search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆ ராசா"

    • மாநில பேரிடர் நிதி என்பது பேரிடரின் போது மாநில அரசு ஒதுக்கும் நிவாரண நிதியாகும்.
    • பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது போல, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நிதி வழங்க வேண்டும்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று கேள்வி நேரத்தின் போது திமுக எம்.பி ஆ.ராசா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் ஒன்றியஅரசு பாரபட்சம் காட்டுகிறது. நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

    மாநில பேரிடர் நிதிக்கும், தேசிய பேரிடர் நிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை, மாநில பேரிடர் நிதி என்பது பேரிடரின் போது மாநில அரசு ஒதுக்கும் நிவாரண நிதியாகும். இது அனைத்து மாநிலத்துக்கும் பொதுவானது.

    நிவாரணநிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது போல, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நிதி வழங்க வேண்டும்.

    தேசியபேரிடர் நிவாரண நிதியில், அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சமமான நிவாரணநிதி வழங்கும் நிலையை உறுதி அளிக்கும் வகையில் புதிய விதிகளை வகுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கேர்மாளம் நோக்கி ஆ.ராசா எம்.பி. வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம், வனத்துறையினர் வாகனம் சென்று கொண்டிருந்தது.
    • யானைக்கூட்டம் நடுரோட்டில் இருந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே வழிமறித்து நின்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, கடம்பூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதியில் ரூ.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

    விழாவில் கலந்து கொண்டு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கடம்பூர் செல்வதற்காக அடர்ந்த வனப்பகுதியில் கேர்மாளம் நோக்கி ஆ.ராசா எம்.பி. வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம், வனத்துறையினர் வாகனம் சென்று கொண்டிருந்தது.

    கேர்மாளம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது அந்த வாகனங்களை வழிமறித்து சாலையின் நடுவே 3 யானைகள் கூட்டம் நின்று கொண்டிருந்தன.

    மேலும் வாகனங்களை பார்த்து யானை சத்தமாகப் பிளிரியது. யானைக்கூட்டம் நடுரோட்டில் இருந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே வழிமறித்து நின்றது. பிறகு வனத்துறையினர் ஜீப் மூலம் அதிக சத்தம் கொண்ட ஒலிகளை எழுப்பினர்.

    அதனைத்தொடர்ந்து அந்த யானைக்கூட்டம் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின் ஆ.ராசா எம்.பி. வாகனம் வனப்பகுதியை கடந்து சென்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • இந்துக்கள் என்ற பெயரால் உயர் சாதி மக்கள் மட்டும்தான் இருக்க முடியும்.
    • பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறாது. அதிபர் ஆட்சியாக மாறிவிடும்.

    தி.மு.க. எம்.பி. ஆ. ராசா ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப் பிறகு தப்பித்தவறி பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் அரசமைப்பு சட்டம் இருக்காது. நீதிமன்றங்கள் இருக்காது. பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறாது. அதிபர் ஆட்சியாக மாறிவிடும்.

    இந்துக்கள் என்ற பெயரால் உயர் சாதி மக்கள் மட்டும்தான் இருக்க முடியும். தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்படவரோ, மிகவும் பிற்படுத்தப்பட்டவரோ, ஒரு இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ, ஜைன மதத்தை சார்ந்தவரோ, புத்த மதத்தை சார்ந்தவரோ, ஏன் சீக்கிய மதத்தை சார்ந்தவரோ முழு உரிமையுடன் வாழ முடியாது என்ற சூழ்நிலையை மோடி கொண்டு வந்துள்ள திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    • திராவிட விழுதுகள் ஊழல் அழிப்பு, பலதார மணம் எதிர்ப்பு, லஞ்ச ஒழிப்பு என்று ஒரு சின்ன கூட்டமாவது போடுவார்களா?
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சீரழியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

    சென்னை:

    சனாதன தர்மத்தை டெங்கு, கொரோனாவுடன் ஒப்பிட்டு அதை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சனாதன தர்மம் எய்ட்ஸ், தொழுநோய் போன்றது என்று விமர்சித்தார்.

    இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி கூறியதாவது:-

    இளவரசருக்கு டெங்கு, கொரோனா... ஆ.ராசாவுக்கு எய்ட்ஸ், தொழுநோய் பொருத்தம்தான். அட மாநாடு வேணாம்யா... திராவிட விழுதுகள் ஊழல் அழிப்பு, பலதார மணம் எதிர்ப்பு, லஞ்ச ஒழிப்பு என்று ஒரு சின்ன கூட்டமாவது போடுவார்களா?

