search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலு"

    • மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம்.
    • அன்னையை பலவாறாக மயக்க எண்ணி பல வடிவங்களெடுத்து போரிடுகிறான்.

    தூம்ரலோசனன், சும்பன், நிசும்பன் என்று தூதுவர்களை அனுப்பி அவர்களும் பராசக்தியுடன் போரிட்டு மாண்டதும் தானே போருக்குக் கிளம்பி வருகிறாள்.

    அன்னையை பலவாறாக மயக்க எண்ணி பல வடிவங்களெடுத்து போரிடுகிறான்.

    தன்னை மணக்கும்படி வேறு கூறுகிறான்.

    இறுதியில் பராசக்தி அவனைத் தன் காலடியில் போட்டு, தன் வாளால் வெட்டி வீழ்த்தினாள்.

    அசுரனாக இருந்தாலும் அவனும் மோட்சம் என்ற நற்கதியை அடைய அவன் தலை மீதே தன் திருப்பாதங்களை வைத்து அருள் பாலிக்கும் நிலையில் சூலம் ஏந்திய துர்கையாக வராகி வடிவத்தில் காட்சியளிக்கிறாள்.

    மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பூஜை செய்து தீபம் ஏற்றுவது சிறந்தது.

    தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது.

    மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம்.

    மரிக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை அணிவிக்கலாம்.

    இந்த மலர்களால் அர்ச்சனையும் செய்யலாம்.

    • சம்பங்கியும் மரிக்கொழுந்தும் கல்யாணி தேவியின் விருப்ப மலர்கள்.
    • சர்க்கரைப் பொங்கல் சமைத்து, நைவேத்தியம் செய்யுங்கள்.

    நவராத்திரி 3ம் நாள் மகிஷாசூரனை வதம் புரிந்து, சூலமும் கையுமாய், மகிஷனின் தலைமீது வீற்றிருக்கும் தாயை மனதில் நினைத்துக் கும்பிடுவார்கள்.

    இவளை, இந்த நிலையில் "கல்யாணி" என்று அழைப்பார்கள்.

    சம்பங்கியும் மரிக்கொழுந்தும் கல்யாணி தேவியின் விருப்ப மலர்கள்.

    மனதில் உள்ள பக்தியை எல்லாம், சர்க்கரைப் பொங்கலாய் சமைத்து, நைவேத்தியம் செய்யுங்கள்.

    வெற்றியையே உகந்தளிக்கும் செல்விக்கு இனிப்பையே படைப்போம்.

    மகிஷாசுரனை வதம் செய்த தேவி வராகியாகவும் அம்பிகை காட்சி தருகிறாள்.

    • அனைவரும் போற்றி புகழக் கூடிய வசிய சக்தி உண்டாகி விடும்.
    • தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும்.

    ராஜ ராஜேஸ்வரியை தியானிப்பதால் கிடைக்கும் பலன்கள்:

    1. எந்த மந்திரத்தாலும் நம்மை கட்ட முடியாது.

    2. எந்த மந்திரத்தாலும் நம்மை அடிமை படுத்த முடியாது.

    3. ஏவல் ,பில்லி சூன்யங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.

    4. விரோதிகள் தன்னால் அழிந்து விடுவர்.

    5. துரோகிகள் சந்ததி இல்லாமல் ஆகி விடும்.

    6. அனைவரும் போற்றி புகழக் கூடிய வசிய சக்தி உண்டாகி விடும்.

    7. சித்து வேலைகள் கை கூடும்.

    8. அதிர்ஷ்ட லட்சுமி நம் வீட்டிற்கு வந்து நம்முடைய வாயிற் கதவை தட்டும்.

    9. தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும்.

    10. அரசனும் பணியக் கூடிய தகுதி நமக்கு வந்து சேரும்.

    • ஓம் திரிமூர்த்தி தேவியே போற்றி!
    • ஓம் சுந்தர வடிவே போற்றி!

    ஓம் வளம் நல்குவாய் போற்றி

    ஓம் நலந்தரும் நாயகி போற்றி

    ஓம் முக்கண் மூர்த்தியே போற்றி

    ஓம் அறத்தின் வடிவோய் போற்றி

    ஓம் மின் ஒளி அம்மா போற்றி

    ஓம் எரி சுடராய் நின்ற தேவி போற்றி

    ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி

    ஓம் எரம்பன் தாயானவளே போற்றி

    ஓம் எங்களின் தெய்வமே போற்றி

    ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனே போற்றி

    ஓம் ஈரேழுலகிலிருப்பாய் போற்றி

    ஓம் சூளா மணியே போற்றி

    ஓம் சுந்தர வடிவே போற்றி

    ஓம் ஞானத்தின் வடிவே போற்றி

    ஓம் நட்புக்கரசியே போற்றி

    ஓம் திரிமூர்த்தி தேவியே போற்றி

    • கரும்பு வில், பாசாங்குசம், மலரம்பு இவற்றை ஏந்தி அழகாக, கொலுவிருப்பவளே “ஸ்ரீ ராஜராஜேஸ்வரி”
    • கவுமாரியை த்ரிசக்தி என்றும் சொல்வார்கள்.

