search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணன்-தம்பி கைது"

    • 2 பேரும் முதியவர் ராஜாக்கண்ணுவிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர் :

    வடலூர் அருகே ஆபத்தானரணபுரம் பூசாலிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (வயது 68). இவரது அக்கா வளர்மதி வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் போது அங்கிருந்த, அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் எதற்காக எங்கள் வீட்டின் முன்புறம் பார்த்த வண்ணமாக கேமராவை வைக்கிறார்கள். என்று கேட்டு 2 பேரும் முதியவர் ராஜாக்கண்ணுவிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். வாய்த்தகராறு முற்றவே திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஒரு நபர் ராஜாக்கண்ணுவின் மூக்கை வெட்டினார். மற்றொரு நபர் இரும்பு பைப்பினால் தலையில் கொடுரமாக தாக்கினார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயம் அடைந்த முதியவர் ராஜாக்கண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராஜாக்கண்ணு வடலூர் போலீசில், அளித்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து பூசாலிக்குப்பம் பகுதியை சேர்ந்த மகாராஜன் (27), சூர்யா (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆத்திரமடைந்த அன்பரசனும், கலை யரசனும் செவ்வந்தியின் தம்பி மணிகண்டனை கத்தியால் குத்தியுள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிந்து அன்பரசன், கலையரசன் 2 பேரையும் கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள கொடமாட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செவ்வந்தி (வயது 30). கடந்த சிலவருடங்களுக்கு முன்பு கல்லாவியை சேர்ந்த அன்பரசன் என்பவருடன் செவ்வந்திக்கு திருமணம் நடந்தது.

    கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் செவ்வந்தி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    இந்நிலையில் அன்பரசனும் அவரது தம்பி கலையரசனும் செவ்வந்தியின் தாய் வீட்டுக்கு வந்து செவ்வந்தியை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த அன்பரசனும், கலை யரசனும் செவ்வந்தியின் தம்பி மணிகண்டனை கத்தியால் குத்தியுள்ளார்.

    இதில் படுகாயமடைந்த மணிகண்டன் போச்சம்பள்ளி அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசில் மணிகண்டன் தந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து அன்பரசன், கலையரசன் 2 பேரையும் கைது செய்தனர்.

    ×