search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பீடு"

    • 2½ வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம்.
    • குமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 300 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்ப்பவர்களுக்கு 70 சதவீத மானியமும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்ப்பவர்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ்2½ வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்யலாம். அதிகப்பட்சமாக ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

    ஓராண்டு காப்பீடு கட்டணமாக கால்நடையின் மதிப்பில் 1.45 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரத்துக்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான காப்பீடு கட்டணம் கால்நடை உரிமையாளர்களால் செலுத்தப்பட வேண்டும்.

    ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கால்நடைகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய விருப்பம் உள்ள கால்நடை வளர்ப்போர் அருகே உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
    • அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன் பெறலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ண கிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் விவசாயிகளின் கால்நடைகளை பாதுகாத்திடும் வகையில் தமிழக அரசின் 2022&23&ம் ஆண்டிற்கான தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 1,900 கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    காப்பீடு செய்யும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு மானியமாக காப்பீடு சந்தா தொகையில் 70 சதவீத மானியமும், பொதுப்பிரிவினர்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

    காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொறுத்தப்பட்டு புகைப்படம் எடுக்கப்படும். காப்பீடு செய்த கால்நடைகள் இறக்க நேரிட்டால் கால்நடை உதவி மருத்துவரால் இறந்த கால்நடையை பிரேத பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழ் உடன் காப்பீட்டு நிறுவனத்தில் ஒப்படைத்து காப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

    எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விருப்பம் உள்ள கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளை அரசு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செயற்கை கால், கை தயாரிக்கும் கருவி நிறுவப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.
    • முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்–பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை அவயங்கள் துணை நிலையம் கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது.

    இதில் பணிபுரியும் புரோஸ்டிக் மற்றும் ஆர்த்தோடிஸ்ட் தொழில்நுட்ப வல்லுநர்கள் மாற்றுத்திறனாளி நோயாளிகளுக்கு பல்வேறு துறை மூலமாக பயனீட்டார்களுக்கு பயனடையச் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் உலக அளவில் செயற்கை உறுப்புப் பொருத்தல் மற்றும் மாற்றுத்திறனர் உதவி கருவி தினம் முதன் முதலில் இன்று கொண்டாடப்பட்டது.

    அதன்படி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி டீன் பாலாஜி நாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை கால், கை தயாரிக்கும் கருவி நிறுவப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

    இதுவரை 185 நவீன செயற்கை கை மற்றும் கால்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ–மனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்–பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியில் முடநீக்கியல் துறை தலைவர்கள் குமரவேல், ராஜமோகன், நிலைய மருத்துவ அதிகாரி செல்வம், ஆர்த்தோடிஸ்ட் ரமேஷ் மற்றும் சக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • சேமிப்பின் முக்கியத்துவம் உறுப்பி னர்களுக்கு காப்பீடு வங்கி கடன் எவ்வாறு வாங்குவது விவசாய உற்பத்தி குழு குறித்த விளக்குவது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
    • விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மேளதாளங்கள் முழங்க வடிவழகி அம்மன் ஆலயத்திலிருந்து முளைப்பாரி எடுத்து வந்து இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த புதுப்பள்ளி மழை முத்துமாரியம்மன் ஆலயத்தில் தானம் அறக்கட்டளை கீழையூர் கிழக்கு வட்டார வயலகம் கீழையூர் கிழக்கு வட்டார வயலக பரஸ்பரம் கீழையூர் நெய்தல் ஜீவிதம் மற்றும் விவசாய உற்பத்தி நிறுவனம் சார்பில் 18 ஆண்டு பொதுக்குழு கூட்டம் முப்பெரும் விழா நடைபெற்றது

    கூட்டத்தில் சேமிப்பின் முக்கியத்துவம் உறுப்பி னர்களுக்கு காப்பீடு வங்கி கடன் எவ்வாறு வாங்குவது விவசாய உற்பத்தி குழு குறித்த விளக்குவது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது முன்னதாக விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மேளதாளங்கள் முழங்க வடிவழகி அம்மன் ஆலயத்திலிருந்து முளைப்பாரி எடுத்து வந்து இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது

    இதில் ஜீவித வட்டார பொருளாளர், திருமதி இளவரசி வரவேற்புரை வழங்கினார், வட்டார. ஒருங்கிணைப்பாளர் மோ.அபிரகாம் ஸ்டான்லி அவர்கள், மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு சரவணன் அவர்களும், எதிர்கால திட்டம், வட்டாரம் ஒரு பார்வை என்னும் தலைப்பில், கொள்கை மாற்றம் குறித்து விளக்கவுரை யாற்றினார்.