    நவராத்திரி இரண்டாம் நாள் மகிஷாசூரனை வதம் செய்வதற்கு முன்பு, அவனது சேனைகளை துவம்சம் செய்ய புறப்பட்ட அன்னையை, கவுமாரியாக மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாக மனதார நினைத்து பூஜிக்க வேண்டும்.

    கரும்பு வில், பாசாங்குசம், மலரம்பு இவற்றை ஏந்தி அழகாக, கொலு விருப்பவளே "ஸ்ரீ ராஜராஜேஸ்வரி"

    இவளுக்குப் பிடித்த பூ மல்லிகையும், துளசியும்.

    இவற்றைக் கொண்டு அர்ச்சித்தால் மனம் நிறைந்து அருள்பாலிப்பாள்.

    கல்யாணி ராகத்தில் பாடலாம். புளியோதரையை நைவேத்தியமாய் படையுங்கள்.

    கவுமாரியை த்ரிசக்தி என்றும் சொல்வார்கள்.

    மூன்று நிலைகளை மூன்று அக்னிகளில் சேர்த்து ஏகா அக்னியாய் நிற்பவளே அன்னை த்ரிமூர்த்தி.

    இவள் மூன்று அக்னிகளாய் இருப்பதனால் தான் ஸ்வாஹாதேவியும், ஸ்வதா தேவியும் திருப்தி அடைகின்றனர்.

    இவள் மூன்று வயதுக் குழந்தை வடிவாக இருப்பவள்.

    துவிதியை திதி நாளில் மூன்று வயதுக் குழந்தையை அழைத்து வந்து, த்ரிமூர்த்தி தேவியாய் பாவித்து ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.

    தேவி பாகவதத்தில் இரண்டு, மூன்று அத்தியாயங்களையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாஷரி மந்திரத்தையும் ஓதுதல் வேண்டும்.

    முன்று அக்னிகளாய்த் திகழும் த்ரிமூர்த்தி தேவியை வணங்குபவர்களுக்கு மீண்டும் பிறவாமையை வரமாய் அளிக்கின்றாள்.

    குரு அருள் பெற்றிடவே மூன்று நிலைகளை நாம் அடைய வேண்டும். மூன்று நிலைகள் அடைய அன்னையின் அருள் வேண்டும்.

    கவுமாரி என்ற அவதாரம் முருகப் பெருமானின் சக்தியாகக் கருதப்படுகிறது.

    இவளுக்கும் 6 முகங்கள், 12 கைகள் உண்டு என்று ஸ்ரீதத்துவநியதி கூறுகின்றது.

    இவளது கரகங்கள் வரத, அபய முத்திரைகள் தவிர வேல், கொடி, தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி, தாமரை, சேவல், பரசு ஆகியவற்றை ஏந்தி இருக்கும்.

    கவுமாரி 13 கண்களை உடையவள் என்று காரணாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் இவள் மயிலை வாகனமாகவும், கொடியாகவும் கொண்டவள்.

    • கல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது.
    • முல்லை, செவ்வந்தி, பாரிஜாத மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம்.

    கல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது.

    மகா விஷ்ணு ஒரு சிறு குழந்தையாக சேஷசயனத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்க, மது கைடபர் என்ற இரு அரக்கர்கள் எக்களிப்பில் திருமாலின் உந்தியிலிருந்து உதித்த பிரமனுடன் போர் புரியத் தொடங்கினர்.

    பிரமன் பராசக்தியை மகாதேவி மகாமாயை, மகா புத்தி, மகாவித்யை என்றெல்லாம் போற்றித் துதித்து இவ்விரு அசுரர்களை மயக்கி, உலகைக் காத்தருள வேண்டினார்.

    அம்பிகை மகாவிஷ்ணுவின் யோக நித்திரையிலிருந்து வெளிப்பட்டு மது கைடபர்கள் இருவரையும் தம் தொடை மீதே வைத்து தனது சக்ராயுதத்தால் மகாவிஷ்ணு வதம் செய்யக் காரணமாக இருந்தார்.

    சிவப்பு வண்ணப் பட்டாடைகளையும், சிவப்பு கலந்த ஆபரணங்களையும் அணிவிக்கலாம்.

