என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா தொடர்"
- அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட் எடுத்தார்.
மொகாலி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களிலும், விராட் கோலி 2 ரன்னிலும் ஆட்டமிழந்த நிலையில், கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. கே.எல்.ராகுல் 55 ரன்களும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களும் குவித்தனர். அதிரடி காட்டிய ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 71 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். குறிப்பாக கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளிலும் சிக்சர் விளாசி அசத்தினார்.
இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட் எடுத்தார். ஹேசில்வுட் 2 விக்கெட், கேமரூன் கிரீன் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
மொகாலி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெகிறது.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இரு அணி வீரர்கள் விவரம்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கேமரூன் கிரீன், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஷ், டிம் டேவிட், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், ஆடம் சம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
- 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.
- ஆசிய கோப்பையில் ரிஷப்பண்ட் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை.
மொகாலி:
20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட முடிவு செய்தது.
அதன்படி ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்திய அணி சமீபத்தில் நடந்த 20 ஓவர் ஆசிய கோப்பையில் மோசமாக ஆடியது. இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. அதை ஈடு செய்யும் வகையில் ஆஸ்திரேலிய தொடரில் வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது.
ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.
விக்கெட் கீப்பர்களான ரிஷப்பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவர்தான் அணியில் இடம்பெற முடியும். ஆசிய கோப்பையில் ரிஷப்பண்ட் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர் இடம்பெறுவாரா? அல்லது தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல வேகப்பந்து வீரர்களில் புவனேஷ்வர் குமாருக்கும், தீபக் சாஹருக்கும் இடையே போட்டி நிலவும். அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள பும்ரா, ஹர்ஷல் படேல் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுகிறார்கள்.
இன்றைய ஆட்டத்தில் இரு அணியிலும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்கள் வருமாறு:-
இந்தியா:
ரோகித்சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரிஷப்பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்ஷர் படேல், புவனேஷ்வர் குமார் அல்லது தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், யசுவேந்திர சாஹல், பும்ரா.
ஆஸ்திரேலியா:
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஜோஸ் இங்லீஷ், ஸ்டீவ் சுமித், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், டிம் டேவிட், கேமரூன் கிரீன், ஆடம் சம்பா, கம்மின்ஸ், ஹாசல்வுட், சீயான் அபோட்.
- இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொகாலியில் இன்றிரவு நடைபெறுகிறது.
மொகாலி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில் தங்களை சீரிய முறையில் தயார்படுத்திக் கொள்ள இந்த தொடர் உதவிகரமாக இருக்கும்.
மீண்டும் பார்முக்கு திரும்பிய விராட் கோலியின் பேட்டிங் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் நல்ல தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும். மிடில் வரிசையை சரிசெய்வதில் இந்த முறை கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பலாம். காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் அணிக்கு திரும்பியிருப்பது பந்து வீச்சை வலுப்படுத்தும். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்தினால் அது அணிக்கு உற்சாகம் தரும்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணி வலுவாகவே தென்படுகிறது. ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல் அதிரடியில் மிரட்டுவார்கள். ஆல் ரவுண்டர் டிம் டேவிட் அறிமுக வீரராக விளையாட இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. பந்துவீச்சில் ஹேசில்வுட், கம்மின்ஸ், ஆடம் ஜாம்பா, சீன் அபோட் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. போட்டி நடக்கும் மொகாலி மைதானத்தில் இதுவரை ஐந்து டி20 ஆட்டங்கள் நடந்துள்ளன. இவற்றில் இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது. இதில் 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை சூப்பர்10 சுற்றில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதும் அடங்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின் அல்லது யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஜோஷ் இங்லிஷ், ஸ்டீவன் சுமித், டிம் டேவிட், கேமரூன் கிரீன், மேத்யூ வேட், மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் அல்லது ஆஷ்டன் அகர்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா டி20 தொடரில் விளையாடுகிறது.
- முதல் போட்டி செப்டம்பர் 20-ம் தேதி மொஹாலியில் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி மொஹாலியில் முதல் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஷமி விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேலும், ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்க்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்