    பிடிக்காத விஷயத்தை தானே எதிர்க்க முடியும். தேர்தலுக்கு தேர்தல் இந்த மாதிரி எதையாவது பேசுவார்கள். தேர்தலுக்கு முற்றிய சனாதனிகளிடம் போய் நிற்பார்கள். அவர்களின் கூட்டணி தலைவர்கள் கூட இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

    காலை தந்தை (மு.க.ஸ்டாலின்) 1000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக மகிழ்ச்சி அடைந்தார். மாலையில் தனயன் சனாதனத்தை ஒழிப்பேன் என்கிறார். இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சீரழியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். முதலில் அதை ஒழித்துவிட்டு வரட்டும். அப்போது முதல் ஆளாக நானே கைதட்டி வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமித்ஷா உள்பட பா.ஜனதாவில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள்.
    • சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான் அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை வீராம்பட்டினத்தில் கருணாநிதி சிலையை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார்.

    அதைத்தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-

    கருணாநிதி தனது அறிவால், ஆற்றலால், தியாகத்தால், உழைப்பால் தமிழக முதல்-அமைச்சராக இந்திய அரசியலுக்கு ஆற்றியுள்ள பங்கு ஏராளம். அவர் எத்தனையோ பிரதமர், ஜனாதிபதிகளை உருவாக்கியுள்ளார்.

    அகில இந்திய அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் கருணாநிதியின் பங்கு அதிகம்.

    சனாதனம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நான் புதுவையிலிருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சவால் விடுகிறேன்.

    அமித்ஷா உள்பட பா.ஜனதாவில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள். டெல்லியில் திறந்த வெளியில் விவாதிப்போம். தி.மு.க சார்பில் நானும் பேசுகிறேன்.

    நாங்கள் சனாதனம் வேண்டாம் என போராடியதால்தான் தமிழிசை கவர்னர், வானதி சீனிவாசன் வக்கீல், அண்ணாமலை ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆனார்கள்.

    சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான் அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார். இல்லாவிட்டால் வேறு வேலைக்கு சென்றிருப்பார்.

    மோடியை விட அமித்ஷாவை விட பா.ஜனதாவில் உள்ள அனைத்து அமைச்சர்களையும் விட ஆர்.எஸ்.எஸ்.சில் இருப்பவர்களை விட வெள்ளையர்கள் நல்லவர்கள், நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமர் இங்கு வந்து, எங்கள் அரசு உங்களுக்கு பாவம் செய்துவிட்டது என கூறி மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்.

    ஆனால் மணிப்பூரில் 200-க்கும் மேற்பட்டவர்களை கொன்றுவிட்டு, பழங்குடியினத்தை சேர்ந்த இளம்பெண்களை ஆடைகள் இல்லாமல் அழைத்து சென்று காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டனர்.

    இதை நியாயப்படுத்தும் அங்குள்ள முதல்-அமைச்சரை பாராளுமன்றத்தில் மோடி, அமித்ஷா பாராட்டுகின்றனர். ஊழலும், மதவாதமும் வளர்ந்து கொண்டிருக்கிற இந்த ஆட்சியை தூக்கி எறிய நாம் எல்லோரும் உறுதியேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் பி.வெங்கடேசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
    • விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

    திருச்சியில் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் ஆ.ராசா அருந்ததியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் பி.வெங்கடேசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

    புகார் குறித்து விசாரித்த தேசிய பட்டியலினத்தவர் ஆணையம், இந்த விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

    • தெக்கலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி மயக்கம் அடைந்த நிலையில் கிடந்தார்.
    • சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவினாசி:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா கோவை வந்திருந்தார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளையும் முடித்து விட்டு கடைசியாக அவிநாசியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கோவை விமான நிலையம் நோக்கி சென்றார்.

