search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 256866"

    • ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
    • ராமநாதபுரம் கலெக்டர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்க ளிடையே அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உடையவர்களை கண்டறிந்து மாவட்ட அளவில் நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்று அதில் தேர்வான 4 மாணவ-மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். அவர்களுக்கு அறிவியல் பேரவையின் சார்பில் "வானவில் அறிவியல்" விருதினையும் தொடர்ந்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி சாதனை படைத்திட வேண்டும் எனவும், மாணவ-மாணவிகளின் பெற்றோர்களையும் பாராட்டி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

    அப்போது சத்திரக்குடி வாசன் மெட்ரிக் பள்ளி தாளாளர் வாசன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அப்துல்கலாம் குடும்ப குழந்தைகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் பேரன் சேக் சலீம் உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் அருகே உள்ள பேக்கரும்பு பகுதியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நினைவு இல்லத்துடன் கூடிய அருங்காட்சியகம் உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தேசிய கொடி ஏற்றினர்.

    பின்னர் அப்துல் கலாம் சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நினைவிடத்தை இதுவரை ஒரு கோடி பேர் பார்வையிட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியைத் தாண்டி ஒரு கோடியே 1 மற்றும் 2-ல் அடி எடுத்து வைத்த குழந்தைகள் அப்துல் கலாம் குடும்பத்தைச் சேர்ந்த சே.ஆசில் லியானா, சே.ஆசில் மிப்ரா ஆகியோர் சாதனை நிலையை நிகழ்த்தி உள்ளனர்.

    அவர்களுக்கு அப்துல் கலாம் தேசிய நினைவகத்தைச் பராமரித்து வரும் மத்திய அரசின் அங்கமான டி.ஆர்.டி.ஓ. நிர்வாக அதிகாரிகள் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் பேரன் சேக் சலீம் உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    ×