search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம கும்பல்"

    • லாரியில் உள்ள பெட்டியில் ரூ.42 லட்சம் வைக்கப்பட்டிருந்தது.
    • கண் இமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்து சென்றனர்.

    குளித்தலை:

    திருச்சி மாவட்டம், ஊட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் லாரியில் பீட்ரூட், கேரட், பீன்ஸ், நூக்கோல், சவ் சவ் உள்ளிட்ட காய்களை தினமும் கும்பகோணம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது, லாரியில் டிரைவர் மட்டுமே வருவார்.

    வாரத்தில் ஒருநாள் டிரைவருடன் பணம் வசூல் செய்பவரும் சேர்ந்து வந்து காய்களை கும்பகோணம் மார்க்கெட்டில் இறக்கிவிட்டு பணம் வசூல் செய்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் நள்ளிரவு ஒரு லாரி மேட்டுப்பாளையத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணத்துக்கு சென்றது. அங்கு காய்கறியை இறக்கிவிட்டு ஊரு திரும்பினர். லாரியை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டிரைவர் ஆனந்த் ஓட்டினார். அவருடன் பணம் வசூல் செய்பவர் லோகேஷ் வந்திருந்தார்.

    லாரியில் உள்ள பெட்டியில் வசூலான பணம் ரூ.42 லட்சம் வைக்கப்பட்டிருந்தது. லாரி அதிகாலை திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே கரூர் முதல் திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் காவல்காரபாளையம் பெட்ரோல் பங்க் அருகில் வந்தது. அப்போது டிரைவர் ஆனந்த் லாரியை நிறுத்திவிட்டு உடன் வந்த லோகேசுடன் அங்குள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றார்.

    அப்போது அங்கு காரில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. திடீரென்று அவர்கள் லாரியில் ஏறி பெட்டியை உடைத்து ரூ.42 லட்சத்தை எடுத்தனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் காரில் ஏறி தப்பிவிட்டனர்.

    டீ குடித்து விட்டு வந்த டிரைவர் ஆனந்த், லோகேஷ் ஆகியோர் திரும்பி வந்து பார்த்தபோது பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்த ஜீயபுரம் டி.எஸ்.பி. பாலச்சந்தர், ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர் ஆனந்த், லோகேசிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர்ந்து தனிப்படைகள் அமைத்தும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மரங்களை வெட்டி அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.
    • போலீசார் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை

    பொன்னேரி:

    சோழவரம், செங்குன்றம்,பொன்னேரி, காரனோடை, பழைய எருமை வெட்டிபாளையம் புதிய எருமை வெட்டி பாளையம், பூதூர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.

    அழிந்து வரும் பனைமரங்களை பாதுகாக்க அதனை வெட்டுவதற்கு அரசு கட்டுப்பாடு விதித்து உள்ளது. மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்ற பின்னரே தனியார் நிலத்தில் உள்ள மரத்தினை அகற்ற வேண்டும் எனவும் அரசு நிலத்தில் உள்ள பனை மரங்களை அகற்ற உரிமை கிடையாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் அரசு நிலத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. இரவில் வந்த மர்மகும்பல் எந்திரத்தால் மனைமரங்களை வெட்டி அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினருக்கும், சோழவரம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. அரசு நிலத்தில் இருந்த பனை மரங்களை நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் எந்திரத்தால் வெட்டி சாய்த்து உள்ளனர். அதனை வெட்டிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மாரிச்செல்வம் வீட்டின் முன் பகுதியில் கிடந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
    • ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனத்தை சமீபத்தில் விருதுநகரில் வைத்து போலீசார் பிடித்துள்ளனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் மாரிச்செல்வம் வீட்டின் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசியது.

    இதில் மாரிச்செல்வம் வீட்டின் முன் பகுதியில் கிடந்த பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் மாரிச்செல்வம் பக்கத்து வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த அவரது வாகனத்தையும் அந்த கும்பல் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றது.

    மேலும் மாரிச்செல்வத்திற்கு சொந்தமான ஊத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தையும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றது.

    இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் மாரிச்செல்வம் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வத்துக்கு தொழில் ரீதியாக ஏதேனும் முன் விரோதம் ஏற்பட்டு அந்த பிரச்சனையில் யாரேனும் பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிச்செல்வத்துக்கு தெரிந்த சிறுவனை ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் ஒன்று வீடுகளில் ரேஷன் அரிசி வாங்கி தர கட்டாயப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வக்கீல் மாரிச்செல்வம் அந்த கும்பலிடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதற்கிடையே ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் வாகனத்தை சமீபத்தில் விருதுநகரில் வைத்து போலீசார் பிடித்துள்ளனர்.

    இதனால் வக்கீல் மாரிச்செல்வம் தான் தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைத்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    எனினும் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.
    • போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம்.

    கோவை:

    தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில் செல்போன் மூலம் பண பரிமாற்றம் போன்ற பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆன்லைன் பணபரிமாற்றமானது முன்பைக் காட்டிலும் தற்போது அதிகமாகவே காணப்படுகிறது. அதற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

    இதன் மூலம் பல வகைகளில் மோசடிகள் செய்து வந்தாலும், தற்போது போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    கோவை மாநகரில் பொருளாதார குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவதை போலவே அண்மைக் காலமாக ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றி பலரிடம் ஒரு கும்பல் பணம் பறித்து வருவது தெரியவந்துள்ளது.

    அதன்படி மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.

    அப்போது தங்களை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அல்லது சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாக கூறுவார்கள்.

    அந்த பார்சலில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பதாகவும், இது தொடர்பாக உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாகவும் கூறி போலி ஆவணத்தை காட்டுவார்கள்.

    போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுவதைப் போல தெரிய வேண்டும் என்பதற்காக போலியாக போலீஸ் நிலைய பின்னணியை உருவாக்கி போலீஸ் உயர் அதிகாரிகளை போல உடையணிந்து பேசுகிறார்கள்.

    போதைப் பொருள் கடத்தியதுடன், உங்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர்.

    போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம். கோவை மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இதுபோல 52 புகார்கள் பதிவாகி உள்ளன. முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என பலரையும் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, இந்த கும்பல் வடமாநிலங்களில் இருந்து செயல்பட்டு வருவதாகவும், இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் வடமாநிலத்திற்கு செல்ல உள்ளனர்.

    மேலும் இந்த கும்பலின் மோசடியில் சிக்காமல் இருப்பது குறித்து போலீஸ் துறையின் சோஷியல் மீடியா செல் மூலம் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • திடீரென்று ஒரு கும்பல் சரமாரியாக பஸ்சை நோக்கி கற்களை வீசினார்கள்.
    • குடிபோதையில் இருந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள்.

    கடலூர்:

    கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் அடுத்த நத்தப்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று ஒரு கும்பல் சரமாரியாக பஸ்சை நோக்கி கற்களை வீசினார்கள். இதில்பின்பக்கம் கண்ணாடி முழுவதும் பலத்த சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது.

    அப்போது பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அலறி கத்தி துடித்தனர். இதனை தொடர்ந்து பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்திய நிலையில், பொதுமக்கள் மர்ம கும்பலை பிடிக்க ஓடினார்கள் . அப்போது குடிபோதையில் இருந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். இதனை தொடர்ந்து தனியார் பஸ் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமுதாய கூடத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 8 மின் விசிறி களை திருடிச் சென்றனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சிக்குட்பட்ட ராமகாரன் தெருவில் சமுதாய கூடம் உள்ளது. இங்கு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 8 மின் விசிறி களை திருடிச் சென்றனர்.

    இது குறித்து பேரூராட்சி செயல்அலுவலர் சிவக்கு மார் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.

    தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் காமு (வயது 50). இவர் தேங்காய் வெட்டும் தொழிலாளி. ஒரு ஆடு மற்றும் 2 குட்டிகளை வளர்த்து வருகிறார்.

    அவரது தோட்டத்தில் மேய்ச்சலு க்காக விட்டு வந்த போது ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சினிமாவில் வரும் சம்பவம் போல 2 கார்களில் வந்து தூக்கிச் சென்றனர்
    • சுமார் 5 கி.மீட்டர் தூரம் விரட்டியும் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர், மணவாளக்குறிச்சியை சேர்ந்த பிபின் பிரியன் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.

    இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் பிபின் பிரியனுக்கும் பிரியாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பிரியா தனது மகனுடன் கணவரை பிரிந்து பிலாங்காலை வந்து விட்டார்.

    தொடர்ந்து மகனை கடமலைக்குன்று பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்துள்ளார். தினமும் பள்ளி வாகனத்தில் சிறுவன் சென்று வந்தான். இன்று காலை 9 மணிக்கு அவன் பள்ளி வாகனத்தில் புறப்பட்டான்.

    அந்த வாகனத்தில் மேலும் சில மாணவர்களும் இருந்தனர்.சாமிவிளை பகுதி வழியாக பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் 2 கார்கள் வேகமாக வந்தன. அதில் வந்தவர்கள், ஹாரன் ஒலி எழுப்பியதால், பள்ளி வாகனம் அந்த கார்களுக்கு வழி விட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து முந்திச் சென்ற 2 கார்களும் திடீரென சாலையை மறித்து நின்றுள்ளது. அதில் இருந்து திபு...திபு...வென ஒரு கும்பல் இறங்கி உள்ளது. அந்த கும்பல் பள்ளி வாகனத்தை நோக்கி ஓடி வந்தது. இதனைக் கண்டு பள்ளி வாகனத்தில் இருந்த மாணவர்களும் டிரைவர் மற்றும் உதவியாளரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் மர்ம கும்பல் பள்ளி வாகனத்தை சுற்றி வளைத்தது. அவர்கள் பள்ளி வாகனத்தில் இருந்த பிரியாவின் மகனை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு மர்ம கும்பல் தாங்கள் வந்த கார்களில் தப்பிச் சென்றது.

    சினிமாவில் வரும் காட்சி போல் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி வாகனத்தில் இருந்து சிறுவன் கடத்தப்பட்டதை பார்த்த பலரும் அங்கு திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையில் சிலர் வேறு வாகனங்களில், கடத்தல் கும்பல் சென்ற காரை விரட்டி பிடிக்க முயன்றனர்.

    சுமார் 5 கி.மீட்டர் தூரம் விரட்டியும் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. சிறுவனை கடத்திய 2 கார்களும் மாயமாக மறைந்து விட்டன. இதற்கிடையில் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், தக்கலை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்களது விசாரணையில், சிறுவனை கடத்திய கார்கள், நாகர்கோவில் நோக்கி சென்றது தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பட்டப்பகலில் பள்ளி வாகனத்தை மறித்து சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனை கடத்தியது யார்? அவர்கள் எதற்காக கடத்தினார்கள்? என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
    • பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி தப்பியுள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத் தில் பிரதான சாலையான பாரதியார் வீதியில் அன்சாரி என்பவர் துணிக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று இரவு காரில் வந்த 5 பேர், அந்த கடையில் விலை உயர்ந்த துணிகள் எடுத்த னர். தொடர்ந்து மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி விட்டு துணிகளை எடுத்துக்கொண்டு காரில் தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து கடை ஊழி யர்கள் நகர போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீஸ் சூப்பிரண்ட் சுப்ரமணியம் தலைமையிலான போலீசார் அந்த கடையில் பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். மேலும் கடை யில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து 5 மர்ம நபர்களை தேடி வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருடர்கள் பயங்கர ஆயுதத்துடன் உண்டியல் பூட்டை அதிகாலை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.
    • பொதுமக்கள் துரத்தி பிடிக்க முயற்சி செய்யும் போது மர்ம கும்பல் தப்பி சென்றது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இந்து சமய அறநிலைத்துறை சொந்தமான உலக புகழ்பெற்ற அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகலேஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலின் 20 அடி உயரம் உள்ள சுற்றுப்புற மதில் சுவர் ஏறி உள்ளே புகுந்த திருடர்கள் பயங்கர ஆயுதத்துடன் உண்டியல் பூட்டை அதிகாலை உடைத்து திருட முயற்சி செய்யும்போது குடமுழுக்குக்காக திருப்பணி செய்யும் பணியாளர்கள் பார்த்து கூச்சலிட்டதால் அருகில் குடியிருந்த பொதுமக்கள் துரத்தி பிடிக்க முயற்சி செய்யும் போது மர்ம கும்பல் தப்பி சென்றது. தப்பிச்சென்ற மர்ம கும்பல் பற்றி பெண்ணாடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பெண்ணாடம் பகுதி பொதுமக்கள் இரவு கோவிலில் ஒன்று திரண்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீசார் விசாரணை
    • வாகனம் பறிமுதல்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த நீலகண்டராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சகுந்தலா (வயது 50), அருண்குமார் (26). இருவரும் கூலித் தொழிலாளர்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சகுந்தலா வீட்டில் ஒரு பவுன் நகை, வெள்ளி கொலுசு, சாவி கொத்து, ரூ.6 ஆயிரம் ஆகியவற்றையும், அருண்குமார் வீட்டில் 2 பவுன் நகை, 2 ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றையும் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.

    இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி அருகே சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் வாலாஜா அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (45), காட்பாடி அடுத்த கீழ்மோட்டூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (47) என்பதும் சகுந்தலா, அருண்குமார் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 3 பவுன் நகை, 4 ஜோடி வெள்ளி கொலுசு, சாவி கொத்து, ரூ.2,500 மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • இளம்பெண் தனது உறவினர்களை அழைத்து அன்று இரவே வீட்டை காலி செய்து சென்று விட்டார்.
    • பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர்கள் கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை சேடர் தெருவை சேர்ந்தவர் அருள்செல்வன் (வயது 56). இவர், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு சுல்தான்பேட்டையில் உள்ளது.

    இந்த வீட்டை லாரி டிரைவர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இவர் கடந்த வாரம் அவர் வெளிமாநிலத்துக்கு லாரியை வாடகைக்கு ஓட்டிச்சென்றார். இதனால் வீட்டில் இவரது மனைவி, தனது குழந்தையுடன் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணிக்கு மர்மநபர்கள் 5 பேர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் கர்சிப் கட்டிக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தனர். வீட்டில் அந்த பெண் தனது குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டு எழுந்த அந்த பெண் வீட்டின் உள்ளே 5 பேர் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மர்மநபர்கள் 5 பேர் , திடீரென அந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அலறி அடித்துக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி தெருவில் வந்து கூச்சலிட்டார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் தங்களது வீடுகளில் இருந்து வெளியே வரவே சுதாகரித்துக்கொண்ட 5 பேர் தங்களது மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

    இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் தனது உறவினர்களை அழைத்து அன்று இரவே வீட்டை காலி செய்து சென்று விட்டார். இதனால் சுல்தான்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் அருள்செல்வன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதியில் வைத்திருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவான வீடியோ ஆதாரத்துடன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 5 நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    அதன்பேரில் பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர்கள் கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    இரவு நேரங்களில் பகவதி அம்மன் கோவில், சந்தை வளாகம் மற்றும் சேடர் தெரு ஆகிய பகுதிகளில், மர்மநபர்கள் சாலையிலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். இவர்களை தட்டிக் கேட்டால் பொதுமக்களை மிரட்டுகின்றனர்.

    பாதிக்கப்பட்ட அந்த பெண் இந்த பகுதியில் தகுந்த பாதுகாப்பு இல்லை என உடனடியாக வெளியேறி விட்டார். பரமத்திவேலூர் போலீசார் இரவு நேரங்களில் இப்பகுதியில் ரோந்து வரவேண்டும். அசம்பாவிதம் ஏற்படும் முன் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்து மர்ம கும்பல் நகை-பணத்தை பறித்து சென்றது.
    • வழிப்பறி கொள்ளையர்களின் அட்டூழியத்தை அடக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை பைக்காரா நாயக்கமார் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் குமார்(வயது50). இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் மறித்து அவரை தாக்கினர். தொடர்ந்து அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி குமாரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், செல்போனை பறித்து சென்றனர்.

    இந்த சம்பவம் தொட ர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை நகரில் கடந்த சில மாதங்களாக தனியாக செல்லும் பெண்கள், முதியவர்களை குறி வைத்து நகை-பணம், செல்போன் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வரும் கொள்ளையர்கள் பட்டப்பகலில் நகை பறிப்பு, வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.

    எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வழிப்பறி கொள்ளை யர்களின் அட்டூழியத்தை அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×