என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆழ்வார் திருமஞ்சனம்"
- பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
- பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், குத்து விளக்குகள் தூய்மைப்படுத்தப்பட்டது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
முன்னதாக நேற்று அதிகாலை மூலவரை சுப்ரபாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, சஹஸ்ர நாமர்ச்சனை நடந்தது. அதன் பிறகு மூலவர்கள் மீது பட்டு வஸ்திரம் போர்த்தப்பட்டு காலை 6.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
கோவிலின் மூலவர் சன்னதியில் இருந்து மகா துவாரம் வரை அனைத்துச் சன்னதிகளும், தூண்கள், மாடங்கள், சுவர்கள், மேற்கூரைகள் என அனைத்தும் தூய தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், குத்து விளக்குகள் தூய்மைப்படுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து மஞ்சள், குங்குமம், சந்தனம், சீயக்காய், நாமக்கட்டி, பச்சை கற்பூரம், கிச்சிலி கட்டை, கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது போன்ற நறுமணப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட சுகந்த திரவியம் மூலவர் கருவறை சுவர்கள், மாடங்கள், மேற்கூரைகள், தூண்கள் ஆகியவற்றில் பூசப்பட்டது. அதன்பின் மூலவர் மீது போர்த்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்புப்பூஜைகள் செய்து, நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தில் கோவில் துணை அதிகாரிகள் நாகரத்தினா, கோவிந்தராஜன், உதவி அதிகாரி மோகன், கோவில் சூப்பிரண்டு ரமேஷ், அர்ச்சகர் ஆனந்தகுமார் தீட்சிதலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பதி கோதண்டராமர் கோவிலுக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தர் பிரசன்னாரெட்டி மற்றும் திருப்பதியைச் சேர்ந்த பக்தர் மணி ஆகியோர் 4 படுதாக்கள் மற்றும் திரைச்சீலைகளை காணிக்கையாக வழங்கினர்.
- வருகிற 22-ந்தேதி உகாதி பண்டிகை நடக்கிறது.
- காலை 6 மணி முதல் 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமை ஆழ்வார் திருமஞ்சனம் என்னும் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 22-ந்தேதி உகாதி பண்டிகை நடக்கிறது. இதனை முன்னிட்டு 21-ந் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. காலை 6 மணி முதல் 11 மணி வரை அர்ச்சகர்களால் இந்த ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.
கோவிலில் உள்ள ஆனந்தநிலையம் முதல் பங்காருவாகிலி வரை கோவிலுக்குள் உள்ள அனைத்து உபகோவில்கள், கோவில் வளாகங்கள், சுவர்கள், மேற்கூரை, பூஜை சாமான்கள் என அனைத்தும் நீரால் சுத்தம் செய்யப்படுகிறது.
அப்போது சுவாமியின் மூலவிரட்டு முழுவதும் துணியால் மூடப்பட்டிருக்கும். சுத்திகரிப்பு முடிந்ததும், நாமகோபு, ஸ்ரீ சூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டா போன்றவற்றுடன் வாசனை திரவியம் கலந்து கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. அதன்பின், சுவாமியின் மூலவிரட்டை மறைத்திருந்த துணி அகற்றப்பட்டு, சிறப்பு பூஜைகளை அர்ச்சகர்கள் சாஸ்திர முறையில் நடத்துகின்றனர். மதியம் 12 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
- பிரம்மோற்சவ விழா 11-ந்தேதி தொடங்குகிறது.
- இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி நேற்று காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
அதையொட்டி கோவில் கோவிலின் மூலவர் சன்னதியில் இருந்து பிரதான நுழைவு வாயில் வரை அனைத்துச் சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, சுகந்த திரவியங்கள் தெளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரையிலும், மதியம் 2.30 மணியில் இருந்து இரவு 8 மணிவரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
- கோவில் வளாகம் முழுவதும் நீரால் சுத்தம் செய்யப்படுகிறது.
- கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வரும் 11-ந்தேதியில் இருந்து 20-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
அப்போது கோவில் வளாகம் முழுவதும் நீரால் சுத்தம் செய்யப்படுகிறது. அதேபோல் பூஜை பொருட்களும் சுத்தம் செய்யப்படுகின்றன. அதன்பிறகு கோவில் முழுவதும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்படுகிறது. எனவே நாளை காலை 8 மணியில் இருந்து காலை 11 மணி வரையிலும், மதியம் 2.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், காலை 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதேபோல் சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணியில் இருந்து காலை 11 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- திருச்சானூர் கோவிலில் வருகிற 28-ந்தேதி ரதசப்தமி நடக்கிறது.
- புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 28-ந் தேதி ரதசப்தமி நடக்கிறது. இதனை முன்னிட்டு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நேற்று நடைபெற்றது. அதிகாலையில் தாயார் சுப்ரபாதத்தில் எழுந்தருளி சஹஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.
அதன்பின்னர் காலை 6.30 மணி முதல் 9 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்திகரிக்கப்பட்டன. அதன்பின், நாமகோபு, ஸ்ரீசூர்ணம் மற்றும் பல்வேறு சுகந்தவாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
இதன் காரணமாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டது.
- 5 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.
- ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. ஏழுமலையான் கோவிலில் சங்கராந்தி, தீபாவளி ஆஸ்தானம், பிரம்மோற்சவ விழா மற்றும் முக்கிய பண்டிகைகளின் போது கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் 27-ந் தேதி கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மூலவர் மீது பட்டு துணியால் மூடப்படும்.
கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சாமி, வகுலமாதா, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெறும். பின்னர் பச்சை கற்பூரம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்படும்.
கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது. அன்று காலை 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 5 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 63,145 பேர் தரிசனம் செய்தனர். 22,411 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினார். ரூ.4.39 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- பிரம்மோற்சவ விழா 20-ந்தேதி தொடங்குகிறது.
- கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை ரத்து.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு 19-ந்் தேதி காலை லட்சார்ச்சனையும், மாலையில் அங்குரார்ப்பணமும் நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தையொட்டி கோவில் மாட வீதிகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் வாகனசேவை நடைபெறுகிறது.
கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. அப்போது கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்திகரிக்கப்பட்டன. அதன்பின்னர் நாமகோபு, ஸ்ரீசூர்ணம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சனம் காரணமாக கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
ஐதராபாத்தை சேர்ந்த சுவர்ணகுமார் என்ற பக்தர் 17 திரைச்சீலைகளை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மரெட்டி, வீரபிரம்மம், கண்காணிப்பாளர் மது, கோவில் ஆய்வாளர் தாமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இன்று காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
- 12 மணி அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் "ஆலய சுத்தி" இன்று நடந்தது. ஆண்டுக்கு 4 முறை கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது.
யுகாதி பண்டிகை ஆனிவார ஆஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவம் வைகுண்ட ஏகாதசி விழாக்கள் நடக்கும் முந்தைய செவ்வாய்க்கிழமை அன்று கோவிலை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.
அதன்படி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடந்தது.
ஆனந்த நிலையம் முதல், பங்காரு வாகிலி வரை கோவிலில் உள்ள துணைச் சன்னதிகள், கோவில் வளாகம், மண்டபம், சுவர்கள், மேற்கூரை, தூண்கள், பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பித்தளை, தாமிர பாத்திரங்கள், ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.
தூய்மைப்பணி முடிந்ததும் நாம கொம்பு, ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை இலை, பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை மற்றும் பிற நறுமணப் பொருட்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
இந்தப் பணி முடிந்ததும் மூலவர் மீது போர்த்தப்பட்ட தூய வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள், நைவேத்தியம் செய்யப்பட்டது.
இதையடுத்து 12 மணி அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சுமார் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
- 27-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
- ஆண்டுக்கு 4 முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் 20-ந்தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதனால் அன்றைய தினம் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதால் 19-ம்தேதி எந்தவித முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களும் பெறுவதில்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 4 முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.
உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்கிழமையன்று கோவில் சுத்தம் செய்யப்படுகிறது.
அவ்வாறு 20-ந்தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவிலில் சுத்தம் செய்து மூலிகை கலவை கோவில் சுவர்களில் தெளிக்கப்படும்.
இதனால் அன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டு காலை 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அன்றைய தினம் அஷ்ட தல பாதமாராதனை சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- திருச்சானூர் கோவிலில் நாளை முதல் 10-ந்தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது.
- புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் பவித்ரோற்சவத்தை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நேற்று நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக அதிகாலை 7 மணி முதல் 9.30 மணிக்குள் தாயார் சுப்ரபாதத்தில் எழுந்தருளி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.
அதன்பின், நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக் கட்டா போன்ற சுகந்தாவாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் கோவில் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம், பிரபாகர் ரெட்டி, கோவில் அர்ச்சகர் பாபுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐதராபாத்தை சேர்ந்த ஸ்வர்ணகுமார் ரெட்டி என்ற பக்தர் கோவிலுக்கு 17 திரைச்சீலைகளை வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்