    முல்லை, செவ்வந்தி, பாரிஜாத மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம்.

    எள் சாதம், எள் பாயாசம், வேர்க்கடலை சுண்டல் வைத்து பூஜை செய்யலாம். அதையே வருபவர்களுக்கும் பிரசாதமாக வழங்கலாம்.

    • நவராத்திரி அன்று அர்ச்சனை செய்ய வேண்டிய மந்திரம்
    • ஓம் மங்கள நாயகியே போற்றி!

    ஓம் பொன்னே போற்றி!

    ஓம் மெய்ப்பொருளே போற்றி!

    ஓம் போகமே போற்றி!

    ஓம் ஞானச் சுடரே போற்றி!

    ஓம் பேரின்பக் கடலே போன்றி!

    ஓம் குமாரியே போற்றி!

    ஓம் குற்றங்களைவாய் போற்றி!

    ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!

    ஓம் பேரருட்கடலே போற்றி!

    ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!

    ஓம் அருட்கடலே போற்றி!

    ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!

    ஓம் இருளகற்றுவாய் போற்றி

    ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!

    ஓம் ஈயும் தயாபரி போற்றி!

    ஓம் மங்கள நாயகியே போற்றி!

    இப்படி அர்ச்சனை முடிக்கவும்.

    • மகேஸ்வரியை “குமாரி” வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.
    • குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.


    வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)

    பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.

    திதி : பிரதமை

    கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.

    ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.

    பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

    மகேஸ்வரி அலங்காரம்

    நவராத்திரி முதல் நாள் மதுகைடப வதத்துக்கு மூலகாரணமான தேவியை மகேஸ்வரியாக வழிபட வேண்டும்.

    மகேஸ்வரியை அபயவரஹஸ்தத்தோடு, புத்தகம், அட்ச மாலையுடன் "குமாரி" வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.

    இந்த "குமாரி" தேவிக்கு, மல்லிகை விசேஷம்.

    எனவே மல்லிகை அர்ச்சனை உகந்தது.

    அம்பாள், சங்கீதப்பிரியை ஆயிற்றே... எனவே, தினமும் சுவாரஸ்யமான சங்கீதம் வீட்டில் தவழ்ந்தால் சுபிட்சம் பெருகும்.

    முதல் நாளில் தோடி ராகத்தில் அமைந்த கீர்த்தனைகளை பாடினால் விசேஷம்.

    குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.

    பிரதமை திதியில் இரண்டு வயதுக் குழந்தையை (தன் வீட்டுக் குழந்தை அல்ல) அழைத்து வந்து அவளை அன்னை குமாரியாகவே பாவித்து, அவளுக்கு ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.

    குழந்தைக்கு அணிவித்த ஆடை, அணிகலன்களைத் திரும்ப வாங்கி விடக்கூடாது.

    தேவி பாகவதத்தின் முதல் அத்தியாயத்தையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாஷரி மந்திரத்தையும் ஓதித் துதித்தால் குமாரி தேவியின் அருள் பரிபூரணமாய்க் கிட்டும்.

    பிரதமை திதியில் நாம் வணங்கும் குமாரி தேவி நமக்கு குறைவற்ற வாழ்வு தருவாள்.

    குழந்தையின் கள்ளம், கபடமற்ற மன நிலை நமக்கு வந்தால் தான் இறைவனை நாம் அடைய முடியும்.

    மகேஸ்வரி சிவனின் சக்தி. வெள்ளை நிறம் கொண்டவள்.

    இவளுக்கு ஐந்து முகம் உண்டு.

    • முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள்.
    • இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகை 9 வடிவங்களில் வணங்கப்படுகிறாள்.

    முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள்.

    அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.

    இந்த ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும்.

    பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

    இனி வரும் பதிவுகளில் இந்த 9 நாட்களும் அன்னையை எப்படி வழிபட வேண்டும் என்பதை காணலாம்....

    • பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்துள்ளாள்.
    • எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது.

    எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, முதன்மை வழிபாடாக பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது.

    பராசக்தியை வழிபட்டால் எல்லா கடவுள் அவதாரங்களையும் வழிபடும்போது என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அத்தனை பலன்களும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    பராசக்தியான அம்பிகை ஒருத்திதான்.

    ஆனால் அவள் பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்து நல்வழி காட்டியுள்ளாள்.

    அதை பிரதிபலிக்கவே ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

    நவ என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு.

    ஒன்பது நாட்கள் இரவில் அம்பிகையை வழிபடுவதே நவராத்திரி ஆகும்.

    • உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.
    • பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மகிஷாசுரன் என்னும் கொடூரமான அரக்கன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

    அவன் பராசக்தியை நோக்கி தவம் இருந்து அன்னையிடம் ஆற்றல்மிகு பல வரங்களைப் பெற்றான்.

    மகிஷாசுரன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமை செய்தான்.

    தேவர்களும் & முனிவர்களும் பார்வதியை நோக்கி தவம் புரிந்தனர்.

    பார்வதி தேவியும் அவர்களுக்கு காட்சி அளித்தாள்.

    அவர்களின் குறைகளைக் களைய கருணை உள்ளம் கொண்டாள்.

    தகுதியற்ற ஒரு அரக்கனுக்கு தேவையற்ற வரங்களை வழங்கிவிட்டோம் என்று வருந்தினாள்.

    ஒரு முறை வழங்கி விட்ட வரங்களைத் திருப்பிப் பெறுதல் மரபன்று.

    இருப்பினும் தர்மத்தின் பொருட்டு தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தாள்.

    உடனே பார்வதிதேவி, லலிதை என்னும் காமேஸ்வரியாக அவதாரம் எடுத்து ஈஸ்வரனைத் திருமணம் புரிந்து கொண்டாள்.

    ஈசனிடம் அஸ்திரங்களைப் பெற்று மகிஷாசுரனை எதிர்த்து போருக்கு புறப்பட்டாள்.

    மகிஷாசுரன் இதனை அறிந்து அன்னையை எதிர்க்க தனது தம்பிமார்களான விசக்கனையும், விஷக்கரனையும் ஏவினான்.

    உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.

    அந்த இரு அசுரர்களையும் விழுங்கினாள்.

    பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.

    மகிஷாசுரன் எவ்வளவோ சாமர்த்தியமாக மாயா ஜாலத்துடன் போர் புரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    இதனால் அதிர்ச்சியில் உறைந்தான்.

    ஆக்ரோஷத்துடன் எழுந்த துர்க்காதேவி மகிஷாசுரனின் தலையைத் துண்டித்து வதம் செய்தாள்.

    இதனைக் கண்ட தேவர்களும் & முனிவர்களும் மகிஷாசுரமர்த்தினி என்று துர்க்கையை வாயார போற்றி துதித்தனர்.

    இதனைக் குறிப்பது தான் நவராத்திரி என்பதாகும்.

    • நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • இலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள்.

    சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பௌர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை. சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு'பிரம்மோற்சவம்' என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.

    சாரதா நவராத்திரி

    ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு . சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும். ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும். புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா. நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள். புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர். இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராவாகக் கொண்டாடப்படுகிறது. மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு தசராவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள்.

    கன்னியர்கள் வழிபாடு

    நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு; எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி. நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை. இதனால், நவராத்திரி வழிபாட்டில் மிகப் பலகன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

    கொலுவைத்து கொண்டாட்டம்

    நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதே. ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களுக் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றாள்.

    நவசக்திகளுக்கான வழிபாடு

    புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் உள்ளன. துர்க்கை: 1. மகேசுவரி, 2. கௌமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மாகலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி. நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.

    வீரம் தரும் துர்க்கை

    துர்க்கையானவள் வீரத்தின் தெய்வம். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம் இவள் நெருப்பின் அழகுடன் ஆவேசப் பார்வை கொண்டவள் சிவபிரியையான துர்க்கை இச்சா சக்தி. கொற்றவைஎன்றும் காளி என்றும் குறிப்பிடுவர். வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

    செல்வம் தரும் லட்சுமி

    இலட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம். மலரின் மென்மையுடன் அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். இவள் விஷ்ணு பிரியை, கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர். அஷ்ட இலட்சுமியாக அருள் பாலிக்கிறாள் ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி, சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

    சகல வித்தை தரும் சரஸ்வதி

    சரஸ்வதி தேவி கல்வியின் தெய்வம். இவள் அமைதிப் பார்வையுடன் வைரத்தின் அழகுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.. பிரம்பிரியை. ஞான சக்தி. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. ஆயுதபூஜையாகவும் கொண்டாடுகின்றனர். சமுதாயத்தில் தொழில் , புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான், இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. சரஸ்வதி தேவியும் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி என அஷ்ட சரஸ்வதியாக போற்றப்படுகிறாள்.

    விஜயதசமி

    நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்க்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும். ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்நாளே விஜயதசமி - வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்துநற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை. வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக இருக்கிறது. பத்தாவது நாளான விஐயதசமி அன்று புதிய கல்வி கற்பதைத் தொடங்குவார்கள். பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான் ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத்திருந்த யுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயிர்ப்பித்துகொண்டான்.

    ×