    அப்போது தெக்கலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி மயக்கம் அடைந்த நிலையில் கிடந்தார். உடனே காரை நிறுத்திய ஆ.ராசா எம்.பி., உடனடியாக தனது காரிலேயே வாலிபரை ஏற்றி கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் மயக்கமடைந்த அந்த வாலிபருக்கு உடனிருந்து சிறப்பு சிகிச்சை அளிக்க தன்னுடன் பயணித்த மருத்துவர் கோகுல் என்பவரையும் அனுப்பி வைத்ததோடு இளைஞருக்கு வழங்கப்பட உள்ள சிகிச்சை முறை குறித்தும் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசினார். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற சொல்லாடல், கலைஞர் கருணாநிதி பிறக்கும் முன்னரே வழக்கத்தில் உள்ளது.
    • 1970-ம் ஆண்டு கொங்கு பகுதியில் மின்சாரக் கட்டணத்தை குறைக்கக்கோரி போராடிய மூன்று விவசாயிகளைச் சுட்டுக்கொன்றதுதான்.

    சென்னை:

    கலைஞரின் பேனா முனை கவுண்டர்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து இருக்காவிட்டால் அண்ணாமலை ஐ.பி.எஸ். படித்து இருக்க முடியாது. ஆடுதான் மேய்த்து இருப்பார். எடப்பாடி பழனிசாமி வெல்லமண்டி வைத்திருப்பார். வானதி சீனிவாசன் கூடை வேய்ந்து இருப்பார் என்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார்.

    இதற்கு பதில் அளித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஊழல் செய்து மக்கள் பணத்தைத் திருடியவர்கள் ஜம்பமாக வலம் வரும்போது, ஆடு மேய்ப்பது, வெல்லமண்டி வைத்திருப்பது, கூடை பின்னுவது போன்ற விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆ.ராசாவுக்கு கேவலமான தொழில்களாகத்தான் தெரியும்.

    கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற சொல்லாடல், கலைஞர் கருணாநிதி பிறக்கும் முன்னரே வழக்கத்தில் உள்ளது என்பதை ராசாவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். கொங்கு பகுதிக்கு தி.மு.க. செய்தது என்னவென்றால், 1970-ம் ஆண்டு கொங்கு பகுதியில் மின்சாரக் கட்டணத்தை குறைக்கக்கோரி போராடிய மூன்று விவசாயிகளைச் சுட்டுக்கொன்றதுதான்.

    கடும் உழைப்புக்கு பெயர் போன கொங்கு மக்களை அசிங்கப்படுத்துவதை ஆ.ராசா நிறுத்திக்கொள்ள வேண்டும். யார் முன்னேற்றத்துக்காவது தனது கட்சி தலைவர் பெயரில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என ஆ.ராசா விரும்பினால், சைக்கிளில் நீதிமன்றம் சென்ற அவர் உள்ளிட்ட தி.மு.க.வினர், இன்று பல ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக இருப்பதற்கு வேண்டுமானால் கருணாநிதி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • திருநெல்வேலியில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டார்.
    • கலைஞரின் திட்டமில்லாமல் தமிழகத்தில் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

    புகழ்பெற்ற பெரிய பதவிகளில் இருப்பவர்களை பார்த்து சில நேரங்களில் கேட்பதுண்டு. இந்த பதவிக்கு நீங்கள் வந்திருக்காவிட்டால் என்னவாக ஆகி இருப்பீர்கள் என்று. அதற்கு அவர்கள் ஏதாவது ஒரு பதிலை சொல்ல கேட்டிருப்போம். தற்போது அதில் இருந்து வித்தியாசமாக ஒரு விசயத்தை ஆ.ராசா கணித்து உள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தேசிய பா.ஜனதா மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் இந்த பதவிக்கு எப்படி வந்தார்கள். இந்த பதவிக்கு வந்திருக்காவிட்டால் என்னவாக இருந்திருப்பார்கள் என்பதுதான் அவரது கணிப்பு.

    திருநெல்வேலியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசும்போது கூறியதாவது:-

    கலைஞரின் திட்டமில்லாமல் தமிழகத்தில் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கலைஞரின் பேனா முனை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கவுண்டர் சமுதாயத்தை சேர்க்கவில்லை என்றால் அண்ணாமலை ஆடு மேய்த்து இருப்பார். ஐ.பி.எஸ். அதிகாரி ஆகி இருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி வெல்லமண்டி வைத்திருப்பார். வானதி சீனிவாசன் கூடை வேய்ந்திருப்பார் என்றார்.

    • ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 2015-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
    • பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துவருவதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஆ.ராசா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 2015-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    விசாரணைக்கு பின்பு ரூ.5.53 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஆ.ராசா மற்றும் அவரது நண்பர்களான கோவை ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் மீது சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி கே.ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆ.ராசா தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகினர்.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்துவருவதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி ஆ.ராசா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

    பின்னர், வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • சென்னை அசோக் நகரில் என்.ஆர்.தனபாலன் தலைமையில் சங்கத்தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • காமராஜர் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து வருகிற 7-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை அசோக் நகரில் என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடைபெற்ற சங்கத் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன், சந்திரன், ஜெயபால், மாரிதங்கம், மின்னல் ஸ்டீபன், முத்துரமேஷ், கொட்டிவாக்கம் முருகன், கோயம்பேடு வைகுண்டராஜா, ஸ்ரீனிவாசன், பாடி விஜயகுமார், பல்லாவரம் மணிகண்டன், வேல்முருகன், ஓட்டேரி மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காமராஜர் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசாவை கண்டித்து வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல்கட்ட போராட்டமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கும் தகுதியோ, அருகதையோ இல்லை.
    • பெருந்தலைவர் காமராஜர் பற்றி பொய்யான கருத்துக்களை பரப்பிவரும் ஆ. ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜர் குறித்து தவறாக பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா-வுக்கு என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடந்த நாடார் சங்கங்கள் கூட்டத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

     சென்னையிலுள்ள நாடார் சங்க நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் அசோக்நகர் என்.ஆர்.டி.டவரில் நடந்தது.

    இக்கூட்டத்தில் முத்துரமேஷ் நாடார், மின்னல் ஸ்டீபன், எம்.வி.எம்.ரமேஷ்குமார், கொளத்தூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அவை வருமாறு:-

    பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கும் தகுதியோ, அருகதையோ இல்லை என்பதால் காமராஜர் பற்றி பேசுவதை தி.மு.க. நிர்வாகிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

    பொய்யான தகவல்களை பொது மேடைகளில் பேசி அதை மெய்யாக்கி முந்தைய வரலாற்றை மாற்றி தங்கள் தான் உத்தமர்கள் போன்ற மாயையை பரப்பும் தி.மு.க. வினரின் முகமுடியை கிழித்தெறிய வேண்டும் என்று இக்கூட்டம் அனைத்து கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறது.

    பெருந்தலைவர் காமராஜர் பற்றி பொய்யான கருத்துக்களை பரப்பிவரும் ஆ ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடத்துவோம் என்று இக்கூட்டம் ஒருமனதாக முடிவு செய்கிறது.

    தொடர்ந்து கர்மவீரர் காமராஜரின் வரலாற்றை திரித்து தவறுதலாக பேசி வரும் தி.மு.க நிர்வாகிகள் மீது அதிருப்தி கொண்டுள்ள பெருந்தலைவர் தொண்டர்களும், பக்தர்களும் ஒருபோதும் தி.மு.க.வை மன்னிக்க மாட்டார்கள். மேலும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.விற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்படும் என்று இக்கூட்டம் வாயிலாக தெரியபடுத்துகிறோம்.

    இக்கூட்டத்தில் டி.எஸ்.எஸ். நாடார் சங்கத்தலைவர் மனோகரன், போரூர் நாடார் சங்கத்தலைவர் ஆனந்தராஜ், முகப்பேர் வட்டார நாடார் மகாஜன சங்கத்தலைவர் தேன்ராஜன், நாடார் பாதுகாப்பு தலைவர் ஸ்ரீனிவாசன், அயனாவரம் சந்திரமோகன், ஆவடி வட்டார நாடார் சங்கம் ராஜன், கோவில்பதாகை முரளி, கிராமணி முன்னேற்ற சங்கத்தலைவர் பச்சையப்பன், மட்டுமேடு அருணாசல மூர்த்தி, திருவல்லிக்கேணி நாடார் சங்க பொதுச்செயலாளர் சிவராஜ், மாதவரம் தங்கக்குமார், இருவொற்றியூர் வீரமணி, விருகம்பாக்கம் மணிராஜ், மாங்காடு துரை, கெருகம பாக்கம் பாலமுருகன், உதய குமார், ஓட்டேரி செல்வராஜ், கோயம்பேடு முத்து, பாண்டியநாட்டு நாடார் பேரவை கொளத்தூர் சுவைராஜா, கொளத்தூர் ஜேம்ஸ் நாடார், கோயம்பேடு வைகுண்டராஜா, வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், பாதாவரம் நாடார் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×