search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
    • ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 96 ரன்னில் சுருண்டது.

    ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 5 பந்தில் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடினர். ரோகித் சர்மா 36 பந்தில் அரைசதம் அடித்தார். இதனால் இந்தியா 10 ஓவரில் 76 ரன்கள் விளாசியது.

    10 ஒவர் முடிந்த நிலையில் ரோகித் சர்மா 37 பந்தில் 52 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். இதனால் சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.

    சுழற்பந்து வீச்சாளர் ஒயிட் வீசிய பந்தை தூக்கிய அடிக்க முயன்ற சூர்யகுமார் கேட்ச் ஆகி 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து ஷிவம் டுபே களம் இறங்கினார். அப்போது இந்தியா 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருந்தது.

    13-வது ஓவரின் 2-வது பந்தை ரிஷப் பண்ட் சிக்சருக்கு தூக்கினார். இதனால் இந்தியா 12.2 ஓவரில் 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ரிஷப் பண்ட் 26 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிவம் டுபே ரன்ஏதும் எடுக்காமல் இருந்தார்.

    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதின.
    • 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அரங்கேறும் 8-வது லீக்கில் இந்திய அணி, அயர்லாந்தை சந்திக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணி விவரம் வருமாறு:

    ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சிராஜ்

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. 7 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • விளையாட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மிகப்பெரிய என நான் நம்புகிறேன்.
    • இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது நெருக்கடியை எப்படி கையாள்கிறது என்பதுதான் முக்கியம்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற 9-ந்தேதி நியூயார்க்கில் நடக்கிறது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி எப்போதும் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும். அமெரிக்க ரசிகர்களுக்கு இது சூப்பர் பவுல் (Super Bowl) போன்று இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஷாகித் அப்ரிடி கூறுகையில் "முதன்முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை பார்க்க இருக்கும் அமெரிக்கர்களுக்கு, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் சூப்பர் பவுல் போன்றதாக இருக்கும் என்பது தெரிந்திருக்கும்.

    நான் எப்போதுமே இந்தியாவில் நடைபெறும் போட்டியில் விளையாட விரும்புவேன். விளையாட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி மிகப்பெரிய என நான் நம்புகிறேன். நான் இதுபேன்ற போட்டிகளில் விளையாடும்போது நான் ஏராளமான அன்பை இந்திய ரசிகர்களிடம் இருந்து பெற்றுள்ளேன். இரண்டு பக்க வீரர்களும் அதுபோன்று பரஸ்பர அன்பை பெற்றுள்ளனர்.

    இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது நெருக்கடியை எப்படி கையாள்கிறது என்பதுதான் முக்கியம். இரண்டு அணிகளும் அதிக திறமைகளை கொண்டதுதான். அன்றைய நாளில் வீரர்கள் ஒன்றிணைந்து திறமையை வெளிப்படுத்துவது அவசியம். இந்தியாவுக்கு எதிரான போட்டி மற்றும் தொடர் முழுவதும் இது தேவை. நெருக்கடியை கையாளும் அணி முதல் இடத்தை பிடிக்க முடியும்.

    இவ்வாறு அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் தேசிய கால்பந்து லீக் தொடர் பிரபலம். இதன் இறுதிப் போட்டியை சூப்பர் பவுல் என அழைப்பாளர்கள். கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி இங்குள்ள மியாமி அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா எந்தளவுக்கு நல்ல அணி என்பதை நாங்கள் அறிவோம். அதை சொல்வதற்காக நாங்கள் கூச்சப்படவில்லை.
    • இந்த போட்டிக்காக அணியாக நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம்.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. அப்போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்நிலையில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி காண்போம் என்று அயர்லாந்து அணி வீரர் ரோஸ் அடேர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டிக்காக அணியாக நாங்கள் ஆர்வமுடன் உள்ளோம். இந்திய வீரர்களை நியூயார்க் நகரில் முதல் போட்டியில் எதிர்கொள்வதை எதிர்நோக்கியுள்ளோம். இந்தியா எந்தளவுக்கு நல்ல அணி என்பதை நாங்கள் அறிவோம். அதை சொல்வதற்காக நாங்கள் கூச்சப்படவில்லை. ஆனால் நாங்கள் இந்த போட்டிக்காக முழுமையாக தயாராகியுள்ளோம்.

    அதனால் இந்தியாவுக்கு நாங்கள் நல்ல போட்டியை கொடுப்போம் என்று நம்புகிறோம். போட்டியை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய வீரர்கள் இந்திய அணியில் நிறைந்திருக்கிறார்கள். இருப்பினும் நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி முடிந்த வரை இந்தியாவை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம்.

    என்று கூறினார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது.
    • ஹர்திக் பாண்ட்யாவின் படத்தை தவறாக ஒளிபரப்பியது.

    டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை ஓ.டி.டி.-யில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூகினியா அணிகள் மோதின. இந்த போட்டி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. அப்போது ஒளிபரப்பாளர்கள் இரு அணி வீரர்களின் ஸ்கோரையும், சிறந்த வீரர்கள் யார் என்பவர்களின் படத்தையும் காட்டினார்கள்.

    இதில் பிராண்டன் கிங், சேசா புவா, ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் ஆசாத் வாலா ஆகியோரின் புகைப்படங்களுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவின் படத்தை வைத்துவிட்டது. மேலும், இதே படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஐந்துமுறை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. 

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் வெற்றி.
    • அடுத்த போட்டியில் உகாண்டாவை எதிர்கொள்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. லீக் சுற்று போட்டிகள் ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் வீரர்கள் டி20 உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

    அந்த வரிசையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிரிஸ் கெயில் டி20 உலகக் கோப்பையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஐ.சி.சி. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக நடப்பு உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பப்புவா நியூ கினியாவை எதிர்கொண்டு விளையாடியது.

    இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது அடுத்த போட்டியில் உகாண்டாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. 


    • டோர்ஜியோ 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
    • பப்புவா நியூ கினியா சார்பில் அசாத் வாலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. நேற்றிரவு நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    துவக்கம் முதலே சிறப்பாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணி பப்புவா நியூ கினியாவை 136 ரன்களில் கட்டுப்படுத்தியது. பப்புவா நியூ கினியா சார்பில் சேசே பான் அரை சதம் கடந்தார், டோர்ஜியோ 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் ஜான்சன் சார்லஸ் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    போட்டி முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை குவித்து, ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பப்புவா நியூ கினியா சார்பில் அசாத் வாலா 2 விக்கெட்டுகளையும், ஜான் கரிகோ, சாட் சோபர் மற்றும் அலெய் நவோ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
    • அதன்படி முதலில் ஆடிய பப்புவா நியூ கினியா 136 ரன்கள் எடுத்தது.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் 2-வது நாளான இன்று வெஸ்ட்இண்டீசின் கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி, பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    தொடக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக பந்துவீசியது. இதனால் பப்புவா நியூ கினியா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் சேசே பான் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்து அவுட்டானார். டோர்ஜியா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், பப்புவா நியூ கினியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

    • குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்த பாகிஸ்தான், அமெரிக்காவை ஜூன் 6-ம் தேதி சந்திக்கிறது.
    • கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிவரை முன்னேறியது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணி முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 6-ம் தேதி அமெரிக்க அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், டி 20 உலகக் கோப்பை தொடருக்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்கா வந்திறங்கியது. அப்போது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இதுதொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தது.

    கடந்த தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்காள தேசத்துடனான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • சாஹிப் அல் ஹசன் - மஹமதுல்லா ஜோடி சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்

     டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நேற்று (ஜூன் 1) தொடங்கியது. நேற்றைய தினம் அமெரிக்கா - கனடா மற்றும் இந்தியா- வங்காள தேச அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதின. வங்காள தேசத்துடனான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

     

    ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 6 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் எம்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்தில் 53 ரன்கள் (தலா நான்கு பவுண்டரி, சிக்ஸ்) எடுத்து ரிட்டையர்டு அவுட் மூலம் வெளியேறினார்.

    அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். ஷிவம் டுபே 16 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 40 ரன்கள் (2 பவுண்டரி, 4 சிக்ஸ்) அடிக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

     

    இதைதொடர்ந்து பேட்டிங் இறங்கிய வங்காள தேச அணிக்கு வலுவான பந்துவீச்சின் மூலம் டஃப் கொடுக்கும் வகையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இதனால் வங்காள தேச அணி பேட்டிங்கில் திணறியது. களமிறங்கிய முதல் ஓவரிலேயே சவுமியா சர்கார் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தார்.

    தவ்ஹித் ஹரிதோய் சற்று அதிக நேரம் களத்தில் நீடித்தாலும் அது அணிக்கு பெரிதாக பலனளிக்கவில்லை. சாஹிப் அல் ஹசன் - மஹமதுல்லா ஜோடி சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புதான் 122 ரன்களை மட்டுமே வங்காளதேசத்தால் எட்ட முடிந்த நிலையில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 

    • ஸ்கோர் 59 ரன்னாக உயர்ந்த போது (6.4 ஓவரில்) ரோகித் சர்மா (23 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) மக்முதுல்லா பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.
    • இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை வருகிற 5-ந்தேதி நியூயார்க்கில் சந்திக்கிறது.

    இதையொட்டி இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நியூயார்க்கில் நேற்று சந்தித்தது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் புகுந்தனர்.

    2-வது ஓவரிலேயே சஞ்சு சாம்சன் (1 ரன்) ஷோரிபுல் இஸ்லாம் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதைத்தொடந்து ரிஷப் பண்ட், ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினர். ஸ்கோர் 59 ரன்னாக உயர்ந்த போது (6.4 ஓவரில்) ரோகித் சர்மா (23 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) மக்முதுல்லா பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

    அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார். சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தவருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் வெளியேறினார். அடுத்து களம் கண்ட ஷிவம் துபே (14 ரன், 16 பந்து, ஒரு சிக்சர்) நிலைக்கவில்லை. சற்று நேரத்தில் சூர்யகுமார் யாதவ் 31 ரன்னில் (18 பந்து, 4 பவுண்டரி), தன்விர் இஸ்லாம் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. தன்விர் இஸ்லாம் பந்து வீச்சில் ஹாட்ரிக் சிக்சர் விளாசிய ஹர்திக் பாண்ட்யா 40 ரன்களுடனும் (23 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), ரவீந்திர ஜடேஜா 4 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்காளதேசம் தரப்பில் மெஹிதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், மக்முதுல்லா, தன்விர் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

    இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக மக்முதுல்லா 40 ரன் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப்சிங், ஷிவம் துபே தலா 2 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது ரோகித் சர்மா ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்தார். அவர் உள்ளே வந்ததை பார்த்ததும் ஐந்து அமெரிக்க போலீசார் மைதானத்திற்குள் ஓடி வந்தனர். அதில் இருவர் அந்த ரசிகரை தரையில் சாய்த்து, அவர் மீது அமர்ந்தனர். ரசிகரின் இரண்டு கைகளையும் பின்புறமாக மடக்கினர். பின்பு அவரை தரையோடு இருக்குமாறு எச்சரித்தனர். அவர் லேசாக அசைந்ததால் அவர் மீது முழு எடையையும் கொடுத்து அழுத்தம் கொடுத்தனர். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா அந்த ரசிகரை விட்டு விடுமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ காட்சியை பார்த்த அனைவருக்கும் பதைபதைப்பை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவில் இது போன்று அத்துமீறுபவர்கள் மீது வழக்குப் பதியப்படும். உடனடியாக அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • கூகுள் தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் தொடங்கியது.

    வருகிற 29-ந்தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா அணியும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணியும், 'சி' பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, உகாண்டா, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா அணியும், 'டி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணியும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று பிரிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர்-8 சுற்றுக்குள் நுழையும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    ×