    சிறப்பு விருந்தினர்களாக, விழுந்தமாவடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், கிளை மேலாளர் ஆனந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தார், சிறப்பு விருந்தினர்களுக்கு, நினைவுப்பரிசு வழங்கப்ப ட்டது, சிறந்த குழுவிற்கு கேடயம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை, வட்டார பணியாளர் கார்த்திகேசன், செய்திருந்தார்.

    • பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியத்தொகை ரூ.559.50 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும்.
    • பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஏக்கருக்கு பிரீமியத்தொகை ரூ.559.50 காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும்.

    இந்த திட்டத்தில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது இ-சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். வருகிற 15-ந் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் நெல் சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து பதிவு செய்து ரசீதை பெற வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • பயிர் காப்பீடு கட்டிய அனைவருக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.
    • பயிர் காப்பீடு கிடைக்க கலெக்டரிடம் பேசி முயற்சி செய்கிறோம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில்தமிழ்நாடு விவசாய சங்கம் சிபிஐ, தமிழ்நாடு விவசாய சங்கம் சிபிஎம் இணைந்து, பயிர் காப்பீடு கட்டிய அனை வருக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தினுடைய சமாதான கூட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் சந்தன கோபாலகிருஷ்ணன் தலைமை நடைபெற்றது.

    இந்த சமாதான கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜெயசீலன் வட்டார புள்ளியல் துறை அலுவலர் சுரேஷ்குமார், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜன், (சி பி ஐ) தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் கலியபெருமாள் (சி பி எம்) இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராதா, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் சின்ன ராஜா, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் கலியபெருமாள், இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் பயிர் காப்பீடு கிடைக்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி முயற்சி செய்கிறோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் சமாதான கூட்டம் நிறைவுற்றது.

    • டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.
    • பயிர் காப்பீட்டு தொகை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழை பாதிப்பு ஏற்படும் இடங்களில் வருவாய் துறை, காவல் துறை பொதுப்பணித்து–றையினருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது ஈரப்பதம் காரணமாக நெல்லை விற்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் சிக்கி தவித்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்

    அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் உலர்த்தும் வசதியை தமிழக அரசே ஏற்பாடு செய்து தர வேண்டும் 2021-22ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகளை விவ சாயிகள் சந்தித்துள்ளனர்.

    தமிழக அரசு உரிய முறையில் கண்காணித்து அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு நிலுவை தொகையை கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு.
    • தோட்டக்கலை பயிர்கள், காப்பீடு தொகை, காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2022-23 (ராபி பருவம்) தோட்டக்கலைபயிர்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவதுடு-

    திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்தல் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நடைபெற்று வருகிறது.தோட்டக்கலைப் பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதிகள் கீழ்கண்டவாறு தோட்டக்கலை பயிர்கள், காப்பீடு தொகை, காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொத்தமல்லி- ரூ.620-31.12.2022, வெங்காயம்-ரூ.2217, மிளகாய்-ரூ.1220, தக்காளி-1487.50, தேதி-31-1-2023. வாழை-ரூ.4875.50,மரவள்ளி-1712.50, 28-2-2023 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    எனவே இதுவரை ராபி பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி இத்திட்டத்தில் காப்பீடு தொகை செலுத்தி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சோளம், பருத்தி போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • பயிர்க்கடன் பெறாதவர்கள், அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் நகலுடன் சென்று காப்பீடு செய்யலாம்.

    உடுமலை:

    எதிர்பாராத இழப்புகளுக்கு இழப்பீடு பெறவும், பண்ணை வருவாயை நிலை நிறுத்தவும், அதிநவீன தொழில்நுட்பத்தை பின்பற்றவும், அரசு பயிர்க்காப்பீடு திட்டம் அவசியம். அதன்படி 2016 முதல், மத்திய அரசின் பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்துக்கு நடப்பு ஆண்டுக்கான காப்பீடு நிறுவனம் அறிவிக்கப்பட்ட நிலையில் 'ராபி' பருவத்துக்கான பயிர்காப்பீடை துவக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல், மக்காச்சோளம், பாசிப்பயறு, கொண்டை கடலை, நிலக்கடலை, சோளம், பருத்தி போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:-

    'ராபி' பருவத்துக்கு பயிர்காப்பீடு செய்ய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்யலாம். பயிர்க்கடன் பெறாதவர்கள், அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் நகலுடன் சென்று காப்பீடு செய்யலாம்.

