search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் நிலையத்தில் புகார்"

    • வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40), விவசாயி. இவர் கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, நிலத்தில் வேலை செய்ய சென்றார்.

    மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதில் மர்ம நபர்கள் யாரோ வீடு புகுந்து 8 பவுன் நகை, பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து பன்னீர்செல்வம் ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற, பன்னீர்செல்வம் பக்கத்து வீட்டை சேர்ந்த சந்துரு என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • கேமராக்களை சீரமைக்க வலியுறுத்தல்
    • திருட்டு நடைபெறாதவாறு கண்காணிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26) இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் வெட்டுவானம் எல்லை யம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார்.

    அப்போது இவரது வாகனத்தை கோவிலுக்கு முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு மீண்டும் வெளியே வந்தார். அதற்குள் பைக்கை திருடி சென்று விட்டனர்.

    அதிர்ச்சியடைந்த சந்தோஷ் உடனடியாக அருகில் உள்ள பல்வேறு இடங்களில் தேடினார்.

    இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இது குறித்து பக்தர்கள் கூறுகையில்

    கோவிலை சுற்றிலும் 16-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் சரிவர வேலை செய்யவில்லை. இது திருட்டு நடைபெறுவதற்கு காரணமாக அமைவதாக பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமராக்களை சரி செய்வதுடன் கூடுதலாக கேமராக்கள் பொருத்தி திருட்டு நடைபெறாதவாறு கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோன்று கடந்த மாதம் கோவிலுக்கு வந்த பெண் பக்தரின் கழுத்தில் இருந்து சுமார் 10 பவுன் தங்க நகை மற்றும் மூதாட்டியின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலி திருடப்பட்டதும் கண்காணிப்பு கேமராக்கள் சரிவர இல்லாததால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் வழக்கு பதிவு
    • போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் வயது 17, பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

    இந்நிலையில் கூலித் தொழிலாளியின் மகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடிய அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    குடியாத்தம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். குடியாத்தம் அடுத்த பரவக்கல் கிராமத்தைச் சேர்ந்த பழனியின் மகன் பரசுராமன் (வயது 18)என்பவர் அந்த பெண்ணை கடத்திச் சென்று பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

    இதனையடுத்து குடியாத்தம் தாலுகா போலீசார் மைனர் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்ட வாலிபர் பரசுராமனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் மைனர் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்ய உதவியதாக சிலர் மீது குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    நேற்று தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையி லான போலீசார் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அபிநாத் (18), பெரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் வயது (20), சின்ன ராஜாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (20), ஜிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அஜய் (21) ஆகிய 4 பேரை 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    ×