கு இன்சூரன்ஸ் செலுத்திருக்க வேண்டும் என்றும்,பட்டாசு கடைகளில் இரண்டு கதவுகள் திறந்த நிலையிலும், தீயை அணைக்க மணல், நீர் வாளிகள் இருப்பது மிகவும் அவசியம் எனவும் அறிவுறுத்தினார். இதில், 70 பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அனுமதியின்றி விற்றால் நடவடிக்கை
    • கடையின் அருகே டீக்கடை, ஓட்டல் வைக்க அனுமதி இல்லை

    வேலூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வியாபாரிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார்.

    தாசில்தார்கள் செந்தில் குமார், ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வேலூர் மாவட்ட பட்டாசு வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் ஜனார்த்தனன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாங்கள் பல ஆண்டுகளாக உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்தி வருகிறோம். திடீரென எங்கள் கடையின் அருகே டீக்கடை, ஓட்டல் வைத்து நடத்துகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு வியாபாரத்தினை நம்பி பல வியாபாரிகள் உள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் வியாபாரம் நடைபெறுவதால் எங்களது வியாபாரம் பாதிக்கபடுகிறது.

    ஆன்லைன் வியாபாரத்தால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆன்லைன் வியாபாரத்தை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதற்கு பதில் அளித்து வேலூர் உதவி கலெக்டர் கவிதா பேசியதாவது:-

    உரிமம் இன்றி பட்டாசுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாராவது அவ்வாறு பட்டாசு விற்பனை செய்தால் அவர்கள் குறித்து உடனடியாக எனக்கோ அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் புகார் தெரிவிக்கலாம்.

    பட்டாசு கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தகுந்த பயிற்சிகள் வழங்க வேண்டும். கடைகளில் இரு வழி பாதைகள் இருக்க வேண்டும். கடையில் தீ தடுப்பு உபகரணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

    மின் வயர்கள் பாதுகாப்பான முறையில் குழாய்கள் மூலமே கடைக்குள் பதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.மின் இணைப்பு பெட்டி கடையின் வெளியே வைத்திருக்க வேண்டும்.

    மளிகை கடையில் பட்டாசுகள் விற்பனை செய்ய கூடாது. வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யக்கூடாது. இது போன்ற புகார்கள் வந்தால் தெரிவிக்கலாம். வேலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து

    இந்த தீபாவளியை விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் இல்லாத தீபாவளியாக கொண்டாட வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேலூர் கோட்டத்தில் 51 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவர் அவர் கூறினார்.

    • விருதுநகரை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் கடைவீதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது.
    • பட்டாசுகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    கடந்த வாரம் சிவகாசி பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். விசாரணையில் அந்த பட்டாசு கடை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் உரிய அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் பட்டாசு கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் விருதுநகர் மாவட்டத்தில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் அறிவுறுத்தினார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனுமதியில்லாமல் செயல்படும் பட்டாசு கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் அனுமதியின்றியும், பாதுகாப்பில்லாமலும், ஏராளமான அட்டை பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. முதியவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சாத்தூர் மேட்டமலையை சேர்ந்த நாராயணசாமி(69) வீட்டில் உரிய அனுமதியில்லாமல் பட்டாசுகள் விற்பனைக்காக வைத்திருந்தார். சாத்தூர் டவுன் போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    விருதுநகரை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் கடைவீதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. வச்சகாரப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். விருதுநகர் பகுதியில் நடந்த சோதனையில் சேடப்பட்டியை சேர்ந்த திருமுருகன், கண்ணன் ஆகியோரிடம் இருந்து 110 குரோஸ் கருந்திரிகளை வச்சகாரப்பட்டி போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் திருத்தங்கல் பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசுகள் வைத்திருந்த கவுதம், கார்த்திகேயன், முத்துகுமார், மற்றொரு முத்துகுமார், சுந்தர், கான்ஸ்டைன், செல்வபாண்டி, தர்மர், காளியப்பன், செல்லதுரை, கணேஷ்பாபு, செல்வம் ஆகியோரிடம் இருந்து ஏராளமான அட்டை பெட்டிகளில் பட்டாசுகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி பகுதியை சேர்ந்த காளிராஜ், சேதுராஜ், கணேசன், ஜெயராஜ், செல்வம், கூமாபட்டி பரத் ஆகியோரிடம் இருந்தும் லட்சக்கணக்கில் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசு கடைகளில் திருவள்ளூர் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தாசில்தார் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

    திருவள்ளூர்:

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகளில் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதை மொத்தமாக வாங்கி சில்லறைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதியில் பட்டாசு கடைகளில் திருவள்ளூர் கோட்டாட்சியர் ஜெயராஜ் பௌலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பட்டாசு கடை அருகே மின்மாற்றி, பெட்ரோல் பங்க் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் சாதனங்கள் அருகே உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் கடையில் பட்டாசுகள் இருப்பு வைக்கும் இடம் மற்றும் கடை வைக்க உரிமம் பெறப்பட்டுள்ளதா? தண்ணீர் வாளியில் உள்ளதா, கடைகளுக்கு 2 வழி, தீயணைப்பு கருவி உள்ளதா என பார்வையிட்டார். மேலும் விபத்துக்கள் ஏற்பட்டால் அதை தடுப்பது, விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக பட்டாசுகளை விற்பனை செய்ய கடை வியாபாரிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

    • கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
    • ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் கடந்த மாதம் 7 ந்தேதி பட்டாசு விற்பனை கடை மற்றும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர், இதன் காரணமாக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் இந்த வருடம் பட்டாசு விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

    மேலும் கர்நாடகா மாநிலத்தில் பட்டாசு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக அருகேயுள்ள தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் விடுமுறை தினமான நேற்று மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து தேவையான பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.

    இந்தாண்டு தமிழக அரசு 2 மணி நேரம் மட்டுமே தங்கள் வீடுகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளதால், தமிழக மக்கள் தற்போது பட்டாசுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.

    குறிப்பாக கர்நாடகவில் விலை கூடுதலாக உள்ளதால் தொடர்ந்து தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். தவிர, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடைகளில் மட்டுமில்லாமல் சாலைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகளும் அதிகளவில் வந்துள்ளதால் அதனை சிறுவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர், பட்டாசுகளை பொறுத்த வரை இந்த வருடம் விலை ஏற்றம் என்பது சற்று குறைவாகவே காணப்படுகின்றது என பட்டாசு வாங்க வந்தவர்கள் தெரிவித்தனர்.

    குறிப்பிட்ட கடைகளில் மட்டும் வாங்க வருவதால் அவர்கள் அதிகளவில் தள்ளுபடி கொடுக்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பெரும்பாலானோர் பட்டாசுகளை வாங்குவதற்கு கார்களில் வந்தனர். இதனால், கார்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையோரமும் சர்வீஸ் சாலையிலும் கார்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் அதே போல் கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ×