search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரர்கள்"

    • லடாக்கில் நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
    • விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு உள்துறை மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    லடாக் யூனியன் பிரதேசம் கரு ஹரிசன் பகுதியில் இருந்து கியாரி பகுதிக்கு ராணுவ வாகனத்தில் வீரர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர்.

    கியாரி நகருக்கு 7 கிலோமீட்டர் தொலைவு இருக்கும்போது மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

    இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தானர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், லடாக் விபத்தில் ராணுவ வீரர்கள் பலியானதற்கு உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லடாக்கில் நடந்த சாலை விபத்தில் எங்கள் வீரம்மிக்க வீரர்களை இழந்தோம். இந்த துக்க நேரத்தில் உயிரிழந்த குடும்பங்களுடன் ஒட்டுமொத்த தேசமும் தோளோடு தோள் நிற்கிறது. அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • ராணுவ வாகனம் லடாக் அருகே சென்ற போது ஆற்றில் கவிழந்துள்ளது.
    • விபத்தில் சிக்கிய ராணுவ வாகனத்தில் பத்து வீரர்கள் இருந்துள்ளனர்.

    ராணுவ வாகனம் ஒன்று லடாக்கில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. லே பகுதியில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கியாரி என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. ராணுவ வகனம் தரையில் சறுக்கியதால், நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விபத்தில் சிக்கிய ராணுவ வாகனத்தில் பத்து வீரர்கள் (எட்டு ஜவான்கள், ஒரு ஆணையர்) பயணம் செய்ததாகவும், இவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. 

    • எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
    • 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

    சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பி னர் அரசுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் உகாண்டா நாட்டை சேர்ந்த அமைதி படையும் சோமாலியாவில் தீவிர வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 54 உகாண்டா வீரர்கள் பலியானார்கள்.

    இது தொடர்பாக உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி கூறும்போது, சோமாலியாவில் உள்ள ராணுவ தளத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்தனர். எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றனர்.

    இதற்கிடையே ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

    • ராணுவ வீரர் நல சங்க கூட்டம் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கத்தில் நடந்தது.
    • அனைத்துபோட்டித் தேர்விற்கான பயிற்சிகள்வழங்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    உடுமலை:

    ராணுவ வீரர் நல சங்க கூட்டம் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கத்தில் நடந்தது. கோவை மாநகர மண்டல தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில்முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் ஈ சி எச். சேவையில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு முறையான சேவைகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யவும் தனித்தனியே இயங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் ராணுவ வீரர் சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பு செய்வது, யூனிபார்ம் சர்வீஸ்களுக்கான உடல் தகுதி தேர்விற்கும், எழுத்து தேர்விற்கும்பயிற்சிகள் கொடுத்தல், முன்னாள் ராணுவ வீரர்களின் ஆவணங்களில் உள்ள பதிவுகளை பென்ஷன் பெறுவதற்கு தகுதி உடையதாக திருத்திக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தல், கடற்படை, விமானப்படை உட்பட போலீஸ் மற்றும் ராணுவத்திற்கு நடத்தப்படும் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பதவிக்கான அனைத்து வகையான அனைத்துபோட்டித் தேர்விற்கான பயிற்சிகள்வழங்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கோவை மாநகர மண்டல தலைவர் ராமநாதன் மற்றும் உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் ,செயலாளர் சக்தி ,பொருளாளர்சிவக்குமார், துணைத்தலைவர் கோவிந்தராஜலு, பிளைட் லெப்டினென்ட் தங்கவேல் நாயப் சுபேதார்நடராஜ் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • 983 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 18 லட்சத்து 88 ஆயிரத்து 383 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • வேளாண்மை துறையில் அலுவலராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற, இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார்.

    திருவாரூர்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைதியின் சின்னமான புறாவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பறக்க விட்டனர்.

    அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்துமைக்காக காவல்துறை வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை சுகாதாரத்துறை மருத்துவ துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த 81 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

    மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வேளாண்மை துறை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சமூக பாதுகாப்பு திட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மூலம் 983 பயனாளிகளுக்கு 4 கோடியே 18 லட்சத்து 88 ஆயிரத்து 383 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் திருவிடைமருதூரைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மனைவி 69 வயதான வனஜா என்பவர் தனது ஒரு மாத ஓய்வூதியத்தை ராணுவ வீரர்களுக்கு அளிக்க கூறி மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் அளித்தார்.கலியபெருமாள் ஆடுதுறையில் வேளாண்மை துறையில் அலுவலராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்.இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார்.அவரது இறப்பிற்கு பிறகு ஓய்வூதியத் தொகை அவரது மனைவியான வனஜாவிற்கு வழங்கப்பட்டு வருகிறது

    இந்த நிலையில் தனது ஒரு மாத ஓய்வூதிய பணமான ரூ. 15,000 ராணுவ வீரர்களுக்கு அளிக்க வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ளார் வனஜா.

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள வளநாடு பகுதியில் பிறந்தவர் வனஜா என்பதால் தனது சொந்த மாவட்டத்தில் இதை வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் இதனை அளித்ததாக வனஜா தெரிவித்தார்.அவர் அந்த பணத்தை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கும் போது அனைவரும் கைத்தட்டி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுகிறது.

    • இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்ற 75-வது சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • 75- வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் 75 ராணுவ வீரர்களும் தங்களது கையில் தேசியக் கொடியை ஏந்தி மரியாதை செலுத்தினர்

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் 75- வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய- மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் 75-வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் வெவ்வேறு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்ற 75-வது சுதந்திர தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இன்று காலை நடந்தது. இதையொட்டி 75 ராணுவ வீரர்கள் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் இருந்து தனி படகு மூலம் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றனர்.

    அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் முன்பு 75- வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் 75 ராணுவ வீரர்களும் தங்களது கையில் தேசியக் கொடியை ஏந்தி மரியாதை செலுத்தினர். இது தவிர 75 அடி நீளமும் 30 அடிஅகலமும் கொண்ட ராட்சத தேசிய கொடியை விவேகானந்தரின் நினைவு மண்டபம் முன்பு ராணுவ வீரர்கள் பிடித்தபடி நின்றனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ கமாண்டர் பிரிகேடியர் லெப்டினென்ட் சர்மா தலைமையில் 75 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    ×