search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.பி. அலுவலகம்"

    • வேலை வாங்கி தருவதாக மோசடி
    • வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. கோடீஸ்வரன் ஆகியோர் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் மனு அளிக்க வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கையை அறுத்துக் கொள்ள முயன்றார்.

    அருகில் இருந்த போலீசார் இளம் பெண்ணிடம் இருந்த பிளேடை பறித்தனர். பின்னர் இளம் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பேரணாம்பட்டு சேர்ந்த ஒருவருடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு ஒரு மகன் உள்ளார்.

    திருமணம் நடந்த 3 ஆண்டுகளில் கணவர் என்னை விட்டு பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    2-வது மனைவியின் வீட்டார் எனது மகனை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக இளம் பெண் தெரிவித்தார்.

    பேரணாம்பட்டை சேர்ந்த 2 இளம் பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட இளம் பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் தேடி வந்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு இளம் பெண் ஏன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாய். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது ஆத்திரமடைந்த இளம்பெண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த அவரது தோழியை மாடியில் இருந்து கீழே தள்ளியதில் படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க 2 இளம் பெண்களின் வீட்டாரும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    திமிரி அடுத்த தாமரைப்பாக்கத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 24). மாற்றுத்தி றனாளி. பி எஸ் சி பி எட் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

    இவர் அளித்த மனுவில் கூறியதாவது:-

    நான் கடந்த 2022-ம் ஆண்டு பத்தாம் மாதம் மாவட்ட திறன் மேம்பாடு பயிற்சி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாக செய்தித்தாளில் விளம்பரம் வந்தது. விளம்பரத்தை கண்ட மகாலட்சுமி வேலைக்காக விண்ணப்பித்தேன்.

    இந்த நிலையில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.25 லட்சம் வாங்கினார். மாவட்ட திறன் மேம்பாடு பயிற்சி மையத்தில் கேட்டபோது அந்த வேலை வேறு ஒருவருக்கு வழங்கி விட்டதாக தெரிவித்தனர்.

    வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றவர் வேலையை வாங்கி தரவில்லை பணத்தையும் திரும்ப தரவில்லை.

    தற்போது அவர் தலைமறைவாக உள்ளார் எனவே பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:-

    தினம்தோறும் வரும் புகார்கள் குறித்து அன்றே விசாரணை நடத்தி தீர்வு காணப்படுகிறது. இதனால் தற்போது குறைவு தீர்வு கூட்டத்தில் 25 முதல் 30 மனுக்கள் மட்டுமே வருகின்றன.

    அடிதடி சம்பந்தமாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    இல்லையென்றால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    • எஸ்.பி. அலுவலகத்தில் தாத்தா புகார்
    • போலீசாரை அனுப்பி வழி ஏற்படுத்தி தருவதாக உறுதி

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் இன்று நடந்தது.

    குடியாத்தத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாற்றுத்திறனாளி மனு அளித்தார்.

    அதில் என்னுடைய மனைவி அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளக்காதலில் ஈடுபட்டு வருகிறார் இதனை தட்டி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

    எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் கொலை மிரட்டல் விடுத்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இதேபோல் தொரப்பாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்ரமணி கொடுத்த மனுவில் எனது மகன் வழி பேத்திக்கு 26 வயது ஆகிறது.

    அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கிறார். அவருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

    வேலூர் அடுத்த மூஞ்சூர்பட்டை சேர்ந்த ரவி என்பவர் கொடுத்த மனுவில் தனது வீட்டிற்கு செல்லும் பாதையில் மரங்களை வெட்டி போட்டு ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். உடனடியாக போலீசாரை அனுப்பி வழி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர்.

    • கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • ஆசிரியர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இரணியல் அரசு பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து புகார் மனு அளித்தனர். அதில், நாங்கள் இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறோம்.

    எங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் அருவரு க்கத்தக்க வகையிலான வார்த்தைகள் பேசி வரு கிறார். மேலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளை இணைத்து தவறாக பேசி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆசிரியர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன என கூறியிருந்தனர்.

    இது தொடர்பான மனுவை மாவட்ட கல்வி அதிகாரிக்கும் அளித்து உள்ளனர். கல்வித் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியர் மீது மாணவிகள் செக்ஸ் புகார் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×