    திருப்பூர் மாவட்ட விவசாயிகள், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில், இதுதொடர்பான விவரங்களை பெறலாம். ஒரு ஏக்கர் நெல்லுக்கு, 559.50 ரூபாய், பாசிப்பயறு -253.94 ரூபாய் செலுத்தி நவம்பர் 15ந் தேதிக்குள் காப்பீடு செய்யலாம்.

    மக்காச்சோளம் - 486.75 ரூபாய், கொண்டை கடலை -269.25 ரூபாய், பருத்தி -693.60 ரூபாய் பிரிமியம் செலுத்தி நவம்பர் 30-ந் தேதிக்குள் காப்பீடு செய்யலாம். சோளம் -38.61 ரூபாய் செலுத்தி, டிசம்பர் 15க்குள் காப்பீடு செய்யலாம். நிலக்கடலை -470.25 ரூபாய் செலுத்தி டிசம்பர் 31க்குள் காப்பீடு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கையில் பெரிய அளவிலான பேனா படம் வரைந்திருந்த தெர்மாகோலுடன் மனு கொடுக்க வந்தனர்.
    • விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி விவசாய கடன் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநிலத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் தங்களது கையில் பெரிய அளவிலான பேனா படம் வரைந்திருந்த தெர்மாகோலுடன் வந்து மனு கொடுக்க வந்தனர்.

    அவர்கள் வைத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டன. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை நிவாரணமும் வழங்கவில்லை . இழப்பீம் வழங்கவில்லை. உடனடியாக பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 81 இடங்களில் நெல் சேமிப்பு கிடங்கு கட்டினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். டெல்டா மாவட்டங்களில் உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். விலைவாசி ஏற்றம் உள்ள டி.ஏ.பி. ரூ.1400-ம், பொட்டாஷ் விலை ரூ.1900-ம், காம்ப்ளக்ஸ் விலை ரூ.1500 என உள்ளதை உடனே குறைக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய பம்பு செட்டுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை உடனே மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். 2022-23-க்கான சம்பா பருவத்திற்கு கூட்டுறவு கடன் உடனே வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி விவசாய கடன் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கொடுத்தனர். தெர்மாகோல் பேனாவுடன் மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாழை மற்றும் மரவள்ளி போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன் இத்திட்டத்தில் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளவும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது :-

    மத்திய அரசு 2021 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்து புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

    முக்கியமாக இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகளை கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அவர்களின் விருப்பத்தின் பேரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 பயிர்களுக்கு ரபி பருவத்தில் காப்பீடு செய்யப்பட உள்ளது.

    வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3505-ம், மரவள்ளி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1018 பிரீமியமாக நிர்ணயிக்கபட்டு பிரீமியம் செலுத்த 28.2.2023 கடைசி நாள் ஆகும்.

    மேலும் மாவட்ட வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    தமிழக அரசால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனமான இப்கோ டோகியோ மற்றும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய காப்பீட்டு நிறுவனம் மூலம் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் ரபி 2022 - 2023-ல் செயல்படுத்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

    ரபி பருவத்தில் வாழை மற்றும் மரவள்ளி போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்துவதற்கான காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ரபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை வி.ஏ.ஓ.விடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தக்கத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

    எனவே விவசாயிகள் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன் இத்திட்டத்தில் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளவும் . இது குறித்தான மேலும் விபரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரையோ அல்லது தோட்டக்கலை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரையோ தொடர்பு கொள்ளலாம்.

    விவசாயிகள் தங்களது பயிர்களை குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே காப்பீடு செய்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத்திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு விவசாயிகளை நாமக்கல் கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    • மேலும் தோட்டக்கலை பயிர்களான சிறிய வெங்காயம்-II பயிருக்கு பிரிமியத்தொகையாக ஏக்கருக்கு ரூ.1,990.82-யை 30.11.2022-க்குள் செலுத்த வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி, கபிலர்மலை, மோகனூர், நாமக்கல் வட்டாரத்தில் 2022-23-ம் ஆண்டு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் நெல்-II (சம்பா) மற்றும் சிறிய வெங்காயம்-II பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத்திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட விவசாயிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

    அதன்படி, பிரிமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நெல்-II (சம்பா) பயிருக்கு ரூ.337.16-யை 15.12.2022-க்குள் செலுத்த வேண்டும். மேலும் தோட்டக்கலை பயிர்களான சிறிய வெங்காயம்-II பயிருக்கு பிரிமியத்தொகையாக ஏக்கருக்கு ரூ.1,990.82-யை 30.11.2022-க்குள் செலுத்த வேண்டும்.

    புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் இதர வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.

    கடன் பெறாத விவசாயி கள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் உள்ள வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோடு எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    இது தொடர்பான மேலும் கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் ஆகியோரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

    ×